Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களில் 200 பேர் மரணம் - வெளியானது புதிய தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

கொவிட் -19 வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக இலங்கையில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

இதில் 177 பேர் ஏதேனும் ஒரு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களாம்.

thumb_large_vaccine__1_.jpg

 

இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு வர்க்கத்தை சேர்ந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்க்களில் 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இவர்களில் 177 பேர் ஏதேனும் ஒரு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் என்பதுடன் கொவிட் மரணங்களில் இது 3.38 வீத பதிவாகும் எனவும், இரண்டு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களில் 23 பேர்உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 

கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களில் 200 பேர் மரணம் - வெளியானது புதிய தகவல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இதில சுகாதாரப் பணிப்பாளர் சொன்னதுல…

//

இலங்கையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக இதுவரையில் 5222 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5022 பேர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், 200 பேர் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இதில் 177 பேர் தடுப்பூசியின் ஒரு மாத்திரை மட்டும் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் உயிரிழந்தவர்களுக்கு வேறும் நோய்கள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.//

 

இவளாம் எங்க.. திண்டுட்டாங்களோ..?? 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதில சுகாதாரப் பணிப்பாளர் சொன்னதுல…

//

இலங்கையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக இதுவரையில் 5222 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5022 பேர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், 200 பேர் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இதில் 177 பேர் தடுப்பூசியின் ஒரு மாத்திரை மட்டும் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் உயிரிழந்தவர்களுக்கு வேறும் நோய்கள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.//

 

இவளாம் எங்க.. திண்டுட்டாங்களோ..?? 

மூலத்தையும் இணைத்து விடுங்கள் விரைவாக!

இது பகுதியெண் தொகுதியெண் பிரச்சினை - யாழ் களத்தில் இது பரவினால் பகுதியெண்ணை முழுங்கி விட்டு தொகுதியெண்ணைத் தூக்கிக் கொண்டு திரிய ஒரு தனி குறூப் இருக்கிறது!😂

எனவே, தடுப்பூசிகள் இலங்கையில் வேலை செய்கின்றன என்று காட்ட மூலத்தையும் உடனே இணைத்து விடுங்கள்!  

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதில சுகாதாரப் பணிப்பாளர் சொன்னதுல…

//

இலங்கையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக இதுவரையில் 5222 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5022 பேர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், 200 பேர் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இதில் 177 பேர் தடுப்பூசியின் ஒரு மாத்திரை மட்டும் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் உயிரிழந்தவர்களுக்கு வேறும் நோய்கள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.//

 

இவளாம் எங்க.. திண்டுட்டாங்களோ..?? 

காக்கா கொண்டு போய்ட்டோ🤣

13 minutes ago, Justin said:

மூலத்தையும் இணைத்து விடுங்கள் விரைவாக!

இது பகுதியெண் தொகுதியெண் பிரச்சினை - யாழ் களத்தில் இது பரவினால் பகுதியெண்ணை முழுங்கி விட்டு தொகுதியெண்ணைத் தூக்கிக் கொண்டு திரிய ஒரு தனி குறூப் இருக்கிறது!😂

எனவே, தடுப்பூசிகள் இலங்கையில் வேலை செய்கின்றன என்று காட்ட மூலத்தையும் உடனே இணைத்து விடுங்கள்!  

 

வருக வருக😎

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி மொட்டையா கணக்குச் சொன்னா எப்படி..?! 

இதில எத்தினை சினோபாம் போட்ட பின் நிகழ்ந்த மரணங்கள்.. எத்தனை... சினோவக் போட்ட பின் நிகழ்ந்தன.. எத்தனை ஸ்புட்னிக் வி போட்ட பின் நிகழ்ந்தன.. எத்தனை அஸ்ரா செனிக்கா போட்ட பின் நிகழ்ந்தன.. எத்தனை வயதுக் கணக்குப் பார்க்காமல் போட்ட சினோபாமால் நிகழ்ந்தது என்பதையும் சொல்லலாமே.

இப்படி விளக்கமா கேட்டா தரவுக் கம்பியூட்டர் பழுதாகிடும்.. இல்லாது விட்டால் காணாமல் போகிடும்.. என்று சொறீலங்கா இராணுவம் தான் அறிக்கை விடும். இதில சொறீலங்கா ஒரு சனநாயக சோசலிசக் குடியரசாம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நன்றி கெட்ட கூட்டமடா இலங்கை மக்கள் 
உங்களுக்காக காளி தேவி சூரணமாம் தம்மிக்க பாணியையும் அதனை தயாரித்து கொடுத்த ஓடாவி வைத்தியன் தமிக்கவையும் மறந்தே விட்டீர்களே, WHO இற்கே Tough கொடுத்து பவி குட்டியால் அங்கீகரிப்பட்ட இந்த ஒளடத பாணியை குடித்த எத்தனை பேர் மௌத் ஆகியிருக்கினம் என்றும் புள்ளி விபரத்தில் சேர்த்தால் தானே தம்மிக்கவிற்கே கெத்து, தம்மிக்கவிற்கு  சீனோ பார்ம் ஊசியடிக்கும் புகைப்படம் இவ்வருட புலிட்சர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.