Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுப்பு

 

temple-33-720x375.jpg


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில், மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஆலய பூஜைகளில் பங்குபற்றுவதற்கு பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார அமைச்சின் சுற்றிக்கையின் பிரகாரம், மதத்தலைவர்கள் உட்பட 100 அடியார்களே உரிய நேரத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.

ஆலய உள்வீதியில் மாத்திரமே பூஜைகள், சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புறச் சூழலில் எந்தவிதமான சமய நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் மற்றும் நேர்த்தி கடன் நிறைவேற்றுதல் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்னதானம் வழங்கலும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி பெரஹர கணக்கு பார்க்க மாட்டினம் போல..

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, alvayan said:

கண்டி பெரஹர கணக்கு பார்க்க மாட்டினம் போல..

கண்டி பெரஹரா பார்வையாளர்கள் பக்தர்கள் இல்லாமல் இந்தக் கடிதத்தில் இருப்பது போன்ற வடிவத்தில் தானே நடக்கப் போகிறது? யாழ் களத்திலேயே செய்தி இருக்கிறது.

இன்னொரு பத்துப் பக்கத்திற்கு இதையும் இழுக்காதையுங்கோ. உயிர்வாழ அவசியமில்லாத அனைத்தையும் மூடி விட்டு பொறுத்திருந்தால் சில ஆயிரம் உயிர்கள் இன்னும் சில வருடங்கள் தப்பி வாழும் வரம் பெறும்!

இந்த வரத்தை விட முக்கியமா சாமிகளைத் தூக்கித் திரிவது?🤔

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்லிபுர ஆழ்வார் மகோற்சவம் மாசி மாதத்திற்கு ஒத்திவைப்பு!

August 14, 2021

spacer.png

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார்  ஆலய மகோற்சவத்திற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் , ஆலய தர்மகர்த்தா சபை மகோற்சவத்தை எதிர்வரும் மாசி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம்  நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் முடிவில்  ,இவ்வருடம் மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபையினர், ஆலய நிர்வாகம், திருவிழா உபயகாரர்களுடன் ஆலய வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தி இருந்தனர்.  அக்கலந்துரையாடலின் முடிவில் , ஆலய மகோற்சவத்தை அடுத்த வருடம் மாசி மாதம் வரும் பூரணை மகம் நாளிற்கு ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2021/164674

 

 

மனிதர்கள் உயிரோடு இருந்தால் தானே கடவுளும் உயிர் வாழ முடியும். ஆகவே கடவுள் உயிர் வாழ்வதற்கு உதவி செய்ய வேண்டுமானால் மனிதர்கள் நோய்த் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை இந்த பக்தர்கள் உணரும் அறிவை அவர்கள் தாமாக வளர்தது கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த அறிவை அவர்கள் நம்பும் கடவுள் கொடுக்க போவதில்லை. நோய் தொற்றில் இருந்து மனிதரை பாதுகாக்கும் சக்தியும் அவர்கள் தூக்கி திரியும் கடவுளுக்கு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி புத்தர், நல்லூர் கந்தன் போல வல்லிபுரத்தாருக்கு காசு, பவர் இல்லையோ?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மனிதர்கள் உயிரோடு இருந்தால் தானே கடவுளும் உயிர் வாழ முடியும். ஆகவே கடவுள் உயிர் வாழ்வதற்கு உதவி செய்ய வேண்டுமானால் மனிதர்கள் நோய்த் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை இந்த பக்தர்கள் உணரும் அறிவை அவர்கள் தாமாக வளர்தது கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த அறிவை அவர்கள் நம்பும் கடவுள் கொடுக்க போவதில்லை. நோய் தொற்றில் இருந்து மனிதரை பாதுகாக்கும் சக்தியும் அவர்கள் தூக்கி திரியும் கடவுளுக்கு இல்லை. 

Brian Green என்ற பௌதீகவியலாளரின் "Until the End of time" என்ற புத்தகம் நான் அண்மையில் வாசித்த அருமையான நூல்களுள் ஒன்று. கடவுள் நம்பிக்கை, அல்லது மத நம்பிக்கை எவ்வாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களைக் காத்து, கூர்ப்பிற்கு வழி வகுத்தது என்று விளக்கியிருக்கிறார்.

ஒரு மனிதக் கூட்டம் கடவுள் என்பதை நம்பி ஒரு குகைக்குள் அல்லது மறைவிடத்தில் கூடிப் பாதுகாப்பாக இருக்க, அந்த நம்பிக்கை இல்லாத தனியன்கள் வெளியே சுற்றப் போய் விலங்குகள் அல்லது இயற்கை இடரினால் இறந்து போகின்றன. ஒரு கட்டத்தில் கடவுள் நம்பிக்கை இருக்கிற மனிதர்களுக்குத் தான் பாதுகாப்பான வாழ்வு என்ற புரிதல் வந்த போது, அடுத்த தலைமுறைகள் எல்லாமே கடவுள் நம்பிக்கையோடு வளரும் எச்சங்களாக ஆகிப் போயினவாம்! இப்படித் தான் கடவுள் நம்பிக்கை எம்மிடையே கூர்ப்போடு சேர்ந்து வளர்ந்திருக்கலாம் என்கிறார்.

தற்போது தலைகீழ் நிலைமை: கடவுள்/மத நம்பிக்கை மிகுதியானோர் மொக்குத் தனமாக வெளியே போய் கொரனாவால் பலியாகிப் போக, வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்போர் தப்பி , அதனால் அடுத்த தலைமுறையை உருவாக்கப் போகின்றனர்.

"கடவுள் இருக்கிறாரா தெரியாது, ஆனால் கடவுள் உலகின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் அவசியமில்லை!" என்ற ஸ்ரிபன் ஹாவ்கின்சின் கருத்து இப்போது மிகவும் பொருந்துகிறது!   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.