Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவு!

நான்கு முக்கிய விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகள் விடுதலை, தாயகப் பரப்பில் நடைபெறும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் அரசமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் உள்ளிட்ட விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மெய்நிகர் இணைய வழியின் ஊடாக நேற்று தமக்குள் பேச்சு நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படும் நோக்கிலே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மேற்படி நான்கு விடயங்களில் ஒருமித்துச் செயலாற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், ரெலொவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், அந்தக் கட்சியின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், குருசுவாமி சுரேந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புளொட் தலைவர் சித்தார்த்தன் இதில் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டது. எனினும், மெய்நிகர் உரையாடல் இணைப்பு ஏற்பாடு சீரமைக்கப்படுவதில் சிக்கல் நேர்ந்தமையால் அவர் பங்குபற்ற முடியாமல்போனது.
ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக் கூடிய விடயங்கள், எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் மற்றும் தமிழ்த் தரப்பினரோடு அரசு முயற்சிக்கும் பேச்சு ஆகியவையும் முக்கிய விடயங்களாக இதன்போது பேசப்பட்டன.

வரவிருக்கும் ஐ.நா. கூட்டத் தொடரில் 46/1 தீர்மானம் சம்பந்தமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. அதன் பொருட்டு தமிழ்த் தரப்பினால் ஒருமித்து அறிக்கை ஒன்று தயாரித்து சமர்ப்பிப்பது என்றும், தீர்மானத்தில் உள்ள விடயங்களை அரசு நிறைவேற்றாமலும் அதேவேளை அவருக்கு எதிராகவும் செயற்படுவதைச் சுட்டிக்காட்டியும் குறிப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும்  நடவடிக்கைகளின் விபரங்களையும் அந்த அறிக்கையில் உள்ளடக்குவது என்றும் இணக்கம் காணப்பட்டது.
 

 

https://newuthayan.com/நான்கு-விடயங்களில்-தமிழ்/

 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்… ஏதாவது, கிட்டடியில் வருகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே கஜேந்திரன்களை காணோம்??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

எங்கே கஜேந்திரன்களை காணோம்??

கஜேந்திரகுமாருக்கும்  ,அவர் குடும்பத்திற்கும் கொரோனா கேள்விப்படவில்லையா ?
 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

கஜேந்திரகுமாருக்கும்  ,அவர் குடும்பத்திற்கும் கொரோனா கேள்விப்படவில்லையா ?
 

இலங்கையில் ஏற்பட்டுள்ள மரண வீதம் 7300ஐ கடந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரதி said:

கஜேந்திரகுமாருக்கும்  ,அவர் குடும்பத்திற்கும் கொரோனா கேள்விப்படவில்லையா ?
 

நீங்கள் செய்தியை முழுமையாக உள் வாங்கினீர்களா? 

(தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மெய்நிகர் இணைய வழியின் ஊடாக நேற்று தமக்குள் பேச்சு நடத்தியுள்ளனர். )

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

நீங்கள் செய்தியை முழுமையாக உள் வாங்கினீர்களா? 

(தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மெய்நிகர் இணைய வழியின் ஊடாக நேற்று தமக்குள் பேச்சு நடத்தியுள்ளனர். )

நான் செய்தி வாசிக்கவில்லை ...சில நேரம் அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருக்க கூடும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

நான் செய்தி வாசிக்கவில்லை ...சில நேரம் அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருக்க கூடும் 

இரண்டு கஜேந்திரனுக்குமா? :(

சரியான தருணத்தில் சரியான முடிவெடுக்கும் கடமை தமிழர் தலமைக்கு உண்டு.

இல்லையேல் இதுவும் கடந்து போகும் என்று எமது இயலாமையை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகள் விடுதலை, தாயகப் பரப்பில் நடைபெறும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் அரசமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் உள்ளிட்ட விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளன.

இனிமேதானா?

அப்போ இவ்வளவு நாளும் எந்த விடயங்கள் சம்பந்தமாக தமிழ் தேசிய கட்சிகள் இயங்கிகொண்டிருந்தன என்று யாராவது கேட்டு சொல்ல முடியுமா?

தமிழ்தேசிய கட்சிகள் என்பவை தமிழர்பகுதியில் வாக்கு வாங்கி  சிங்கள பாராளுமன்றம்போய்  சிங்கள அரச ஊதியம்  வாங்க அலைபவை.,

அவர்களுக்கு திடீர் திடீர் என்று ஏதாவது பேச தோன்றும், அப்படி பேச தோன்றும்போது உடனடியாக அவர்களுக்கு நினைவுக்கு வருவது தமிழர் பிரச்சனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.