Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாணந்துறைக் கிராமத்தில் கலவரம்: மூவர் வெட்டிப் படுகொலை 30 வீடுகள் சேதம்.

Featured Replies

பாணந்துறைக் கிராமத்தில் கலவரம்: மூவர் வெட்டிப் படுகொலை 30 வீடுகள் சேதம்.

பாணந்துறைப் பிரதேசத்திலுள்ள அம்பிலாவத்த முஸ்லிம் கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் மூவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதுடன் 30 வீடுகளும் சேதமடைந்துள்ளன எனத்தெரிவிக்கப்படுகின்றது.

இக் கிராமத்தில் கொள்ளையடிப்பதற்கென வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கோஷ்டி ஒன்றைக் கிராமமக்கள் பிடிக்க முனைந்தபோது கிராம மக்களுக்கும் கொள்ளைக்கோஷ்டியினருக்கும் இடையில் ஏற்பட்ட கை கலப்பில் கொள்ளையரின் வாள் வெட்டுக்கு இலக்காகி கிராம மக்கள் மூவர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இச்சம்பவத்தின்போது அங்குள்ள வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சில வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், சில வீடுகள் தீ வைப்புக்கும் இலக்காகி உள்ளன. இதன்மூலம் 30 வீடுகள் வரையில் சேதமாகியுள்ளன. பொதுமக்களின் உடமைகளும் இச்சம்பவத்தின்போது சேதமாக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இக்கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அங்குள்ள பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்துள்ளதுடன், பாதுகாப்புக்கருதி அங்கிருந்து வெளியேறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-Sankathi-

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா! சிங்களவர்கள் கருணையுள்ளம் கொண்டவர்களாச்சே! (நான் சொல்லேல்ல, அலவியோ யாரோ கூட்டம் போட்டுச் சொன்னதா ஞாபகம்!). செய்திருக்க மாட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் காடையர்களால் முஸ்லிம் இளைஞர் படுகொலை

ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 யூலை 2007இ 17:06 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ

பாணந்துறை அம்பலந்துவ என்ற இடத்தில் சிங்களக் காடையர்களால் முஸ்லிம் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு சிங்களக் காடையர்கள் கும்பல் ஒன்று அடிக்கடி பல்வேறு வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தனர்.

அதனால் அப்பகுதி முஸ்லிம் இளைஞர்களுக்கும் காடையர் கும்பலுக்கும் இடையே கடந்த சில நாட்களாக முறுகல் நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை சிங்களக் காடையர் கும்பல் வாளால் வெட்டிக்காயப்படுத்தியது. இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதி முஸ்லிம் இளைஞர்கள் காடையர் கும்பலை அங்கிருந்து விரட்டினர். அதனைத்தொடர்ந்து மீண்டும் நேற்று இரவு 10 மணியளவில் துப்பாக்கிகளுடன் வந்த காடையர் குழுவினர் முஸ்லிம் மக்களின் வீடுகளைத் தாக்கத் தொடங்கியதுடன் எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளினர்.

சில வீடுகளுக்கு தீயும் வைத்தனர். ஏறத்தாழ 20 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இச்சம்பவததில் சம்பவ இடத்திலேயே 18 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் அவர் நேற்று இரவே கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்தும் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

http://www.eelampage.com/?cn=32525

அட போங்கப்பா! சிங்களவர்கள் கருணையுள்ளம் கொண்டவர்களாச்சே! (நான் சொல்லேல்ல, அலவியோ யாரோ கூட்டம் போட்டுச் சொன்னதா ஞாபகம்!). செய்திருக்க மாட்டாங்கள்.

சிங்களவர்கள் கருணா உள்ளம் கொண்டவர்கள். என்றுதான் அலவி சொல்லியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலும் கிழக்கிலும் ஒரு நாளைக்கு எத்தனைபேர் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்கள். செய்தி சேகரிக்க தெற்குக்குப் போகிறீர்கள். அவர்களுக்குரிய தலைவர்கள் இருக்கிறார்கள். போதிய தொடர்புச்சாதனங்களுள்ளன. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நிலத்தை இழந்து நிம்மதியை இழந்து இனக்கொலைக்கு ஆளாகி நாடுவிட்டு நாடுசென்று அகதிகளாய் அலையும் தமிழினத்தைப் பற்றி எந்த மாற்றுத் தொடர்புச்சாதனங்களும்; அலட்டிக்கொள்வதில்லை. மத்திய கிழக்கில் ஒரு முஸ்லீம் நாட்டில் ஒரு முஸ்லீமுக்கெதிராகச் சரியத் சட்டம் அமுல்படுத்தப்படும்போது அதில்போய் தலையிட்டு மனுக்கொடுக்கவேண்டிய தேவையென்ன நமக்கிருக்கிறது. எத்தனையோ அமைச்சர்களுடன் செல்வாக்காக வாழும் இலங்கை முஸ்லீம்களுக்காக நாம் குரல்கொடுக்க அவர்களொன்றும் ஈழத்தமிழர்களைப்போல அரசியல் அனாதைகளல்ல. தான்போக வழியில்லையாம் எலி விளக்குமாறையும் கொண்டுபோகப் பார்க்கிறதாம் என்கிறதுபோல இருக்கிறது எமது அனுதாபப்பார்வை. வேண்டாம் விட்டுவிடுவோம். ஆயிரம்வேதனைகள் எம்மிடம் உண்டு. அழுவதற்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.