Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணிக்கும் இடையில் இன்றுகாலை நடைபெற்ற கூட்டத்தின்போது, இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்னதாக எதிர்வரும் 30ம் திகதிவரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா நீடியுங்கள் நம்ம மக்க்களுக்க்குத்தான் தின்(ண்)டாட்டம்   

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்லா நீடியுங்கள் நம்ம மக்க்களுக்க்குத்தான் தின்(ண்)டாட்டம்   

பொதுமுடக்கம் இல்லாவிட்டால் அடக்கம் தான் அங்கு கொஞ்சநாள் அடங்கமாட்டார்களாமா ?

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

பொதுமுடக்கம் இல்லாவிட்டால் அடக்கம் தான் அங்கு கொஞ்சநாள் அடங்கமாட்டார்களாமா ?
 

நம்ம மக்கள் ஒன்றும் உழைத்துக்கட்டி வைத்துவிட்டு  காலுக்குமேல் கால் போட்டு  சோறு கறி ஆக்கி தின்னும்  நிலையில் இல்லை பெருமாள் , தினக்கூலிகள் வேலைக்கு செல்ல வேண்டும் சென்றால்தான் பிள்ளைகள் ஒரு நேர சோறாவது ஒரு கறியுடனாவது தின்னும் ( மரம் வெட்டுபவர், தேங்காய் பறிப்பவர், கட்டிடம் இடிப்பவர், மூட்டை துக்குபவர்கள் போகிறார்கள் கொரோனா வந்தாலும் பறவாயில்லை பசி வந்து செத்துடக்கூடாது என நினைக்கிறார்கள் அரசு தரும் 2000 ரூபா ஒன்றுக்கும் போதாது இங்குள்ள பொருள் விலை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறன் 

அடக்கம்  என்பது ஒரு தடவையே  ஆனால் பசி ???

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம மக்கள் ஒன்றும் உழைத்துக்கட்டி வைத்துவிட்டு  காலுக்குமேல் கால் போட்டு  சோறு கறி ஆக்கி தின்னும்  நிலையில் இல்லை பெருமாள் , தினக்கூலிகள் வேலைக்கு செல்ல வேண்டும் சென்றால்தான் பிள்ளைகள் ஒரு நேர சோறாவது ஒரு கறியுடனாவது தின்னும் ( மரம் வெட்டுபவர், தேங்காய் பறிப்பவர், கட்டிடம் இடிப்பவர், மூட்டை துக்குபவர்கள் போகிறார்கள் கொரோனா வந்தாலும் பறவாயில்லை பசி வந்து செத்துடக்கூடாது என நினைக்கிறார்கள் அரசு தரும் 2000 ரூபா ஒன்றுக்கும் போதாது இங்குள்ள பொருள் விலை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறன் 

அடக்கம்  என்பது ஒரு தடவையே  ஆனால் பசி ???

பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்......

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்......

நல்ல பழமொழியை சொல்லி கடந்திடுங்க பிறகு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஆழ்ந்த இரங்க்லையும் எழுதிவிட்டு நகர்வோம் 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்ல பழமொழியை சொல்லி கடந்திடுங்க பிறகு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஆழ்ந்த இரங்க்லையும் எழுதிவிட்டு நகர்வோம் 

கொரனோ  பரவ தொடங்கும்போது சிங்கள அரசு சைனாவுக்கு  வெள்ளையடித்தது அந்த கதைகளை பலதடவை எழுதியாயிற்று தற்போது மக்களை நட்டாற்றில் அரசு விட்டு விட்டுள்ளது .முதலாவது அலை பூட்டுதலின் போது இங்கிருந்து போட்டிக்கு உதவி புரிந்தார்கள் அப்படி போன உதவிகள் பணம் பற்றி கோத்தாவின் வானரம்கள் தேவையற்ற குடைச்சல் கொடுத்து நிலைமையை கெடுத்து விட்டார்கள் இப்ப என்ன செய்யலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

கொரனோ  பரவ தொடங்கும்போது சிங்கள அரசு சைனாவுக்கு  வெள்ளையடித்தது அந்த கதைகளை பலதடவை எழுதியாயிற்று தற்போது மக்களை நட்டாற்றில் அரசு விட்டு விட்டுள்ளது .முதலாவது அலை பூட்டுதலின் போது இங்கிருந்து போட்டிக்கு உதவி புரிந்தார்கள் அப்படி போன உதவிகள் பணம் பற்றி கோத்தாவின் வானரம்கள் தேவையற்ற குடைச்சல் கொடுத்து நிலைமையை கெடுத்து விட்டார்கள் இப்ப என்ன செய்யலாம் ?

அடக்கம்பண்ணிப்போட்டு வேலையை பார்ப்போம் வேற என்னத்த செய்ய முடியும் அதுசரி யாழ்பாண கோடீஸ்வரர் அரசுக்கு 10 மில்லியன் கொடுத்துள்ளாராம்  கொவிட் நிவாரண நிதிக்கு இது தெரியுமோ என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அடக்கம்பண்ணிப்போட்டு வேலையை பார்ப்போம் வேற என்னத்த செய்ய முடியும் அதுசரி யாழ்பாண கோடீஸ்வரர் அரசுக்கு 10 மில்லியன் கொடுத்துள்ளாராம்  கொவிட் நிவாரண நிதிக்கு இது தெரியுமோ என்ன??

சிம்பிளா அங்கிருந்து எழுதுபவர் கூறும் கருத்தா இது ?

ஊசியை பற்றி கதைக்கையில் உலகத்தில் திறமான கொரனோ ஊசி எது என்று பரியாரியிடம் நிருபர்  கேட்க அந்த பரியாரியின் பதில் உடனே   கிடைக்கக்கூடிய கொரனோ தடுப்பு ஊசி எதுவோ அதுதான் உலகிலே திறமான பெஸ்ட்  ஊசி என்றாராம் .

இங்கு பண்டமிக் என்றால் என்ன ?கொரனோ  என்றால் என்ன என்று கண்ட கண்டவர்களும் வகுப்பெடுக்க போய்  சனம் குழப்பத்தில் போய் கடைசியில்  பசியில் வந்து நிக்குது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம மக்கள் ஒன்றும் உழைத்துக்கட்டி வைத்துவிட்டு  காலுக்குமேல் கால் போட்டு  சோறு கறி ஆக்கி தின்னும்  நிலையில் இல்லை பெருமாள் , தினக்கூலிகள் வேலைக்கு செல்ல வேண்டும் சென்றால்தான் பிள்ளைகள் ஒரு நேர சோறாவது ஒரு கறியுடனாவது தின்னும் ( மரம் வெட்டுபவர், தேங்காய் பறிப்பவர், கட்டிடம் இடிப்பவர், மூட்டை துக்குபவர்கள் போகிறார்கள் கொரோனா வந்தாலும் பறவாயில்லை பசி வந்து செத்துடக்கூடாது என நினைக்கிறார்கள் அரசு தரும் 2000 ரூபா ஒன்றுக்கும் போதாது இங்குள்ள பொருள் விலை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறன் 

அடக்கம்  என்பது ஒரு தடவையே  ஆனால் பசி ???

இது  அரசின் தவறு

மக்களை வீட்டில் இருக்க சொன்னால்  அதற்கான மாற்றீடு செய்யவேண்டும்.

மக்களை இந்த நிலையில் வைத்து இருப்பதும் தவறு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அடக்கம்பண்ணிப்போட்டு வேலையை பார்ப்போம் வேற என்னத்த செய்ய முடியும் அதுசரி யாழ்பாண கோடீஸ்வரர் அரசுக்கு 10 மில்லியன் கொடுத்துள்ளாராம்  கொவிட் நிவாரண நிதிக்கு இது தெரியுமோ என்ன??

இங்கே பேசப் படாத இன்னொரு தகவலையும் தனியிடம் கேட்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து திருமண சீசனைத் தவறவிடாமல் வரும் ஆட்களும் இரகசியமாக பெரு விருந்துகள் வைத்து பரவலைக் கூட்டி விட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன என அறிந்தேன். அவ்வாறு ஐரோப்பாவில் இருந்து வந்த மாப்பிள்ளையும், மாமியாரும் இறந்திருக்கிறார்கள் எனக் கேள்விப் பட்டேன். உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Justin said:

இங்கே பேசப் படாத இன்னொரு தகவலையும் தனியிடம் கேட்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து திருமண சீசனைத் தவறவிடாமல் வரும் ஆட்களும் இரகசியமாக பெரு விருந்துகள் வைத்து பரவலைக் கூட்டி விட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன என அறிந்தேன். அவ்வாறு ஐரோப்பாவில் இருந்து வந்த மாப்பிள்ளையும், மாமியாரும் இறந்திருக்கிறார்கள் எனக் கேள்விப் பட்டேன். உண்மையா?

போன கிழமை எனது மைத்துனர் கொழும்பில் இரவு நித்திரையில் மாரடைப்பால் காலமானார். ஆனால் அவரும் கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

போன கிழமை எனது மைத்துனர் மாரடைப்பால் காலமானார். ஆனால் அவரும் கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

அப்படியா? ஆனால், எந்தக் காரணத்தால் இறந்தாலும் உடலில் கோவிட் பரிசோதனை செய்கிறார்கள் - அடக்கம், உடலைக் கையாள்வோரின் பாதுகாப்பிற்காக. அதை வைத்துக் கொண்டு கோவிட்டினால் இறந்தார் என்று முடிவெடுத்தார்களோ தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அப்படியா? ஆனால், எந்தக் காரணத்தால் இறந்தாலும் உடலில் கோவிட் பரிசோதனை செய்கிறார்கள் - அடக்கம், உடலைக் கையாள்வோரின் பாதுகாப்பிற்காக. அதை வைத்துக் கொண்டு கோவிட்டினால் இறந்தார் என்று முடிவெடுத்தார்களோ தெரியவில்லை!

இருக்கலாம் ஆனால் அவருடன் படுத்திருந்த அவரது மனைவிக்கு கூட எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இருக்கலாம் ஆனால் அவருடன் படுத்திருந்த அவரது மனைவிக்கு கூட எதுவுமில்லை.

தவறான பதிதலாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் கோவிட் மரண புள்ளி விபரம் வெளியிடும் போதும் கிட்டத் தட்ட 5% கோவிட் காரணமாக இருக்கக் கூடும் என்ற ஊகத்தைக் குறிப்பிட்டே வெளியிடுகிறார்கள்.

ஆனால், கணிசமான  இளவயதினர் , ஐம்பதுக்குட்பட்டோர் கோவிட்டினால் இறந்திருக்கின்றனர் சிறி லங்காவில். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

தவறான பதிதலாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் கோவிட் மரண புள்ளி விபரம் வெளியிடும் போதும் கிட்டத் தட்ட 5% கோவிட் காரணமாக இருக்கக் கூடும் என்ற ஊகத்தைக் குறிப்பிட்டே வெளியிடுகிறார்கள்.

ஆனால், கணிசமான  இளவயதினர் , ஐம்பதுக்குட்பட்டோர் கோவிட்டினால் இறந்திருக்கின்றனர் சிறி லங்காவில். 

ஆனால் இந்த தவறான பதிவால் உறவுகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்படும் அசௌகரியங்கள் சொல்லி மாளா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ஆனால் இந்த தவறான பதிவால் உறவுகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்படும் அசௌகரியங்கள் சொல்லி மாளா?

மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் திரிவதும், தடுப்பூசியை பெற பின்னடிப்பதுவும் இதனாலேயே. ஏற்கெனவே அரசில் நம்பிக்கை இழந்த நம்மக்கள், தங்கள் கண்முன்னால் நடக்கும் இயற்கை, விபத்து மரணங்களை கொரோனாவோடு கோத்துவிடுவதால், சட்டங்களையும், தனிமைப்படுத்தலையும் உதாசீனம் செய்கிறார்கள். இருந்தாலும் வடக்கு மக்களின் ஒத்துழைப்பை காவற்துறை அதிகாரி பாராட்டியிருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

இங்கே பேசப் படாத இன்னொரு தகவலையும் தனியிடம் கேட்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து திருமண சீசனைத் தவறவிடாமல் வரும் ஆட்களும் இரகசியமாக பெரு விருந்துகள் வைத்து பரவலைக் கூட்டி விட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன என அறிந்தேன். அவ்வாறு ஐரோப்பாவில் இருந்து வந்த மாப்பிள்ளையும், மாமியாரும் இறந்திருக்கிறார்கள் எனக் கேள்விப் பட்டேன். உண்மையா?

இந்த சம்பவம் கேள்விப்படவில்லை ஆனால் வெளிநாடுகளிலிருந்து வந்து நோய் தொற்றுக்குள்ளானவர்களும் இருக்கிறார்கள் ஆனால் சனம் அவங்களை வெளிநாட்டிலிருந்து கொரொனாவை கொண்டு வந்தவை என கதை கட்டி சொல்லும் .தற்போது நோய் தொற்று பரவலாக எல்லா இடமும் சென்று உள்ளது தொற்றியும் உள்ளது அலை முடிந்த பின்னரே தெரியும் யார் யார் இருக்கிறார்கள் யார் யார் இல்லையென 

22 hours ago, விசுகு said:

இது  அரசின் தவறு

மக்களை வீட்டில் இருக்க சொன்னால்  அதற்கான மாற்றீடு செய்யவேண்டும்.

மக்களை இந்த நிலையில் வைத்து இருப்பதும் தவறு

அரசே அந்தரத்தில் ஆடுகிறது மக்கள் என்ன செய்வார்கள் தற்போது எங்கள்பகுதியில் பொருள் தட்டுப்பாடு ஏற்படுகிற சூழ்நிலை காணப்படுகிறது பதுக்கியும் இருக்கலாம் பணம் தின்னும் முதலைகள் 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நண்பனோடு தொலைபேசும்போது (கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிட்டார், தனிமைப்படுத்தல் முடியவில்லை) முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட்டார், முகக்கவசத்தை வீதிகளில் பயணிக்கும்போது சரியாக அணிந்துவிட்டு யாரும் தெரிந்தவர்களோடு பேசும்போது நாடிப்பகுதிக்கு இழுத்துவிட்டு பேசுவதாகவும் குறிப்பிட்டார். இது போன்ற மக்களின் பொறுப்பற்ற செயலால் தொற்று மிகவேகமாக பரவுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.