Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இளம் ஊடகவியலாளர் கொரோனா தொற்றுக்கு பலி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, goshan_che said:

அண்ணை, சம்பந்தர் ஐயாவுக்கு பக்கத்தில நிற்கிறவரோ அந்த “முதுபெரும் அரசியல்வாதி”?🤣

நீங்கள் என்ன நினைக்கிறியள்?

  • Replies 59
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் என்ன நினைக்கிறியள்?

அப்படிதான் நினைக்கிறன். ஆள் ஆரெண்டு (உண்மையிலேயே) தெரியுதில்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, goshan_che said:

அப்படிதான் நினைக்கிறன். ஆள் ஆரெண்டு (உண்மையிலேயே) தெரியுதில்ல.

மரண/அஞ்சலி திரியில் அரசியல் வேண்டாம் என்பதால்.......எதுவுமே வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

மரண/அஞ்சலி திரியில் அரசியல் வேண்டாம் என்பதால்.......எதுவுமே வேண்டாம்.

நீங்கள் சொல்றதும் நியாயம்தான்👍🏿.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

எல்லோரையும் போட சொல்லித்தான் சொல்கிறார்கள், ஒவ்வாமை இருக்குதா என்று விசாரித்தவர்கள். பெரியம்மாவின் அண்ணாக்கள்(muscular dystrophy) இருவர் 54,53 வயது, இராணுவம் வீட்ட வந்து போடும் என சொல்லிச் சென்றது. இளைய அண்ணர் போனில் பேசும்போது சற்று அச்சப்பட்டார். வற்புறுத்தி போட வைக்கப்போறாங்களோ என்று, நாங்க போட்டிருக்கிறம் தானே பயப்பிடாம போடுங்கோ என்று சொன்னன்.

எல்லா கோவிட் தடுப்பூசிகளும், விசேட உடல் நிலைகளைக் கொண்டோரில் கோவிட் தொற்றினால் வரும் தீமைகளை விட மிக மிகக் குறைவாகவே தீமைகளைத் தரும் என்பதைச் சொல்ல முடியும்.

எப்படி?

கோவிட்டினால் ஒரு சனத்தொகையில் ஏற்படும் மரணவீதம் 2% - நூறு பேருக்கு தொற்று வந்தால் 2 பேர் சாவர் - சாகும் அந்த 2 பேரும், வயோதிபராக அல்லது உடல் பலவீனம் கொண்டோராக (இந்த ஊடகவியலாளர் போல) இருப்பர்.

கோவிட் தடுப்பூசிகள், தங்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் போது ஒரு மில்லியனில் அல்லது அரைமில்லியன் பேர்களில் ஒருவருக்கே பாரிய தாக்கங்கள் கொண்ட பக்க விளைவுகளை உருவாக்கும் - எனவே இது கோவிட் நோயை விட மிக மிக அரிதான ஆபத்து!

எனவே தான் உடல் பலவீனம் இருப்போர் ஏனையோரை விட அவசியமாக கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமெனப் பரிந்துரைக்கின்றனர்!  

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

எனக்கு மருத்துவ துறைசார் அறிவில்லை. 👇எல்லாம் பொறுக்கியதுதான்.

சினோபார்ம் பற்றி தெரியவில்லை.

ஆனால் அஸ்டிரா, பைசரை யூகேயில் நீரழிவு நோய், கொலஸ்ரோல், இரத்த அழுத்தம், எலும்பு முறிவுகளினால் தகடு பொருத்தப்படடவர்கள், இதே நோயுடன் வயோதிப நிலையிலுள்ளவர்கள் எல்லாருக்கும் கொடுக்கிறார்கள். 

அதிகம் தாக்கம் வந்ததாயும் அறியவில்லை.

எனக்கு தெரிந்த immunosuppressant மருந்து எடுக்கும், ஆட்டோ இமுயூன் கண்டிசன் உள்ளவர்களுக்கு கூட கொடுத்துள்ளார்கள்.

ஆனால் தற்சமயம் கீமோதெரபி எடுக்கும் ஒருவருக்கு என்னும் கொடுக்கவில்லை.

நன்றி கோசன் தகவலுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சத்தியமாக கோப நோக்கில் அந்த படத்தை  இணைக்கவில்லை. ஒரு முதுபெரும் அரசியல் தலைவர்  அமரர் பிரகாஸ் அவர்களை சந்தித்துள்ளார் என்ற நோக்கில் தான் அதை இணைத்தேன்.

பிரகாஸ் எனக்கு தெரியாத  பிரபலம். அதையிட்டு கவலை அடைகின்றேன்

நன்றி அண்ணை.

6 hours ago, Justin said:

எல்லா கோவிட் தடுப்பூசிகளும், விசேட உடல் நிலைகளைக் கொண்டோரில் கோவிட் தொற்றினால் வரும் தீமைகளை விட மிக மிகக் குறைவாகவே தீமைகளைத் தரும் என்பதைச் சொல்ல முடியும்.

எப்படி?

கோவிட்டினால் ஒரு சனத்தொகையில் ஏற்படும் மரணவீதம் 2% - நூறு பேருக்கு தொற்று வந்தால் 2 பேர் சாவர் - சாகும் அந்த 2 பேரும், வயோதிபராக அல்லது உடல் பலவீனம் கொண்டோராக (இந்த ஊடகவியலாளர் போல) இருப்பர்.

கோவிட் தடுப்பூசிகள், தங்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் போது ஒரு மில்லியனில் அல்லது அரைமில்லியன் பேர்களில் ஒருவருக்கே பாரிய தாக்கங்கள் கொண்ட பக்க விளைவுகளை உருவாக்கும் - எனவே இது கோவிட் நோயை விட மிக மிக அரிதான ஆபத்து!

எனவே தான் உடல் பலவீனம் இருப்போர் ஏனையோரை விட அவசியமாக கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமெனப் பரிந்துரைக்கின்றனர்!  

நன்றி Justin அண்ணை, முதலாவது தடுப்பூசி போட்டதால தாக்கம் குறைவா இருந்தது போல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2021 at 21:23, ஏராளன் said:

அவன் மிகுந்த நேர்மையாளன் என்று அவனது செய்தி ஆசிரியர் ஒருவர் பகிர்ந்த குறிப்பொன்றில் பகிர்ந்திருந்தார். செய்திகள் போதிய அளவு அனுப்பாததால் தனது சம்பளத்தை போடவேண்டாம் என்றிருக்கிறான்.

ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரகாஸின் பூதவுடல் மின் தகனம் செய்யப்பட்டது

September 6, 2021

56-1.jpg?resize=540%2C405

 

 

கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல் இன்றைய தினம் மின் தகனம் செய்யப்பட்டது. 
கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26) கடந்த வாரம் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 02ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அவரது பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. அத்துடன் அவரது அஸ்தி அல்லாரை புதிய செபமாலை அன்னை தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுயாதீன ஊடகவியலாளரான, பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால்  நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார். அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி  அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2021/165604

 

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.