Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் திண்டாட்டம் ! அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை அதிரடியாக உயர்வு - முழு விபரம் இதோ !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் திண்டாட்டம் ! அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை அதிரடியாக உயர்வு - முழு விபரம் இதோ !

(இராஜதுரை ஹஷான்)

இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை  நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதனால் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும்,அமைச்சரவை அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

பால்மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தற்போதும் சந்தையில் இப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை அவதானிக்க முடிகிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுகின்றமைக்கு நுகர்வோர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எரிபொருள்

அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் எரிபொருளின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை கனிய வள கூட்டுத்தாபனம் 70 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எரிபொருளின் விலை இறுதியாக கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது.92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினாலும், 95ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் ஒன்றின் விலை 23 ரூபாவினாலும்,ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவாலும்,சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினாலும்,மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.

சமையல் எரிவாயு

லிட்ரோ

லிட்ரோ ரக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று நள்ளிரவு முதல் முன்னறிவிப்பின்றிய வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 1,257 ரூபாவினாலும், 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் விலை 503 ரூபாவினாலும், 2.5 கிலோ கிராம் நிறைவுடைய எரிவாயுவின் விலை 231 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் புதிய விலை 520 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லாக் ரக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து லிட்ரோ ரக சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்குமாறு கட்டுப்பாட்டு விலை அமுலில் இருக்கும் போது லிட்ரோ நிறுவனத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அப்போது அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டு அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டவுடன் லிட்ரோ நிறுவனத்தினர் 1200  ரூபாவுடன் மேலதிகமாக 57 ரூபாவையும் இணைத்து 1257 ரூபாவினால் விலையை அதிகரித்துள்ளது.

லாப்

லாப் ரக சமையல் எரிவாயுவின் விற்பனை விலை நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரின் விலை 984 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரின் விலை 393 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சிலின்டரின் புதிய விலை 2840 ரூபாவாகவும், 5 கிலோகிராம் நிறையுடைய சிலின்டரின் புதிய விலை 1,136 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் லாப்ரக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது.12.5 கிலோகிராம் நிறையுடைய சிலின்டரின் விலை 363 ரூபாவினாலும், 5கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன. விலை அதிகரித்தும் லாப் ரக எரிவாயு சிலிண்டரை பெற்றுக் கொள்வதில் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டனர். சந்தையில் லாப் ரக எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இவ்வாறான பின்னணியில் தற்போது மீண்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா

கோதுமை மாவின் விலையும் நேற்று காலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய கோதுமை மா ஒரு கிலோகிராம் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் கோதுமை மா உற்பத்தி ஆலை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய 1 கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விற்பனை விலை 97 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிறீமா மா நிறுவனம் ஒரு கிலோகிராம் மாவின் விற்பனை விலையை 15 ரூபா தொடக்கம் 20 ரூபா வரையில் அதிகரிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளது.

சீமெந்து

50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து பெக்கெட்டின் விலை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து பெக்கெட்டின் புதிய விலை 1098 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உற்பத்தி தேவைக்கு பயன்படுத்தப்படும் சீமெந்தில் 40 சதவீதம் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன்,60 சதவீதம் சீமெந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

பால்மா

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 250 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் பால்மாவின் புதிய விலை 1195 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் புதிய விலை 480 ரூபாவாகவும் காணப்படுகிறது.

பேக்கரி உற்பத்தி உணவு பொருட்கள்

கோதுமை மா, சமையல் எரிவாயு, பால்மா ஆகியவற்றின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் பேக்கரி உற்பத்தியிலான உணவுகளின் விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும்.என பேக்கரி உணவு உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. பாண் ஒரு இறாத்தலின் விலை 5 ரூபாவினாலும், பனிஸ், டீ பனிஸ், ஆகியவற்றின் விலை 10 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் கேக்கின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

https://www.virakesari.lk/article/115093

 

  • கருத்துக்கள உறவுகள்

சனம் எல்லாம் நாட்டை விட்டு ஓடப்போகுதுகள்.நல்ல  அடி மாட்டு விலைக்கு தீவை வாங்கலாம்.லாபாய் லாபாய்.😄

  • கருத்துக்கள உறவுகள்

படிப்படியாகச் சிறீமாவோ அம்மையாரின் ஆட்சிக்காலத்தை(1970) நோக்கி இலங்கை செல்கிறதா? விலைவாசி உயர்வு, திட்டமிட்ட தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம். அக்காலத்தில்  வடபகுதியில் விவசாயமாவது கைகொடுத்தது. இன்று விவசாயத்திலே முன்புபோல் ஈடுபடும் நிலையற்ற சூழலில் மேலும் படுமோசமானதொரு நிலையை மக்கள் சந்திக்கப்போகின்றார்கள்போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, சுவைப்பிரியன் said:

சனம் எல்லாம் நாட்டை விட்டு ஓடப்போகுதுகள்.நல்ல  அடி மாட்டு விலைக்கு தீவை வாங்கலாம்.லாபாய் லாபாய்

அப்படியெல்லாம் நினைக்கப்படாது அண்ணை 
****  காய்ஞ்சாலும் துவேசம் விட்டுப்போகாது, கொலைப்பட்டினியில் கிடந்தாலும் தமிழனை நெருக்குவேன் என்று சொன்னால் போதும், சிங்கள செத்த  எலும்புக்கூடும் போய் வாக்குபோட்டுவிட்டு வரும்    

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nochchi said:

அக்காலத்தில்  வடபகுதியில் விவசாயமாவது கைகொடுத்தது. இன்று விவசாயத்திலே முன்புபோல் ஈடுபடும் நிலையற்ற சூழலில்

அதென்ன, “இன்று விவசாயத்திலே முன்புபோல் ஈடுபடும் நிலையற்ற சூழல்” ??

வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, அதற்குள் நீங்களா விவசாயத்திலே முன்புபோல் ஈடுபடும் நிலையற்ற சூழல் உருவாக்குபவர்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.