Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’இந்திய இழுவைப் படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-விஜயரத்தினம் சரவணன்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு, இந்திய மீனவர்கள் மீது மிகவிரைவில் தாக்குதல் நடத்துவோம் என, முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்கள், ஒக்டோபர் 10ஆம் திகதியன்று, ஏறக்குறைய 30 இந்தியன் இழுவைப்படகுகள் வருகைதந்து, அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த முல்லைத்தீவு மீனவர்களின் 15க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகள் சேதமாக்கியதாகவும் தெரிவித்தனர்.

'கடந்த வருடம் இந்தியன் இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்;கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் ஆறு மாத காலமளவில் முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு இந்தியன் இழுவைப்படகுகளின் வருகை இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து இரண்டு கடல்மைல் தூரமளவில், இந்திய இழுவைப் படகுகள் வருகை தருவதுடன், எமது மீனவர்களின் வலைகளும் இந்தியன் இழுவைப் படகுகளால் சேதமாக்கப்படுகின்றன' எனவும், அவர்கள் சாடினர்.

'கடந்த காலங்களில் கடற்றொழில் அமைச்சர்களாக இருந்த பெரும்பான்மை இனத்தவர்கள், மீனவர்களின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தந்திருக்கின்றனர். தற்போது கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா, தற்போது இடம்பெறுகின்ற இந்த இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் குறித்து தம்மோடு கலந்துரையாடுவதுமில்லை, இங்கு வருவதுமில்லை' எனவும், மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

டக்ளஸ் தேவாநந்தா கடற்றொழில் அமைச்சு பொறுப்பை ஏற்ற பின்னரே, இந்திய மீனவர்களின் வருகை  அதிகரித்துள்ளதுடன், கடற்படையினரும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை' எனவும், மீனவர்கள் சாடினர்.

Tamilmirror Online || ’இந்திய இழுவைப் படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம்’

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள எஜமான விசுவாசம் காண்பிக்க , இந்த பிரச்சனையில் சிங்கள ஆளும் வர்க்கம் எதை எதிர் பார்க்கிறார்களோ அதை மெளனமாக இருந்து டக்ளஸ் நிறைவேற்றியிருக்கிறார்.

கடலுக்கு அப்பாலும் இப்பாலும் உள்ள ஒரே இன மக்களை மோதவிட்டு தீரா பகையை வளர்க்க முடிவு செய்துவிட்டார்கள்.

கண்டிப்பாக தமிழக மீனவர்கள் செய்வது தவறேதான், ஆனால் அதை தீர்த்து வைக்க வேண்டியது வடக்கு கிழக்கும் எமது நாடுதான் என்று பேரழிவுகளை ஏற்படுத்தி கைப்பற்றிய சிங்கள ஆளும் வர்க்கம்தான்.

அப்போது அபே லங்கா என்று கூவியவர்கள் இந்த பிரச்சனையில் மட்டும் அது தமிழர் பிரதேசம் என்று கண்டுக்காமல் விட்டது இனங்களை மோதவைக்க பின்னப்பட்ட மிக பெரும் சதி.

இந்திய எல்லையை கொண்டது சிங்களவர் நிலங்களாயிருந்திருந்தால் என்றோ தீர்க்கமான ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும்.

பரந்து விரிந்த  சர்வதேச கடற்பரப்பில் பயணிக்கும் ஆயிரம் கப்பல்களுக்கிடையில் வரும் புலிகளின் கப்பலையெல்லாம் கண்டு பிடித்து அழித்துவிட்டோம் என்று வீரம் பேசும் சிங்கள கடல் மற்றும் விமான படைகளினால் ஊர்ந்து வந்து வடகிழக்கு கடற்பரப்பில் பல மணிநேரம் அத்துமீறல் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகுகளை கட்டு படுத்த முடியவில்லை என்றால், 

அது கட்டு படுத்த முடியவில்லை என்று அர்த்தமல்ல. கட்டுபடுத்த விரும்பவில்லை என்று அர்த்தம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய றோலர்கள் அத்துமீறல் முல்லையில் வலைகள் நாசம்!

முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நான்கு தொழிலாளர்களின் வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு சேதப்படுத்தப்பட்ட வலையின் பெறுமதி சுமார் 2 லட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கடற்தொழிலாளர் சங்க தலைவரிடம் முறையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அண்மைக்காலமாக இந்திய இழுவைப்படகுகள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுளைந்து கடற்தொழில் உபகரணங்களை நாசம்செய்து வருகின்றன எனினும் அரசும் மீன்பிடித்துறை அமைச்சரும் காத்திரமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்திய றோலர்கள் அத்துமீறல் முல்லையில் வலைகள் நாசம்! - உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

இழுவைப்படகு முதலாளிகள் அரசியல் திமிங்கிலங்களாம் உண்மையே?!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் இந்தியன் தான் 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தொப்புள்கொடி உறவு அது இது எனப்பார்க்க முடியாது **** *****

இரட்டை மடிப்பு வலையைப்பாவித்து எங்கள் கடலில் மீன் பிடிக்குறோம் எனக்கூறி அப்பிரதேசத்தின் பவளப்பாறைகளை எல்லாம் புடுங்கி எறியுறாங்கள். ஏதோ நாங்கள் இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகளுக்குச் சாப்பாடு போடுகிறம் எனக்கூறிக்கொண்டு சிலோஙாரத் ***** என காவல் துறையும் கியூ பிரஞ்சும் சொல்லும் தமிழ்நாட்டுக்க*** சொல்லுவான் சீமான் இலங்கைத்தமிழர் பெயரைவைத்து அரசியல் செய்வா* திமுக அதிமுக அகதி முகாமுக்குப் பெயரை மாத்தும்.

எங்களால இவர்களை வைத்துச் சோறுபோடமுடியாது எனச் சொன்னால் ஐ நா அகதிகளுக்கான அமைப்பு பொறுப்பெடுத்து அவர்களை வேறு எங்காவது நாடுகளுக்கோ அல்லது சொந்த ஊருக்கோ அனுப்பி வைக்கும். *** தங்கட கடலை மலடாக்கிவிட்டு இப்போ எங்கட கடலிலை மலடாக்க வருகிறாங்கள்.

ஒரு சின்ன நாடு அதில் ஆகக்குறைந்த இனம் தமிழ் இனம் எங்க போனாலும் அடி விழுகுது எண்டால் திருப்பி அடிக்க வேண்டியதுதான்.

Edited by நிழலி
அநாகரீக சொற்கள், ஒருமையில் எழுதிய சொற்கள் ஆகியன நீக்கப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

அரசும் மீன்பிடித்துறை அமைச்சரும் காத்திரமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை

அவர் கடலுக்குள்ள பஸ் இறக்குறதில பிசி, அவரை குழப்பாதீங்கோ! அவர் கடற்தொழில்  அமைச்சர், அங்குள்ள பிரச்சனைகளை கவனிப்பதில்லை,  தீர்ப்பதில்லை  நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு அவரிடமே. இப்போ அவருக்கு  பல்கலைக்கழகத்தில் வேலை. இதில் ஆஹா..... டக்கிளஸ் அல்லவோ தமிழரை காக்கும் கடவுள்! என்று கொஞ்சம் கூவிக்கொண்டு திரியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.