Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது. கவிஞர் காசி ஆனந்தன் சாடல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது. கவிஞர் காசி ஆனந்தன் சாடல்! .

இந்திய அரசுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள நட்புறவைச் சிதைத்தழிக்கும் நோக்கோடு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது சிறிலங்கா அரசு என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார்.

மீனுக்கு அல்ல இலங்கையில் வாழும் மீனவர்களுக்குத் தூண்டில் போடப்படுகிறது. ஏன் அவர்கள் தூண்டில் போடுகிறார்கள் என்பதை மறந்து சிங்கள சிறிலங்கா அரசுக்குத் துணை போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,received_433433928123304-214x300.jpeg?6b

received_268816515141156-213x300.jpeg?6b

 

https://www.meenagam.com/இலங்கை-அரசு-தமிழ்நாடு-மீ/

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு கவிஞரே!

ஒரு சூழ்ச்சியும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, புங்கையூரன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு கவிஞரே!

ஒரு சூழ்ச்சியும் இல்லை!

 

மனுசரை கொலை செய்யலாம்  ஆனால் மாடுகளை அறுக்க கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

மனுசரை கொலை செய்யலாம்  ஆனால் மாடுகளை அறுக்க கூடாது

புத்தனுக்கு கெளதம புத்தரைத் தெரியும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் சிங்கள புத்த பிக்குகளைத் தெரியாதென்பது எனக்கும் தெரியாது. 😲 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு கவிஞரே!

ஒரு சூழ்ச்சியும் இல்லை!

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️

பிறகு சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்க வேண்டி வருமே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️

அடுத்தவன் வளவா....?வரலாறு அப்படிச் சொல்லவில்லையே....?? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️

யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே - கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

காசி ஆனந்தன் அவர்கள் தானாகவே இலங்கை திரும்ப முடிவெடுத்தாலும் சென்னை பரங்கிமலயிலுள்ள தமிழக காவல்துறையின் வெளிநாட்டுப்பிரிவில் சட்டவிரோதக் குடியேறி எனும் பட்டப்பெயருடன் லோக்கல் போலீஸ் ஸ்ரேசன் துண்டையும் காவிக்கொண்டு கால்கடுக்க நிற்கவேண்டும் தவிர சென்னை சாஸ்திரி பவனிலும் காயவேண்டும் மத்திய புலனாய்வுத்துறையிடம் நோ ஒப்ஜெக்சன் சான்றிதழ் வாங்குவதற்கு அவன் சொல்லுவான் நீ வீட்டுக்குப் போ அங்க நான் வந்து விசாரிக்கிறன் எனச்சொல்லிப்போட்டு மாதக்கணக்கில் வரமாட்டான் ஆனால் கியூ பிராஞ்ச் வரும் விசாரிக்கும்.

பில்ரர் வில்ஸ் சிகரட்டும் கமலா ஆரஞ்சும் வாங்க்கி கொடுக்கவேணும் சிலவேளை பர்மா பயாரில் விற்கும் வெளிநாட்டுச்சரக்கும் கேட்பாங்கள் அதையும் அழவேண்டும்.

அப்ப காசி அண்ணர் சொல்லுவார் எல்லாம் சட்டப்படிதான் நடக்குது என ஆனால் கோமணத்துண்டு போல ஒரு கடல் அதில சிங்களவன் மறிச்சுக்கட்டினது போக எஞ்சியதில் மீன்பிடிக்க வேணும் அதுக்குள்ள சீனாக்காரன் அட்டை வளர்க்கிறான். வயித்தில அடிச்சால் பறுவாயில்லை கடலையே இரட்டை மடிப்பு வலைபோட்டுப் பவளப்பாறைகளை அழிக்கிறான் தவிர எமது மீனவர்களது வலைகளை அழிக்கிறான் அடியும் போடுறான் 

இவர் மறுகன்னத்தைக் காட்டச்சொல்லுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

இவர் மறுகன்னத்தைக் காட்டச்சொல்லுகிறார்.

மறுகன்னம் வேறு எதுக்கு இருக்கு - உச்சா வாங்க என்று நினைத்தீர்களா? தருமஅடி கிடைக்குமே? 😀

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே - கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது.

சிலருக்கு சௌக்கியமடான இடத்தில் தாங்கள் இருப்பதால் களவு, கொள்ளைகளினால் பாதிக்கபடுபவர்களின் வேதனைகள் விளங்குவது இல்லை. அவர்களது கனவு உலகம்.

Edited by விளங்க நினைப்பவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.