Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்துக்கான பிரதம செயலாளர் சுட்டுக்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்துக்கான பிரதம செயலாளர் சுட்டுக்கொலை

[திங்கட்கிழமை, 16 யூலை 2007, 19:26 ஈழம்] [கொழும்பு நிருபர்]

திருகோணணமலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதம செயலாளர் கேரத் அபயவீர அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

பிரதம செயலாளர் என்பவர் யார்???

அவர் பணி என்ன???

அவர் அரசு சார்பானவரா???

ம் கிழக்கு மாகாண உயர்நிலை அதிகாரி என்பவர் அரசியல்வாதிகளுக்கு அடுத்த நிலையில் அதிக அதிகாரம் கொண்ட அரச அதிகாரி. ஏறத்தாள கிழக்கு மாகாண ஆளுனருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று சொல்லலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆப்பு இழுத்த குரங்காக மகிந்தா. இந்தக் கொலைக்கு புலிகளைக் குற்றம் சாட்டினால் அவர்கள் கிழக்கில் இருக்கிறார்கள் என்பதுபோல் இருக்கும் அதேவேளை கருணா குழுவையும் குற்றம் சாட்டும் தைரியம் மகிந்தருக்கு அல்லது பாப்ப்பா ரம்புக்கள்ளனுக்கும் இல்லை என்ன சொல்லப்போகிறார்கள் என்ப்தை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆப்பு இழுத்த குரங்காக மகிந்தா. இந்தக் கொலைக்கு புலிகளைக் குற்றம் சாட்டினால் அவர்கள் கிழக்கில் இருக்கிறார்கள் என்பதுபோல் இருக்கும் அதேவேளை கருணா குழுவையும் குற்றம் சாட்டும் தைரியம் மகிந்தருக்கு அல்லது பாப்ப்பா ரம்புக்கள்ளனுக்கும் இல்லை என்ன சொல்லப்போகிறார்கள் என்ப்தை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதை வெளியில் சொன்னால்தானே. மூடிமறைத்து விடுவார்கள். அப்படியே சொல்ல வேண்டி வந்தாலும் தற்கொலை என்று சொன்னாலும் சொல்லுவார் புழுகர் ரம்புக்வெல. அதை நம்புவதற்கு சிங்களவர்கள் ரெடி. :):(

பிரதம செயலாளர் என்பவர் யார்???

அவர் பணி என்ன???

அவர் அரசு சார்பானவரா???

http://www.nepc.lk/contacts/Contact%20list...Secretariat.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை வெளியில் சொன்னால்தானே. மூடிமறைத்து விடுவார்கள். அப்படியே சொல்ல வேண்டி வந்தாலும் தற்கொலை என்று சொன்னாலும் சொல்லுவார் புழுகர் ரம்புக்வெல. அதை நம்புவதற்கு சிங்களவர்கள் ரெடி. :):(

திருமலையில் தற்போது பெரும் பரப்ரப்பாக தேடுதல் நடைபெறுகிறதாம். :(:(:o

(2 ஆம் இணைப்பு) கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சுட்டுக்கொலை.

கிழக்கு மாகாணத்துக்கான சிறிலங்காவின் பிரதம செயலாளர் கேரத் அபயவீர இன்று அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள கிழக்கு மாகாண செயலகத்தில் இருந்து தனது கடமைகளை முடித்து விட்டு வாகனத்தில் புறப்படுவதற்காக அலுவலக வாசலுக்கு வந்த போது இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக திருகோணமலை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

தலையிலும் நெஞ்சிலும் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை உட்துறைமுக வீதியும் அதனை அண்மித்த பகுதிகளும் சிறிலங்கா இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்திற்கான உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்தும் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினரது செயற்பாடுகளை அவர் அண்மையில் விமர்சித்திருந்ததும் அதனையடுத்து கருணா குழுவினரால் அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் அம்பாறை மாவட்டத்திற்கான அரசாங்க அதிபராக கேரத் அபயவீர பணியாற்றினார்.

-Puthinam-

நிச்சயமாக இராணுவம் அல்லது அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுததாரிகள்தான் சுட்டிருக்க வேண்டும். ஏனென்றால் கிழக்கில்தால் புலிகள் இல்லையே :P

புலிகள் முற்றாக வெளியேற்ற பட்டாகி விட்டது அதை நான் இப்போது முதல் நம்புகிறேன்....

இவர் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவராக இருக்க வேண்டும். அதனால் தான் புலிகள் கிழக்கில் இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்க முடிந்திருக்கிறது.

இப்போது புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்ட நிலையில் தேச பக்தி கொண்டவர்களால் கொல்லப் பட்டிருக்கிறார்.

அதுசரி இப்போது சுற்றி வளைத்து யாரைத் தேடுகிறார்கள்? புலிகள் தான் கிழக்கில் இல்லையே B)

Edited by Manivasahan

இவர் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவராக இருக்க வேண்டும். அதனால் தான் புலிகள் கிழக்கில் இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்க முடிந்திருக்கிறது.

இப்போது புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்ட நிலையில் தேச பக்தி கொண்டவர்களால் கொல்லப் பட்டிருக்கிறார்.

அதுசரி இப்போது சுற்றி வளைத்து யாரைத் தேடுகிறார்கள்? புலிகள் தான் கிழக்கில் இல்லையே B)

அடிரா சக்கை அதுதான் உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு பிரதம செயலாளர் கொலை: மூவர் கைது

[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2007, 16:51 ஈழம்] [சி.கனகரத்தினம்]

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கேரத் அபயவர்த்தன கொலை தொடர்பாக பிரதேச செயலக பணியாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள கிழக்கு மாகாண சபை செயலகத்தில் இருந்து தனது பணிகளை முடித்துவிட்டு கேரத் அபயவர்த்தன திரும்புகையில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இக்கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண பிரதேச செயலகப் பணியாளர்கள் மூவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 17-07-2007 17:48 மணி தமிழீழம் [நிலாமகன்]

அபேயவீரவின் படுகொலையுடன் தமது அமைப்பு எந்தவகையிலும் தொடர்புபட்டிருக்கவில்லை - இளந்திரையன்

கிழக்கு மாகாண தலைமைச் செயலர் ஹேரத் அபேயவீரவின் படுகொலையுடன் தமது அமைப்பு எந்தவகையிலும் தொடர்புபட்டிருக்கவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள விடுதலைப் புலிகளிள் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இச்சம்பவம் அரசியல் நோக்கத்துடன் இப்படுகொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண தலைமைச் செயலாளர் படுகொலைக்கும் தமது விடுதலை அமைப்புக்கும் எதுவித தொடர்பும் இல்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தம் இக் கொலை தொடர்பாக 8 பேரைக் கைது செய்திருக்கின்றார்கள். குறித்த நபரின் வாகன சாரதியும் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் குடும்ப ஆட்சி நிலைக்கப் பலியிடப்படும் ஆடுகளில் இவரும் ஒன்று! சோளம் பயிரிடவும் சோளக்கொல்லையைப் பாதுகாக்கவும் என்று இன்னும் பல ஆடுகள் பலியிடப்படும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் ஒரு புலியும் இல்லையென அரசு தம்பட்டம் பிரதம செயலாளரை சுட்டுக் கொன்றது யார்?

[18 - July - 2007]

* கேள்வி எழுப்புகிறார் ஐ.தே.க.எம்.பி.ஹரிசன்

எம்.ஏ.எம்.நிலாம்

தேசப்பற்றுள்ளவர்கள் எனக் கூறுவோரும், ஹெல உறுமய வினரும் எதிர்பார்ப்பது போன்று தமிழ் மக்களை கொன்றொழிக்கும் யுத்தமொன்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சி எந்த விதத்திலும் துணைபோக முடியாதெனத் தெரிவித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் பயங்கரவாதத்தை ஒழிக்கும் இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தபின்னரே முன்னெடுக்கப்படவேண்டுமெனவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.