Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு அண்மையில் நீடிக்கும் குறைந்த அழுத்தப் பிரதேசம் – 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இலங்கைக்கு அண்மையில் நீடிக்கும் குறைந்த அழுத்தப் பிரதேசம் – 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி!

இலங்கைக்கு அண்மையாகக் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யுமென அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

https://athavannews.com/2021/1247698

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையுடன் கூடிய காலநிலை – யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிப்பு!

மழையுடன் கூடிய காலநிலை – யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில்  மழைகாரணமாக காரணமாக 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதுடன் குறித்த மழையுடன் கூடிய நிலையில் தாக்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊரகாவற்துறை, தெல்லிப்பளை, சங்கானை சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் அந்தந்த பிரதேச செயலர் ஊடாக பெறப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1247707

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜாதெரிவித்துள்ளார்.

தற்போதய காலநிலை மாற்றம் தொடர்பில்  இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாகமுத்து பிரதீபராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தற்பொழுது சிலாபத்திற்கு 67 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு குறித்த தாழமுக்கமானது தற்போது  சிலாபத்திற்கு மேற்காக நிலை கொண்டிருப்பதனால்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மழை கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1247777

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே 4 நாள் மழை!
இன்று கொஞ்சம் வெயில் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் மழையா…?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

கிழக்கில் மழையா…?

தனியைத் தான் கேக்கவேணும், அவர் தற்காலிக விடுப்பில் இருக்கிறார். கிழக்கில் மழை என்று செய்திகளில் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் தொடர் மழையால் மக்கள் வாழ்க்கை பாதிப்பு

கடந்த சில நாட்களாக பெய்து வரும்  மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல தாழ் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். 

 

இருப்பினும் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து செல்லும் நிலைமை ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

IMG-20211101-WA0011.jpg

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்கள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். அவர்களது வீடுகளுக்குள்ளும் மழை நீர் உட் புகுந்துள்ளது. 

IMG-20211101-WA0010.jpg

கடந்த காலத்தில் நிரந்தர வீட்டுத்திட்டங்களுக்கு உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்டக் கொடுப்பனவுகளை மட்டும் வழங்கப்பட்ட நிலையில் மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாத குறித்த மக்கள்  பெய்து வருகின்ற மழை காரணமாக நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.

IMG-20211101-WA0012.jpg

அத்தோடு  மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. 10அடி 6 அங்குலத்தைக் கொண்ட கனகாம்பிகைக்குளம் 10 அடி 6.5 அங்குலத்திற்கு நீர் மட்டம் அதிகரித்தமையால் 0.5" அங்குலத்திற்கு தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளது.

IMG-20211101-WA0014.jpg

மேலும் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் இராணுவம்,  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவை பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20211101-WA0006.jpg

 

 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

தனியைத் தான் கேக்கவேணும், அவர் தற்காலிக விடுப்பில் இருக்கிறார்

ஓ.....ஓ.... சங்கதி அப்படியா? நான் நினைத்தேன்; அவருக்கு வெளிநாடொன்றிற்கு விஷா கிடைத்து வெளியேறிவிட்டாரென. அவரது கடைசி பதிவில் விஸா கிடைத்தால் வெளியேறும் யோசனை வெளியிட்டிருந்தார். அதனால நானும் அவரை தேடலை.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

மன்னார் மாவட்டத்தில் தொடரும் மழை- பல குடும்பங்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும்,  நேற்று (திங்கட்கிழமை) மாலை முதல் பெய்த மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் மழை நீர் சூழ்ந்து கொண்டுள்ளதோடு,மக்களின் வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

எனினும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் ழை நீர் சூழ்ந்து கொண்டுள்ள போதும் தற்போது வரை எவ்வித இடப் பெயர்வுகளும் இடம் பெறவில்லை என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் மன்னார் மூர் வீதி, உப்புக்குளம், பள்ளிமுனை, சாந்திபுரம், சௌத்பார், பனங்கட்டுகொட்டு, எமில் நகர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பல வீடுகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டுள்ளது.

இதனால் குறித்த வீடுகளில் உள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் அதிகாரிகள் யாரும் தமது பகுதிக்கு வருகை தரவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவு நீர் வடிகால் மற்றும் புதிதாக கிரவல் பரவப்பட்டு அமைக்கப்பட்டு வரும் தற்காலிக வீதிகள் உரிய முறையில் செப்பனிடப்படாமையினால் மழை நீரை வெளியேற்ற முடியாத நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தலைமன்னார் ஊர்மனை (கிராமம்) பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் இதுவரை உரிய அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வரவில்லை என தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த பகுதியில் உள்ள பல்வேறு குடும்பங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

mannar-issue-6-600x284.jpg

https://athavannews.com/2021/1247888

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

ஓ.....ஓ.... சங்கதி அப்படியா? நான் நினைத்தேன்; அவருக்கு வெளிநாடொன்றிற்கு விஷா கிடைத்து வெளியேறிவிட்டாரென. அவரது கடைசி பதிவில் விஸா கிடைத்தால் வெளியேறும் யோசனை வெளியிட்டிருந்தார். அதனால நானும் அவரை தேடலை.......

ஓமோம், என்றாலும் எதுவும் உறுதியாக தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை போனவாரம் ஊரில் தான் இருந்தார் தனி.

10 hours ago, ஏராளன் said:

ஓமோம், என்றாலும் எதுவும் உறுதியாக தெரியாது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்கள் பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில், நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கைக்கு அண்மையாகக் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவியது.

இந்த நிலையில், சீரற்ற வானிலையால் 11 மாவட்டங்களில் 1451 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 821 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த அனர்த்தத்தினால் 4 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் இருவர் வெள்ளத்தில் சிக்கியும் இருவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 03 வீடுகள் முழுமையாகவும், 410 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2021/1248030

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.