Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளை ஜெனிவாவுக்கு கூட்டிச் செல்லாது வடக்கை நோக்கி உடன் படையயடுங்கள்! நாடாளுமன்றில் விமல் வீரவன்ஸ வீராவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை ஜெனிவாவுக்கு கூட்டிச் செல்லாது வடக்கை நோக்கி உடன் படையயடுங்கள்! நாடாளுமன்றில் விமல் வீரவன்ஸ வீராவேசம்

கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றி அங்கிருந்து விடுதலைப்புலிகளை விரட்டியடித்து அரசு வெற்றிவாகை சூடியிருக்கின்றது.

அதேபோன்று வடக்கையும் கைப்பற்றுவதற்கு உடனடியாகப் படையெடுங்கள்!

விடுதலைப்புலிகளை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்வதற்கு முயற்சிப்பதைத் தவிர்த்து, படையினரை வன்னி நோக்கி நகர்த்துங்கள்!

இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் விராவேசமாகப் பேசினார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசிய அவர் வன்னி நோக்கிப் படை எடுப்பதைத் தவிர்த்து, விடுதலைப் புலிகளை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்குமானால் அதற்கு எதிராக எமது கட்சியும் மக்களும் கடுமையாகப் போராடுவோம் என்றும் விமல் வீரவன்ஸ அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது:

கிழக்கை வெற்றி கொண்ட அதே சூட்டோடு வடக்கையும் வெற்றிகொள்ள வேண்டும்.வடக்கு நோக்கிப் படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். உடனடியாக வடக்கைக் கைப்பற்றி ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும்.

ஆனால், வடக்கு மீது யுத்தம் தொடுப்பதற்குப் பதிலாக புலிகளை ஜெனிவாவிற்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்று நாம் அறிகின்றோம். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம்.

1987 இல் சட்டவிரோதமாகச் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் ஜே.வி.பியின் முயற்சியால் இரத்துச் செய்யப்பட்டு அந்த ஒப்பந்தம் மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கும் கிழக்கும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன.அதைத் தொடர்ந்து இப்போது கிழக்கு மாகாணம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

புலிகளின் பயங்கரவாதத்தை கிழக்கில் முற்றாகத் தோற்கடித்து அங்குள்ள மக்களை நிம்மதியாக வாழவைப்பதற்காகப் படையினர் மேற்கொண்ட யுத்த நடவடிக்கை மூலம் கிழக்கு இப்போது புலிகளின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளது.

தற்போது கிழக்கில் புலிகளின் முகாம்கள் எதுவுமில்லை. யுத்தம் மூலம் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று பல அரச சார்பற்ற நிறுவனத்தினரும் இன்னும் பலரும் கூறி வந்தனர்.அது இப்போது பொய்யாகி விட்டது.

கிழக்கில் இருந்து புலிகளை முற்றாக விரட்டியடித்ததன் மூலம் யுத்தம் மூலம் புலிகளைத் தோற்கடிக்கும் ஆற்றல் தமக்கு உண்டு என்பதைப் படையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

கிழக்கு இல்லாத புலிகளால் வடக்கை மாத்திரம் வைத்துக்கொண்டு தமிழீழம் பெறுவதற்காகப் போராட முடியாது. அது எந்த வகையிலும் சாத்தியப்படாது.

கிழக்கில்தான் அனைத்து வளங்களும் உள்ளன. அந்த வளங்களைப் புலிகள் பயன்படுத்தினர். இப்போது அவ்வாறு செய்யமுடியாதுள்ளதால் புலிகள் முற்றாகப் பலமிழந்துள்ளனர்.

புலிகளைத் தோற்கடிக்கும் பெரிய முயற்சியில் இறங்கி வெற்றிவாகை சூடிய படையினரை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்.

அரசு கிழக்கு வெற்றியை தனது அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது வேறு நோக்கிற்காகவோ பயன்படுத்தக்கூடாது. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

தற்போது கிழக்கில் உள்ள மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழும் வகையில் அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.அப்போதுதான் கிழக்கு வெற்றி முழுமையடையும்.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை மீட்ட வெற்றியை ஜே.வி.பி. தனியாக இன்று கொண்டாடுகிறது

கிழக்கு மீட்கப்பட்ட வெற்றி விழாவை ஜே.வி.பி. இன்று நுகேகொடையில் கொண் டாடுகின்றது.

நுகே கொடையில் இன்று இடம்பெறும் வெற்றி விழாவில் கலந்துகொள்ளுமாறு ஜே.வி.பி. மக்களுக்கு அழைப்பு விடுத்துள் ளது.

தமது மேற்படி விழாவையொட்டி சுவ ரொட்டிகளை கொழும்பு நகரிலும் ஏனைய புற நகரப் பகுதிகளிலும் ஒட்டியுள்ளது.

நாளை அரசு நடத்தும் வெற்றிவிழா வில் ஜே.வி.பி.பங்குபற்றமாட்டாது என அறிவித்துள்ளமை தெரிந்ததே.

- உதயன்

புலிகளை ஜெனிவாவுக்கு கூட்டிச் செல்லாது வடக்கை நோக்கி உடன் படையயடுங்கள்! நாடாளுமன்றில் விமல் வீரவன்ஸ வீராவேசம்

-------------------------------------------------------------

ம்.... உடனே படையை கிழப்புங்கள்..........!

இருபத்தி மூன்றாம் புலிகேசியில் வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகின்றார்.

அப்படி படையெடுத்தால் சிங்கள தேசத்தின் வெற்றியின் முகம் வெழுத்து போயிடுமோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் வசமுள்ள வடக்கின் அதிகாரத்தையும் வேரோடு பிடுங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - விமல்

வீரகேசரி நாளேடு

பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டக்கூடிய ஆற்றல் தம்மிடம் அதிஉச்சத்தில் இருப்பதனை எமது முப்படையினரும் முழு உலகத்துக்குமே பறைசாற்றியுள்ளனர்.

இதனை கிழக்கு மாகாணத்தோடு நிறுத்தி விடாமல் புலிபயங்கரவாதிகளின் கையிலிருக்கும் வடக்கின் மட்டுப்படுத்திய அதிகாரத்தையும் வேரோடு பிடுங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற குழுக்களின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

கிழக்கை மீட்டதன் மூலமாக படையினரின் சக்தி முழு உலகத்திற்கும் வெளிபடுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் இராணுவம் வன்னிக்குச் செல்வதைத் தடுப்பதற்கு அரசாங்கத்தை ஜெனீவாவுக்கு அழைத்துச் செல்வதற்கான சர்வதேச நடவடிக்கையொன்று தற்போது அறங்கேறிகொண்டிருகின்றது. அந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டியது அனைத்து தேசாபிமான மக்களினதும் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார் .

பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டார தலைமையில் நேற்றுக்காலை 9.30 மணிக்கு கூடிய போது வாய்மூல வினாக்களுக்கான நேரம் முடிவடைந்ததன் பின்னர் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியாதாவது;

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு தற்காலிகமாக என்று கூறி நிரந்தரமாகவே ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள், மக்கள் விடுதலை முன்னணியினால் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் மூலமாக 19 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு சட்டபூர்வமாகவும் ஜனநாயக ரீதியாகவும் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் பிரிவினைவாத புலி பயங்கரவாதத்தின் வசமிருந்து கடந்த 11ஆம் திகதி யுத்த ரீதியாக கைப்பற்றப்பட்டு விட்டது.

கிழக்கு மாகாணத்தில் புலிப்பயங்கரவாதிகளின் அதிகாரக் கோட்டையாக இருந்த தொப்பிகலை பிரதேசத்தை அஞ்சா நெஞ்சம் கொண்ட படையினர் இறுதியாக தமது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்துவிட்டனர். கிழக்கை பொறுத்தமட்டில் புலிபயங்கரவாதிகளுக்குச் சொந்தமான ஒரு யுத்த முகாம் அங்கு இல்லை.

வீரகேசரி

எட யாரோ ஒருத்தன் வாய் பேசாமல் இருக்கிறான் என்பதற்காக இந்தளவு ஆட்டமா?

கூடிப் போச்சு. ரனில், சந்திரிகா தங்களுக்குள் சிரிப்பார்கள் அமைதியாய் இருந்த ஒருத்தனை

பற்றி நன்கு அறிவார்கள். பட்டபாடு போதும் என்பார்கள்.

இவை இப்ப இளம்கன்று பயம் அறியாது. பாவம் துள்ளட்டும்............................... துள்ளு.........................இயமன் வந்து கொண்டு இருகிறான்

Edited by நேசன்

இது சிங்களவர்களின் வங்குரோத்து அரசியல். அடிவாங்கப் போவது மந்தி அய்யாவும் அவரது கூட்டமும்தானே. ஜே.வீ.பி யின் "செம்படை" எல்லாம் எங்கே? செம்பட்டை ஆகிவிட்டதா? முன்பு ஒருமுறை 50,000 செம்பட்டைகளை இராணுவத்துக்கு தரப்போவதாக இதன் தலைவர் "புழுகர்" அவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசிவந்தார். :D:huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.