Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும்

November 14, 2021
spacer.png

 

2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி பணிக்காக ஈடுபடுத்தப்பட்டமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

நுவரெலியாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்வாறு ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு, 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை என தொிவித்த அவர் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட முடியாத அளவிற்கு டொலர் பிரச்சினை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

உரம், கிருமி நாசி ஆகியவற்றுக்கான இறக்குமதி தடை மற்றும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக இன்று மரக்கறி விலைகள் வானம் அளவிற்கு உயர்வடைந்துள்ளது இவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை பொதுமக்களினால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தொிவித்துள்ளாா்.

இதனால், மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ள பின்னணியில், அவர்கள் கொள்ளையடிக்கும் நிலைக்கும், தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் தொிவித்த அவா் எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

இனிவரும் காலங்களில் பழைய தலைவர்களுக்கு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதனை ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறிய அவர், நாட்டை புதிய தலைமுறைக்கு கையளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள அங்கத்துவ கட்சிகளுக்கு மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கு கூட இன்று தமது பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலைமை எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.

இவ்வாறான பிரச்சினைகளை மறைப்பதற்காக தனிமைப்படுத்தல் சட்டம், இரகசிய காவல்துறையினரைரை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை தவறாக கையாளுதல் போன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளாா்.
 

https://globaltamilnews.net/2021/168633

  • கருத்துக்கள உறவுகள்

சாதா சோறாவது உண்ணக் கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

எதிர்வரும் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக சிங்களவர்களுக்கு மட்டுமே மாறலாம், தமிழர்களுக்கு அல்ல.

தமிழர்கள் ஆரியர்களின் பிடியிலிருந்து வெளிவந்தால் அவர்கள் தைமாதத்திலேயே வருட பிறப்பு வருவதை அறிவார்கள், உணர்வார்கள். உணர்ந்தறிந்தால்! அவர்களுக்கு, நெய்ச்சோறு, வரகுச்சோறு, சாமைச்சோறு, தினைச்சோறு, குதிரைவாலிச்சோறு, கம்புச்சோறு, கேழ்வரகுச்சோறு, சோளம்சோறு, எனச் சோற்று வகைகளுக்கு எக்கால வருடப் பிறப்பிலும் பஞ்சம் கிட்டாது.!!

தைமாதமே அறுவடைக்காலம்.

காலநிலை குளிர்மையானது.

 

 தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! -பாவேந்தர் பாரதிதாசன்

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் , கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் உணவின்றி மருந்தின்றி குண்டு மழையில் கொத்துக்கொத்தாக மடிந்ததை பாற்சோறு உண்டு மகிழ்ந்த இனம் இன்று புத்தாண்டுக்கு பாற்சோறு உண்ண மடியாத நிலை வந்தால் அதை அவர்கள் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள்?அப்பாவி கிராம்புற சிங்கள மக்கள் மிகவும் கஸ்ரப்படப் போகிறார்கள். அவர்களுக்கென்று வெளிநாட்டு நிதி ஆதாரமும் இல்லை.தமிழர்கள் இநத நிலைக்குப் பழக்கப்பட்டவர்கள் சமாளித்துக்கொள்வார்கள். அவர்களுக்கு புலத்தில் இருந்தும் நிதி ஆதாரம் இருக்கிறது.கெரோனாவால் சுற்றலாத்துறை பாதிப்பு>அடைமழை மண்சரிவு எல்லாவற்றயும் எப்படி சமாளிப்பார்கள்.வினை விதைத்தவன் வினை அறுப்பான். இனவாதத்தை தூண்டிய பிக்குகளுக்கு பிச்சைச் சோறும் கிடைக்காது.முஸ்லிம்களின் நிலை மேலும் பரிதாபமாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, புலவர் said:

தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் உணவின்றி மருந்தின்றி குண்டு மழையில் கொத்துக்கொத்தாக மடிந்ததை பாற்சோறு உண்டு மகிழ்ந்த இனம் இன்று புத்தாண்டுக்கு பாற்சோறு உண்ண மடியாத நிலை வந்தால் அதை அவர்கள் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள்?அப்பாவி கிராம்புற சிங்கள மக்கள் மிகவும் கஸ்ரப்படப் போகிறார்கள். அவர்களுக்கென்று வெளிநாட்டு நிதி ஆதாரமும் இல்லை.தமிழர்கள் இநத நிலைக்குப் பழக்கப்பட்டவர்கள் சமாளித்துக்கொள்வார்கள். அவர்களுக்கு புலத்தில் இருந்தும் நிதி ஆதாரம் இருக்கிறது.கெரோனாவால் சுற்றலாத்துறை பாதிப்பு>அடைமழை மண்சரிவு எல்லாவற்றயும் எப்படி சமாளிப்பார்கள்.வினை விதைத்தவன் வினை அறுப்பான். இனவாதத்தை தூண்டிய பிக்குகளுக்கு பிச்சைச் சோறும் கிடைக்காது.முஸ்லிம்களின் நிலை மேலும் பரிதாபமாகும்.

இதுதானே ஆரம்பம். இன்னும் நிறைய வரும் போல் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் உணவின்றி மருந்தின்றி குண்டு மழையில் கொத்துக்கொத்தாக மடிந்ததை பாற்சோறு உண்டு மகிழ்ந்த இனம் இன்று புத்தாண்டுக்கு பாற்சோறு உண்ண மடியாத நிலை வந்தால் அதை அவர்கள் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள்?அப்பாவி கிராம்புற சிங்கள மக்கள் மிகவும் கஸ்ரப்படப் போகிறார்கள். அவர்களுக்கென்று வெளிநாட்டு நிதி ஆதாரமும் இல்லை.தமிழர்கள் இநத நிலைக்குப் பழக்கப்பட்டவர்கள் சமாளித்துக்கொள்வார்கள். அவர்களுக்கு புலத்தில் இருந்தும் நிதி ஆதாரம் இருக்கிறது.கெரோனாவால் சுற்றலாத்துறை பாதிப்பு>அடைமழை மண்சரிவு எல்லாவற்றயும் எப்படி சமாளிப்பார்கள்.வினை விதைத்தவன் வினை அறுப்பான். இனவாதத்தை தூண்டிய பிக்குகளுக்கு பிச்சைச் சோறும் கிடைக்காது.முஸ்லிம்களின் நிலை மேலும் பரிதாபமாகும்.

இலங்கையில் முஸ்லிம்கள் இல்லாவிட்டால் தான் நிலைமை பாரிய பிரச்சினையாகும்🤭🤭 ஏனென்றால் அவர்கள்தான் அதிகமானவர்கள் மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிந்து அந்நிய செலாவணியை நாட்டுக்கு அனுப்புகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.