Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15 வருடங்களின் பின் அரசியல் கைதியொருவர் நிரபராதி என விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. 

மானிப்பாய் வீதி , தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில், வத்தளை பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதன் பின் 2 வருட கால விசாரணைகளின் பின்னர் , பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 ஆண்டு காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். 

அந்நிலையில் கடந்த 14ஆம் திகதி அவருக்கு எதிரான வழக்கில் அவரை  நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது. 

இதேவேளை அவரது மகளுக்கு ஒரு வயதும் நிரம்பாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு , தற்போது அவர் விடுவிக்கப்பட்டதும் , தனது மகளை 15 வருடங்களின் பின் கண்டு நெகிழ்ச்சியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

15 வருடங்களின் பின் அரசியல் கைதியொருவர்  நிரபராதி என விடுதலை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே 15 வருசம் செண்டிருக்கு நிரபராதி என்று அறிய!

  • கருத்துக்கள உறவுகள்

30 வயதில் உள்ளே போய் 45 இல் வெளியே வந்து உள்ளார். இவருக்கு கிடைக்கவேண்டிய இழப்பீட்டு தொகை மனித உரிமைக்கு மதிப்பு கொடுக்கும் ஒரு நாடு என்றால் பல கோடிகள் சேரும். இலங்கை என்ற அளவில் வெளியே வந்ததே புண்ணியம் என நினைத்து சமாதானம் அடைய வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

30 வயதில் உள்ளே போய் 45 இல் வெளியே வந்து உள்ளார். இவருக்கு கிடைக்கவேண்டிய இழப்பீட்டு தொகை மனித உரிமைக்கு மதிப்பு கொடுக்கும் ஒரு நாடு என்றால் பல கோடிகள் சேரும். இலங்கை என்ற அளவில் வெளியே வந்ததே புண்ணியம் என நினைத்து சமாதானம் அடைய வேண்டியது தான்.

அதுக்கு தானே பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கிறது.

யாரையும் எத்தனை வருடம் வேணுமானாலும் வைத்திருக்கலாமே.

2015 இல் எம்மவர்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தும் எருமை மாடுகள் மாதிரி தலையை ஆட்டிக் கொண்டிருந்தது தான் மிச்சம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

2015 இல் எம்மவர்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தும் எருமை மாடுகள் மாதிரி தலையை ஆட்டிக் கொண்டிருந்தது தான் மிச்சம்.

இனியும் அதைத்தான் செய்யுங்கள். 😡

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் சிறையில் அடைபட்டு அந்தரிக்கும் நேரம் மூச்சுவிடாத ஊடகங்கள் ஊடகங்கள் அவர்கள் வெளிவந்த பிறகு அவர்களைப் பற்றி செய்தியெழுதும் வியாபாரிகள் ஒருபோதும் ஒருவன் ஏன் சிறையில் அடைபட்டான் என்பது பற்றி புரிந்து கொள்ளமாட்டார்கள். 

இன்னும் மிச்சமிருக்கும் 54பேரும் வெளிவர வேண்டும். அதற்கு இந்த ஊடக பெருந்தகைகள் ஏதாவது உதவுவார்களா என கேட்டால்அவர்கள் busy ஆகிவிடுவார்கள். 

விடுதலையாகி வந்திருக்கும் சிவபாலன் ஒரு நோயாளி அவரை வாழ வைக்க ஒரு 5லட்ச ரூபாய் கேட்டுப்பார்த்தால் ஊடகர்களின் கரிசனை வெளிப்பட்டுவிடும். 

சிறையில் இருந்து வெளிவருவோர் பற்றி அதிகம் கருத்தாடல் செய்வதை தவிர்த்தல் மற்றைய கைதிகளுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

அடக்கடவுளே 15 வருசம் செண்டிருக்கு நிரபராதி என்று அறிய!

இலங்கை நீதித்துறையின் சாதனை! பாராட்டுக்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.