Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சிமாற்றம் ஒன்றிற்குத் தயாராகும் கூட்டமைப்பின் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குணா கவியழகனின் இன்றைய காணொளியில் இலங்கையில் ஆட்சிமாற்றம் தொடர்பாக சுமந்திரன் செயற்படத் தொடங்கியிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

 

https://youtu.be/yDPW9mTTHWI

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆட்சிமாற்றம் தொடர்பாக தமிழர்கள் இப்போது எதற்காக அக்கறைப்பட வேண்டும்?

2010 இல் சரத்துக்கும், 2015 இல் ரணில் - மைத்திரிக்கும், 2019 இல் சஜித்திற்கும் ஆதரவளித்து நாம் கண்ட பயன் என்ன? (உடனேயே 2005 இல் மகிந்தவை வரப்பண்ணி மக்களை அழிக்கவில்லையா என்று துல்பேன் கேட்க வேண்டாம்). 

தமிழருக்கு முன்னால் உள்ள முக்கியமான பிரச்சினை இப்போது என்ன? முழுநாட்டு மக்களுக்குமான அரசியலைச் செய்வதற்கா சுமந்திரனைத் தமிழர்கள் தெரிவுசெய்தார்கள்?

இப்போதாவது சர்வதேச - பிராந்திய சக்திகளின் பிணாமியாக செயற்படுவதைத் தவிர்த்து, தன்னைத் தெரிவுசெய்த மக்கள் நலன் தொடர்பாக அவர் வேலை செய்தால் என்ன?

6 minutes ago, ரஞ்சித் said:

இலங்கையில் ஆட்சிமாற்றம் தொடர்பாக தமிழர்கள் இப்போது எதற்காக அக்கறைப்பட வேண்டும்?

எந்த தமிழர்களை குறிப்பிடுகின்றீர்கள் ரஞ்சித்? தாயக தமிழர்களையா அல்லது புலம்பெயர் தமிழர்களையா?

தாயக தமிழர்கள் எனில் அவர்கள் நிச்சயம் மகிந்த சகோதரர்களின் ஆட்சி தொடர விரும்பப் போவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

எந்த தமிழர்களை குறிப்பிடுகின்றீர்கள் ரஞ்சித்? தாயக தமிழர்களையா அல்லது புலம்பெயர் தமிழர்களையா?

தாயகத் தமிழர்களைத்தான். ஆனால் சுமந்திரனின் செயற்பாடுகளால் தாயகத் தமிழர்கள் பாதிக்கப்படும்போது அவர்களின் உறவுகளான புலம்பெயர் தமிழரிலும் அது தாக்கத்தினைச் செலுத்தும். அதுசரி, தமிழர்களை தாயகம் - புலம் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? 

புலம்பெயர் தமிழர்கள் தாயக அரசியலில் தலையிடக் கூடாது என்கிறீர்களா?

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

தாயக தமிழர்கள் எனில் அவர்கள் நிச்சயம் மகிந்த சகோதரர்களின் ஆட்சி தொடர விரும்பப் போவதில்லை.

தாயகத் தமிழர்கள் மட்டுமல்ல, அதை சிங்களவர்களே விரும்பப்போவதில்லை. ஆகவே அதுபற்றி நாம் அக்கறைகொள்ளத் தேவையில்லை என்கிறேன். அவர்களே பார்த்துக்கொள்வார்கள். 

எமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான பிரச்சினை ஆட்சிமாற்றம் அல்ல. எமது இருப்புத் தொடர்பான அச்சுருத்தல். இது இந்த அரசில் மட்டுமல்ல, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இருக்கத்தான் போகிறது. 

ஆட்சிமாற்றம் ஒன்றிற்குத் துணைபோய் குறைந்தது இன்னுமொரு 5 வருடங்களை இன்னொரு “நல்லாட்சி” அரசின் கால்களை நக்குவதற்குப் பாவிப்பதோடு எமது உண்மையான பிரச்சினைகளில் செலுத்தவேண்டிய கவனத்தை இந்னுமொருமுறை சிதறடிக்கப்போகிறோமே என்கிற ஆதங்கம்தான்.

55 minutes ago, ரஞ்சித் said:

தாயகத் தமிழர்களைத்தான். ஆனால் சுமந்திரனின் செயற்பாடுகளால் தாயகத் தமிழர்கள் பாதிக்கப்படும்போது அவர்களின் உறவுகளான புலம்பெயர் தமிழரிலும் அது தாக்கத்தினைச் செலுத்தும். அதுசரி, தமிழர்களை தாயகம் - புலம் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? 

புலம்பெயர் தமிழர்கள் தாயக அரசியலில் தலையிடக் கூடாது என்கிறீர்களா?

தலையிடுதல் இடையூறாக அமையாத வரைக்கும் பிரச்சினை இல்லை. 

தாயகத்தமிழர் புலம்பெயர் தமிழர் என்ற பிரிவு நிச்சயம் உள்ளது. அன்றாட பிரச்சினைகள் தொடக்கம், அரசியல் ரீதியிலான, பொருளாதார பிரச்சினைகள் வரை இரு சமூகங்களும் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,  சவால்கள் முற்றிலும் வேறானவை. உணர்வு பூர்வமான உறவு என்று பார்த்தால் கூட எம்மால் தாயகத்தில் இன்றிருக்கும் ஒருவரது உணர்வை புரிந்து கொள்வதில் சவால்களும் கேள்விகளும் உள்ளன. 

தாயக மக்களின் அரசியல் தெரிவுகளுக்கு தார்மீக ஆதரவையும் பொருளாதார ஆதரவையும் மட்டுமே எம்மால் கொடுக்க முடியும், தலையீட்டை அல்ல. 

நதி கீழ் இருந்து மேல் நோக்கி பாய முடியாது.

45 minutes ago, ரஞ்சித் said:

தாயகத் தமிழர்கள் மட்டுமல்ல, அதை சிங்களவர்களே விரும்பப்போவதில்லை. ஆகவே அதுபற்றி நாம் அக்கறைகொள்ளத் தேவையில்லை என்கிறேன். அவர்களே பார்த்துக்கொள்வார்கள். 

எமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான பிரச்சினை ஆட்சிமாற்றம் அல்ல. எமது இருப்புத் தொடர்பான அச்சுருத்தல். இது இந்த அரசில் மட்டுமல்ல, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இருக்கத்தான் போகிறது. 

ஆட்சிமாற்றம் ஒன்றிற்குத் துணைபோய் குறைந்தது இன்னுமொரு 5 வருடங்களை இன்னொரு “நல்லாட்சி” அரசின் கால்களை நக்குவதற்குப் பாவிப்பதோடு எமது உண்மையான பிரச்சினைகளில் செலுத்தவேண்டிய கவனத்தை இந்னுமொருமுறை சிதறடிக்கப்போகிறோமே என்கிற ஆதங்கம்தான்.

தாயக மக்கள் முன் இருக்கும் தெரிவு கொஞ்சம் நல்ல பேயை தெரிவு செய்வதா அல்லது மோசமான பேயை தெரிவு செய்வதா என்பதே.

தாயக மக்கள் கொரனாவுக்கு கொஞ்சம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர். ஏனெனில் நவீன துஷ்ட கைமுனுக்கள் போட இருந்த பேயாட்டத்தை இந்த கொரனா கொடுத்த நெருக்கடி வெகுவாக குறைத்து விட்டது. 

Edited by நிழலி
பிற்சேர்க்கைக்காக

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தமிழர் புலம்பெயர் தமிழர் என்ற பிரிவு நிச்சயம் உள்ளது. அன்றாட பிரச்சினைகள் தொடக்கம், அரசியல் ரீதியிலான, பொருளாதார பிரச்சினைகள் வரை இரு சமூகங்களும் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,  சவால்கள் முற்றிலும் வேறானவை. உணர்வு பூர்வமான உறவு என்று பார்த்தால் கூட எம்மால் தாயகத்தில் இன்றிருக்கும் ஒருவரது உணர்வை புரிந்து கொள்வதில் சவால்களும் கேள்விகளும் உள்ளன. 

தாயக மக்களின் அரசியல் தெரிவுகளுக்கு தார்மீக ஆதரவையும் பொருளாதார ஆதரவையும் மட்டுமே எம்மால் கொடுக்க முடியும், தலையீட்டை அல்ல. 

நிழலி...மிக முக்கியமாக சர்ப்பிரைஸ் பரிசு கொடுக்கவாவது புலம்பெயர் உறவு தேவை என்பதை அடித்துக்கூற  விரும்புகின்றேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

குணா அவர்கள் Sumanthiranphobia( சுமந்திரன் குறித்த  அச்சக் கோளாறு)  இல் திரிகின்றார் போல் உள்ளது. சுமந்திரன் சொன்னார் என்று வீரகேசரியில் வந்த செய்தியை வைத்து ஒரு பெரும் அரசியல் ஆய்வையே செய்து முடித்துள்ளளார். யாராவது அச்செய்தியின் மூலம் தெரிந்தால், அறியத்தரவும். சுமந்திரன் அவர்கள் கனடாவில் எம்பிக்களை சந்தித்த படங்கள் கூட வெளியாகி இருந்தன, அவற்றை குணா அவர்கள் பார்க்கவில்லையா?, அல்லது பார்த்தும் தீக்கோழி மாதிரி தலையை மண்ணில் புதைத்துள்ளாரா?. இவையெல்லாம் அச்சக் கோளாறின் அறிகுறிகளே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

குணா அவர்கள் Sumanthiranphobia( சுமந்திரன் குறித்த  அச்சக் கோளாறு)  இல் திரிகின்றார் போல் உள்ளது. சுமந்திரன் சொன்னார் என்று வீரகேசரியில் வந்த செய்தியை வைத்து ஒரு பெரும் அரசியல் ஆய்வையே செய்து முடித்துள்ளளார். யாராவது அச்செய்தியின் மூலம் தெரிந்தால், அறியத்தரவும். சுமந்திரன் அவர்கள் கனடாவில் எம்பிக்களை சந்தித்த படங்கள் கூட வெளியாகி இருந்தன, அவற்றை குணா அவர்கள் பார்க்கவில்லையா?, அல்லது பார்த்தும் தீக்கோழி மாதிரி தலையை மண்ணில் புதைத்துள்ளாரா?. இவையெல்லாம் அச்சக் கோளாறின் அறிகுறிகளே.

முதலில் வீரகேசரியில் வந்த ஆய்வை படித்தபின் கருத்துக்களை வைப்பது நல்லது செய்தியை படித்தபின் கருத்துக்களை வைப்பது நல்லது அதுக்கு முதல் ஏன் இப்படி ?

மனித தன்மைமையுடன் சிந்திக்கும் எவருக்கும் ஶ்ரீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றம் அவசியம் தேவை என்பது புரியும். அது நடைபெற்றால் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். 

ஶ்ரீலங்காவில் ஒரு கொடுமையான ஆட்சியிருந்து மக்களை கொடுமைப்படுத்தும் போது, “ஐயோ, ஐயோ”,என்று ஒப்பாரி வைத்து உரிமைகளை பெறலாம், என்று பழைய இத்துப்போன அரசியல் ஆய்வுகளை எழுதித்  தமது வாழ்நாளை ஜாலியாக கழிப்பவர்களின்  சிந்தனை போல்  தாயகத்தில் வாழும் மக்கள் சிந்திக்க வேண்டியதில்லை.  ஜதார்தத வாழ்வில் தமக்கு நன்மையளிப்பனவற்றை தமது சொந்த அறிவுடன் சிந்தித்து தமக்கு நன்மையளிபதைத் தெரிவு செய்யவேண்டும். இதில் பழைய எமோஷனுக்கும் சென்றி மென்றுக்கும் இடமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

குணா அவர்கள் Sumanthiranphobia( சுமந்திரன் குறித்த  அச்சக் கோளாறு)  இல் திரிகின்றார் போல் உள்ளது. சுமந்திரன் சொன்னார் என்று வீரகேசரியில் வந்த செய்தியை வைத்து ஒரு பெரும் அரசியல் ஆய்வையே செய்து முடித்துள்ளளார். யாராவது அச்செய்தியின் மூலம் தெரிந்தால், அறியத்தரவும். சுமந்திரன் அவர்கள் கனடாவில் எம்பிக்களை சந்தித்த படங்கள் கூட வெளியாகி இருந்தன, அவற்றை குணா அவர்கள் பார்க்கவில்லையா?, அல்லது பார்த்தும் தீக்கோழி மாதிரி தலையை மண்ணில் புதைத்துள்ளாரா?. இவையெல்லாம் அச்சக் கோளாறின் அறிகுறிகளே.

இவ்வாறான ஓர் எண்ணமே எனக்கும் ஏற்பட்டது. சுமந்திரனை பேசுபொருளாக்குதல் நல்லதொரு விளம்பர உத்தி. நான் முன்பு ஓரிடத்தில் குறிபிட்டு இருந்தபடி இப்ப போராட்டம் சுமந்திரனுக்கு எதிரான விடுதலைப் போராட்டமாக மாறிவிட்டது. சுமந்திரனை ஒரு சுழியத்தை போட்டு வெட்டிவிட்டு இவர்களால் நகர்ந்துவிட முடியாமல் இருக்கின்றது. 2009 இக்கு முற்பட்ட காலத்தில் இவர் போன்ற ஆய்வாளர்கள் எல்லாம் மகுடி வாசிப்பவர்களாக இருந்தார்கள். அதிலும் நிலாந்தன் மாஸ்டர் அபாரம். இப்ப வந்து மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை இந்த ஆய்வாளர்கள் தமிழினத்தின் சாபக்கேடு என்பேன். வீரகேசரியின் செய்தி ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு புகுந்து விளையாடி இருக்கின்றார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.