Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர்.

இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கடன்பெற்று முதலீடு செய்வது தொடர்பான மோசடிகள். ஹரோவில் இளம் தம்பதியினர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் ஆதாரங்களை வழங்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகளும் தயாராகி வருகின்றது. ஒரு வயதான தம்பதிகள் இவ்வாறான ஒரு முதலீட்டு திட்டத்தில் 200,000 பவுண்களை வழங்கி கடந்த சில மாதங்களாக எவ்வித வருமானத்தையும் பெறாமல் அவர்கள் இருக்கின்ற வீடே தற்போது வங்கியினால் விற்கப்படும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வீடுகளை வாங்குவதற்கு சட்டத்தரணிகளுக்கு செலுத்தப்படுகின்ற பணத்தை ஒரு சில சட்டத்தரணிகள் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இவ்வாறு வீட்டை வாங்கவதற்கு வாங்குபவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 100,000 பவுண் வரை செலுத்திய தம்பதியினர் வீடும் வாங்காமல் அவ்வளவு பணத்தையும் இழந்து தொடர்ந்தும் வாடகை வீட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

பப் அல்லது பார் - தவறணை நடத்துகிறோம் என்ற பெயரில் அரை நிர்வாண நடனங்களை ஏற்பாடு செய்து அவ்வாறான இடங்களில் போதைப்பொருட்களையும் கண்டும் காணாமல் அனுமதித்து இளம் சமூதாயத்தை அழிக்கும் தொழிலிலும் ஒரு சில தமிழ் தவறணை உரிமையாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதீதமாக ஆசைப்பட்டு இல்லாதவர்களை ஆவணங்களில் உருவாக்கி தனிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டு இருந்ததையும் இழந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் வீட்டையும் வைத்துக் கொண்டு அரச உதவிகளையும் எடுக்கும் பேராசையில் வீட்டை அவணங்களில் ஒருவரை உருவாக்குவது அல்லது இன்னொருவரின் பெயரில் வீட்டை மாற்றுவது போன்ற மோசடிகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவபவர்கள் இங்குள்ளவர்களின் பெயர்களில் வீட்டை வாங்கி அந்த வீட்டில் இருந்துகொண்டே அரச உதவியை எடுப்பது போன்ற பல்வேறு மொள்ளமாரித் தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.

கிறடிட்காட் மோசடி மிகச் சாதாரணமான மோசடியாக இன்னமும் காணப்படுகின்றது. அண்மையில் கிங்ஸ்ரன் மருத்துவமனையில் மரணமானவரின் கிறடிட் காட்களை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் கிறடிட் காட் தொலைத்துவிட்டதாக தாங்களே முறைப்பாடு செய்துவிட்டு அதனை பயன்படுத்திய சம்பவங்களும் சாதாரணமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறானவர்கள் சிலர் மாட்டுப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

பிரித்தானிய பிரதமரே தன்னுடை இல்லத்தைத் திருத்துவதற்கான செலவை மூடி மறைத்த மோசடி தேசிய ஊடகங்களில் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த நேர்மையின்மை சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் வெளிப்பட்டு வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம் 13 தடவைகள் பாங்கிரப்சி செய்து ஜனாதிபதியானார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதப் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு இன்னமும் பலமாக உள்ளது. மோசடிகளைச் சகித்துக்கொள்கின்ற சமூகம் ஒன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றது.

 

நன்றி- தேசம் ஜெயபாலன்

https://www.facebook.com/100074596340842/posts/129578749538669/?d=n

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா, இந்திய, அமெரிக்கா என்று போன ஜெயபாலனுக்கு சிறீலங்கா கண்ணுக்கு தெரியவில்லை. விசுவாசம்???

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பொத்தாம் பொதுவாக, 2010ம் ஆண்டு மோசடிகளை, 2022ல் எழுதுகிறார்.

இப்ப, சனமும் கவனம்.... மோசடிகளும் இலகுவல்ல.... வங்கி login செய்வது கூட, password போட்டாலும், மொபைலுக்கு வரும் OTP போடாமல் உள்ள போக ஏலாது.

பிரகிராசிமார் காசை எடுத்துக்கொண்டு ஓடினால், காப்புறுதி உள்ளதே... பிறகு எப்படி?

எங்கை ஓடுறது? அதுவும் இந்த காலத்தில்? 

அத்தனை தரம் திவாலானது, டொனால்ட் ரம் அல்ல, அவரது நிறுவனங்களே.

இந்த ஜெயபாலனுக்கு, நிறுவனங்களிலின் வரையறுக்கப்பட்ட கடன் குறித்த சாதாரண சட்டமே புரியவில்லை, பிறகு எப்படி?

திவால் ஆன ஒருவர், சாதாரண வங்கி வேலைக்கே போக ஏலாது. பிறகு எப்படி ஜனாதிபதி ஆகிறது?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

திவால் ஆன ஒருவர், சாதாரண வங்கி வேலைக்கே போக ஏலாது. பிறகு எப்படி ஜனாதிபதி ஆகிறது?

நீங்கள் சொல்வது சரி ஆனால் டொனால்ட் ரம். இன். நிருவனங்கள்.  1800 மில்லியன் வரி செலுத்தவில்லை......அதாவது டொனால்ட் ரம்.  1800 மில்லியன் டொலர் வரி செலுத்தவில்லை...அப்படி இருந்தும்கூட எப்படி ஐனதிபதி ஆனார்   ?இன்றும் அமெரிக்காவில் ரம்மின்    குடும்பம் வரி காட்டமால்.  இருப்பதில் முன்னிலையில் உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

நீங்கள் சொல்வது சரி ஆனால் டொனால்ட் ரம். இன். நிருவனங்கள்.  1800 மில்லியன் வரி செலுத்தவில்லை......அதாவது டொனால்ட் ரம்.  1800 மில்லியன் டொலர் வரி செலுத்தவில்லை...அப்படி இருந்தும்கூட எப்படி ஐனதிபதி ஆனார்   ?இன்றும் அமெரிக்காவில் ரம்மின்    குடும்பம் வரி காட்டமால்.  இருப்பதில் முன்னிலையில் உள்ளது.  

அதுதான் சொன்னேனே. நிறுவனங்கள் வேறு, அதனை நடத்துபவர்கள் வேறு. நிறுவனத்தின் கடனுக்காக, அதனை நடத்துபவர்கள் பொறுப்பு இல்லை என்பதே, கடன் வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்பதன் பொருள்.

ஆக, வரி செலுத்தவில்லை என்றால், அந்த நிறுவனத்துக்கும், வரி அதிகாரிகளுக்கும் உள்ள பிச்சல் பிடுங்கல். அதில் சட்டம் மீறாத வரையில், நிறுவனத்தின் பின்னால் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

அதுதான் சொன்னேனே. நிறுவனங்கள் வேறு, அதனை நடத்துபவர்கள் வேறு. நிறுவனத்தின் கடனுக்காக, அதனை நடத்துபவர்கள் பொறுப்பு இல்லை என்பதே, கடன் வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்பதன் பொருள்.

ஆக, வரி செலுத்தவில்லை என்றால், அந்த நிறுவனத்துக்கும், வரி அதிகாரிகளுக்கும் உள்ள பிச்சல் பிடுங்கல். அதில் சட்டம் மீறாத வரையில், நிறுவனத்தின் பின்னால் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை.

ஒரு நிருவனம்.  அல்லது ஒருவர் நட்டமடைநது.  வரி செலுத்தவில்லை என்றால் எற்கலாம்  ....இலாபத்தில்.  தொடர்ந்தும் இயங்கும் நிருவனம்.  அல்லது ஒருவர் வரி செலுத்த விடின்......நிருவனத்தின் சொந்தக்காரர் அல்லது ஒருவர்....குற்றவாளி இல்லையா?.   

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாக ஏமாறுபவர்களும் ஏமாற்றுபவர்களும் உலகம் முழுதும் இருந்துகொண்டே இருக்கின்றனர். ஆனால் அதற்கு நாம் என்ன செய்யமுடியும்???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஒரு நிருவனம்.  அல்லது ஒருவர் நட்டமடைநது.  வரி செலுத்தவில்லை என்றால் எற்கலாம்  ....இலாபத்தில்.  தொடர்ந்தும் இயங்கும் நிருவனம்.  அல்லது ஒருவர் வரி செலுத்த விடின்......நிருவனத்தின் சொந்தக்காரர் அல்லது ஒருவர்....குற்றவாளி இல்லையா?.   

கோப்பரேசன் என்றால் நடத்துபவரை எதுவும் செய்ய இயலாது.

தனிப்பட்ட அவரின் சொத்தில் கை வைக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, MEERA said:

பிரித்தானியா, இந்திய, அமெரிக்கா என்று போன ஜெயபாலனுக்கு சிறீலங்கா கண்ணுக்கு தெரியவில்லை. விசுவாசம்???

தமிழ்நாட்டில் இல்லாத மோசடிகளா?
அல்லது.....
சிறிலங்காவில் சிங்கள மக்களுக்குள் இல்லாத மோசடிகளா?

யாருக்கோ நன்றியை காட்டுகின்றார்/கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.