Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிடைக்காத விடயத்திற்கு போராட்டம் என்கிறார் சப்றி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிடைக்காத விடயத்திற்கு போராட்டம் என்கிறார் சப்றி!

January 30, 2022
spacer.png

கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி, “சில அரசியல்வாதிகள் இங்குள்ள இளைஞர் யுவதிகளை பிழையாக வழி நடத்துகிறார்கள்.கிடைக்காது என தெரிந்து கொண்டும் அதனை பெற முயற்சிக்கிறோம் என இளைஞர்களை மக்களை தூண்டி விடுகிறார்கள் அது சாத்தியமல்லாத விடயம். எத்தனை இளைஞர் யுவதிகளை இவ்வாறான அரசியல்வாதிகளின் போராட்டத்தின் மூலம் இழந்து விட்டோம் எத்தனை இளைஞர் யுவதிகள் வடக்கில் தமது எதிர்காலத்தை இழந்து விட்டார்கள்.

“வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு நான் கூறிவைக்க விரும்புகின்றேன் உங்களை பிழையாக வழிநடாத்தும் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லாதீர்கள் உங்களுக்கு நல்ல சிறப்பான எதிர்காலம் உள்ளது உங்களுக்கு முன்னால் உலகம் உள்ளது உலகத்தை நோக்கி உற்றுப்பாருங்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லாதீர்கள். அத்தோடு இந்த 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி கடிதம் அனுப்பினார்கள் அவ்வாறு அனுப்புவதன் மூலம் ஒரு நாடு கிடைத்துவிடுமா?

“ஏற்கனவே 13 ஆம் திருத்தச் சட்டம் இங்கே நடைமுறையில் உள்ளது அதனை நாங்கள் பேசி அதனை நடைமுறைப் படுத்துமாறு கோரினால் அது சாத்தியப்படும் அதை விடுத்து நாங்கள் கடிதம் அனுப்புவதன் மூலம் அது நடைபெறாது.”

“அத்தோடு நானும் வெளிவிவகார அமைச்சரும் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி அவர்களுடன் தமிழ் பேசும் அனைத்து கட்சியினரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் விரைவில் செய்ய உள்ளோம். அவ்வாறான சந்திப்புகள் மூலம் இங்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் பேசி அதற்குரிய தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.”

“நான் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்ற போது அங்கே போதைப்பொருள் தொடர்பான வழக்குடன் சம்பந்தப்பட்டோரே பலர் கைதிகளாக உள்ளார்கள்.”

“வடக்கில் இந்த போதைப் பொருளை தடுத்து நிறுத்துவதற்கான வேலைத்திட்டம் மற்றும் போதைப் பொருட்களுட்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வு மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நான் யோசித்து இருக்கின்றேன்.”

குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் புனர்வாழ்வு நிலையம் ஒன்றினை ஆரம்பித்து அந்த புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக போதைக்கு அடிமையானோருக்கு விழிப்புணர்வு மற்றும் புனர்வாழ்வு அளிப்பதன் மூலம் வடக்கில் இந்த போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்.

“அத்தோடு நான் இன்று எமது இந்த நடமாடும் சேவை மூலம் ஒரு விடயத்தினை கண்டறிந்து உள்ளேன் வடக்கில் காணி பிரச்சினை என்பது ஒரு பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது இந்த விடயத்தினை நாங்கள் கட்டாயம் ஜனாதிபதிக்கு தெரிவித்து அதற்கு என்ன செய்யலாம் என்ற விடயம் தொடர்பில் நான் ஆராய்வேன்” என தெரிவித்துள்ளார்.
 

 

https://globaltamilnews.net/2022/172497I

 

  • கருத்துக்கள உறவுகள்

//ஏற்கனவே 13 ஆம் திருத்தச் சட்டம் இங்கே நடைமுறையில் உள்ளது அதனை நாங்கள் பேசி அதனை நடைமுறைப் படுத்துமாறு கோரினால் அது சாத்தியப்படும் அதை விடுத்து நாங்கள் கடிதம் அனுப்புவதன் மூலம் அது நடைபெறாது.”//

கூட்டமைப்பும், மகிந்தவு கதவை மூடி, கதவை திறந்து எத்தனை சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. முடிவு சுழியம். சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் பெறும் சுயநல நோக்கோடு செயற்படும் சிங்கள அரசுகளிடம் இருந்து தமிழ் மக்கள் எதை எதிர்பார்க்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

“வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு நான் கூறிவைக்க விரும்புகின்றேன் உங்களை பிழையாக வழிநடாத்தும் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லாதீர்கள்

"அரசன் எப்படி அவன் அமைச்சர்களும் அப்படி"  புதிய மொழி.

சிறீலங்காவில் பிழையான ஒருவரே அரசியல்வாதிகளுக்குத் தலைவராகவும் இருப்பது உலகிற்கே தெரியும். இந்த நிலையில் அவர் தேர்ந்தெடுத்த நீதி அமைச்சரான உங்களால் எப்படி பிழையில்லாமல் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்ல முடியும். ??🤔

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தின் உரிமையை பறித்து, அவர்களை அடிமையாக வைத்திருக்கும் அரசின் நீதியமைச்சர், இவரிடம் நீதி இருக்குமா? இருந்திருந்தால் இவர் நீதியை சொல்ல வேண்டியது இளைஞர்களுக்கல்ல, தான் அங்கம் வகிக்கும் அரசுக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

நானா அப்பிடித் தான் செல்லுவாரு ..

அந்த பலாயை வுட்டுட்டு,  அலுவல் எதனாச்சும் இருந்ததுனாக்க,  அதை பாக்க  போ மவனே…

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

ஒரு இனத்தின் உரிமையை பறித்து, அவர்களை அடிமையாக வைத்திருக்கும் அரசின் நீதியமைச்சர், இவரிடம் நீதி இருக்குமா? இருந்திருந்தால் இவர் நீதியை சொல்ல வேண்டியது இளைஞர்களுக்கல்ல, தான் அங்கம் வகிக்கும் அரசுக்கே!

இவற்றை அண்ணனோ தம்பியோ அல்லது மகனோ மகளோ இப்பிடி காணாமல் போயிருந்தால் தெரிந்திருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.