Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கறுப்புச்சந்தையில் டொலரை பெற்று ஆயதக்கொள்வனவு – நிதியமைச்சரின் கூற்று குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் அதிருப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்புச்சந்தையில் டொலரை பெற்று ஆயதக்கொள்வனவு – நிதியமைச்சரின் கூற்று குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் அதிருப்தி

 

 

 
ஜெனீவா அமர்வில் ஆராயப்படாலம்

சர்வதேச நிதியமைப்புகளின் உதவியை பெறும் இலங்கையின் முயற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்

 
basil-3-1-300x170.jpg
 
கறுப்புசந்தையில் பெற்ற டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறித்து இலங்கையில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களும் சர்வதேச அமைப்புகளும் கரிசனை வெளியிட்டுள்ளன
இலங்கை அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது சர்வதேச மோதல்கள் குறித்த வழக்காறுகளை மீறும் செயல் அதனுடன் தொடர்புடைய ஏனைய மனித உரிமை பிரகடனங்களை மீறும் நடவடிக்கை என வெளிநாட்டு தூதரகங்கள் தெரிவித்துள்ளன.
நிதியமைச்சர் பேட்டியொன்றின் போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த விமர்சனங்கள் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளன-இந்த அமைப்புகள் நிதியமைச்சர் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது குறித்து உள்ளக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கறுப்புச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ள தகவலின் தீவிரதன்மை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை நிதியமைச்சரின் கூற்று குறித்து ஆராயப்படலாம் என மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சரின் கூற்று சர்வதேச நிதியமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் என தெரிவித்துள்ள கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளாதார விரிவுரையாளர் பிரியங்க டுனுசிங்க நெருக்கடியான தருணத்தில் சர்வதேச நிதியமைப்புகளின் ஆதரவை பெறும் இலங்கையின் முயற்சிகளிற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/164590

  • கருத்துக்கள உறவுகள்

நுணலும் தன் வாயாற் கெடும். சந்தர்ப்பம் வரும்போது காலமே ஆதாரங்களை கொடுக்கும். 

போரை வென்ற தலைக்கனம், எப்படி வென்றோம் என்பதை எவ்வளவுதான் மறைத்தாலும் அப்பப்போ உளறிவிடுவார்கள். உண்மை தன் நேரம் வரும்வரை காத்திருந்து வெளிவந்து அவர்கள் வாயாலேயே சிக்கவைக்கும். இனி இதை மறைக்க வேறொரு பொய்யை தேடுவது.

  • கருத்துக்கள உறவுகள்

வடகொரியாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியதாக கூறிய பசில் பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி

 

 

கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை இலங்கை வாங்கியதாகக் கூறிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியதாக பசில் ராஜபக்ஷ கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சு அதனை நிராகரித்து ஊடக அறிக்கையை வெளியிட்டது. ஆனால் நிதியமைச்சரால் எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையிலேயே, பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கறுப்புப் பணத்தை எவரும் பயன்படுத்துவதற்கு எமது சட்டங்களில் இடமில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தால் தடைகள் விதிக்கப்பட்ட ஒரு நாட்டைக் கையாள்வதற்கான ஆணையை பொதுமக்கள் அரசாங்கத்திற்கு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
 

 

https://athavannews.com/2022/1265824

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ தெரியுதே! பயங்கரவாதத்தை அழிக்கிறேன் என்று இல்லாத பொய்யை சொல்லி, கறுப்பு பணத்தையும், வகை தொகையின்றி கடன் பெற்று தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை, தடை செய்யப்பட்ட நாடுகளிடம் இருந்து பெற்று யார் பயங்கரவாதம் செய்தது என்று? பயங்கரவாதிகள் என்று இவர்களால் சித்திரிக்கப்பட்டவர்கள் செய்யாத செயலை செய்து மனித மீட்பு போர் என்று பாராட்டு பெற்றவையின்ர பெறுபேறுகள் இன்னும் வரும் பொறுத்திருங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக நாடுகளின் புலித்தடைக்கு வடகொரியாவிடம் இருந்து தொழில்நுட்பங்களை புலிகள் பணம் கொடுத்து வாங்கி கொள்கிறார்கள் என்ற பொய்யும் சேர்த்தே சிங்கள அரசு பரப்புரை செய்தது . இப்ப என்னடான்னா கதை வேறுமாதிரி போகுது .

  • கருத்துக்கள உறவுகள்

பொய் முயல்போல் படுவேகமாகப் பாய்ந்து செல்லும்.

மெய் ஆமைபோல் மெதுவாகச் சென்று வெல்லும்.

ஆமை வென்றாலும் அதற்கு மாலைபோடாமல் வெட்டிக் கறிசமைத்து தின்றுவிடுவார்களே இன்றுள்ள எங்கள் தலைமைகள். 🥴

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பெருமாள் said:

மேற்குலக நாடுகளின் புலித்தடைக்கு வடகொரியாவிடம் இருந்து தொழில்நுட்பங்களை புலிகள் பணம் கொடுத்து வாங்கி கொள்கிறார்கள் என்ற பொய்யும் சேர்த்தே சிங்கள அரசு பரப்புரை செய்தது . இப்ப என்னடான்னா கதை வேறுமாதிரி போகுது .

வடகொரியாவிட்டை தண்ணி வாங்கி குடிச்சாலே சர்வதேசம் ஒதுக்கி வைச்சுவிடும்.இஞ்சை சிங்களம் வடகொரியாவோடை குடும்பமே நடத்தியிருக்கு போல கிடக்கு...
சும்மா அதிருப்தியை காட்டிட்டு காசு குடுத்துக்கொண்டிருப்பினம் போல....

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

வடகொரியாவிட்டை தண்ணி வாங்கி குடிச்சாலே சர்வதேசம் ஒதுக்கி வைச்சுவிடும்.இஞ்சை சிங்களம் வடகொரியாவோடை குடும்பமே நடத்தியிருக்கு போல கிடக்கு...
சும்மா அதிருப்தியை காட்டிட்டு காசு குடுத்துக்கொண்டிருப்பினம் போல....

அழுத்தம் குடுத்து அதை தடுப்பதற்க்கு நம் பக்கம் யார் இருக்கிறார்கள்? அவர்களே தடுத்தாலும், நாமே ஓடிப்போய் இதனால் சாதாரண சிங்கள மக்கள் தான் பாதிப்படுவார்கள் அதை செய்யாதீர்கள் என்று மக்களை வைத்து அவர்கள் காலில் விழுந்து சிங்களத்தை காப்பாற்றுவோம். ஆனால் அதே நேரம் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்குங்கள் என்று சர்வதேசம் கூறிய போது மகிந்தா சொன்னது எனக்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு கிடையாது அதை நிறைவேறுவதற்கு என்று கூறினார். இரண்டாவது தடவை அறுதிப்பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் சர்வதேச கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தபோது இதே கேள்வி கேட்கப்பட்ட போது எந்த தயக்கமும் இல்லாமல், எனக்கு வாக்களித்த மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள், அதை மீறி செய்தால் நாட்டில் பிரச்சனை உருவாகும்  என்றார். ஆக தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே இந்த மக்கள் தமக்கு வாக்களிப்பதாக சிங்கள அரசுகள் கூறுகின்றன. தமிழர் அழிக்கப்பட்டபோது பாற்சோறு திண்டு, வெடி கொழுத்தியதும் இந்த மக்களே. ஆனால் தமிழன் சிங்களத்தின் அடிமைத்தளையிலிருந்து தன்னை விடுவிக்க எடுத்த முயற்சியை பயங்கரவாதமாக உலகமெங்கும் சித்திரிக்க சிங்களத்துக்கு மேலாக உழைத்ததும் நம் இனமே. அப்போ நம் ஏழை  மக்களுக்காக வாதாட யாரும் இருக்கவில்லை. அன்றும் இல்லை, இன்றும் இல்லை, வருபவர்களையும் விடுவதில்லை. ஆப்கான் தாலிபான்களை ஏற்கும் உலகம் நம்மை சேர்ந்து அழித்ததுதான் விந்தை! அதை என்னால் ஏற்கவும் முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

அழுத்தம் குடுத்து அதை தடுப்பதற்க்கு நம் பக்கம் யார் இருக்கிறார்கள்? அவர்களே தடுத்தாலும், நாமே ஓடிப்போய் இதனால் சாதாரண சிங்கள மக்கள் தான் பாதிப்படுவார்கள் அதை செய்யாதீர்கள் என்று மக்களை வைத்து அவர்கள் காலில் விழுந்து சிங்களத்தை காப்பாற்றுவோம். ஆனால் அதே நேரம் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்குங்கள் என்று சர்வதேசம் கூறிய போது மகிந்தா சொன்னது எனக்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு கிடையாது அதை நிறைவேறுவதற்கு என்று கூறினார். இரண்டாவது தடவை அறுதிப்பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் சர்வதேச கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தபோது இதே கேள்வி கேட்கப்பட்ட போது எந்த தயக்கமும் இல்லாமல், எனக்கு வாக்களித்த மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள், அதை மீறி செய்தால் நாட்டில் பிரச்சனை உருவாகும்  என்றார். ஆக தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே இந்த மக்கள் தமக்கு வாக்களிப்பதாக சிங்கள அரசுகள் கூறுகின்றன. தமிழர் அழிக்கப்பட்டபோது பாற்சோறு திண்டு, வெடி கொழுத்தியதும் இந்த மக்களே. ஆனால் தமிழன் சிங்களத்தின் அடிமைத்தளையிலிருந்து தன்னை விடுவிக்க எடுத்த முயற்சியை பயங்கரவாதமாக உலகமெங்கும் சித்திரிக்க சிங்களத்துக்கு மேலாக உழைத்ததும் நம் இனமே. அப்போ நம் ஏழை  மக்களுக்காக வாதாட யாரும் இருக்கவில்லை. அன்றும் இல்லை, இன்றும் இல்லை, வருபவர்களையும் விடுவதில்லை. ஆப்கான் தாலிபான்களை ஏற்கும் உலகம் நம்மை சேர்ந்து அழித்ததுதான் விந்தை! அதை என்னால் ஏற்கவும் முடியவில்லை.

பலரும் மறந்த விடயம் ஏன் மகிந்தவே மறந்து இருப்பார் நினைவு படுத்தியத்துக்கு  நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே இந்த மக்கள் தமக்கு வாக்களிப்பதாக சிங்கள அரசுகள் கூறுகின்றன. தமிழர் அழிக்கப்பட்டபோது பாற்சோறு திண்டு, வெடி கொழுத்தியதும் இந்த மக்களே.

இந்தச் சிங்கள மக்கள் திண்டதுபோக மீதியாக இருந்த அடிப்பிடித்த சோற்றையும் விறாண்டித் திண்டு வெடியும் கொளுத்தி கூத்தாடிய பல பிறவிகளும், தாங்களும் தமிழர் எண்டு காட்டிக்கொண்டு சிங்களவரோடு சேர்ந்து வாழமுடியாமல் தமிழரோடு வாழுது.🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

இந்தச் சிங்கள மக்கள் திண்டதுபோக மீதியாக இருந்த அடிப்பிடித்த சோற்றையும் விறாண்டித் திண்டு வெடியும் கொளுத்தி கூத்தாடிய பல பிறவிகளும், தாங்களும் தமிழர் எண்டு காட்டிக்கொண்டு சிங்களவரோடு சேர்ந்து வாழமுடியாமல் தமிழரோடு வாழுது.🤔

பிறவிக்குணமது! அதை மாற்றமுடியாது. மற்றவரை வீழ்த்தி, தம்மை காப்பாற்றி சுகமனுபவிப்பது. அவர்களுக்கு வரும்போது அவர்களுக்காக அழுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். தனக்கு தனக்கு என்று வரும்போதுதான் புத்தி தெளியும். அதைத்தான் "சுடலை ஞானம்." "கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்." என்றெல்லாம் சொல்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2022 at 10:09, பெருமாள் said:

பலரும் மறந்த விடயம் ஏன் மகிந்தவே மறந்து இருப்பார் நினைவு படுத்தியத்துக்கு  நன்றி .

அதுமட்டுமல்ல, தான் சொன்னது உண்மை என்பதை வெளிநாடுகளுக்கு நிரூபிப்பதற்காக வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்னாலும், சர்வரதேச பிரதிநிதிகள் இலங்கை கூறும்  உள்நாட்டு சமாதான முன்னெடுப்புகளை பார்வையிடுவதற்கு வரும்போதும் பிக்குகளையும் மக்களையும் ஏவி விட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்தும் காட்டி தனது செய்கையை நியாயப்படுத்தினார். ஏன் பிரித்தானிய பிரதமர் வந்தபோது என்ன நடந்தது? ரயில் ஓடவில்லை என்று பல காரணங்களை காட்டி தடுத்தபோதும் அவர் வந்தார். ஆனால் வெளிநாட்டு தூதுவர்களை இரகசியமாகவும், வெளிநாடுகளுக்கு போயும் சந்தித்தவர்கள் இங்கு வந்தவர்களுக்கு உண்மையை நிதர்சனமாக விளக்க மறுத்து விலகி பின்கதவால் ஓடி ஒளிந்தனர். மதகுருக்களும், மக்களும் தெருவில் சிங்கள காவல் குண்டர்களினால் தாக்கப்பட்டனர் தடுக்கப்பட்டனர். கேள்வி கேட்க யாருமில்லை அநேரத்தில். அனந்திமட்டும் ஓடி விழுந்து தன்னால் இயன்றதை செய்தார். கஜேந்திரனும் நெருக்குண்டார். நம் தலைவர்கள் மடிப்பு கலையாத வேட்டியோடு. ஆடம்பரத்தோடு விருந்துண்ண, உல்லாச பயணம் செய்யத்தான் லாயக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.