Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்

இலங்கை – இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பல விஜயங்கள் இடம்பெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயங்கள் பார்க்கப்படுகின்றன.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் புதுடில்லிக்கான தனித்தனியான விஜயங்களை முடித்துக்கொண்டுள்ளனர்.இந்நிலையில் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.(15)
 

http://www.samakalam.com/இந்தியப்-பிரதமர்-நரேந்த-5/

 

  • கருத்துக்கள உறவுகள்

மோடி…. இலங்கைக்கு வரும் போது,
ராஜீவ் காந்திக்கு அடித்த மாதிரி… துவக்குப் பிடியாலை, அடிச்சிடாதீங்கப்பா. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறீலங்காவில் தனக்கு இராணுவ மரியாதைகள் எதுவும் தேவையில்லை என்று நரேந்திர மோடி கண்டிப்பாகச் சொல்லிவிட்டதாகவும் கேள்வி.😲

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு நீர்த்துப் போகச் செய்வதற்கு இந்தியா தன்னாலான அனைத்தையும் செய்கின்றது. சீனாவின் கடன்பொறியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு கூட அது முன்வரலாம். 

சீன - இலங்கை உறவை சீர்குலைத்த பின், இந்தியா இலங்கை அரசை கைவிட்டு விடும் என்ற அச்சம் சிங்கள மக்கள் மத்தியிலும் கடும்போக்குவாதிகளின் மத்தியிலும் உள்ளது என்பதால் இந்தியாவை அவர்கள் முழுமையாக நம்ப போவதும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

மோடி…. இலங்கைக்கு வரும் போது,
ராஜீவ் காந்திக்கு அடித்த மாதிரி… துவக்குப் பிடியாலை, அடிச்சிடாதீங்கப்பா. 😂

கிந்தியன்களுக்கு சிங்களவன் அடிச்சால் அந்த  கோபத்தை தமிழன்லை தான் காட்டுவானுகள்...😡

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

கிந்தியன்களுக்கு சிங்களவன் அடிச்சால் அந்த  கோபத்தை தமிழன்லை தான் காட்டுவானுகள்...😡

கேட்க நாதியற்றவன் தமிழன்தானே! இதில இந்தியா தமிழனுக்கு உதவி, தனிநாடு எடுத்து குடுத்துடுமாம் என்றும் சொல்கிறார்கள்.

கவுண்டமணி செந்தில் பகிடி கண்ணில் தெரிகிறது சாமியார்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா நாடகம் முடியும்வரை இவ்வாறு பயணங்கள் தொடரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோடி + ஜெய்சங்கர் மார்ச்சில் இலங்கைக்கு பயணம்?

February 9, 2022
 

spacer.png

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் விரைவில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற உள்ள பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இலங்கைக்கு பயணிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கையுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இரு பயணங்களும் பார்க்கப்படுகின்றன.

இதேவேளை, திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் உடனான சந்திப்பு தொடர்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையை வலுப்படுத்தும் பொருளாதார மற்றும் முதலீட்டு முயற்சிகள் தொடர்பில் விவாதித்ததாகவும், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தியதாகவும், மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இருதரப்பும் விரைவில் சந்திக்க வேண்டும் என்றும் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் புதுடில்லிக்கான தனித்தனியான பயணங்களை முடித்துக்கொண்டுள்ள நிலையில் தொடர் விவாதங்களுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

https://globaltamilnews.net/2022/172879

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.