Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தமிழ் மொழி மூல கல்வெட்டு இடமாற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தமிழ் மொழி மூல கல்வெட்டு இடமாற்றம்

February 10, 2022
 

spacer.png

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தமிழ் மொழி மூல கல்வெட்டு இடித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, வவுனியா பல்கலைக்கழகத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச  பயணம் மேற்கொண்டு அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளார்.
அதன் போது பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட பாதையின் நடுவில் முக்கோண வடிவில் தூண் ஒன்று கட்டப்பட்டு அதன் முகப்பு பக்கத்தில் தமிழ் மொழியும் மற்றைய பக்கங்களில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலான நினைவு கல் வெட்டு பாதிக்கப்பட்டு இருந்துள்ளது.

நாளைய தினம் ஜனாதிபதி குறித்த கல் வெட்டினை திரைநீக்கம் செய்யவுள்ள நிலையில் முகப்பு பக்கத்தில் இருந்த தமிழ் மொழி மூல கல்வெட்டினை இடித்து அவ்விடத்தில் இருந்து பெயர்த்து சிங்கள மொழி கல் வெட்டு இருந்த பகுதிக்கு மாற்றியதுடன் , முகப்பு பக்கத்திற்கு சிங்கள மொழி கல்வெட்டினை பதிக்கும் பணிகள் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இன்றைய தினம் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்த இராணுவ அதிகாரிகளின் பணிப்பின் பேரிலையே கல்வெட்டினை மாற்றி பதிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 

https://globaltamilnews.net/2022/172921

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா பல்கலைக்கழகம் இன்று திறந்துவைக்கப்பட்டது!

spacer.png

நாட்டின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் இன்று(வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் குறித்த பல்கலைக்கழகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக  வவுனியா வளாகம்  வவுனியா  பல்கலைக்கழகம் என  பெயரிடப்பட்டு   வர்த்தமானி அறிவித்தல் கடந்த  2021ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக இதுவரை  400 சிங்களமொழி மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
 

 

https://athavannews.com/2022/1266479

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் நிகழ்வை புறக்கணிக்கின்றோம் – செல்வம் அடைக்கலநாதன்!

spacer.png

வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்காது சிங்கள மொழி பதிக்கப்பட்ட கல்வெட்டை முன்னுரிமைப்படுத்தியமையை கண்டிப்பதாகவும் இவ்வாறான தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், “வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இன்று கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று மொழிகளிலும் தனித்தனியான கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இதனை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ள நிலையில் குறித்த இடத்தில் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு முன்னுரிமைப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகத்தின் முகப்பு வாயிற்பகுதியை நோக்கியவாறு காணப்பட்டுள்ளது.

எனினும் அங்கு வந்த அதிகாரிகள் தமிழ் மொழியை பின்புறமாக அமைக்குமாறும் சிங்கள மொழியை முன்னுரிமைப்படுத்துமாறு கூறி குறித்த கல்வெட்டை உடனடியாக இடம்மாற்றியுள்ளனர்.

வடக்கு கிழக்கில் தமிழ் மொழி முன்னுரிமை என அரசியலமைப்பு ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் வடக்கிற்கு வந்த நீதி அமைச்சரும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை என தெரிவித்திருந்த நிலையிலும் இவ்வாறான ஒரு சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் அரங்கேறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளாது புறக்கணிக்கின்றோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

https://athavannews.com/2022/1266426

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பக்கத்தாலையும்.... தமிழரை அவமானப் படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஒன்றுக்கும் உதவாத, தமிழ் அரசியல் தலைமைகளால் ஏற்பட்ட விளைவு இது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்காது சிங்கள மொழி பதிக்கப்பட்ட கல்வெட்டை முன்னுரிமைப்படுத்தியமையை கண்டிப்பதாகவும் இவ்வாறான தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஐயா! நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதற்காக ஒன்றும் மாறப்போவதில்லை. சும்மா எதிர்ப்பை தெரிவித்து விட்டு நீங்கள் அடுத்தவேலையை பாக்க போய்விடுவீர்கள், அவன் தொடர்ந்து தன்வேலையை எதிர்ப்பு இல்லாமல், தடங்கல் இல்லாமல் செய்து தனது செயற்பாடுகளை உறுதி படுத்துவான். தெரியப்படுத்த வேண்டிய இடத்துக்கு உடனுக்குடன் தொடர்ச்சியாக தெரியப்படுத்துங்கள். அடுத்தமுறை செய்வதற்குமுன் பலமுறை யோசிப்பான். அவன் எதை செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, எல்லாம் முடிந்தபின் அப்பதான் நித்திரையால எழுந்து வாறமாதிரி அலறி அடிச்சுக்கொண்டு வந்து அறிக்கை விடுகிறதற்கு  நீங்கள்தான் வரவேண்டுமென்றில்லை. அதை யாரும் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அங்கு வந்த அதிகாரிகள் தமிழ் மொழியை பின்புறமாக அமைக்குமாறும் சிங்கள மொழியை முன்னுரிமைப்படுத்துமாறு கூறி குறித்த கல்வெட்டை உடனடியாக இடம்மாற்றியுள்ளனர்.

இவ்வாறான ஒரு சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் அரங்கேறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதை விடுத்து, கல்வெட்டை முன்பிருந்தவண்ணம் மாற்றும்படி போராட்டமோ, சத்தியாக்கிரமோ, உண்ணாவிரதமோ வேறு ஏதாவது என்றாலும் செய்து குறித்த கல் வெட்டினை திரைநீக்கம் செய்வதைத் தடுத்திருந்தால், செல்வம் அடைக்கலநாதனே...! உங்களை ஒரு தமிழ்த் தலைவனாக, தமிழினத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு வீரனாக, இலங்கைத் தமிழர் மட்டுமல்ல உலகத்தமிழர் அனைவருமே போற்றியிருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா பல்கலைக்கழகத்தின் திரை நீக்கபகுதியில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டுக்கு திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

IMG-20220210-WA0023.jpg

வவுனியா பல்கலைக் கழகத்திற்கு இன்று (11) விஜயம் செய்யும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அதனை அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில் பல்கலை கழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட் சென்று பல்வேறு பீடங்களுக்கும் பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் முக்கோண வடியில் பல்கலைக்கழகத்தின் பெயருடன் கூடிய கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

 

IMG-20220210-WA0022.jpg

 

வீதியில் இருந்து உட் செல்லும் போது காட்சிக்கு புலப்படும் வகையில் தமிழ் மொழியும், மற்றைய இரு பங்கங்களில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

 

IMG-20220210-WA0024.jpg

 

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வீதியில் இருந்து பல்கலைக்கழகத்திற்குள் செல்லும் போது பீடங்களுக்கு பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் தமிழ் மொழியில் காட்சி கொடுத்த கல்வெட்டு அவசர அவசரமாக அக்கற்பட்டு மறுபக்கம் மாற்றப்பட்டுள்ளதுடன், முன் பகுதியில் சிங்கள மொழி கல்வெட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

IMG-20220210-WA0027.jpg

இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வெட்டில் திடீர் மாற்றம் : இடம் மாறியது தமிழ் மொழி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நாடும் பலமுறை உப்பிடி எதிர்ப்பு தெரிவித்து  மூக்குடைபட்டதும் உண்டு, நீக்குவித்ததும் உண்டு. இனம் இனத்தோடுதான் சேரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி வவுனியா இல்லை.....

வவுனிய

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.