Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் கடலில் எண்ணெய் தேடும் பணிக்கு இந்தியா விருப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சன் அருண் பிரசாத்

பிபிசி தமிழுக்காக

 

இலங்கை கடற்பரப்பிலுள்ள எரிபொருள் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வுகளுக்கான கலந்துரையாடல்களை நடத்த இந்தியா முன்வந்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து முன்னெடுக்கக்கூடிய திட்டத்தை, அமெரிக்காவில் மார்ச் மாதம் நடைபெறும் எரிபொருள் உச்சி மாநாட்டில் தான் முன்வைத்து, தனியார் துறையையும் இதனுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.இதன்படி, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார் வளைகுடாவிலுள்ள எம் - 02 என்ற பிரிவை ஏலத்தில் விடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த ஏலம் நிறைவடைந்து, நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், அன்று முதல் 9 தொடக்கம் 12 மாதங்களுக்குள் அகழ்வு பணிகளை ஆரம்பிக்க முடியும் என உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிடுகின்றார்.இலங்கையை சூழ முன்னெடுக்கப்பட்ட அனைத்து ஆய்வு நடவடிக்கைகளிலும், இலங்கை கடற்பரப்பில் எரிபொருள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மன்னார் வளைகுடா, காவிரி வளைகுடா மற்றும் இலங்கை வளைகுடா என மூன்றாக பிரித்துள்ளதுடன், இந்த அனைத்து வளைகுடாக்களிலும் எரிபொருள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த அனைத்து பகுதிகளும் 873 பிரிவுகளாக பிரித்து இந்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதன்படி, மன்னார் வளைகுடாவில் மாத்திரம் நடத்தப்பட்ட விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளின் பிரகாரம், 2 பில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய் மற்றும் 9 ரில்லியன் கன அடி இயற்கை வாயு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இதற்கான ஒழுங்குப்படுத்தல்களை மேற்கொள்ள இலங்கை கனியவள அபிவிருத்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

உ.பி: காணாமல் போன தலித் பெண் உடல் முன்னாள் அமைச்சரின் ஆசிரமம் அருகே கண்டெடுப்பு - தமிழில் செய்திகள் (bbc.com)

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிய கடன் முடிய இங்கு தானே வரவேண்டும். இந்த ஆட்சி முடிவதற்குள் பெரும் பகுதி விற்கப்பட்டு விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

வாங்கிய கடன் முடிய இங்கு தானே வரவேண்டும். இந்த ஆட்சி முடிவதற்குள் பெரும் பகுதி விற்கப்பட்டு விடும்.

மன்னாரில்…. 2 பில்லியன் பீப்பாய் எண்ணையும், 
9 ரில்லியன் கன அடி இயற்கை வாயு இருக்கு என்று காட்டியே…
இன்னும் நிறைய நாடுகளிடம்,கடன் வாங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மன்னாரில்…. 2 பில்லியன் பீப்பாய் எண்ணையும், 
9 ரில்லியன் கன அடி இயற்கை வாயு இருக்கு என்று காட்டியே…
இன்னும் நிறைய நாடுகளிடம்,கடன் வாங்கலாம்.

சிங்களவனோ தொல்பொருளாராய்ச்சி, வானவளப்பாதுகாப்பு, கனியமணல் அகழ்வு, மகாவலி அபிவிருத்தி என்று நம் நிலங்களை அபகரிக்க, அவற்றை வெளிநாடுகள் எரிபொருள் அகழ்வு, எண்ணெய் ஆராய்ச்சி என்று அவர்கள் பாணியில் கொள்ளையடிக்க அழிவது இந்த மண்ணின் ஆதிக்குடிகளே!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

வாங்கிய கடன் முடிய இங்கு தானே வரவேண்டும். இந்த ஆட்சி முடிவதற்குள் பெரும் பகுதி விற்கப்பட்டு விடும்.

இனி யார் வந்தாலும் இலங்கையை நிமிர்த்த முடியாது தேவையில்லாமல் இனவாதம் கக்கி சிங்களம் சாவதை விட தமிழருக்கு கிடைக்க கூடிய சமஉரிமைகளை கொடுத்து அவர்களையும் இந்தநாட்டின் பிஜைகளாக மதித்தால் சிங்களமும் தப்பும் தமிழும் நிம்மதியாக வாழ்வார்கள் அதைவிட்டு வேப்பமரத்தை வெட்டி அரசமரத்த வைத்து இனவாதம் கக்கினாள் அழிவு நிச்சயம் .

3 hours ago, தமிழ் சிறி said:

மன்னாரில்…. 2 பில்லியன் பீப்பாய் எண்ணையும், 
9 ரில்லியன் கன அடி இயற்கை வாயு இருக்கு என்று காட்டியே…
இன்னும் நிறைய நாடுகளிடம்,கடன் வாங்கலாம்.

இருக்கலாம் அதை வெளியே எடுக்க ஆகும் சிலவு அதிகூடியது என்கிறார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேய் நான் சின்ன வயசிலை திருக்கேதீஸ்வரம் போகேக்கை தோண்ட வெளிக்கிட்டனியள்....இன்னும் தோண்டி முடியேல்லையே.......? 😲

கிண்டுங்க...கிண்டிக்கிட்டேயிருங்க......நாங்க கேட்டுக்கிட்டே இருக்கோம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அடேய் நான் சின்ன வயசிலை திருக்கேதீஸ்வரம் போகேக்கை தோண்ட வெளிக்கிட்டனியள்....இன்னும் தோண்டி முடியேல்லையே.......? 😲

கிண்டுங்க...கிண்டிக்கிட்டேயிருங்க......நாங்க கேட்டுக்கிட்டே இருக்கோம் 😎

எவ்வளவு காலம் கேட்டுகிட்டே  இருப்பியள்? எல்லாம் கட்டி முடித்தபின் நீங்களும் மூடிகட்டிக்கொண்டு போய் போய்விடுவீர்கள் என்பது இதுவரை கட்டி முடித்தவர்களுக்கு தெரியாதா என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.