Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலை புலிகளுக்கும், ஜே.வி.பிக்கும்... பாரிய வேறுபாடுகள் கிடையாது – நாமல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்

விடுதலை புலிகளுக்கும், ஜே.வி.பிக்கும்... பாரிய வேறுபாடுகள் கிடையாது – நாமல்

மிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற ஆளும்கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் பேசிய அவர், இருதரப்பினரும் அழிவை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள் என கூறினார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது என கூறினார்.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அனைத்து செயற்திட்டங்களையும் விமர்சிப்பது எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கொள்கை என நாமல் ராஜபக்ஷ சாடினார்.

இந்த விடயத்தில் தமிழிழ விடுதலை புலிகளுக்கும்,மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பகாலத்தில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய கலவரங்களில் ஈடுப்பட்டமையினால் பல இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டதை மக்கள் இன்றும் மறக்கவில்லை என தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1266883

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா அவர்களுக்கு ஒரு நீதி, தமிழனுக்கு ஒரு நீதி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்த விடயத்தில் தமிழிழ விடுதலை புலிகளுக்கும்,மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியினர் அரசைக் கைப்பற்றி நாட்டைத் தாங்கள் ஆள்வதற்காக அரசுடன் போராடினார்கள்.

சிங்கள அரசின் கொள்ளை கொலைகளிலிருந்து தமிழினத்தைக் காப்பற்றவும், அந்த இனத்தின் இருப்பை இலங்கையில் உறுதிசெய்யவுமே தமிழிழ விடுதலை புலிகள் போராடினார்கள். 

பண்டாரநாயக்க குடும்பத்தில் நாமல் சற்று வித்தியாசமான நல்லவர் என்று எண்ணியிருந்தேன். அது தவறென்று தெரிகிறது. அந்தக் குடும்பத்தில் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.🤔😲

  

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

ண்டாரநாயக்க குடும்பத்தில் நாமல் சற்று வித்தியாசமான நல்லவர் என்று எண்ணியிருந்தேன். அது தவறென்று தெரிகிறது. அந்தக் குடும்பத்தில் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

ராஜபக்ச குடும்பத்தில் நாமல்என்று வந்திருக்க வேண்டும். அது சரி இத்தனை மக்கள் அழிக்கப்பட்ட போது ஒரு எதிப்புக்குரல் எழுப்பவில்லை, இதுவரை நடந்ததற்க்கு ஒரு வருத்தம் தெரிவிக்கவில்லை. புலிக்கு பிறந்தது எப்படி பூனையாகும் என்று எண்ணினீர்கள்? மக்களை ஏமாற்றுவதற்கு அவரின் முகவர்கள்  பலபேர் உங்களைப்போலத்தான் நினைத்தார்கள்,  இல்லை பரப்பியிருக்கலாம். அது வெறும் அரசியலுக்கான வேஷம். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Paanch said:

பண்டாரநாயக்க குடும்பத்தில் நாமல்

 பண்டாரநாயக்கா குடும்பமும் ராயபக்ச குடும்பமும் சேர்ந்து அடிக்கப்போறாங்கள்.....

6 minutes ago, satan said:

ராஜபக்ச குடும்பத்தில் நாமல்என்று வந்திருக்க வேண்டும். அது சரி இத்தனை மக்கள் அழிக்கப்பட்ட போது ஒரு எதிப்புக்குரல் எழுப்பவில்லை, இதுவரை நடந்ததற்க்கு ஒரு வருத்தம் தெரிவிக்கவில்லை. புலிக்கு பிறந்தது எப்படி பூனையாகும் என்று எண்ணினீர்கள்? மக்களை ஏமாற்றுவதற்கு அவரின் முகவர்கள்  பலபேர் உங்களைப்போலத்தான் நினைத்தார்கள்,  இல்லை பரப்பியிருக்கலாம். அது வெறும் அரசியலுக்கான வேஷம். 

நானும் நினைத்ததுண்டு. ஒருவேளை தேசியத்தலைவர் மற்றும் ராயபக்ச போன்றவர்களுக்குப் பின்பான தலைமுறை கடந்தகாலங்களை மதிப்பீடு செய்து ஒரு புதிய சிந்தனையோடு, ஒருவரை ஒருவர் ஏற்று நடப்பதோடு, குறைந்தபட்சம் ஒரு சமஷடிமுறையிலான அரசியலைப் பின்பற்றுவார்களென்றும். ஆனால் இனவாதிகளின் வாரிசுதாம் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். இலங்கைத்தீவு அமைதியாவதற்கோ சாதாரண மக்கள் செழிப்படைவதோ சாத்தியமில்லைப் போலவே தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

 பண்டாரநாயக்கா குடும்பமும் ராயபக்ச குடும்பமும் சேர்ந்து அடிக்கப்போறாங்கள்.....

நானும் நினைத்ததுண்டு. ஒருவேளை தேசியத்தலைவர் மற்றும் ராயபக்ச போன்றவர்களுக்குப் பின்பான தலைமுறை கடந்தகாலங்களை மதிப்பீடு செய்து ஒரு புதிய சிந்தனையோடு, ஒருவரை ஒருவர் ஏற்று நடப்பதோடு, குறைந்தபட்சம் ஒரு சமஷடிமுறையிலான அரசியலைப் பின்பற்றுவார்களென்றும். ஆனால் இனவாதிகளின் வாரிசுதாம் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். இலங்கைத்தீவு அமைதியாவதற்கோ சாதாரண மக்கள் செழிப்படைவதோ சாத்தியமில்லைப் போலவே தெரிகிறது. 

 

முள்ளிவாய்க்காலுக்கு  பின்னர்

நானும்  இவ்வாறு எதிர்பார்த்தேன்

மகிந்த  தமிழருக்கொரு  தீர்வை  வைத்திருந்தால்

தமிழருக்கும்  அவர்  ஒரு  தலைவராக  உயர்ந்திருக்கமுடியும்??

ஆனால்  ஊட்டப்பட்ட  இனவாதம்  இவர்களை  விடுவதாக  இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

 

முள்ளிவாய்க்காலுக்கு  பின்னர்

நானும்  இவ்வாறு எதிர்பார்த்தேன்

மகிந்த  தமிழருக்கொரு  தீர்வை  வைத்திருந்தால்

தமிழருக்கும்  அவர்  ஒரு  தலைவராக  உயர்ந்திருக்கமுடியும்??

ஆனால்  ஊட்டப்பட்ட  இனவாதம்  இவர்களை  விடுவதாக  இல்லை

நன்றி

ஏய்ப்புகளும் ஏமாற்றங்களுமே விதியாகத் தமிழினம். 
இதில் சிங்களத் தலைமைகள் இனவாதிகளாக மாறி ஒருபுறமும் தமிழினத்தை அழிக்க, மறுபுறம் தமிழ்த்தலைமைகளோ சிங்கள விசுவாசிகளாக அவர்களது அழிப்பு உதவும்நிலை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ராஜபக்ச குடும்பத்தில் நாமல்என்று வந்திருக்க வேண்டும்.

ஒரே குட்டையில் ஊறியமட்டைகள் இவர்கள் என்ற எண்ணம் வந்தபோது பண்டாரநாயக்க, ராயபக்ச வேறு வேறு என்ற எண்ணமின்றி மனம் எழுதவைத்துவிட்டது. சுட்டியமைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

ஒரே குட்டையில் ஊறியமட்டைகள் இவர்கள் என்ற எண்ணம் வந்தபோது பண்டாரநாயக்க, ராயபக்ச வேறு வேறு என்ற எண்ணமின்றி மனம் எழுதவைத்துவிட்டது. சுட்டியமைக்கு நன்றிகள்.

அதுவென்றால் உண்மை. தமிழரை இல்லாமற் செய்வதில் ராஜபக்ச, பண்டாரநாயக்கா, ரணில், இனிமேல்காலத்தில் ஜே வி பி எல்லாம் ஒன்றுதான். அவர்கள் தங்கள் கொள்கையில் மாறப்போவதுமில்லை ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கப்போவதுமில்லை. ஒருவர் விட்டு மிச்சத்தை மற்றவர் தொடருவார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

 

முள்ளிவாய்க்காலுக்கு  பின்னர்

நானும்  இவ்வாறு எதிர்பார்த்தேன்

மகிந்த  தமிழருக்கொரு  தீர்வை  வைத்திருந்தால்

தமிழருக்கும்  அவர்  ஒரு  தலைவராக  உயர்ந்திருக்கமுடியும்??

ஆனால்  ஊட்டப்பட்ட  இனவாதம்  இவர்களை  விடுவதாக  இல்லை

புலிகளை முன்னின்று அழித்தவர்களுக்கு ஒரு கடமை இருந்தது.
அதை தவறவிட்டு விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழித்ததே; தழிழர் சுதந்திரமாக உரிமையோடு வாழக்கூடாது என்பதற்காகவே. ஆனால் வைத்த தீர்வெல்லாம் சர்வதேசத்தை ஏமாற்றி, போராட்டத்தை நசுக்க அனுமதி, உதவி பெறுவதற்காக. புலிகளை அழித்தபின் சமஷ்டி கொடுக்கிறேன், சம உரிமை வழங்குகிறேன் என்று உறுதியளிக்கும்போதே தெரிந்திருக்க வேண்டும் இது பயங்கரவாதமல்ல உரிமைப்போராட்டம் என்பது. சரி நீ சொல்லும் தீர்வை இப்பவே வை அதன்பிறகும் பயங்கரவாதம் நிலைத்தால் அதை அழிக்க உதவுகிறோம் என்று சொல்லியிருக்கலாம் ஆனால் அவர்களும் இதே சாட்டொடு நாட்டுக்குள் உள்நுழைந்து தம் காரியத்தை நிறைவேற்றுவதற்காக இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டன. ஆனால் கோத்தா சொன்னது "புலிகளை அழித்துவிட்டோம், இனி பேச்சுவார்த்தை, தீர்வு என்பதற்கு அவசியமில்லை." என்று ஒரேயடியாக கூறினார் செய்தும் காட்டுகிறார். எத்தனை தடவை பேச்சுவார்த்தை என்று அழைப்பதும் பின்பு தள்ளிப்போடுவதும் நிகழ்கிறது.  தாங்கள் செய்தது தவறு, தங்களுக்கு ஒரு கடமையிருக்கிறது என்று அவர்கள் நினைக்கவேயில்லை. தாங்கள் செய்தது சரி அதை கேட்பதுதான் தவறு என்று நினைக்கிறார்கள். அதற்காக தங்களுக்கு தமிழர் அடிமைகளாக இருந்து கப்பம் தரவேண்டும், விழா எடுத்து பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

கோத்தா சொன்னது "புலிகளை அழித்துவிட்டோம், இனி பேச்சுவார்த்தை, தீர்வு என்பதற்கு அவசியமில்லை." என்று ஒரேயடியாக கூறினார் செய்தும் காட்டுகிறார். எத்தனை தடவை பேச்சுவார்த்தை என்று அழைப்பதும் பின்பு தள்ளிப்போடுவதும் நிகழ்கிறது.  தாங்கள் செய்தது தவறு, தங்களுக்கு ஒரு கடமையிருக்கிறது என்று அவர்கள் நினைக்கவேயில்லை. தாங்கள் செய்தது சரி அதை கேட்பதுதான் தவறு என்று நினைக்கிறார்கள். அதற்காக தங்களுக்கு தமிழர் அடிமைகளாக இருந்து கப்பம் தரவேண்டும், விழா எடுத்து பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் இதைச் சொன்னால் பல தமிழ்அறிவுஜீவிகள் கோவிப்பார்கள். சிங்களவரோடு சமரசமாக வாழத்தெரியாதென்றொரு  ஆலோசனையும் கூறுவாரகள். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nochchi said:

இந்த லட்சணத்தில் இதைச் சொன்னால் பல தமிழ்அறிவுஜீவிகள் கோவிப்பார்கள். சிங்களவரோடு சமரசமாக வாழத்தெரியாதென்றொரு  ஆலோசனையும் கூறுவாரகள். 

இனத்தை விற்று வாழ்பவர்களின் சிந்தனை அப்படித்தானிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.