Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பரிசுக்கு ஆசைப்பட்டு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இழந்த இருவர் பொலிஸில் முறைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர்,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி பணத்தை பறி கொடுத்துள்ளனர்.

முடக்கப்பட்ட யாழ் நகரை திறக்க அனுமதி ; கொவிட் 19 தெற்றுள்ளவர்களுக்கு  அனுமதியில்லை | Virakesari.lk

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மர்ம நபர்கள், அதிஸ்ட லாப சீட்டில் பெருமளவு பணம் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பிய குறித்த பெண்ணும் தன்னுடைய தங்க நகைகளை அடகுவைத்து பணத்தை இலங்கை வங்கியில் வைப்பு செய்துள்ளார்.

பின்னர் தொலைபேசி இலக்கம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இதேபோல் சங்கரத்தை துணைவி பகுதியில் உள்ள ஆண் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொதி ஒன்று வந்துள்ளதாகவும், அதனை பெறுவதற்கு 60 ஆயிரம் ரூபாயை சம்பத் வங்கியிலில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர். 

அவரும் பணத்தை வைப்பிலிட்ட பின்னர் அந்த இலக்கத்திற்க அழைப்பை ஏற்படுத்திய நிலையில் அதுவும் துண்டிக்கப்பட்டிருந்தது.

அவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

யாழில் பரிசுக்கு ஆசைப்பட்டு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இழந்த இருவர் பொலிஸில் முறைப்பாடு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை… நன்கு அறிந்தவர்கள்தான், ஏமாற்றி உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பிய குறித்த பெண்ணும் தன்னுடைய தங்க நகைகளை அடகுவைத்து பணத்தை இலங்கை வங்கியில் வைப்பு செய்துள்ளார்.

2 hours ago, பிழம்பு said:

60 ஆயிரம் ரூபாயை சம்பத் வங்கியிலில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர். 

வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டால்.....! வைப்பிலிட்டவர்தானே அதனைத் திரும்ப எடுக்க முடியும்.??🤔

  • கருத்துக்கள உறவுகள்

பணம் கேடடவர் பெயருக்கு போட்டிருந்தால் அவர் தானே எடுப்பார் 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வங்கியே அதிக வட்டி தருகிரம் என்று புலம்பெயர் வயதானவர்களிடம் சுற்றும் கதை கணபேருக்கு தெரிவதில்லை ஆக்கும் ஐந்து வருடங்களுக்கு முன் டொலரில் இருந்தப்பணத்தை இலங்கை ரூபாயில் போட்டால் ஐந்து வருடத்துக்கு பத்து லட்சம் இலங்கை ரூபாவுக்கு ஐந்து லட்சம் வட்டி தொகை வரும் என்ரார்களாம் நம்ம தெரிந்தவரும் அதை பெரிய புளுகாய் எனக்கு அடித்து விட்டார் நான் சொன்னேன் நீங்கள் இரண்டாயிரம் பவுன்சுக்கு மேல் இழந்து உள்ளீர்கள் என்று அவர்க்கு விளக்கமாக சொல்ல அவர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை  யாரும் அப்படி இல்லை என்பவர்கள் இங்குவந்து கம்பு சுத்தலாம் .😀 அவர்கள் சுத்தி முடிந்தபின் விளக்கம் தருகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

பரிசு விழுந்தால் அதில கழித்துக் கொண்டு தர சொன்னா விசயம் முடிஞ்சுது.

வங்கியில் போட்டால் பெரும்பாலும் பிடிபட சந்தர்ப்பம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.