Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                       வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

                                                                     கள்ளச்சாவி போட்டாவது......!

 

 

வீதியைப் பெரிதாக்க

வேலியை வெட்டுகிறார்கள்

வேலிக்கு மேலால் வாசமில்லா

வண்ணம் கொண்ட போகன்வில்லா

மனமில்லை ஆனால் மயக்கும் அழகு

தரையில் விழுந்த கொடியில்

சிலிர்த்து நிற்கும் பெரிய முட்கள்

 

பாக்கியமும் பர்வதமும்

வேடிக்கை பார்க்க, வருகின்றாள்

செல்லாத்தை கொடிய முட்கள் விலத்தி

என்ன செல்லாத்தை எங்க இங்கால

ஒண்ணுமில்லை சும்மா வந்தேன்

உன்னிடம் ஒன்று கேட்பேன்

கோவிக்காமல் உத்தரம் கூறு

 

வாசமில்லா மலர் கொய்த வனிதாவும்

வியப்புடன் திரும்பிப் பார்க்கிறாள்

சொல்லனை என்ன விசயம்

நான் கோவிக்கேல்லை, நீ சொல்லு

என்ர மகன் வசந்தனுக்கு - உன்ர

பிள்ளை வனிதாவைக் கேட்கிறன் 

நீ சம்மதித்தால் நன்றியோடிருப்பேன்

 

பாக்கியம் திடுக்கிட்டு யோசிக்க

பர்வதம் குறுக்கிட்டு சொல்கிறாள்

ஊரெல்லாம் திருடுகிறான் உன் மகன்

உதவாக்கரையென்று உலகுக்கே தெரியும்

கள்ளச்சாவி போடும்  நல்ல குடிகாரன்

அவனுக்காகப் பெண்கேட்டு இங்கு

என்ன துணிவில் வந்தாயம்மா

 

பர்வதத்தைத் தடுத்த பாக்கியமும்

பெண் இருந்தால் கேட்பது வழமை

அவளையும் ஒருக்கால் கேட்பமென்று

என்ன பிள்ளை வனிதா, மாமி

சொன்னதெல்லாம் கேட்டனியெல்லோ 

உனக்கிது சம்மதமோ தயங்காமல் சொல்லு

செல்லாத்தை மாமியும் காத்திருக்கிறா

 

எனக்கும் முப்பத்தைஞ்சாச்சு அவவுக்கும் தெரியும்

இதுதான் சமயமென்று அம்மாவும் தவிக்குது

இனியொரு வரனும் வராமலும் போகலாம்

நிலத்தை காலால் சுரண்டி "ம்" என்று

சொல்லத்தான் ஆசை, ஆனாலும் வெட்கம்

கெட்ட வெட்கமும் என்னை விட்டுப் போட்டுது

உனக்கு விருப்பம் எண்டால் எனக்கும் சம்மதம்

 

திருடன் என்றாலும் இருக்கட்டுமே

நான்  திருத்தப் பார்ப்பேன்

குடிகாரன் ஆனாலும் என்ன

அவரைக் குறைக்கச் சொல்லுவேன்

பெண்பித்தன் ஆனாலும் பார்க்கலாம்

என் முந்தானையில் முடிஞ்சுடுவேன்

வருவது வரட்டும் வாழ்ந்து பாப்போம்

 

அம்மா தாயே கருமாரி திரிசூலி

ஆட்டுக்கும் மாட்டுக்கும் அமாவாசை பறுவமுண்டு

அதிஸ்டக் கட்டை எனக்கு அது வந்து போவதுண்டு

கருத்தக்கிடா வெட்டி கருத்தாய் பொங்கலிடுவேன்

கன்னி கழியவேண்டும் கவலையெல்லாம் தீரவேண்டும்

கன்னியாய் இருந்து வீணே என் காலம் கழியாமல்

கள்ளத் திறப்பு போட்டாவது கருவறை திறக்கட்டும்.....!

 

யாழ் 24 அகவைக்காக

ஆக்கம் சுவி .....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, suvy said:

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

வாசமில்லா மலர் வாசம் வீசுகின்றது

கவிதைக்கு நன்றி சுவியர் :thx2:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

யாழ் 24 அகவைக்காக

ஆக்கம் சுவி .....!

முந்தைய நாட்களில் பிற்பகலானால் அடுத்தடுத்த வீடுகள் வேலிக்குள்ளாலும் பொட்டுகளுக்குள்ளும் இருந்து அரட்டையடிப்பார்கள்.

இதுவே சிலவேளைகளில் கொலை வரைக்கும் போகும்.

அந்தக் காட்சிகள் வந்து போகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

கன்னி கழியவேண்டும் கவலையெல்லாம் தீரவேண்டும்

கன்னியாய் இருந்து வீணே என் காலம் கழியாமல்

கள்ளத் திறப்பு போட்டாவது கருவறை திறக்கட்டும்.....!

கவிதையின்... கடைசி வரியை வாசித்தேன்.
சிரிப்பை அடக்க முடியவில்லை. 🤣

கவிதைக்கு நன்றி சுவியர். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2022 at 09:57, suvy said:

கன்னியாய் இருந்து வீணே என் காலம் கழியாமல்

கள்ளத் திறப்பு போட்டாவது கருவறை திறக்கட்டும்.....!

இதுக்கெல்லாம் இந்தக் காலத்தில் கலியாணம் தேவையில்லையே! சும்மா பழகிப் பார்க்கலாமே.. 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2022 at 15:27, suvy said:

                                                       வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

                                                                     கள்ளச்சாவி போட்டாவது......!

 

 

வீதியைப் பெரிதாக்க

வேலியை வெட்டுகிறார்கள்

வேலிக்கு மேலால் வாசமில்லா

வண்ணம் கொண்ட போகன்வில்லா

மனமில்லை ஆனால் மயக்கும் அழகு

தரையில் விழுந்த கொடியில்

சிலிர்த்து நிற்கும் பெரிய முட்கள்

 

பாக்கியமும் பர்வதமும்

வேடிக்கை பார்க்க, வருகின்றாள்

செல்லாத்தை கொடிய முட்கள் விலத்தி

என்ன செல்லாத்தை எங்க இங்கால

ஒண்ணுமில்லை சும்மா வந்தேன்

உன்னிடம் ஒன்று கேட்பேன்

கோவிக்காமல் உத்தரம் கூறு

 

வாசமில்லா மலர் கொய்த வனிதாவும்

வியப்புடன் திரும்பிப் பார்க்கிறாள்

சொல்லனை என்ன விசயம்

நான் கோவிக்கேல்லை, நீ சொல்லு

என்ர மகன் வசந்தனுக்கு - உன்ர

பிள்ளை வனிதாவைக் கேட்கிறன் 

நீ சம்மதித்தால் நன்றியோடிருப்பேன்

 

பாக்கியம் திடுக்கிட்டு யோசிக்க

பர்வதம் குறுக்கிட்டு சொல்கிறாள்

ஊரெல்லாம் திருடுகிறான் உன் மகன்

உதவாக்கரையென்று உலகுக்கே தெரியும்

கள்ளச்சாவி போடும்  நல்ல குடிகாரன்

அவனுக்காகப் பெண்கேட்டு இங்கு

என்ன துணிவில் வந்தாயம்மா

 

பர்வதத்தைத் தடுத்த பாக்கியமும்

பெண் இருந்தால் கேட்பது வழமை

அவளையும் ஒருக்கால் கேட்பமென்று

என்ன பிள்ளை வனிதா, மாமி

சொன்னதெல்லாம் கேட்டனியெல்லோ 

உனக்கிது சம்மதமோ தயங்காமல் சொல்லு

செல்லாத்தை மாமியும் காத்திருக்கிறா

 

எனக்கும் முப்பத்தைஞ்சாச்சு அவவுக்கும் தெரியும்

இதுதான் சமயமென்று அம்மாவும் தவிக்குது

இனியொரு வரனும் வராமலும் போகலாம்

நிலத்தை காலால் சுரண்டி "ம்" என்று

சொல்லத்தான் ஆசை, ஆனாலும் வெட்கம்

கெட்ட வெட்கமும் என்னை விட்டுப் போட்டுது

உனக்கு விருப்பம் எண்டால் எனக்கும் சம்மதம்

 

திருடன் என்றாலும் இருக்கட்டுமே

நான்  திருத்தப் பார்ப்பேன்

குடிகாரன் ஆனாலும் என்ன

அவரைக் குறைக்கச் சொல்லுவேன்

பெண்பித்தன் ஆனாலும் பார்க்கலாம்

என் முந்தானையில் முடிஞ்சுடுவேன்

வருவது வரட்டும் வாழ்ந்து பாப்போம்

 

அம்மா தாயே கருமாரி திரிசூலி

ஆட்டுக்கும் மாட்டுக்கும் அமாவாசை பறுவமுண்டு

அதிஸ்டக் கட்டை எனக்கு அது வந்து போவதுண்டு

கருத்தக்கிடா வெட்டி கருத்தாய் பொங்கலிடுவேன்

கன்னி கழியவேண்டும் கவலையெல்லாம் தீரவேண்டும்

கன்னியாய் இருந்து வீணே என் காலம் கழியாமல்

கள்ளத் திறப்பு போட்டாவது கருவறை திறக்கட்டும்.....!

 

யாழ் 24 அகவைக்காக

ஆக்கம் சுவி .....!

எங்கட முதிர்கன்னிகளின் நிலையை கவிதையாக்கியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2022 at 23:20, கிருபன் said:

இதுக்கெல்லாம் இந்தக் காலத்தில் கலியாணம் தேவையில்லையே! சும்மா பழகிப் பார்க்கலாமே.. 😁

பல சம்பவம் துள்ளி விளையாடுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2022 at 20:57, suvy said:

கள்ளத் திறப்பு போட்டாவது கருவறை திறக்கட்டும்.....!

 

சிறப்பு சுவியர் ..கருத்தாக கள்ளச்சாவி போட்டு கருவறை திறக்கலாம் என சொன்ன‌ கணவானே பாராட்டுக்கள்

  • 4 weeks later...

முத்தான வார்த்தைகளால் ஊர் நிலமையைச் சொல்லியுள்ளீர்கள்.

கவிதைக்கு வாழ்த்துகள் சுவி அண்ணா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.