Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னாரை சேர்ந்த தேசிய உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் உயிரிழப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரை சேர்ந்த தேசிய உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் உயிரிழப்பு.

February 27, 2022

spacer.png

 

இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.  மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன்  பியூஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்துள்ளார்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.
 இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

 அதே நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராக விளங்கினார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ,இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார்.

  இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இவ்வருடத்திற்கான மிக பிரபலமான வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் ரன்னரப்பாக பியூஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

 

https://globaltamilnews.net/2022/173529

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவரின் மரணத்திற்கான காரணங்கள்... வெளிப்படுத்தப் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரைச் சேர்ந்த தேசிய உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் உயிரிழப்பு!

மன்னாரைச் சேர்ந்த தேசிய உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் உயிரிழப்பு!

இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன்  பியூஸ்லஸ் என்பவரே நேற்றைய தினம்(சனிக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.

இலங்கை அணியின் தேசிய அணியில் இடம்பிடித்த இவர், காற்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அத நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராகவும் விளங்கினார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார். அந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இவ்வருடத்திற்க்கான மிக பிரபலமான வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் இரண்டாவது வீரராக பியூஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இறுதியாக வந்த தகவல்களின் அடிப்படையில் மாலைதீவில் இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவருடைய மரணத்திற்கான காரணத்தை இன்னும் அறிய முடியவில்லை.

எனினும், அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக அவரது மரணம் தொடர்பில் சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1269410

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸியின் மரணத்தில் சந்தேகம்: விசாரணையை கோரும் செல்வம்!

இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸியின் மரணம் தொடர்பான விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன், வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் .ஜீ.எல். பீரிஸுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தின் பனங்கட்டு கொட்டு கிழக்கு கிராமத்தை தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ், 2018 முதல் இன்று வரை இலங்கையின் தேசிய கால்பந்து அணி வீரராக இருந்து வருகிறார்.

தனது விளையாட்டு திறமையால் பல சாதனைகளை படைத்த ஓர் சிறந்த வீரன். இந்த விளையாட்டு துறையில் தன்னை முற்றும் முழுவதுமாக ஈடுபடுத்தி தன்னை வளர்த்துக் கொண்டு தனது மாவட்டத்திற்கும், தாய் நாட்டிற்கு புகழை தேடித் தந்தவர். தன்னை முழுவதுமாக கால்பந்திற்காக அர்ப்பணித்த வீரன்.

அவருடைய விளையாட்டு திறமையின் நிமித்தம் மாலைதீவுக்கு வலன்சியா விளையாட்டு கழகத்தினரால் அழைக்கப்பட்டு அந்த கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி அங்கும் பல சாதனைகள் படைத்து பல வெற்றிக்கு வழி வகுத்தவர்.

இவ்வாறானதோர் சிறந்த விளையாட்டு வீரனின் (26.02.2022) அகால மரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மரணம் கொலையா? என்ற சந்தேகத்தையும் எல்லோர் மட்டிலும் எழுப்பியுள்ளது.

எனவே இவ்வாறான ஓர் அகால மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை ஆவணப் படுத்துமாறு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.samakalam.com/கால்பந்தாட்ட-வீரர்-டக்சன/

 

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இலங்கையை வந்தடைந்தது!

தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இலங்கையை வந்தடைந்தது!

மாவைதீவில் கடந்த மாதம் 26 திகதி   உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர்   டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல்  இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது.

இந்த நிலையில் குறித்த பூதவுடல்   பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பூதவுடலை பெற்றுக் கொள்ள அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

சடலப் பரிசோதனையின் பின் பூதவுடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில்  உடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படும்.

எதிர்வரும் 5 ஆம் திகதி  சனிக்கிழமை மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில் , தேவன் பிட்டி போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பவனியாக எடுத்து வரப்படும்.

எதிர் வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1270115

  • கருத்துக்கள உறவுகள்

டக்ஸன் பியூஸ்லஸின் உடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரோடு நல்லடக்கம்!

டக்ஸன் பியூஸ்லஸின் உடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரோடு நல்லடக்கம்!

மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி  மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர்   டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நேற்று( திங்கட்கிழமை)  மாலை 5 மணியளவில் மன்னாரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி  மரணமடைந்த மன்னார் பனங்கட்டு கொட்டு கிராமத்தைச் சேர்ந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர்   டக்சன் பியூஸ்லஸின் பூதவுடன் கடந்த 3ஆம் திகதி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அன்றைய தினம் பூதவுடல் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பூதவுடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட   நிலையில்  உடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு பூதவுடல் எடுத்து வரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நேற்று (திங்கட்கிழமை)  மதியம் 1 மணியளவில் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்னாரது இல்லத்தில் இடம்பெற்றது.

இதன் போது மதத்தலைவர்கள்  நாடாளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உப தவிசாளர்கள்,உறுப்பினர்கள்,திணைக்கள தலைவர்கள், விளையாட்டுக்கழக வீரர்கள், தேசிய கால்பந்தாட்ட அணி பிரதிநிதிகள்,இளைஞர் கழக அங்கத்தவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,வர்த்தகர்கள்,முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாலை 2.45 மணி அளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து பூதவுடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பூதவுடல் ஊர்வலமாக மன்னார் பொது சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி நல்லடக்கத்தையொட்டி மன்னார் நகரப்பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு  இருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_4582-600x400.jpg

DSC_4605-600x400.jpg

https://athavannews.com/2022/1270937

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆழ்ந்த இரங்கல்கள்.......!💐

அரச மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படவேண்டிய பூதவுடல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள், மிக சிறந்த உதை பந்தாட்டா வீரர் 

On 27/2/2022 at 16:33, தமிழ் சிறி said:


அவரின் மரணத்திற்கான காரணங்கள்... வெளிப்படுத்தப் பட வேண்டும்.

எந்த வித காரணங்களுமில்லை, திடீர் இதய நோய், நன்றாக பயிற்ச்சி செய்தபின் தண்ணி அடித்ததுதான் பிரச்சனை, அரசியல் இதில் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

எந்த வித காரணங்களுமில்லை, திடீர் இதய நோய், நன்றாக பயிற்ச்சி செய்தபின் தண்ணி அடித்ததுதான் பிரச்சனை, அரசியல் இதில் இல்லை

நன்றி உடையார். 
ம்ஹ்ம்... நன்றாக மிளிர வேண்டியவர், 
சுய கட்டுப்பாடு இல்லாததால்... எல்லாவற்றையும் இழந்து விட்டார்.  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

ஆழ்ந்த இரங்கல்கள், மிக சிறந்த உதை பந்தாட்டா வீரர் 

எந்த வித காரணங்களுமில்லை, திடீர் இதய நோய், நன்றாக பயிற்ச்சி செய்தபின் தண்ணி அடித்ததுதான் பிரச்சனை, அரசியல் இதில் இல்லை

இந்த மதுப்பாவனை விளையாட்டு வீரர்களையும் விட்டுவைக்கவில்லை.😭

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.