Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சியில் "வெந்து தணியாத பூமி" வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

book.jpg

இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை (26.03.2022) அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் திரு. வரதன் கிருஸ்ணா அவர்கள் எழுதிய "வெந்து தணியாத பூமி" புத்தகம் வெளியிடப்படவுள்ளது. இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த வரதன் கிருஸ்ணா அவர்கள் ஈழப் புரட்சி அமைப்பில் (Eelam revolutionary organisation - EROS) இணைந்து செயல்பட்டவர். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார். மலையக மக்கள் வாழ்வு, அரசியல் மற்றும் தமது ஈழப் போராட்ட அனுபவங்கள் குறித்து மிக ஆழமான பார்வையையும், திறனாய்வுகளையும் வரதன் கிருஸ்ணா இந்நூலில் வெளிக்கொண்டு வந்துள்ளார். சமாதானத்திற்கான கனேடியர்கள் ஸ்ரீலங்கா சார்வு வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது.  இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி நிகழ்வில்  "வெந்து தணியாத பூமி" குறித்து திரு.ராஜன் பூலோகலிங்கம் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்துவார்.

 

 

276999980_5310016575674962_8649403330532274833_n.jpg
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இலண்டன் புத்தக கண்காட்சிக்குப் போயிருந்தேன். யமுனா ராஜேந்திரன் கையால் அவரும் பா.பிரபாகாரனும் தொகுத்த ஜெயமோகன் மீதான கட்டுடைப்பு நூலை வாங்கினேன். 😀

அவருடன் உரையாடும்போது நான் ஜெயமோகனின் நூல்கள் பலவற்றைப் படித்ததையும், வெண்முரசு நாவல் தொடர்களைத் படித்துக்கொண்டிருப்பதையும் சொன்னேன். அத்துடன் “ஜெயமோகன் ஆசான்; ஆனால் நீங்கள் பேராசான்!😂” என்றும் கூறினேன். இடதுசாரி அரசியலைப் பற்றிக் கதைத்தபோது ஸ்டாலின்தான் அவரது நிர்வாகத் திறமையால் இப்போது இந்தியாவில் கேரளத்து பினராயி விஜயனைவிட இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றார் என்று சொன்னார். உக்கிரேன், ரஷ்யாவைப் பற்றி கதைக்க நேரம் கிடைக்கவில்லை!

படிக்க ஆரம்பித்துள்ள புத்தகம்👇🏾

large.3A44DDE6-FB70-43DB-BCEB-225CB6259E66.jpeg.811b09c5f1f7c9758b877ac4a9cb5883.jpeg

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நேற்று இலண்டன் புத்தக கண்காட்சிக்குப் போயிருந்தேன். யமுனா ராஜேந்திரன் கையால் அவரும் பா.பிரபாகாரனும் தொகுத்த ஜெயமோகன் மீதான கட்டுடைப்பு நூலை வாங்கினேன். 😀

அவருடன் உரையாடும்போது நான் ஜெயமோகனின் நூல்கள் பலவற்றைப் படித்ததையும், வெண்முரசு நாவல் தொடர்களைத் படித்துக்கொண்டிருப்பதையும் சொன்னேன். அத்துடன் “ஜெயமோகன் ஆசான்; ஆனால் நீங்கள் பேராசான்!😂” என்றும் கூறினேன். இடதுசாரி அரசியலைப் பற்றிக் கதைத்தபோது ஸ்டாலின்தான் அவரது நிர்வாகத் திறமையால் இப்போது இந்தியாவில் கேரளத்து பினராயி விஜயனைவிட இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றார் என்று சொன்னார். உக்கிரேன், ரஷ்யாவைப் பற்றி கதைக்க நேரம் கிடைக்கவில்லை!

படிக்க ஆரம்பித்துள்ள புத்தகம்👇🏾

large.3A44DDE6-FB70-43DB-BCEB-225CB6259E66.jpeg.811b09c5f1f7c9758b877ac4a9cb5883.jpeg

 

தனிய ஒரு பக்க சார்பான புத்தகங்களை மட்டும் படிக்காதீர்கள் ...அப்படி படித்தால் அவர்களை மாதிரித் தான் யோசிக்க தோணும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

தனிய ஒரு பக்க சார்பான புத்தகங்களை மட்டும் படிக்காதீர்கள் ...அப்படி படித்தால் அவர்களை மாதிரித் தான் யோசிக்க தோணும் 

நாம எல்லாத்தையும் படிப்போம்😎 எவருக்கும் சீடராக அமையமாட்டோம்😉 எந்த சித்தாந்தத்தையும் மதம் மாதிரி பின்பற்றவும் மாட்டோம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

கேரளத்து பினராயி விஜயனை

நான் சந்திக்கும் மலையாளிகள் பத்தில் எட்டு பேர் விஜயனை திட்டி தீர்ப்பார்கள் அதுபற்றி அரசியல் தெரிந்த மல்லுவிடம் வினாவியபோது அவர் சொன்னார் அப்படி திட்டுபவர்கள்தான் விஜயனுக்கு ஒட்டு போடுபவர்களும் அவர்கள் தான் என்றார் எப்படி என்று அவர் முகத்தை நான் பார்க்க அவரே தொடர்ந்தார் படிப்பும் சிந்தனையும் கூடிய மாநிலம் எவ்வளவுதான் நல்லது மக்களுக்கு செய்தாலும் ஆகா ஓகோ என்று புகழக்கூடாது அது அவருடைய வேலை ஒரு முதலமைச்சர் மக்களுக்கு செய்ய வேண்டிய வேலை  ஆனால் உங்க தமிழ்நாட்டில் (என்னை தமிழ்நாடு என்பார் மறந்து ) ரஜனி விஜய் சினிமாவில் நல்லவர் போல் நடித்தாலே அவருக்கு கோயில் கட்டி கும்பிடுகிறீர்கள் என்கிறார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

தனிய ஒரு பக்க சார்பான புத்தகங்களை மட்டும் படிக்காதீர்கள் ...அப்படி படித்தால் அவர்களை மாதிரித் தான் யோசிக்க தோணும் 

வாசிப்பது நல்ல விடயம்.

அதற்காக மதவாதிகளினதும் சமூக சிந்தனையாளர்கள் எனும் போர்வையில் திராவிட எழுத்தாளர்களினது எழுத்துக்களையும் புத்தகங்களையும் படித்தால் மனம் பக்கசார்பாகவே நிற்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

உங்க தமிழ்நாட்டில் (என்னை தமிழ்நாடு என்பார் மறந்து ) ரஜனி விஜய் சினிமாவில் நல்லவர் போல் நடித்தாலே அவருக்கு கோயில் கட்டி கும்பிடுகிறீர்கள் என்கிறார் .

எல்லா இடத்திலும் பாமரக்கூட்டம் என்று கொஞ்சம் இருக்கும்தானே.. தமிழ்நாட்டிலும் சில வீதங்கள் இப்படி இருக்கும். பிஜேபி இன்னும் பெரிய ஆதரவுத்தளத்தை தமிழ்நாட்டில் பெறமுடியவில்லை என்பதே பெரும்பான்மையானவர்கள் பிரச்சாரத்திற்கும், கவர்ச்சிக்கும் வீழ்ந்துவிடமாட்டார்கள் என்றுதான் காட்டுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அதற்காக மதவாதிகளினதும் சமூக சிந்தனையாளர்கள் எனும் போர்வையில் திராவிட எழுத்தாளர்களினது எழுத்துக்களையும் புத்தகங்களையும் படித்தால் மனம் பக்கசார்பாகவே நிற்கும்.

கும்பலின் பார்வையில் தங்கள் தரப்பை ஏற்ற ‘நல்ல’ அறிவுஜீவி – ஏற்காத ’கெட்ட’ அறிவுஜீவி என ஒரு இருமை உருவாகிவிடுகிறது.  கும்பல் அணுகுமுறை மூர்க்கமான ஒற்றைப்படைத்தன்மை கொண்டது. ’என்னைப்போல் நீயும் இரு, இல்லையேல் நீ என் எதிரி’ என அது சொல்கிறது.

நான் எந்த கும்பலிலும் இல்லை என்பதாலும், எது முற்போக்கு, எது பிற்போக்கு என்பதை புரிந்துகொள்வதாலும் ஒருவரிடம் ஏற்றுக்கொள்ளவேண்டியதை ஏற்றுக்கொள்ளவும், எதிர்க்கவேண்டியதை எதிர்க்கவும் முடிகின்றது. 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2022 at 09:58, கிருபன் said:

கும்பலின் பார்வையில் தங்கள் தரப்பை ஏற்ற ‘நல்ல’ அறிவுஜீவி – ஏற்காத ’கெட்ட’ அறிவுஜீவி என ஒரு இருமை உருவாகிவிடுகிறது.  கும்பல் அணுகுமுறை மூர்க்கமான ஒற்றைப்படைத்தன்மை கொண்டது. ’என்னைப்போல் நீயும் இரு, இல்லையேல் நீ என் எதிரி’ என அது சொல்கிறது.

நான் எந்த கும்பலிலும் இல்லை என்பதாலும், எது முற்போக்கு, எது பிற்போக்கு என்பதை புரிந்துகொள்வதாலும் ஒருவரிடம் ஏற்றுக்கொள்ளவேண்டியதை ஏற்றுக்கொள்ளவும், எதிர்க்கவேண்டியதை எதிர்க்கவும் முடிகின்றது. 😎

நீங்கள் எங்களுக்கு ஆசான் ஆகிடுங்கோ கிருபன் ஜீ. 

பிற்குறிப்பு :

நிழலியானந்தா சேர்த்து கொள்ளப்படமாட்டார்🤭

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2022 at 06:59, கிருபன் said:

நாம எல்லாத்தையும் படிப்போம்😎 எவருக்கும் சீடராக அமையமாட்டோம்😉 எந்த சித்தாந்தத்தையும் மதம் மாதிரி பின்பற்றவும் மாட்டோம். 

 

இது நல்லா இருக்கே..எல்லாவற்றையும் படிக்க வேண்டும், படித்ததில் பிடித்தவற்றை நடைமுறைப்படுத்தலாம்.. 

இந்த மாதிரி தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி, சிட்னியில் நடைபெறுகிறதோ தெரியவில்லை.. கொஞ்சம் பொறாமையாகத்தான் உள்ளது.. 

எனக்கு இந்த online order கொஞ்சம் தயக்கம் என்பதால் ஊருக்கு போகும் சமயங்களில்தான் புத்தகங்களை வாங்கி அள்ளிக்கட்டிக் கொண்டு வருவது..

 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.