Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதவியை இராஜினாமா... செய்த அன்றே, டுபாய்க்கு பறந்த நாமல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவியை இராஜினாமா செய்த அன்றே டுபாய்க்கு பறந்த நாமல்?

பதவியை இராஜினாமா... செய்த அன்றே, டுபாய்க்கு பறந்த நாமல்?

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி இராஜினாமா செய்த நாமல் ராஜபக்ஷ, அன்றிரவே டுபாய் சென்றுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 2ஆம் திகதி மாலைத்தீவுக்குச் சென்றதாகவும்  அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியை பதவி விலகக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பல அமைச்சரவை அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்தனர்.

அதற்கமைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கடந்த 3ஆம் திகதி அறிவித்தார்.

இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முடிவுக்கு இது உதவும் என்று நம்புகிறேன் என்றும் அவர் ருவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, பதவியை இராஜினாமா செய்த அன்றே அவர் டுபாய்க்குச் செய்றதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2022/1275021

  • கருத்துக்கள உறவுகள்

இவரை நாட்டின் தலைவராக்க கனவு கண்டு காரியமாற்றி இடையில் ஒரு சோதிடரின் கதையை நம்பி பாதியிலேயே பதவியை இழந்தார் தந்தையார். இப்போ சித்தப்புவும் சோதிடத்தை நம்பி கோட்டை விட்டிட்டார். மொத்தத்தில இவரும் ரணில் போல ராசியில்லாதவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இவரை நாட்டின் தலைவராக்க கனவு கண்டு காரியமாற்றி இடையில் ஒரு சோதிடரின் கதையை நம்பி பாதியிலேயே பதவியை இழந்தார் தந்தையார். இப்போ சித்தப்புவும் சோதிடத்தை நம்பி கோட்டை விட்டிட்டார். மொத்தத்தில இவரும் ரணில் போல ராசியில்லாதவர்.

கோத்தபாயவின்… சோதிடர் இவருக்கு என்ன சொன்னவர்.

1 hour ago, satan said:

இவரை நாட்டின் தலைவராக்க கனவு கண்டு காரியமாற்றி இடையில் ஒரு சோதிடரின் கதையை நம்பி பாதியிலேயே பதவியை இழந்தார் தந்தையார். இப்போ சித்தப்புவும் சோதிடத்தை நம்பி கோட்டை விட்டிட்டார். மொத்தத்தில இவரும் ரணில் போல ராசியில்லாதவர்.

நாமலுக்கு இன்னும் காலம் மிக அதிகமாக இருக்கின்றது. மகாவம்சம் கொடுத்த மேலாதிக்க உணர்வும் உதிரமும் சிங்கள மக்களிடம் உள்ளவரைக்கும் நாமலுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம், கோத்தா தான் விதைத்ததை அறுக்க வாய்ப்பை வருந்தி தேடிக்கொண்டார். அவ்வாறே தந்தையார் பெற்ற கடனை அடைக்க இவருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம். விதி எழுதிக்கொண்டே நகரும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கோத்தபாயவின்… சோதிடர் இவருக்கு என்ன சொன்னவர்.

ஞானாக்கா என்றொரு சோதிடப்பெண்மணியின் ஆலோசனைப்படியே எல்லாவற்றையும் செய்கிறார் என அடிக்கடி செய்திகள் வெளிவந்தன. அண்மையில் அந்தப்பெண்மணி அச்சத்தில் இருக்கிறா என்றும், அவரின் இடம் ஆர்பாட்டக்காரரால் சுற்றி வளைப்பு என்றும் செய்திகள் வந்தன. அவ என்ன சொல்லி துலைச்சாவோ பின்னாளில் வெளிவரும். இப்போ வெளியிட்டால் ஆபத்து அவாவுக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

நாமலுக்கு இன்னும் காலம் மிக அதிகமாக இருக்கின்றது. மகாவம்சம் கொடுத்த மேலாதிக்க உணர்வும் உதிரமும் சிங்கள மக்களிடம் உள்ளவரைக்கும் நாமலுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும்.

இவரால் இனி மீள முடியுமென்று நான் நினைக்கவில்லை. Imageஐ காக்கும் PR நடவடிக்கைகள் சில எடுத்தாலும், பெயர் அந்த அளவுக்கு கெட்டுவிட்டது. இந்த குடும்பத்தின் அடாவடியால் பாதிக்கப்பட்ட/பயந்த சகஅரசியல்வாதிகள் நிறைய உண்டு, எப்பாடுபட்டாவது ஒதுக்குவார்கள். இனவாதிகள் நிறைய இருக்கிறார்கள், இவர் ஒருவர்தான் அவர்களுக்கு கட்டாயம் தேவை என்று இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு செல்ல தயாராகும் நாமல் ! - நீதிமன்றுக்கு அறிவிப்பதற்காக விசாரணைக்கு வருகிறது வழக்கு

( எம்.எப்.எம்.பஸீர்)

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அமைச்சுக்களில் இருந்து ராஜினாமா செய்த பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ  வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றார். 

namal.jpg

இது தொடர்பில் வெள்ளிக்கிழமை ( 5) கொழும்பு மேல் நீதிமன்றில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. 

வெளிப்படுத்த முடியாத வகையில் 30 மில்லியன் ரூபா சம்பாதித்தார் என கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் சேர்த்து 6 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் போது இது  வெளிப்படுத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,  கவர்ஸ் கோப்ரேட் நிறுவனம்,  அந் நிறுவனத்தின் பணிப்பாளர்களான  இந்திக பிரபாத் கருணாஜீவ,  சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா,  நித்தியா செனானி சமரநாயக்க ஆகியோரே இவ்வழக்கின் பிரதிவாதிகளாவர்.

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,  வெளிநாடு செல்வதன் பொருட்டு நீதிமன்றை தெளிவுபடுத்துவதற்காக, குறித்த வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு, நாமலின் சட்டத்தரணியான,  ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன கொழும்பு மேல் நீதிமன்றில், நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில்  இன்று ( 5) கோரிக்கை விடுத்தார். இதனூடாக நாமல் வெளிநாடு செல்ல தயாராகின்றமை வெளிப்படுத்தப்பட்டது.

 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கும் 2014 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்  கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்ரேட் செர்விஷஸ் நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்துடன் செய்த கொடுக்கல் வாங்கலின் போது, மோசடியான முறையில் பாரிய அளவில் பணத்தை பயன்படுத்த சதித்திட்டம் தீட்டியதாகவும்,  அதன் ஊடாக 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்ததாகவும் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ்  11 குற்றச்சாட்டுக்களின் கீழ்  சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

 அவ்வாறு வெளிப்படுத்த முடியாத வகையில் சம்பாதித்த 30 மில்லியன் ரூபா ஊடாக ஹலோ கோப் எனும் நிறுவனத்தை கொள்வனவு செய்துள்ளதாகவும் சட்ட மா அதிபரால் நாமல் உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு  இன்று ( 5) விசாரணைக்கு வந்தது. இதன்போதே நாமலின் சட்டத்தரணிகள் ஊடாக மேற்படி கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

அதன்படி குறித்த வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

 இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முதல் பிரதிவாதி நாமல் ராஜபக்ஷ மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. அவர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளதாக இதன்போது அவரது சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன தெரிவித்தார்.

 இவ்வழக்கில் பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்,  எந்த சத்தர்ப்பத்திலும் நீதிமன்றை தெளிவுபடுத்திய பின்னர் வெளிநாடு செல்ல அவருக்கு ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  அதன்படி  வெளிநாடு செல்வது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிப்பதற்காக இவ்வழக்கை  எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன கோரினார்.  அதன்படியே மேற்படி அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 

https://www.virakesari.lk/article/125340

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2022 at 07:00, தமிழ் சிறி said:

பதவியை இராஜினாமா... செய்த அன்றே, டுபாய்க்கு பறந்த நாமல்?

2 hours ago, கிருபன் said:

நாமல் ராஜபக்ஷ  வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றார். 

இதை யாரிம் சொல்லி அழ....

th?id=OIP.kW7TX4BzbzP3vREXR5GsvAHaD4&pid=Api&P=0&w=343&h=179

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.