Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து தலைவர்களையும் அழைத்து கலந்துரையாட தீர்மானம் - மல்வத்து பீடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து தலைவர்களையும் அழைத்து கலந்துரையாட தீர்மானம் - மல்வத்து பீடம்

(இராஜதுரை ஹஷான்)

 

நாட்டில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு மக்கள் பிரநிதிகள் கடந்த வாரம் பாராளுமன்றில் செயற்பட்ட விதம் கவலைக்குரியதாக அமைந்துள்ளதுடன், கண்டிக்கத்தக்கதாகவும் காணப்படுகிறது.

மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவாக தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். அரச தலைவர்களையும்,அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க  முப்பீடங்களும் கூட்டாக தீர்மானித்துள்ளதாக மல்வத்து பீடத்தின் செயலாளர் பஹமுன சுமங்கல தேரர் தெரிவித்தார்.

அஸ்கிரிய பீடம்,மல்வத்து பீடம் மற்றும் அமரபுர நிகாய ஆகிய முப்பீடங்களின் மகாநாயக்கர்கள் சனிக்கிழமை (09.04.2022) மல்வத்து பீடத்தில் ஒன்றிணைந்து நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

முப்பீடங்களின் சந்திப்பு குறித்து மல்வத்து பீடத்தின் செயலாளர் பஹமுன சுமங்கல தேரர் குறிப்பிட்டதாவது,

நாடு என்றுமில்லாதவாறு பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. பொருளாதார பாதிப்பு அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தி நாட்டு மக்களை வீதிக்கிறக்கியுள்ளது. அரச கட்டமைப்பிலும் குளறுபடிகள் இருப்பதை நன்கு அவதானிக்க முடிகிறது.

ஆட்சியதிகாரத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல வழங்கப்பட்ட ஆலோசனைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்பது தற்போது தெளிவாகிறது.

பிரச்சினைக்கு யார் காரணம் என குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் இனி ஏதும் மாற்றடைய போவதில்லை.மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.

நாட்டு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடந்த வாரம் பாராளுமன்றில் செயற்பட்ட விதம் பெரும் கவலையினை தோற்றுவித்துள்ளதுடன் கண்டிக்கத்தக்கதாகவும் அமைந்துள்ளது.இவ்வாறான நிலைமையை நாம் எதிர்பார்க்கவில்லை.

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்கள் ஏதாவதொரு சிறந்த வழிமுறையில் துரிதகரமாக தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். அரச தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/125738

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்ளுக்கு…. பிக்குகளும் காரணம் என்பதை,
அவர்கள் இன்னும், உணரவில்லையா.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவாக தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பொதுவாக மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்ப்பதற்கு மத குருமார்கள் தங்களது மதக் கடவுளை வேண்டி அதற்குரிய பூசை புனர்காரியங்களை மேற்கொண்டு வேண்டுதல் வைப்பார்கள். ஆனால் சீறீலங்க புத்த மத குருமார்கள் அரசாங்கத்தைக் கடவுளாக உருவகித்து வேண்டுதல் வைக்கிறார்களே.!!🤔 😲

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பூசை வைக்க (மக்களால்) பிக்குகள் திருந்துவார்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்ளுக்கு…. பிக்குகளும் காரணம் என்பதை,
அவர்கள் இன்னும், உணரவில்லையா.

முதலில் இந்த முப் பீடைகளையும் ஒழிக்கவேணும் 
 

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகள் தன் பக்கம் இருப்பார்கள் என கோத்தா நம்புகிறார் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

பிக்குகள் தன் பக்கம் இருப்பார்கள் என கோத்தா நம்புகிறார் 

பவுத்தம், பிக்குகள், இராணுவம், போர்ப்புகழ், மக்கள் ஆதரவு இவற்றை  நம்பிய சிங்கள அரசியல் வேஷம் ஒவ்வொன்றாக கலையுது. இருந்தாலும் சளைக்காமல் போர் பந்தை எறிந்து ஆட்டத்தை திரும்பாமல் இறுக்கப்பிடிக்க முயற்சிக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.