Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு – காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக, அமைக்கப்பட்டிருந்த...  ‘கோட்டா கோ கம’ கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘கோட்டா கோ கம’ கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றம்?

கொழும்பு – காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக, அமைக்கப்பட்டிருந்த...  ‘கோட்டா கோ கம’ கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றம்?

கொழும்பு – காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம’ கூடாரங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூடாரங்கள், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து பொலிஸார் அவற்றை அகற்றியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ‘கோட்டா கோ கம’ கிராமக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலி நகரில் ‘கோட்டா கோ கம’ எனும் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்தில் நேற்று முதல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த இடத்திற்கு நேற்று பகல் சென்ற பொலிஸார், மாலை 04 மணிக்குள் அதனை அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1276875

  • கருத்துக்கள உறவுகள்

நாடகம் முடிஞ்சுதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

நாடகம் முடிஞ்சுதா?

சாத்தான், இது... கொழும்பு காலி முகத்திடல் அல்ல.
தென் பகுதியில் உள்ள.. காலி நகரத்தின்  பேருந்து நிலையத்திற்கு முன்பாக இருந்த கூடாரங்கள். 
சிறிய அளவில் கூடாரங்கள் அமைத்திருப்பார்கள் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தான், இது... கொழும்பு காலி முகத்திடல் அல்ல.
தென் பகுதியில் உள்ள.. காலி நகரத்தின்  பேருந்து நிலையத்திற்கு முன்பாக இருந்த கூடாரங்கள். 
சிறிய அளவில் கூடாரங்கள் அமைத்திருப்பார்கள் என நினைக்கின்றேன்.

அதே ....கிராமங்களில் போராடா விட மாட்டார்கள் ஒன்லி கொழும்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, putthan said:

அதே ....கிராமங்களில் போராடா விட மாட்டார்கள் ஒன்லி கொழும்பு

கொழும்பில் கை வைத்தால்... 
சர்வதேச அளவில், போராட்டம்  ஒடுக்கப் பட்டது  என்ற செய்தி, 
பரவிவிடும் என்ற பயத்தில்... யோசித்துக் கொண்டு இருக்கின்றார்கள். 
ஆனால்... இதனை எப்படியும் முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

கொழும்பில் கை வைத்தால்... 
சர்வதேச அளவில், போராட்டம்  ஒடுக்கப் பட்டது  என்ற செய்தி, 
பரவிவிடும் என்ற பயத்தில்... யோசித்துக் கொண்டு இருக்கின்றார்கள். 
ஆனால்... இதனை எப்படியும் முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சாத்தான், இது... கொழும்பு காலி முகத்திடல் அல்ல.
தென் பகுதியில் உள்ள.. காலி நகரத்தின்  பேருந்து நிலையத்திற்கு முன்பாக இருந்த கூடாரங்கள். 
சிறிய அளவில் கூடாரங்கள் அமைத்திருப்பார்கள் என நினைக்கின்றேன்.

நன்றி சிறியர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

கொழும்பில் கை வைத்தால்... 
சர்வதேச அளவில், போராட்டம்  ஒடுக்கப் பட்டது  என்ற செய்தி, 
பரவிவிடும் என்ற பயத்தில்... யோசித்துக் கொண்டு இருக்கின்றார்கள். 
ஆனால்... இதனை எப்படியும் முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பார்கள்.

சில சமயம் 5 நாள்.... நாட்டை முடக்கநிலைக்கு கொண்டு வருவார்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

இதோட, ஓடினா, கோத்தா, மகிந்த தப்பி விடுவினம்.

ஜஎம்எப் நிபந்தனை வந்த பிறகு ஓட வேண்டி வரும். அதன் பிறகுகதை கந்தல்...

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இதோட, ஓடினா, கோத்தா, மகிந்த தப்பி விடுவினம்.

ஜஎம்எப் நிபந்தனை வந்த பிறகு ஓட வேண்டி வரும். அதன் பிறகுகதை கந்தல்...

 

எங்களுக்கு என்ன பிரயோசனம் ?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

எங்களுக்கு என்ன பிரயோசனம் ?

கலகத்தின் ஊடே நியாயம் வரும்.

இன்னும் ஒரு விதமா பார்ப்போமா?

புலிகள் ஒன்றாக, பலமாக இருக்கும் வரை..... அசைக்க முடியவில்லை.

கருணாவை பிரித்தார்கள்.... ஆட்டம் குளோஸ்.

சிங்களம் பலமாக இருக்கும் வரை, யுத்தகுற்ற விசாரணையே..... கொண்டே.... கவ...க்க வையுங்கோ.....கதை.....

இப்ப கடன் பிரச்சணை, தத்தளிப்பு.....

கப்பித்தானின்; சிங்களமே  பிடி சாபம்; ஆட்டம் குளோஸ் ஆகப்போகிறது.

கவலைப்படாதீங்க..... இந்தியர்களை இரும்புப் பிடியில் வைத்திருந்த முகாலய சாம்ராஜ்யத்தை வீழ்த்திய, சூரியன் மறையாத பிரிட்டிஸ் சாம்ராஜ்யம் வீழ்ந்தது......

இந்த சிங்களம், எம்மாத்திரம்!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் அகற்றிய கூடாரங்களை மீண்டும் நிர்மாணித்த போராட்டகாரர்கள்:குவியும் மக்கள்

By  kowsi   17/04/2022 
%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%

பொலிஸார் உடைத்து அகற்றிய கோட்டா கோ கிராமத்தின் காலி கிளையை போராட்டகாரர்கள் மீண்டும் நிர்மாணித்துள்ளனர்.

கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி காலியில் மக்கள் போராட்டத்தை நடத்தி வந்ததுடன் அந்த இடத்திற்கு கோட்டா கோ கிராம கிளை என பெயரிட்டிருந்தனர்.

காலி பொலிஸார் அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை இன்று காலை உடைத்து அப்புறப்படுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த இடத்தில் மிக நேர்த்தியான முறையில் மீண்டும் கூடாரங்களை அமைத்துள்ளனர்.

அந்த இடத்திற்கு கடந்த சில தினங்களை விட தற்போது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

tamilnews.com

  • கருத்துக்கள உறவுகள்

பெருமளவில் திரண்டு யாழில் தீப்பந்த போராட்டம்!(காணொளி)(படங்கள்)

2 மணி நேரம் முன்
விளம்பரமஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு - காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் தற்போது தீப்பந்த போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் தற்போது இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

காலிமுகத்திடலில் ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தில் இளைஞர், யுவதிகளை பங்குபற்றுமாறுஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery 

இந்த ஒளியில் காணாமல் போனோரின் பெற்றோர்களை ஒன்றிணைந்த இவ் இளையோர்கள் கண்டுகொள்வார்களா. ??????

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

பெருமளவில் திரண்டு யாழில் தீப்பந்த போராட்டம்!(காணொளி)(படங்கள்)

2 மணி நேரம் முன்
விளம்பரம

இந்த ஒளியில் காணாமல் போனோரின் பெற்றோர்களை ஒன்றிணைந்த இவ் இளையோர்கள் கண்டுகொள்வார்களா. ??????

பாஞ்சர்,

நீங்கள் சொல்வது புரிந்தாலும், ஒரு அவலமான உண்மை..... இந்த பெற்றோர்கள் ஏதோ ஒரு உணர்வு பூர்வ நம்பிக்கையில் போரடினாலும், நிதர்சனம், அவர்களது பிள்ளைகள் உயிருடன் இல்லை என்பதே.

இதனை கோத்தா வெளிப்படையாக அறிவித்து விட்டார். மரண சான்றிதழும் தருவேன் என்றாரே.

ஆக, அவர்கள் உணர்வு பூர்வ நம்பிக்கையில், நாம் உணர்வு பூர்வமாகவே இணைய முடியும் என்பதே நிதர்சனம். 😫

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.