Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிருசுவிலில்... புகையிரதம் – சிறிய ரக லொறி விபத்தில்,  மூவர் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவிலில் புகையிரதம் – சிறிய ரக லொறி விபத்தில் மூவர் உயிரிழப்பு!

மிருசுவிலில்... புகையிரதம் – சிறிய ரக லொறி விபத்தில்,  மூவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் –  சிறிய ரக லொறி வாகன விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர்  உயிரிழந்துள்ளனர்.

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளுமே உயிரிழந்துள்ளனர்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்திய சாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையில் சிறிய ரக லொறி மோதி விபத்துக்கு உள்ளானது. சிறிய ரக லொறியில் பயணித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை வந்துகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் அலவ்வா பகுதியில் கூலர் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் கூலர் ரக வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் அலவ்வா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4-2-600x363.jpg

https://athavannews.com/2022/1277948

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவிலில் புகையிர விபத்து – மக்கள் போராட்டம்!

மிருசுவிலில்... புகையிர விபத்து – மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட சிறிய ரக லொறி  விபத்துக்குள்ளாயியதில் வாகனத்தில் பனித்த மூவரில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தனியங்கும் சமிக்கை மூலம் இயங்கும் தண்டவாள பகுதியினை கடக்க முற்பட்ட வேளையிலே இவ் விபத்து இடம் பெற்றது. இந் நிலையில் புகையிரத கடவைக்கு ஒரு காவலாளியை நியமிக்க வேண்டும் என பிரதேச மக்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
இதன் போது தண்டவாளத்தின் மேலே மரக்குற்றிகளை போட்டும் ரயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ் கொடிகாமம் பொலிஸார் மக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி புகையிரத கடவைக்கு காவளாளி நியமிக்கும் வரை  பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள் என எழுத்து மூலம்  சாவகச்சேரி, கொடிகாமம், கோப்பாய் உதவி பொலிஸ்  அத்தியட்சகர் A.G y.s கீர்த்திசிங்க மக்களிடம் கையளித பிற்பாடு போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ் கொடிகாமம் பொலிஸார் மக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி புகையிரத கடவைக்கு காவளாளி நியமிக்கும் வரை  பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள் என எழுத்து மூலம்  சாவகச்சேரி, கொடிகாமம், கோப்பாய் உதவி பொலிஸ்  அத்தியட்சகர் A.G y.s கீர்த்திசிங்க மக்களிடம் கையளித பிற்பாடு போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

நல்ல விடயம், சிறிய கவனக்குறைவு மனித உயிர்களை பறிக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

நல்ல விடயம், சிறிய கவனக்குறைவு மனித உயிர்களை பறிக்கிறது.

ஏராளன்... இந்த ரயில் பாதையை ஒட்டி, 
ஒரு நீண்ட நெடுஞ்சாலையும் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு செல்கிறது.
சிலர் ரயிலுடன் வேகமாக, தமது வாகனத்தை ஒட்டி... சாகசம் காட்டுவர்களாம். 

அந்தப் பகுதியில் அடிக்கடி... ரயிலுடன் மோதி, உயிர் இழப்புகள் ஏற்படும்.
மக்களும்... பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இதில்... 12 வயது  சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்தது பெரும் சோகம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

அலவ்வா

இது எங்குள்ளது?

 

2 hours ago, தமிழ் சிறி said:

ஏராளன்... இந்த ரயில் பாதையை ஒட்டி, 
ஒரு நீண்ட நெடுஞ்சாலையும் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு செல்கிறது.
சிலர் ரயிலுடன் வேகமாக, தமது வாகனத்தை ஒட்டி... சாகசம் காட்டுவர்களாம். 

அந்தப் பகுதியில் அடிக்கடி... ரயிலுடன் மோதி, உயிர் இழப்புகள் ஏற்படும்.
மக்களும்... பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இதில்... 12 வயது  சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்தது பெரும் சோகம்.

கண்டி வீதி  , சிறி. பல இடங்களில் புகையிரத கடவை இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

இது எங்குள்ளது?

“அலவ்வா” என்ற இடம் எங்கு உள்ளது என்று, எனக்கு தெரியாது. 😂
ஆதவன் நியூஸ்காரனுக்குத்தான் தெரியும்.🤣

54 minutes ago, nunavilan said:

இது எங்குள்ளது?

 

 

48 minutes ago, தமிழ் சிறி said:

“அலவ்வா” என்ற இடம் எங்கு உள்ளது என்று, எனக்கு தெரியாது. 😂
ஆதவன் நியூஸ்காரனுக்குத்தான் தெரியும்.🤣

அளவ்வ என்ற ஒரு ஊர் குருணாகல் மாவட்டத்தில் உள்ளது. கொழும்பு குருணாகல் புகையிரதப் பாதையில் இவ் ஊருக்கான ரயில் நிலையமும் உள்ளது. சாதரண பயணிகள் ரயில் மாத்திரமே நிற்கும் எஸ்பிரஸ் ரயில் ஒன்றும் நிற்காது. உயர்தரம் 10, 11 ஆம் ஆண்டு படிக்கும் போது வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பாதையால் செல்லும் ரயிலில் தான் பயணம் செய்ததுண்டு.

ஆதவன் செய்தியில் இவ் ஊரைத்தான் குறிப்பிட்டு இருந்தார்களோ தெரியாது

 

https://en.wikipedia.org/wiki/Alawwa_railway_station

  • கருத்துக்கள உறவுகள்

அல்வாய் அல்லது அல்லாரை என நினைக்கிறன். எனக்குத் தெரிந்தவரையில் இங்கு வைத்தியசாலை இருந்திருக்கவில்லை, கொடிகாமம் வைத்தியசாலையையே இந்த ஊரைச் சார்ந்தவர்கள் பயன்படுத்தினார்கள். இப்போ புதுசாய் நிர்மாணித்திருக்கலாம். ஒருவேளை செய்திக்காரர் தவறுதலாக கூறியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது….. அல்வாயில் புகையிரதமா😳😳

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

என்னது….. அல்வாயில் புகையிரதமா😳😳

மீரா இணைக்கப்பட்டிருக்கும் படங்களை பார்த்தால்; புகையிரதம் வீதியில் ஓடியிருக்குது போல் உள்ளது!

On 22/4/2022 at 16:57, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் –  சிறிய ரக லொறி வாகன விபத்தில்

 

On 22/4/2022 at 16:57, தமிழ் சிறி said:

இதேவேளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை வந்துகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் அலவ்வா பகுதியில் கூலர் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது

மன்னிக்கவும் மீரா! இருவேறு சம்பவங்கள் போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.