Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தி எப்போதும் நமது தேசிய மொழிதான்’ – நடிகரின் ட்விட்டர் பதிவால் இணையத்தில் எழுந்த விவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘இந்தி எப்போதும் நமது தேசிய மொழிதான்’ – நடிகரின் ட்விட்டர் பதிவால் இணையத்தில் எழுந்த விவாதம்

  • ச. ஆனந்தபிரியா
  • பிபிசி தமிழுக்காக
44 நிமிடங்களுக்கு முன்னர்
 

சுதீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தி தேசிய மொழி இல்லை எனில் உங்கள் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என நடிகர் சுதீப் கிச்சாவுக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்வீட் செய்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கன்னட மொழி திரைப்படமான 'கே.ஜி.எஃப்2' சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றிபெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்திற்கு முன்பு வெளியான 'புஷ்பா', 'ஆர்.ஆர்.ஆர்.' படங்களும் பான் இந்தியா படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில், ஒரு திரைப்பட விழா ஒன்றில் நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற நடிகர் சுதீப் கலந்து கொண்டார். அதில் கன்னட திரைப்படம் ('கே.ஜி.எஃப்2') பான் இந்தியா திரைப்படமாக வெற்றி பெற்றது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுதீப், 'பான் இந்தியா படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டதாக சொன்னீர்கள். ஒரு திருத்தம். இந்தி இனி தேசிய மொழி கிடையாது. பாலிவுட்டிலும் பான் - இந்தியா திரைப்படங்களை தயாரிக்கிறார்கள். அவர்கள் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெற்றியை பெற போராடுகிறார்கள். ஆனால் நாங்கள் எங்கும் வெற்றி பெறுகிறோம்" என பேசி இருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்தியில் பதிவிடப்பட்டிருந்த அந்த ட்வீட்டில், 'அன்பு சகோதரரே, உங்கள் கூற்றுப்படி இந்தி தேசிய மொழி இல்லை எனில் எதற்காக உங்கள் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி எப்பொழுதும் நம்முடைய தாய் மொழி! தேசிய மொழியாக இருந்துள்ளது. எப்போதும் இருக்கும். ஜன கண மண!' என அதில் குறிப்பிட்டிருந்தார்.

அஜய் தேவ்கனின் இந்த ட்வீட்டுக்கு சுதீப் உடனே ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

'நான் எந்த அர்த்தத்தில் அந்த கருத்தை வெளியிட்டேனோ அது முற்றிலும் வேறு விதமாக உங்களை வந்தடைந்திருக்கிறது என கருதுகிறேன். இந்த கருத்தை எதற்காக நான் கூறினேன் என்பதை நேரில் உங்களை சந்திக்கும் போது நிச்சயம் விளக்குகிறேன். இது யாரையும் புண்படுத்தவோ, தூண்டி விடவோ, விவாதத்தை கிளப்பவோ கிடையாது. நான் ஏன் அதை செய்ய போகிறேன். நம் நாட்டின் ஒவ்வொரு மொழியையும் நான் விரும்புகிறேன். இதற்கு மேல் இதை விவாதமாக தொடர விரும்பவில்லை. நான் அங்கு வெளிப்படுத்திய கருத்தின் அர்த்தமே வேறு. உங்களுக்கு என்னுடைய அன்பு. விரைவில் உங்களை சந்திப்பேன் என நம்புகிறேன்' என சுதீப் தெரிவித்துள்ளார்.

 

அஜய் தேவ்கன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும், 'அஜய்தேவ்கன் சார், நீங்கள் இந்தியில் போட்ட ட்வீட்டை நான் படித்து புரிந்து கொண்டேன். நாங்கள் இந்தியை மதித்து விரும்பி கற்று கொண்டதே இதற்கு காரணம் ஆகும். இதை நான் குற்றமாக சொல்லவில்லை, ஒருவேளை நான் உங்களுக்கான இந்த பதிலை கன்னடத்தில் ட்வீட் செய்திருந்தால் உங்கள் சூழ்நிலை எப்படி இருக்கும் என ஆச்சரியப்படுகிறேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் இல்லையா?' எனவும் கேள்வி எழுப்பி உள்ளார் சுதீப்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

சுதீப்பின் இந்த பதிவுக்கு அஜய்தேவகன் பதில் கொடுத்துள்ளார். அதில், 'சுதீப், நீங்கள் என்னுடைய நண்பர். என்னுடைய தவறான புரிதலை விளக்கியதற்கு நன்றி. நான் எப்பொழுதும் அனைத்து மொழி சினிமாக்களையும் ஒன்றாகவே பார்க்கிறேன். நாங்கள் அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம் அதுபோலவே, எங்கள் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஒருவேளை, மொழிப்பெயர்ப்பில் ஏதேனும் விடுபட்டிருக்கலாம்' என ட்வீட் செய்துள்ளார்.

அஜய் தேவ்கனின் கருத்துக்கு பலரும் இணையத்தில் பல்வேறு விதமான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழணங்கு ஓவியத்தை தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை இணைப்பு மொழியாக ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து ஏ. ஆர். ரஹ்மானிடம் கேட்டபோது தமிழ்தான் இணைப்பு மொழி என்றும் தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/india-61246590

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முந்தி ஏ ஆர் ரகுமானின் இசையும் புடிப்பதில்லை ஏ ஆர் ரகுமானையும் புடிப்பதில்லை.. இப்பொழுது எல்லாம் ஏ ஆர் ரகுமானையும் அவரது இசையும் ஆரத்தழுவி முத்தமிட வேணும்போல் இருக்கிறது.. அதேபோல் முட்டாள்தனமாகவும் அகங்காரமாகவும் மேடைகளில் பேசத்தொடங்கியதில் இருந்து எஸ் பி பி பிரச்சினை அப்புறம் பாஜாக மோடிக்கு முரட்டு முட்டு எண்டு இப்பொழுதெல்லாம் இளையராஜா மனசைவிட்டு தூரமாக போகத்தொடங்கிவிட்டார்…

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு முந்தி ஏ ஆர் ரகுமானின் இசையும் புடிப்பதில்லை ஏ ஆர் ரகுமானையும் புடிப்பதில்லை.. இப்பொழுது எல்லாம் ஏ ஆர் ரகுமானையும் அவரது இசையும் ஆரத்தழுவி முத்தமிட வேணும்போல் இருக்கிறது.. அதேபோல் முட்டாள்தனமாகவும் அகங்காரமாகவும் மேடைகளில் பேசத்தொடங்கியதில் இருந்து எஸ் பி பி பிரச்சினை அப்புறம் பாஜாக மோடிக்கு முரட்டு முட்டு எண்டு இப்பொழுதெல்லாம் இளையராஜா மனசைவிட்டு தூரமாக போகத்தொடங்கிவிட்டார்…

ஆரம்பகால AR ரகுமானின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது அவரது பாடல்களில் இரைச்சலும் டும் டும் குத்துக்களும் அதிகமாகஅது மனதிலிருந்து தூர விலகுகிறது. 

தற்போதும் இளையராஜாவின் பாடல்களை விரும்பிக் கேட்பேன. ஆனால் அவரின் ஆணவமும் அகங்காரமும் நிறைந்த பேச்சுக்கள் அவரை சற்று  தள்ளியே வைத்திருக்கிறதது. 

வித்தகச் செருக்கு என்று அவரைக் கடந்துபோக முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

76-80 க்கு இடையில் பிறந்தவர்கள்தான் ராஜாவையும் - ரஹ்மானையும் அப்பா, அம்மா போல் சம அளவில் நேசிக்கத்தெரிந்த பாக்கியசாலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

ஆரம்பகால AR ரகுமானின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது அவரது பாடல்களில் இரைச்சலும் டும் டும் குத்துக்களும் அதிகமாகஅது மனதிலிருந்து தூர விலகுகிறது. 

தற்போதும் இளையராஜாவின் பாடல்களை விரும்பிக் கேட்பேன. ஆனால் அவரின் ஆணவமும் அகங்காரமும் நிறைந்த பேச்சுக்கள் அவரை சற்று  தள்ளியே வைத்திருக்கிறதது. 

வித்தகச் செருக்கு என்று அவரைக் கடந்துபோக முடியவில்லை. 

ரகுமானை அவரது இசையால் பிடிக்கவில்லை.. அவரது செயலால் பிடிக்கிறது.. முக்கியமாக. தமிழுக்கு தரும் முக்கியத்துவம்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு முந்தி ஏ ஆர் ரகுமானின் இசையும் புடிப்பதில்லை ஏ ஆர் ரகுமானையும் புடிப்பதில்லை.. இப்பொழுது எல்லாம் ஏ ஆர் ரகுமானையும் அவரது இசையும் ஆரத்தழுவி முத்தமிட வேணும்போல் இருக்கிறது.. அதேபோல் முட்டாள்தனமாகவும் அகங்காரமாகவும் மேடைகளில் பேசத்தொடங்கியதில் இருந்து எஸ் பி பி பிரச்சினை அப்புறம் பாஜாக மோடிக்கு முரட்டு முட்டு எண்டு இப்பொழுதெல்லாம் இளையராஜா மனசைவிட்டு தூரமாக போகத்தொடங்கிவிட்டார்…

ரசனைக்கு அளவுகோல் கிடையாது AR அநேக பாடல்கள் கெட்போனில் கேட்க்கும் போது நம்மை அடிமைப்படுத்தும் காரணம் இங்கு எழுதும் அநேகர் 24 வயது தாண்டியவர்கள் அந்த வயதை தாண்டியபின் சில ஓலி அதிர்வுகளை கிரகிக்க சிரமப்படுவோம் அதே போல் இளசுவின் ராஜாங்கம் ஒப்பற்றது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து அருமையான இசைகளை தவற  விடுவது மடமைத்தனம் .

AR இன்  இந்த பாடலை கெட்போனில் கேட்டு பாருங்கள் பூமியில் மீண்டும் புதிதாக அவதரிப்பீர்கள்.

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

76-80 க்கு இடையில் பிறந்தவர்கள்தான் ராஜாவையும் - ரஹ்மானையும் அப்பா, அம்மா போல் சம அளவில் நேசிக்கத்தெரிந்த பாக்கியசாலிகள்.

இப்ப அனிருத் என்ற ஓணானை கண்டாலே பத்திகிட்டு வருதா தலை இதுதான் ஜெனெரேசன் இடைவெளி ஆனாலும்  அவராலும் சில இசைகள் புதுமையாக கொடுக்க முடியுது .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இப்ப அனிருத் என்ற ஓணானை கண்டாலே பத்திகிட்டு வருதா தலை இதுதான் ஜெனெரேசன் இடைவெளி ஆனாலும்  அவராலும் சில இசைகள் புதுமையாக கொடுக்க முடியுது .

இல்லை அவர் பாட்டுக்களையும் ரசிக்கிறேன். இப்பவும் ம “மாமபிதா பிதா ஹே” எண்டுதான் முணுமுணுக்கிறேன்😎.

இசையில் என்னால் கண்டசாலா, தொட்டு ஜீ வி பிரகாஷ் வரை ரசிக்க முடியும். ஆனால் மூடை பொறுத்து. 

வாராயோ வெண்ணிலாவே நாட்களில் …வாட்ட கருவாடு கேட்க முடியாது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

வாராயோ வெண்ணிலாவே நாட்களில் …வாட்ட கருவாடு கேட்க முடியாது

உண்மைதான் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு முந்தி ஏ ஆர் ரகுமானின் இசையும் புடிப்பதில்லை ஏ ஆர் ரகுமானையும் புடிப்பதில்லை.. இப்பொழுது எல்லாம் ஏ ஆர் ரகுமானையும் அவரது இசையும் ஆரத்தழுவி முத்தமிட வேணும்போல் இருக்கிறது.. அதேபோல் முட்டாள்தனமாகவும் அகங்காரமாகவும் மேடைகளில் பேசத்தொடங்கியதில் இருந்து எஸ் பி பி பிரச்சினை அப்புறம் பாஜாக மோடிக்கு முரட்டு முட்டு எண்டு இப்பொழுதெல்லாம் இளையராஜா மனசைவிட்டு தூரமாக போகத்தொடங்கிவிட்டார்…

எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது ஓணாண்டியார் .......ராஜா சார் பாலாவின் அமெரிக்க புரோகிராமில பிரச்சினை பட்டதில் இருந்து சுருதி பேதமாகி விட்டது .......!

எப்படி கண்ணதாசன் விஸ்வநாதன் சௌந்தரராஜன் கூட்டணியோ அதுபோல் ராஜா வைரமுத்து பாலா வின் கூட்டனியும் இருந்து காலத்தால் மறக்க முடியாத பாடல்களைத் தந்தார்கள்......!

அந்தப் பிரச்சனைக்குப் பின் பலரும் அவரை சாதி சொல்லி வசைபாட அவரும் அப்பப்ப டென்ஷனாகிறார்..... கூட்டணி வேறு உடைந்து விட்டது.  வேறொன்றுமில்லை......!   🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

76-80 க்கு இடையில் பிறந்தவர்கள்தான் ராஜாவையும் - ரஹ்மானையும் அப்பா, அம்மா போல் சம அளவில் நேசிக்கத்தெரிந்த பாக்கியசாலிகள்.

எனக்கு கிட்டத்தான் நிக்கிறியள்!🤪

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஏராளன் said:

எனக்கு கிட்டத்தான் நிக்கிறியள்!🤪

ஓம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓம் 😎

என்ன கோசான்,

வயது கொஞ்சம் கொஞ்சமாக குறையுது? 

அந்தாள்தான் விசயம் தெரியாம சொல்லுறாரென்றா நீங்களும் ஒத்தூதுறீங்க ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

என்ன கோசான்,

வயது கொஞ்சம் கொஞ்சமாக குறையுது? 

அந்தாள்தான் விசயம் தெரியாம சொல்லுறாரென்றா நீங்களும் ஒத்தூதுறீங்க ? 

🤣

🤣 அட சொன்னா நம்புங்க கற்ப்ஸ். 

ஐ ஆம் பேபி🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

🤣 அட சொன்னா நம்புங்க கற்ப்ஸ். 

ஐ ஆம் பேபி🤣

எங்களை குழப்பிறதே உங்க வேலையாப் போச்சு!🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.