Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாவிற்கு எதிரான... எந்த பிரேரணைக்கும், ஆதரவில்லை – வாசுதேவ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

கோட்டாவிற்கு எதிரான... எந்த பிரேரணைக்கும், ஆதரவில்லை – வாசுதேவ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை அர்த்தமற்றதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் வாசுதேவ நாணயக்காரவின் கருத்தைப் போன்றே கருத்து வெளியிட்டிருந்தார்.

முன்னதாக தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்த வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதியின் கீழ் எந்தவொரு அமைச்சு பதவியும் ஏற்கமாட்டேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1279959

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்த வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதியின் கீழ் எந்தவொரு அமைச்சு பதவியும் ஏற்கமாட்டேன்

குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.

அரசியல்வாதியின் பேச்சு விடியுமுன்னே போச்சு.

 

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணிய சுவாமியின் பேச்சுக்கும், இவரின் பேச்சுக்கும் அதிக வித்தியாசமில்லை. வெறும் அரசியல் கோமாளிகள் இவர்கள். கொரோனா காலத்திலும்  பெரும் எடுப்பில் ராஜபக்க்ஷ கொம்பனியுடன் நட்பு கொண்டாடிய சுப்பிரமணி, இப்போ வாயடைத்து இருக்கிறார். ஆபத்து காலத்தில் அறியலாம் உண்மையான நண்பனை!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

சுப்பிரமணிய சுவாமியின் பேச்சுக்கும், இவரின் பேச்சுக்கும் அதிக வித்தியாசமில்லை. வெறும் அரசியல் கோமாளிகள் இவர்கள். கொரோனா காலத்திலும்  பெரும் எடுப்பில் ராஜபக்க்ஷ கொம்பனியுடன் நட்பு கொண்டாடிய சுப்பிரமணி, இப்போ வாயடைத்து இருக்கிறார். ஆபத்து காலத்தில் அறியலாம் உண்மையான நண்பனை!

இது எதிர்பார்த்தது தானே

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் ஒரு மதில் மேல் பூனை தான்.
இவ்வளவு அநியாயத்துக்கும் காரணமான மகிந்த அரசுக்கு எதிராக வாக்களிக்காமல் நளுவுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

இவரும் ஒரு மதில் மேல் பூனை தான்.
இவ்வளவு அநியாயத்துக்கும் காரணமான மகிந்த அரசுக்கு எதிராக வாக்களிக்காமல் நளுவுகிறார்.

பெட்டிகள் கைமாறியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

பெட்டிகள் கைமாறியிருக்கும்.

மகிந்த துணிந்து தங்களுக்கு போதுமான வாக்குகள் வரும் என்று சொல்லுவது இதனால் தான் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nunavilan said:

மகிந்த துணிந்து தங்களுக்கு போதுமான வாக்குகள் வரும் என்று சொல்லுவது இதனால் தான் போலும்.

பிரச்சினை கிளப்பினதே இந்த மூன்றும்தன்...இப்ப மாறி நிக்குதுகள்...

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, alvayan said:

பிரச்சினை கிளப்பினதே இந்த மூன்றும்தன்...இப்ப மாறி நிக்குதுகள்...

ஒரு  set up என்றும் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nunavilan said:

ஒரு  set up என்றும் சொல்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

பிரச்சினை கிளப்பினதே இந்த மூன்றும்தன்...இப்ப மாறி நிக்குதுகள்...

எல்லாம் பணம் படுத்தும் பாடு! சுரண்ட முடியாதபோது முரண்டு பிடிச்சுக்கொண்டு வெளியேறுகிறது, தங்கள் உயிரை காப்பதற்காக மக்களை தூண்டி விடுவது, மீண்டும் கப்பம் பெற்றுக்கொண்டு  சொன்னது, செய்ததை மறந்து  வழிய வேண்டியது. இருபக்கமும் ஏமாற்றப்படுவது அப்பாவி ஏழை மக்களே!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

பிரச்சினை கிளப்பினதே இந்த மூன்றும்தன்...இப்ப மாறி நிக்குதுகள்...

சந்தர்ப்பவாதிகளுக்கு  ஒரு கொள்கை. இலட்சியம் இராது.  தங்களுக்கு இலாபகரமான இடங்களில் அந்தந்த வடிவம் எடுத்து இலட்சிய வாதிகள் போல தம்மை காட்டிக்கொள்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.