Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவிப்பு

SayanolipavanMay 24, 2022
 
ranil%20wickremesinghe.jpg


நாட்டின் தற்போதைய பொருளாதாரம், குறிப்பாக உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘நாடு தற்போதைய நிலைமையில் மிகப் பெரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இந்த நிலையில் வெளிநாடுகள், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை மட்டுமன்றி புலம் பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம். மக்களுக்கு உதவுவதற்காகச் சில குழுக்களை நியமித்துள்ளோம். அந்தக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எவரும் உதவிகளைச் செய்யலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் மாத்திரம் அல்லர், உள்நாட்டில் இருப்பவர்களும் உதவிகளைச் செய்ய முடியும்’ என தெரிவித்துள்ளார்.
 

 

http://www.battinews.com/2022/05/blog-post_646.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் தமிழ் மக்களுக்கு ஒண்டும் குடுக்க விருப்பமில்லை ஆனால் அவர்களின் காசு மட்டும் வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தையில் நரி வேலை செய்து விட்டு இப்போ உதவியாம். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வராதவரை நாக்கு வரண்டு  இருக்க வேண்டுகிறேன்.

🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

நரிப்புத்தி ...சும்மா வேலை செய்யாது...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்கள் உறவுகளைப் பார்த்துக்கொள்ளுவோம். எங்களை அழிக்க எவரெவரெல்லாம் உங்களுக்கு உதவினார்களோ, அவர்களிடமே போய் உதவியையும் கேளுங்கள். அதுதான் சரியாகவும் இருக்கும். 

வழமையாக ரணிலுக்குக் கூஜா தூக்கும் சுமந்திரனே இப்ப தள்ளித்தான் நிக்கிறார் எண்டால் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

நாட்டின் தற்போதைய பொருளாதாரம், குறிப்பாக உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம்

தமிழ்மக்களை அவர்களது சொந்த நிலத்திலிருந்து விரட்டியடித்து, ஏதிலிகளாக்கி, பயங்கரவாதிகள் என நேற்றுவரை முத்திரை குத்தி விட்டு இன்று உங்களுக்கு பிரச்சினை என்றவுடன் அழைக்க வெட்கமில்லை. முதலில் எங்கள் பிரச்சனைகளை தீருங்கள், எங்கள் நிலங்களை விடுவியுங்கள், விகாரைகள் அமைப்பதை நிறுத்துங்கள், எங்கள் பிரசனைகளை தீர்த்து சரிசமமாக நடத்துங்கள், அதுவரை உதவி என்கிற வார்த்தைக்கே இடமில்லை, தமிழர் என்ன கேணையர் என்று நினைத்தீர்களா? எங்கள் மக்களுக்கு வந்த, எமது உறவுகளின் உணவு கப்பலை திருப்பி அனுப்பும்போது இவரும் பாராளுமன்றில் வீற்றிருந்தார்தானே! ஏன் அதற்க்கு எதிராக குரல் கொடுக்கவில்லை? தமிழர் அழிவில் அவ்வளவு மகிழ்ச்சி அப்போது, இப்போது உதவி வேண்டும் அவர்களிடமிருந்து. நாக்கை பிடுங்கிறமாதிரி கேள்வி கேட்கவேண்டும் புலம்பெயர்ந்த தமிழர். அப்பாவாவது புத்தி வருமா என்று பாப்போம். பிரச்சனை தீர்ந்தவுடன் பழையபடி இனவாத குரங்கு மரத்துக்கு மேல தாவும், உப்பிடி எத்தினை அனுபவங்களை கண்டவர்கள் நாங்கள். விழுந்த நேரமெல்லாம் உயர்த்திவிட்டு, இன்றுவரை சிங்களவரை கோபப்படுத்தக்கூடாது, அவர்கள் விரும்பாத தீர்வு எங்களுக்கு வேண்டாம் என்று அடம்பிடிக்கும் எமது தலைமை, இருந்தும்  வாழவிடுவதில்லை என்கிற பிடிவாதம் பிடித்தவர்களுக்கு உதவுவதால் அது நமக்கே ஆப்பாக மாறும்.     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.