Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

21வது திருத்தச் சட்டம் – ஜனாதிபதி... அமைச்சுக்களை வகிக்க முடியாது, உள்ளிட்ட 5 யோசனைகளை முன்வைத்தது எதிர்க்கட்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோரிக்கை – நிராகரித்தார் சஜித் !!

21வது திருத்தச் சட்டம் – ஜனாதிபதி... அமைச்சுக்களை வகிக்க முடியாது, உள்ளிட்ட 5 யோசனைகளை முன்வைத்தது எதிர்க்கட்சி!

நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து யோசனைகளை சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, குறித்த யோசனைகள் பின்வருமாறு…
  1. ஜனாதிபதி அமைச்சுக்களை வகிக்க முடியாது என்ற 19வது திருத்தத்தின் விதிகளை அரசியலமைப்பில் இணைத்தல்.
  2. சட்ட சபையின் பரிந்துரையின் பேரில் மத்திய வங்கியின் ஆளுநருக்கு மேலதிகமாக நாணயச் சபையின் ஏனைய உறுப்பினர்களை நியமித்தல்.
  3. தேசிய முன்னுரிமைகள் மற்றும் மதிப்பீட்டு ஆணையத்தை ஒரு சுயாதீன ஆணையமாக நியமித்து அதன் உறுப்பினர்களை சட்ட மேலவையின் பரிந்துரையின்படி நியமித்தல்.
  4. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆளுங் கட்சியின் அனைத்து அலுவலகப் பணியாளர்களும் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவதைக் கட்டாயமாக்குதல். அவ்வாறு செய்யத் தவறினால் கடுமையான தண்டனைகளுக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்குதல்.
  5. திருடப்பட்ட சொத்துக்களை மீளப் பெறுவதில் இலங்கை அரசாங்கம் ஒரு தரப்பினராக இருந்து, சர்வதேச உடன்படிக்கைகளை அங்கீகரிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்குதல்.

https://athavannews.com/2022/1284650

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு அரசுக்கான ஐந்து அறிவுரைகள் - திருக்குறள் 
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

பொருள்
அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களைக் கொண்டதே சிறந்த அரசாகும். 

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

பொருள்
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

பொருள்
நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

பொருள்
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

பொருள்
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

13 இருக்கும்வரை சிங்களம் மாறாது...அதுதான் பெரிய மொட்டையள்  சொல்லிட்டினம்...கோட்டாவின் அதிகாரம் குறைக்க முடியாது என்று...இனவாதம் பட்டினி கிடந்த்தாலும் மாறாது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

21வது திருத்தம் தொடர்பாக சுயாதீனக் கட்சிகளின் தீர்மானம் இன்று பிரதமரிடம் கையளிப்பு!

21வது திருத்தம் தொடர்பாக... சுயாதீனக் கட்சிகளின் தீர்மானம், இன்று பிரதமரிடம் கையளிப்பு!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக 10 சுயாதீனக் கட்சிகள் இணைந்து தயாரித்த தீர்மானம் இன்று (புதன்கிழமை) பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதன் தலைவர்கள் நேற்று பிற்பகல் கூடி அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தமது 10 கட்சிகளின் இறுதி உடன்பாடு குறித்து கலந்துரையாடினர்.

சகலரும் இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதுடன், அதற்கேற்ப பிரேரணைகளை பிரதமரிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, “நாங்கள் எங்கள் இறுதி திட்டத்தை தயாரித்துள்ளோம். எங்களின் முன்மொழிவை பிரதமரிடம் சமர்ப்பிப்போம் என நம்புகிறோம்.

தற்போது 21வது திருத்தம் மட்டும் தலைப்பாக இல்லை. இன்று இன்னும் எரியும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த நாடு தற்போது பஞ்சத்தில் உள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்திலேயே நாம் இன்னும் இருக்கிறோம். நடுவில் தான் இதன் ஆழத்தையும் தீவிரத்தையும் உணர்வோம்.

எனவே நாங்கள் ஒரு பெரிய திட்டத்திற்கு செல்லலாமா என்று விவாதித்தோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1284800

  • கருத்துக்கள உறவுகள்

21 ஆவது திருத்த இறுதி வரைபு தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் - அரசாங்கம்

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் (2) வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது. 

இதன் பின்னர் 21 ஆவது திருத்த சட்ட வரைபு திருத்தங்களை உள்வாங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் மே 27 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

இதன் போது அனைத்து கட்சிகளுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதோடு , பல திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்த கலந்துரையாடலில் இணக்கப்பாடொன்று எட்டப்படாத நிலையில் இம்மாதம் 3 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பங்குபற்றலுடன் மீண்டுமொரு கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் 21 இல் காணப்படும் சில உள்ளடக்கங்கள் தொடர்பில் பல கட்சிகளாலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் ஐக்கிய மக்கள் சக்தியினால் மேலும் சில திருத்தங்களும் நீதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இவ்வாறு இத்திருத்தம் தொடர்பில் கட்சிகளுக்கிடையில் தெளிவற்ற நிலைமையும் , இணக்கப்பாடற்ற நிலைமையும் காணப்படுகின்ற நிலையில் , நாளை நிதி அமைச்சர் இது குறித்த தெளிவுபடுத்தல்களை வழங்குவார் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில் பல்வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. 

எவ்வாறிருப்பினும் இத்திருத்தத்தில் உள்ள சில உள்ளடக்கங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலைமையே காணப்படுகிறது. 

எனவே இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக சகல கட்சி உறுப்பினர்களுக்கும் வியாழனன்று நீதி அமைச்சரினால் நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது முன்வைக்கப்படும் முக்கிய யோசனைகளை 21 ஆம் திருத்தச் சட்டத்தில் உள்வாங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். 

அதனையடுத்து அதனை இறுதி செய்வது குறித்த விசேட கலந்துரையாடலும் இடம்பெறும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இவ்வாரத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு , அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்படும் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/128553

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேளையிலாவது தமிழரையும் இணைத்து அரவணைத்து நாட்டை முன்னேற்ற மனம் வரவில்லை, ஆனால் பண வரவு மட்டும் வேண்டும். நாடு இன்னும் கீழ்நிலைக்கே போனாலும் தமிழரை தலைநிமிர விடுவதில்லை என்று அடம் பிடிக்குதுகள். பவுத்தமும் சேர்ந்து நாட்டிலிருந்து அடித்துச் செல்லப்படப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

இந்த வேளையிலாவது தமிழரையும் இணைத்து அரவணைத்து நாட்டை முன்னேற்ற மனம் வரவில்லை, ஆனால் பண வரவு மட்டும் வேண்டும். நாடு இன்னும் கீழ்நிலைக்கே போனாலும் தமிழரை தலைநிமிர விடுவதில்லை என்று அடம் பிடிக்குதுகள். பவுத்தமும் சேர்ந்து நாட்டிலிருந்து அடித்துச் செல்லப்படப்போகுது.

 

17 hours ago, alvayan said:

13 இருக்கும்வரை சிங்களம் மாறாது...அதுதான் பெரிய மொட்டையள்  சொல்லிட்டினம்...கோட்டாவின் அதிகாரம் குறைக்க முடியாது என்று...இனவாதம் பட்டினி கிடந்த்தாலும் மாறாது...

கெடு குடி  சொல்  கேளாது
இந்த நாடு உருப்படப்போவதே  இல்லை

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.