Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பரந்தன் பூநகரி வீதி அரசியல்வாதிகளின் சட்டைப் பையுக்குள் சென்றுவிட்டது” - அனுரகுமார திசாநாயக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“பரந்தன் பூநகரி வீதி அரசியல்வாதிகளின் சட்டைப் பையுக்குள் சென்றுவிட்டது”

June 26, 2022

spacer.png

வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் சட்டைப்பைக்குள் காணப்படுகின்றது. இதுதான் இலங்கையின் அபிவிருத்தி என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க,

“பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம் இருக்கும். ஆனால் சில வருடங்களிலேயே அந்த வீதியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் சட்டைப்பைபக்குள் காணப்படுகின்றது. இதுதான் இலங்கையின் அபிவிருத்தி.

விமானம் ஓடாத விமான நிலையம், கப்பல்கள் வராத துறைமுகம், கிரிக்கெட் விளையாடாத மைதானம், கூட்டங்கள் இடம்பெறாத மண்டபங்கள் என்பனவே தற்போது காணப்படுகிறது.

இது மக்களுக்கான அபிவிருத்தி அல்ல. இது ஊழல்வாதிகள் கொள்ளை அடிப்பதற்கான வழி. தற்போது எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம் ஊழலும் துஷ்பிரயோகமுமே எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

https://globaltamilnews.net/2022/177819

 

 

Edited by கிருபன்

  • கிருபன் changed the title to “பரந்தன் பூநகரி வீதி அரசியல்வாதிகளின் சட்டைப் பையுக்குள் சென்றுவிட்டது” - அனுரகுமார திசாநாயக்க
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கொள்ளை அடிக்கும் போது கூடவே இவையும் அரசியலில் இருந்தவை தானே. ஏன் அதைத் தடுக்கேல்ல. தலையாட்டிக்கிட்டு தானே இருந்தவை. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

தற்போது எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம் ஊழலும் துஷ்பிரயோகமுமே எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவறியும், தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி, அவர்களை அடக்கியொடுக்க பெற்ற கடனே, இந்த நிலைக்கு காரணம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தன் பூநகரி வீதி B357, மாங்குளம் வெள்ளாங்குளம் வீதி B269 இரண்டும் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில முக்கொம்பான் வீதி சொல்த் தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஏராளன் said:

பரந்தன் பூநகரி வீதி B357, மாங்குளம் வெள்ளாங்குளம் வீதி B269 இரண்டும் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

2 hours ago, சுவைப்பிரியன் said:

இதில முக்கொம்பான் வீதி சொல்த் தேவையில்லை.

சிங்கள பகுதிகளில் வீதிகள்/அபிவிருத்திகள் எப்படியுள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

பரந்தன் பூநகரி வீதி B357, மாங்குளம் வெள்ளாங்குளம் வீதி B269 இரண்டும் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

இந்தப் பகுதி வீதிகள் சேதமாவதற்கு Mகப் பிரதானமான காரணம் சட்டவிரோத மண் அகழ்வே. அதீத பாரம் காரணமாக வீதிகள் மிக வேகமாகச் சேதமடைந்துவிட்டன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.