Jump to content

போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரிஷி சுனக்

பட மூலாதாரம்,REUTERS

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இனி கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், இறுதி செய்யப்பட்ட இரண்டு வேட்பாளர்கள் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடுவர். அவர்களிலிருந்து ஒரு தலைவர் உருவாவார். ஆனால், யார் அந்த இருவர்?

ரிஷி சுனக்

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இவர் ஆவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு என்று முன்பே சொல்லப்பட்டது.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு, ஊரடங்கு விதிகளை மீறியதற்காக இவர் அபராதம் செலுத்தினார். அதற்கு முன்னதாக, இவரது மனைவியின் வரி விவகாரங்கள் தொடர்பான பிரச்னைகளும் எழுந்ததையடுத்து இவரது நன்மதிப்பு குறைந்தது.

நார்த் யோர்க்-ஷைர் தொகுதியிலிருந்து 2015ஆம் ஆண்டுதான் இவர், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். அதற்கு முன்னதாக பொது வருவாயை கையாளும் அரசாங்க கருவூல அதிகாரியாகவும் இவர் பணியாற்றினார். மேலும், கொரோனா தொற்று பொதுமுடக்க காலத்தில் ஆற்றிய பணிகளால் இவர் பிரபலமானார்.

பிரிட்டன் அமைச்சர் சஜித் ஜாவித்துடன் இணைந்து, தானும் பதவி விலகிய இவரது முடிவைத் தொடர்ந்தே மற்ற அமைச்சர்களின் பதவி விலகலும் நடந்தது அதன் விளைவாகவே தற்போது போரிஸ் ஜான்சன் பதவி விலகலை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்.

லீஸ் ட்ரஸ்

 

லீஸ் ட்ரஸ்

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

லீஸ் ட்ரஸ்

போரிஸ் ஜான்சனின் சுகாதாரச் செயலர் வெளியேறிய சமயத்தில், போரிஸுக்கு தன்ஆதரவை அளித்ததன் மூலம் கட்சி விசுவாசிகளிடையே தன் நிலையை உயர்த்திக்கொண்டவர் லீஸ் ட்ரஸ்.

பிரிட்டனின் வெளியுறவு அலுவலகத்துக்கு தலைமை தாங்கிய இரண்டாவது பெண்மணியான இவர், பிரிட்டிஷ்-இரானிய எழுத்தாளர் `நசானின் ஜகாரி-ராட்க்ளிஃப்` இன் விடுதலைக்காகவும், ரஷ்யா மீது விதித்த தடைகளுக்காகவும் பெரிதும் புகழ் பெற்றவர்.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக, சௌத் வெஸ்ட் நார்ஃபோக் தொகுதியிலிருந்து இவர் தேர்வானார். பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பாக இவர் வெளியிடும் சுதந்திரமான கருத்துகளுக்காக கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே பிரபலமாக அறியப்படுகிறார்.

சஜித் ஜாவித்

 

சஜித் ஜாவித்

பட மூலாதாரம்,REUTERS

ப்ராம்ஸ்க்ரோவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர்தான், போரிஸ் ஜான்சனுக்கு எதிராக முதலில் அடியெடுத்து வைத்தவர். ஒருமைப்பாட்டுக்கான அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்த இவர், தனது பதவி விலகலின்போது, "பிரச்னை மேலிடத்தில் இருந்து தொடங்குகிறது" என்று பேசியிருந்தார்.

2019ஆம் ஆண்டு தலைமைப் பொறுப்புக்காக முன்னிறுத்தப்பட்ட இவர், அப்போது நான்காம் இடத்தை பெற்றிருந்தார்.

நாட்டில் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் தேசிய கடன்கள் குறித்தும் இவர் தொடர்ந்து எச்சரித்து வந்தார்.

பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முதல் தலைமுறை குடும்பத்தில் பிறந்த சஜித் ஜாவித்தின் தந்தை பேருந்து நடத்துநராக இருந்தவர். இப்படியான எளிய பின்னணியில் இருந்து வந்த இவர், 2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகும் முன்பு ஒரு வெற்றிகரமான தொழில் வாழ்வைக் கொண்டவராகவும் இருந்தார்.

ஜெர்மி ஹண்ட்

 

ஜெர்மி ஹண்ட்

பட மூலாதாரம்,UK PARLIAMENT

2019ஆம் ஆண்டு நடந்த தலைவர் தேர்தலின்போது, போரிஸ் ஜான்சனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். முன்னாள் வெளியுறவு செயலாராகவும் இருந்த இவருக்கு வெஸ்ட்மின்ஸ்டரில் இருந்த செல்வாக்கு அப்படியே நீடிக்கிறது.

(வெஸ்ட்மின்ஸ்டர்: பிரிட்டன் நாடாளுமன்றத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் சொல்)

கொரோனா பொது முடக்கத்தின்போது, பொது சுகதாரக் குழு ஒன்றின் தலைமையாக இருந்த இவர், அரசின் கொள்கைகளையே விமர்சித்தார்.

ஒரு அட்மிரலின் மகனான இவர், ஹாட்கோர்ஸ் என்ற இணையதளத்தையும் நடத்தி வந்தார். இது மாணவர்களையும் கல்வி நிறுவனங்களையும் இணைக்கும் விதமான இணையதளமாகும்.

2005ஆம் ஆண்டு முதல், சௌத் வெஸ்ட் சர்ரே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் இவர், 2010அம் ஆண்டு அரசின் கலாசார செயலராகவும் சுகாதரத்துறையின் தலைமையாகவும் இருந்தார்.

மைக்கேல் கோவ்

 

மைக்கேல் கோவ்

பட மூலாதாரம்,PA MEDIA

2019ஆம் ஆண்டு நடந்த தலைவர் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தவர் இவர். ஆனால், ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பை முன்னிட்டு 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தலைமைக்கான தேர்தலின்போது அதிமுக்கியத்துவம் வாய்ந்தவராக இவர் பார்க்கப்பட்டார்.

போரிஸ் ஜான்சனுக்கான தனது ஆதரவை விலக்கிக்கொண்ட போது, "ஜான்சனால் தலைமைத்துவத்தை தர முடியாது" என்றும் "எதிரே உள்ள சவால்களுக்கான குழுவை அமைக்க முடியாது" என்றும் பேசியவர் இவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிபிசியின் முன்னாள் செய்தியாளர் மற்றும் டைம்ஸ் நாளிதழின் கட்டுரையாளரான இவர், அமைச்சரவையின் நீண்ட-கால உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு கல்வி செயலராக பொறுப்பேற்ற இவர், அதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் செயலாகவும் நீதி செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

நாடிம் ஸகாவி

 

நாடிம் ஸகாவி

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

நாடிம் ஸகாவி

கொரோனா பேரிடர்க்காலத்தில் தடுப்பூசிகள் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டபோது தான் ஆற்றிய பணிகளால், தன் செல்வாக்கை பெருக்கிக்கொண்டவர்.

"நான் இதுவரை செய்ததிலேயே மிக முக்கியமான பணி இது" என்று அப்போது பேசினார். அதன் மூலம், அடுத்த கேபினட்டில் கல்வி செயலராக பதவி உயர்வும் பெற்றார்.

அதைத்தொடர்ந்து, ரிஷி சுனக் ராஜிநாமாவுக்குப் பின் கருவூல பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு பிறகு, தானும் போய் வருவதாக, போரிஸ் ஜான்சனிடம் விடை கூறிவிட்டு புறப்பட்டு விட்டார்.

1967ஆம் ஆண்டு இராக்கில் பிறந்த ஸகாவியின் குடும்பம், சதாம் உசேன் ஆட்சி அமைத்தபோது, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்

வேதிப்பொறியியல் படித்த இவர், யூ கவ் (YouGov) என்ற ஆன்லைன் வாக்கெடுப்பு நிறுவனத்தின் மூலம் சம்பாதித்து வந்தார். முன்னதாக இவர் பொம்மை வியாபாரமும் செய்து வந்தார்.

பென்னி மோர்டண்ட்

 

பென்னி மோர்டண்ட்

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

பென்னி மோர்டண்ட்

மேஜிக் ஷோக்கள் நடத்தும் ஒரு வித்தைக்காரரின் உதவியாளராக இருந்த இவர், அசாதரணமானவற்றை நிகழ்த்திக் காட்டுவதில் சிறந்தவர் என்று பெயர் பெற்றவர்.

ஏற்கனவே அப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தியும் காட்டியுள்ளார் பென்னி. அதாவதும் 2019ஆம் ஆண்டு பிரிட்டனின் முதல் பெண் பாதுகாப்பு செயலராக பொறுப்பேற்றார்.

வெஸ்ட்மின்ஸ்டருக்கு வெளியே, இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். போர்ட்ஸ்மௌத் தொகுதியின் உறுப்பினரான இவர், கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் இளைஞரணித் தலைவராகவும் இருந்தவர்.

டாம் டுகெந்தாட்

 

டாம் டுகெந்தாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போரிஸ் ஜான்சனின் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியை உடையவர் இவர்.

இனிவரும் காலங்களில், கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆற்றல்மிக்க தலைவராக இவர் இருப்பார் என்று, இவர் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரான சமயம் முதலே பேசப்பட்டு வந்தது.

நீங்கள் பிரதமர் ஆக விரும்புகிறீர்களா என்று 2017ஆம் ஆண்டு இவரிடம் கேட்கப்பட்டபோது, "கண்டிப்பாக, டிக்கட்டை வாங்க முடிந்த என்னால், ஏன் லாட்டரியை வெல்ல நான் நினைக்கக் கூடாது? என்று பதிலளித்தார்.

பென் வாலேஸ்

 

பென் வாலேஸ்

பட மூலாதாரம்,PA MEDIA

யுக்ரேனில் நடந்த ரஷ்ய படையெடுப்பின்போது பிரிட்டன் கீயவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எடுக்கப்பட்ட விரைவான முடிவின் பின்னணியில் இருந்ததால் வெகுவாக கவனம் பெற்றவர் இவர். பாதுகாப்பு செயலரான இவர், முன்னாள் ராணுவ வீரராகவும் இருந்தார்.

கெர்மனி, சைப்ரிஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றிய இவர், பிரிட்டிஷ் வீரர்களுக்கு எதிரான அயர்லாந்து குடியரசு ராணுவத்தின் வெடிகுண்டு முயற்சியை முறியடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளவரசி டயானாவின் உடலை பாரிஸிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட முக்கியமான ராணுவ வீரரும் இவர் ஆவார்.

https://www.bbc.com/tamil/global-62082305

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவ் போட்டியில் இல்லை என அறிவித்து விட்டார். சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்சனின் பதவி விலகலை வைச்சு ஜோன்சனை.. ரஷ்சியா எள்ளிநகையாடியுள்ளது. ஜோன்சன் குடியும் குட்டியுமா இருந்தது தான் மிச்சம். மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய தவறிவிட்டார் என்பது தான் பொதுக்கருத்து. ஆனாலும் எனி வருபவர்கள் தொடர்பிலும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

பிளேயரின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் இருந்து.. பிரித்தானியாவின் ஒரு பிரதமரும் முழுசா தங்கள் பதவிக் காலத்தை அனுபவிக்கவில்லை. 

ஈழத்தில் தமிழ் மக்களின் தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் மீது தடை கொண்டு வந்த லேபர் கட்சி பிளேயரின் ராசி அப்படி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரிஸ் ஜான்சன் தனக்கு தலைமைத்துவ போட்டி வரக்கூடாதென்று எடுத்திருக்கக்கூடிய ஒரு முடிவாயினும், பிரிட்டிஷ் வரலாறில், போரிஸ் ஆசிய வம்சாவளிகளுக்கு மிக அதிகமாக அமைச்சரவையில் இடம் கொடுத்து இருந்தார் என்பது உண்மையே.

ஆனாலும், அவரை பதவியில் இருந்து இறக்க, இரு ஆசிய வம்சாவளி அமைச்சர்களின் ராஜினாமாவே காரணமாக இருந்தது என்பதும் உண்மை.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

போரிஸ் ஜான்சன் தனக்கு தலைமைத்துவ போட்டி வரக்கூடாதென்று எடுத்திருக்கக்கூடிய ஒரு முடிவாயினும், பிரிட்டிஷ் வரலாறில், போரிஸ் ஆசிய வம்சாவளிகளுக்கு மிக அதிகமாக அமைச்சரவையில் இடம் கொடுத்து இருந்தார் என்பது உண்மையே.

ஆனாலும், அவரை பதவியில் இருந்து இறக்க, இரு ஆசிய வம்சாவளி அமைச்சர்களின் ராஜினாமாவே காரணமாக இருந்தது என்பதும் உண்மை.

என்னப்பா போற போக்கை பாத்தால்  கிரேட் பிரிட்டன்  லிட்டில் இன்டியா வாக மாறீடும் போல கிடக்கு :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா போற போக்கை பாத்தால்  கிரேட் பிரிட்டன்  லிட்டில் இன்டியா வாக மாறீடும் போல கிடக்கு :cool:

இவர் பிரெக்ஸிட் பத்தி முறுக்கிக் கொண்டு திரிஞ்ச ஆள்.

அவரையே வைத்து, பிரெக்ஸிட் அலுவல் முடிந்தவுடன், ஆளை கிளப்பி விடுவார்கள் என்று போரிஸ் வரும் போதே நான், இங்கே சொல்லி இருந்தேன்.

தட்சரையே கிளப்பி அனுப்பிய பழமைவாத கட்சி இவரை அனுப்ப வேண்டிய நேரத்தில் அனுப்பும் என்றும் சொல்லி இருந்தேன்.

ஆகவே வியப்பு இல்லை.

நம்ம நாடு போல, இவர்கள், ஒருவரை நம்பி இருப்பதில்லை.

சரிவராதா ?.... ஆளை தூக்கு கதை தான்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா போற போக்கை பாத்தால்  கிரேட் பிரிட்டன்  லிட்டில் இன்டியா வாக மாறீடும் போல கிடக்கு :cool:

இவர்களின் அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. 

ஆனால் இது ஒரு நல்ல விடயம்தானே. நாதம் சொன்னது போல் இவர்கள் முன்னுக்கு வர பல காரணங்கள் இருப்பினும் - வர முடியுமான இடைவெளி இருந்தது என்பதே பழமைவாத கட்டிசியிற்கு பெருமைதான்.

ஆனால் அதே கட்சியில் இவர்கள் இருக்கும் போதுதான், சம காலத்தில்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுபான்மையை ஒதுக்கும் சட்டங்கள் வந்தது என்பதும் உண்மையே.

மறுவழமாக ஒப்பீட்டளவில் தொழிற்கட்சியில் இன்னும் வெள்ளையினத்தவர் அதிகாரமே அதிகம். ஆட்கள் இல்லாமல் இல்லை, லீசா நந்தி, தங்கம் டெபனார் (தந்தை இலங்கை தமிழ்) இன்னும் சில அரை ஆசிய முகங்கள் இருந்தாலும், முழு ஆசியர்கள் முக்கியமான பதவிகளில் இல்லை.

சுனாக் (டாக்டரின் மகன்), ஜாவித் (பஸ் ஓட்டுனர்/ கடைக்காரர் மகன்), பட்டேல் (கடைகாரர்/ அகதியின் மகள்), ஷகாவி (11 வயதில் நாட்டுக்கு வந்த அகதி) இவர்கள் அரசின்  முன்வரிசையில் இருக்கும் நிலை, பிரித்தானியாவை தவிர வேறு எந்த மேற்கு நாட்டிலாவது நடக்குமா?

நீங்கள் அடிக்கடி ஏன் ஜெர்மனியை விட்டு தமிழர்கள் லண்டன், லண்டன் என ஓடுகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி இதில் உள்ளது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

சுனாக் (டாக்டரின் மகன்), ஜாவித் (பஸ் ஓட்டுனர்/ கடைக்காரர் மகன்), பட்டேல் (கடைகாரர்/ அகதியின் மகள்), ஷகாவி (11 வயதில் நாட்டுக்கு வந்த அகதி) இவர்கள் அரசின்  முன்வரிசையில் இருக்கும் நிலை, பிரித்தானியாவை தவிர வேறு எந்த மேற்கு நாட்டிலாவது நடக்குமா?

 ஒவ்வொரு நாடுகளின் வரலாறுகளும் வேறுபட்டது. ஆசியா ஆபிரிக்காவை கட்டியாண்டவர்களுக்கு வேற்றினத்தவர்களை உள்வாங்குவதில் பிரச்சனை இல்லை. இருந்தாலும் பிரான்ஸ் இல் இப்படி இருக்கா என தெரியவில்லை. ஆனால் ஜேர்மனியிலும் தற்போது வேற்றினத்தவர்களும் அரசியலுக்குள் நுழைகின்றார்கள். துருக்கியர்கள் அதிகமாக நுழைந்து விட்டனர். ஈரானிய அகதியொருவர் பசுமைக்கட்சியில் ஒரு தலைவராக உள்ளார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

 ஒவ்வொரு நாடுகளின் வரலாறுகளும் வேறுபட்டது. ஆசியா ஆபிரிக்காவை கட்டியாண்டவர்களுக்கு வேற்றினத்தவர்களை உள்வாங்குவதில் பிரச்சனை இல்லை. இருந்தாலும் பிரான்ஸ் இல் இப்படி இருக்கா என தெரியவில்லை. ஆனால் ஜேர்மனியிலும் தற்போது வேற்றினத்தவர்களும் அரசியலுக்குள் நுழைகின்றார்கள். துருக்கியர்கள் அதிகமாக நுழைந்து விட்டனர். ஈரானிய அகதியொருவர் பசுமைக்கட்சியில் ஒரு தலைவராக உள்ளார்.

உண்மைதான். ஒவ்வொரு நாட்டின் அணுகுமுறையும் வேறுதான். 

இங்கே நூறு வருடங்களுக்கு முன்பே டிஸ்ரேலி என்ற யூதர் பிரதமராக இருந்துள்ளார். காரணம் அப்போதே வெளிநாட்டார் பிரசன்னம் இங்கே பெரிய விடயமல்ல (ஆனால் ஒதுக்கல் இருந்தது).

பிரான்சிலும் 80களில் ஒரு யூதர் ஜனாதிபதியாக அல்ல ஆனால் பிரதமராக இருந்துள்ளார் என விசுகு அண்ணை முன்னர் கூறியவர்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐக்கிய இராச்சியத்தில் கூட பிறக்கவில்லை.

அவர் நியூயார்க் நகரில் பிறந்தார் மற்றும் அவரது வாழ்க்கையின் முதல் சில மாதங்கள் அங்கு வாழ்ந்தார். 

அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் களமிறங்கலாம்.

உண்மையில், அவர் 40 ஆண்டுகளாக அமெரிக்க குடியுரிமையை வைத்திருந்தார், அவர் பிரிட்டிஷ் கருவூலத்திற்கு வரி செலுத்த வேண்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அமெரிக்க குடியுரிமையை நிராகரித்தார்.

காமன்வெல்த் எல்லைக்கு வெளியே பிறந்த ஒரே பிரதமர் ஜான்சன் மட்டுமே.

இங்கிலாந்துக்கு வெளியே பிறந்த ஒரே பிரதமர் ஆண்ட்ரூ போனார் லா, கனடாவில் பிறந்தவர்.

மேலும், போரிஸ் ஜான்சனின் தாத்தா அலி கெமல், 1922 இல் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஒட்டோமான் பேரரசில் அரசாங்க அதிகாரியாக இருந்தார்.

சுவாரஸ்யமானது, இல்லையா?

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

உண்மைதான். ஒவ்வொரு நாட்டின் அணுகுமுறையும் வேறுதான். 

இங்கே நூறு வருடங்களுக்கு முன்பே டிஸ்ரேலி என்ற யூதர் பிரதமராக இருந்துள்ளார். காரணம் அப்போதே வெளிநாட்டார் பிரசன்னம் இங்கே பெரிய விடயமல்ல (ஆனால் ஒதுக்கல் இருந்தது).

பிரான்சிலும் 80களில் ஒரு யூதர் ஜனாதிபதியாக அல்ல ஆனால் பிரதமராக இருந்துள்ளார் என விசுகு அண்ணை முன்னர் கூறியவர்.

முன்னரெல்லாம் ஜேர்மனிய உதைபந்தாட்ட குழுக்களில் கறுப்பினத்தவரை மருந்திற்கும் காணமுடியாது. இன்று நிலை மாறி நாட்டின் தேசிய விளையாட்டு குழுக்களிலேயே கறுப்பினத்தவரின் பங்கும் ஆதிக்கமும் கூடிக்கொண்டு வருகின்றது.

இதற்குள் சிலோன் ரமில்ஸ்????????..... அவையளைப்பற்றி வாயே திறக்க மாட்டன்.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

முன்னரெல்லாம் ஜேர்மனிய உதைபந்தாட்ட குழுக்களில் கறுப்பினத்தவரை மருந்திற்கும் காணமுடியாது. இன்று நிலை மாறி நாட்டின் தேசிய விளையாட்டு குழுக்களிலேயே கறுப்பினத்தவரின் பங்கும் ஆதிக்கமும் கூடிக்கொண்டு வருகின்றது.

இதற்குள் சிலோன் ரமில்ஸ்????????..... அவையளைப்பற்றி வாயே திறக்க மாட்டன்.😷

காலமாற்றம் என்ற காட்டாறு அதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஜேர்மனியும் மாறும். 

இங்கேயும் எமது மக்கள் அரசியல் என்பது வெறும் நாட்டு விடயங்களை முன் நிறுத்துவது என்பதோடு நிற்கிறது. அடுத்த தலைமுறையை கூட அரசியலில் காண்பது அபூர்வம்.

இந்த நிலை மாற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

என்னப்பா போற போக்கை பாத்தால்  கிரேட் பிரிட்டன்  லிட்டில் இன்டியா வாக மாறீடும் போல கிடக்கு :cool:

அவர்கள் ஆசைப்படலாம்.. ஆனால் ஆட்சிக்கு வர முடியாது. அதற்குள் வெளியேற்றிவிடுவார்கள்.. வெள்ளையர்கள். பிரித்தானிய வெள்ளையர்கள் பலே கில்லாடிகள்.. தங்களின் தேவையை இப்படியான பதவி ஆசைக்கார தெற்காசியக்காரர்களை வைச்சே சாதித்திடுவார்கள். 

How the Conservative Party elects a new leader (short)

இந்த தடைதாண்டல் போட்டியில்.. இவையை சரியான இடத்தில் வைச்சு தட்டிடுவாங்கள். 

Edited by nedukkalapoovan
  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
    • கல்முனை பகுதியில் பதற்ற நிலை; போக்குவரத்து பாதிப்பு; 7 மணித்தியாலங்களாக போராட்டகாரர் வசமான நகரம் Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 03:54 PM   கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை (24) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது. அத்துடன், பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில்  அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும்  அதற்கான உரிய தீர்வு கோரியும்  தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்  இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால்  வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு பொலிஸார்  நடவடிக்கை எடுத்திருந்தனர். இதே வேளை 7 மணித்தியாலங்களாக  கல்முனை நகர் போராட்டக்காரர் வசம் இருந்த நிலையில் கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு  மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 8.00 மணிமுதல் பி.ப 2 மணி வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன், நகரில் இருந்து அனைத்து பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது. மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன. அத்துடன், தமது நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன?  என பல  கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர். பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் பொலிஸாரின் மத்தியஸ்த்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எட்டுப் பேர் மாவட்ட செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.  அதுவரை வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வழமை போன்று கல்முனை வடக்கு பிரதேச   செயலகம் முன்பாக சுழச்சிமுறை போராட்டம் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வழமைக்கு மாறாக இன்று பாரிய விமானம் ஒன்று பெரும் இரைச்சலுடன் ஆகாயத்தில் வட்டமடித்த வண்ணம் இருந்ததையும் காண முடிந்தது. https://www.virakesari.lk/article/186845
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.