Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்த, பசில் நாட்டிலிருந்து வெளியேற இடைக்கால தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த, பசில் நாட்டிலிருந்து வெளியேற இடைக்கால தடை-

( எம்.எப்.எம்.பஸீர்)

 

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர்,  வௌிநாடு செல்ல உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில், அவ்விருவரும் உயர் நீதிமன்றின் அனுமதியில்லாமல் வெளிநாடு செல்ல முடியாது என இதன்போது உயர் நீதிமன்றம் அறிவித்தது.

நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், சட்டத்தரணி உபேந்ர குணசேகர உள்ளிட்ட இருவரின்  நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய இன்று ( 15) ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் பரிசீலணைக்கு வந்தது.

நேற்று ( 14) இம்மனுக்கள் இடைக்கால நிவாரணம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட நிலையிலேயே, அதன் தொடர்ச்சியாக இவ்வாறு  நேற்றும் பரிசீலிக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும்  எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு  பி.ப. 1.45 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சுமார் இரண்டரை மணி நேரம் வரை  நேற்றைய தினம் பரிசீலனைகள் நீடித்தன.

மூன்று பல்கலைக்கழக புத்திஜீவிகள், இலங்கையைச்சேர்ந்த நீச்சல் வீரரும் பயிற்றுவிப்பாளருமான ஜுலியன் பொல்லிங், இலங்கை வர்த்தகப்பேரவையின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு மற்றும் ஜெஹான் கனக ரத்ன ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சீரற்ற நிதி நிர்வாகம் ஆகியவற்றுக்கான முக்கிய பொறுப்பாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அம்மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

 மேற்குறிப்பிட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த கலாநிதி அத்துலசிறி குமார சமரகோன், புத்திஜீவிகளான சூசையப்பு நேவிஸ் மொறாயஸ் மற்றும் கலாநிதி மஹிம் மென்டிஸ் ஆகியோர் தமது மனுக்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் டபிள்யூ.டி.லக்ஷ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட 39 பேரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டுள்ளனர்.

  கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக  பதவியேற்றதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரிக்குறைப்புக்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்குப் பிரதான காரணமென மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மக்களால் செலுத்தப்படும் வரிகளைக் குறைப்பதற்குத் தன்னிச்சையான தீர்மானத்தை மேற்கொண்டார் என்றும், இத்தீர்மானம் முற்றுமுழுதாக அரசியல் ரீதியான நகர்வென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறானதொரு பின்னணியில் கணக்காய்வாளர் நாயகம் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் கொடுக்கல், வாங்கல்களைக் கணக்காய்விற்கு உட்படுத்தி மத்திய வங்கிக்கு ஏற்பட்டிருக்கும் நட்டத்தை மதிப்பீடு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நேற்றும், இன்றும் மனுவானது இடைக்கால நிவாரணமாக கோரப்பட்ட, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.  ஆட்டிகல  ஆகியோர் உயர்  நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து உத்தரவிட வேண்டும் என்பதை பரிசீலிக்க விசாரணைக்கு வந்தது.

 இதன்போது மனுதாரர் தரப்பின் ஜனாதிபதி சட்டத்தரணி  சந்தக ஜயசுந்தர, வெளிநாட்டு பயணத் தடை கோரிக்கையை முன்னிறுத்தீ சுமார் ஒன்றரை மணி நேர வாதங்களை நேற்று முன் தினம்  முன் வைத்தார். அவரது வாதங்கள் நேற்றும் தொடர்ந்தன.

மனுதாரர்கள் சார்பில் இன்று( 15) தொடர்ந்தும் வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி  சந்தக ஜயசுந்தர,  2020 ஆம் ஆண்டின் பின்னர் நாடு  வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது தொடர்பில் பாரிய நெருக்கடிகளை சந்தித்ததாக சுட்டிக்காட்டினார்.

' கனம் நீதியரசர்களே,  நாட்டில் டொலர் தட்டுப்பாடு நிலவுவதாக  குறிப்பிடப்பட்ட போது  அதனை ஏளனம் செய்து அவ்வாறான நெருக்கடி நிலைமை ஒன்று இல்லை என  பிரதிவாதிகள் குறிப்பிட்டனர்.  தற்போதைய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய  எந்த  திட்டமிடலும் இல்லாத வரிச் சலுகைகளால்  இவ்வாறான நிலைமை ஒன்று உருவானது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே, தான் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு அளிக்கப் போகும் வரிச் சலுகைகள் தொடர்பில்  குறிப்பிட்டிருந்தார்.  அவ்வாறு வரிச் சலுகை வழங்கப்பட்டால்,  பொருளாதாரம் நெருக்கடி நிலைமையை நோக்கி செல்லும் என அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமர வீர சுட்டிக்காட்டியிருந்தார்.

2019 ஆம் ஆண்டில்  நாட்டில் 7 பில்லியன்  அமரிக்க டொலருக்கும்  அதிகமான  வெளிநாட்டு கையிருப்பு  காணப்பட்டது. பிரதிவாதிகளின் தூர நோக்கற்ற பொருளாதார  திட்டங்களால்  அந்த வெளிநாட்டு கையிருப்பு 45 மில்லியன் டொலர் வரை சரிவடைந்தது.  இந்த தொகை எரிபொருள் கப்பல் ஒன்றுக்கு செலுத்துவதற்கு கூட போதுமானதல்ல.

பொருளாதார நெருக்கடி நிலைமையின் போது , சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளுமாறு பொருளாதார நிபுணர்கள் ஆலோசனையளித்தனர். ஆனால் அவற்றைக் கேட்கவில்லை.   முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர்,அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டிய தேவை இல்லை எனவும், இலங்கையில் பொருளாதார நெருக்கடி இல்லை எனவும்  தாந்தோன்றித்தனமாக பதிலளித்தனர்.

அதன் பிரதிபலனாக இன்று நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தற்போது மிக்க உச்ச கட்டத்தை  எட்டியுள்ளது.  பிரதிவாதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள்  காரணமாக  பொது மக்கள்  எரிபொருள் மற்றும் சமயல் எரிவாயு வரிசைகளில் நாட்கணக்கில் காத்திருக்கின்றனர்.

 கொவிட் நிலைமையின் பின்னர் கூட,  இந்தியா, பங்களாதேஷ்,  தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்,  பாகிஸ்தான், மாலை தீவு  போன்ற நாடுகளில் கூட அவர்களது வெளிநாட்டு கையிருப்பு வெட்டிக்காட்டும் அளவுக்கு  உயர்ந்திருந்த நிலையில்,  கொவிட் நிலைமையால் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை  இலங்கைக்கு ஏற்பட்டதாக ஆட்சியாளர்களுக்கு கூற முடியாது.

எனவே இந்த மனுக்களை பரிசீலனை செய்து முடியும் வரையில் முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என  உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும்.' என  ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர கோரினார்.

அதன்பின்னர், மனுவின் 2 ஆம் பிரதிவாதியான மஹிந்த ராஜபக்ஷ, 3 ஆம் பிரதிவாதி பசில் ராஜபக்ஷ ஆகியோருக்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன மன்றில் வாதங்களை முன் வைத்து,  தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு எனது சேவைப் பெறுநர்கள் மட்டுமே காரணம் என எண்ணும் அளவில் மனுதாரர்கள் தரப்பு முன் வைக்கும் விடயங்கள்  அடிப்படையற்றவை என வாதிட்டார்.

 ' கனம் நீதியரசர்களே,  மத்திய வங்கி,  பாராளுமன்றம்,  அரச ஊழியர்கள் அனைவரும் இருக்கையில்  எனது சேவை பெறுநர்கள் மட்டும்  இந்த நெருக்கடி நிலைமைக்கு எப்படி காரணமாக முடியும்? அரசாங்கம் அளித்த வரிச் சலுகைகள்  தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு காரணம் என மனுதாரர் தரப்பினர் கூறுகின்றனர். வரிச் சலுகை அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரமே வழங்கப்பட்டது.  அது எனது சேவை பெறுநர்களின் தனிப்பட்ட தலையீடு காரணமாக வழங்கப்படவில்லை.

 எனது சேவை பெறுநர்கள் நிதி அமைச்சின் பொறுப்புக்களில் இருந்து விலகி பல  மாதங்கள் ஆகும் நிலையில்,  இந்த மனுக்களை தொடர்ந்து முன் கொண்டு செல்ல சட்டத்தில் இடமில்லை.

கடந்த மாதம், எனது சேவை பெறுநர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.  கடந்த  அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்  எனது சேவை பெறுநர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக  மேல் நீதிமன்றங்களில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு  அவ்வழக்குகள் சார்பில் அவரது வெளிநாட்டு பயணங்கள் தடைச் செய்யப்பட்டிருந்தன.

அவ்வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில்,  அவர் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று  வெளிநாட்டுக்கு சென்று பின்னர் இலங்கைக்கு திரும்பினார்.  அவர் நீதிமன்றை புறக்கணிக்கும்  நபர் அல்ல.  அதனால் எனது சேவை பெறுநர்களுக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல வேண்டிய எந்த தேவையும் இல்லை.

 சுதந்திரமாக பயணங்களை முன்னெடுக்க உள்ள சுதந்திரம் அடிப்படை மனித உரிமையாகும்.  மனுதாரர்கள் கோரும் நிவாரணங்களை வழங்கினால், அது எனது சேவைப் பெறுநர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையும்.  எனவே அக்கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். ' என ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன வாதிட்டார்.

இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம்,  மனுக்களை எதிர்வரும் 27 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்ததுடன், எதிர்வரும் 28 ஆம் திகதிவரை  உயர் நீதிமன்றின் அனுமதி பெறாது வெளிநாடு செல்ல முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அகியோருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த மனுக்களில், வெளிநாட்டு பயணத் தடை விதிக்கக் கோரப்பட்டுள்ள ஏனைய பிரதிவாதிகளான   மத்திய வங்கி முன்னாள் ஆளுநர்களான பேராசிரியர் டப்ளியூ. டி. லக்ஷ்மன், அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலர் எஸ். ஆர். ஆட்டிகல ஆகியோர் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை  நீதிமன்ற அனுமதியில்லாமல் வெளிநாடு செல்வதில்லை என ஏற்கனவே  மன்றுக்கு உறுதிமொழியளித்துள்ளனர்

இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மற்றும்ஜனாதிபதி சட்டத்தரணி  சந்தக ஜயசுந்தர ஆகியோரும் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நரின் புள்ளேவும் ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.virakesari.lk/article/131550

  • கருத்துக்கள உறவுகள்

வெளிய விட்டிட்டு கேற்றை பூட்டுறதுதான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மனுதாரர்கள் கோரும் நிவாரணங்களை வழங்கினால், 

 

2 hours ago, கிருபன் said:

கடந்த மாதம், எனது சேவை பெறுநர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

ஓகோ.....  வீடுகள் கொழுத்தப்பட்டதன் காரணம் இதுதானோ?

2 hours ago, கிருபன் said:

உயர் நீதிமன்றின் அனுமதி பெறாது வெளிநாடு செல்ல முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அகியோருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

நீதிமன்றங்களையும், நீதியரசர்களையும் தங்கள் கைக்குள் வைத்து இஷ்ரப்படி 
 ஆட்டியவர்களின் இன்றைய நிலை பரிதாபம்! தாங்கள் நிரபராதிகள் என்று நிரூபித்தவர்களுக்கு இன்று வெளிநாடு செல்லத் தடை. நீதிமன்றங்களின் தவறா? இவர்களின் தவறா? 

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான ஆளை நாட்டை விட்டு தப்பிக்க விட்டுவிட்டு, இப்பொழுது மடக்கி பிடிக்க இவர்கள் படும்பாடு சொல்லி மாளாது..! 🤭😛

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ராசவன்னியன் said:

முக்கியமான ஆளை நாட்டை விட்டு தப்பிக்க விட்டுவிட்டு, இப்பொழுது மடக்கி பிடிக்க இவர்கள் படும்பாடு சொல்லி மாளாது..! 🤭😛

 

 

👉  https://www.facebook.com/623314276/videos/1044794432845757  👈

கோத்தா... அனுப்பிய, கடிதம் கிடைத்தது!  🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.