Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவுக்கு...  முழு வசதியையும், பாதுகாப்பையும்... வழங்க வேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது – அறிக்கை குறித்து ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவுக்கு...  முழு வசதியையும், பாதுகாப்பையும்... வழங்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட விரும்பினால் அதற்கு வரவேற்பு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வர கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முழு உரிமை உண்டு என்றும் அவர் இலங்கை பிரஜை என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் செயற்படுவார் என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1293188

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, தமிழ் சிறி said:

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவுக்கு...  முழு வசதியையும், பாதுகாப்பையும்... வழங்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட விரும்பினால் அதற்கு வரவேற்பு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பாத்தியளோ.....கோத்தபாயவை மாவீரன் தரத்துக்கு உயர்த்திப்போட்டுத்தான் விடுவாங்கள். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பாத்தியளோ.....கோத்தபாயவை மாவீரன் தரத்துக்கு உயர்த்திப்போட்டுத்தான் விடுவாங்கள். :cool:

 

 

சொல்வது அவரது  கட்சிக்காறன்

சொல்ல வைப்பது உடன்பிறப்பு மகிந்த?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவருக்கு ஏற்கனவே உள்ள வசதி போதாதோ?

அவரையும், மனிசியையும் சிறீ லங்கன் எயார் லைன்ஸ் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கையில் ஏற்றி உலகம் முழுதும் உல்லாசமாக சுற்றி திரிய வழி ஏற்படுத்தி கொடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

1970 களின் முற்பகுதியில்.. இலங்கையில் பெரும் பொருண்மிய நெருக்கடியை ஏற்படுத்திய சிறிமாவே பண்டாரநாயக்காவின் குடியுரிமையை.. ரணிலின் மாமனார் ஜே ஆர் பறித்து.. சிறிமாவை ஒரு வீட்டுக் கைதி போல் நடத்தினார்.

ஆனால்.. அதை விட மோசமான நிலைக்கு மொத்த நாட்டையும் கொண்டு சென்ற ராஜபக்ச குடும்பம் மீது ஒரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை ரணிலுக்கு. காரணம் ரணில் அடிப்பது தவிச்ச முயல். செய்வது தவிச்ச முயல் அரசியல். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nedukkalapoovan said:

1970 களின் முற்பகுதியில்.. இலங்கையில் பெரும் பொருண்மிய நெருக்கடியை ஏற்படுத்திய சிறிமாவே பண்டாரநாயக்காவின் குடியுரிமையை.. ரணிலின் மாமனார் ஜே ஆர் பறித்து.. சிறிமாவை ஒரு வீட்டுக் கைதி போல் நடத்தினார்.

ஆனால்.. அதை விட மோசமான நிலைக்கு மொத்த நாட்டையும் கொண்டு சென்ற ராஜபக்ச குடும்பம் மீது ஒரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை ரணிலுக்கு. காரணம் ரணில் அடிப்பது தவிச்ச முயல். செய்வது தவிச்ச முயல் அரசியல். 

ரணில் இதற்குள்... தலையை கொடுக்காமல் இருந்தால்,
இலங்கையின் அரசியல் போக்கே மாறி இருக்கும்.
ராஜபக்ச குடும்பத்தில்... ஒரு சிலர் அடித்தும் கொல்லப் பட்டிருப்பார்கள்.
நல்ல ஒரு சந்தர்ப்பத்தை.. நரி, குறுக்க வந்து கெடுத்துப் போட்டுது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

1970 களின் முற்பகுதியில்.. இலங்கையில் பெரும் பொருண்மிய நெருக்கடியை ஏற்படுத்திய சிறிமாவே பண்டாரநாயக்காவின் குடியுரிமையை.. ரணிலின் மாமனார் ஜே ஆர் பறித்து.. சிறிமாவை ஒரு வீட்டுக் கைதி போல் நடத்தினார்.

ஆனால்.. அதை விட மோசமான நிலைக்கு மொத்த நாட்டையும் கொண்டு சென்ற ராஜபக்ச குடும்பம் மீது ஒரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை ரணிலுக்கு. காரணம் ரணில் அடிப்பது தவிச்ச முயல். செய்வது தவிச்ச முயல் அரசியல். 

உண்மைதான். சிறிமாவோ தனது பதவிக்காலம் முழுதும் பிரதமராகவே இருந்தார் அவர்பின்  1977 இல் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட ஜே ஆர் ஜெயவர்த்தன தன்னை அதிவல்லமையுள்ள  ஜனாதிபதியாக மாற்றிக்கொள்ள வாக்கெடுப்பு வைத்து வென்றார். இந்த புதிய பதவியின் அதிகாரத்தை வைத்து 1978 இல் அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து சிறிமாவோவையும்  பழி தீர்த்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகா அரசியலுக்கு வந்து தாயாருக்கு  மீண்டும் குடியுரிமை அளித்ததோடு, ஜே. ஆர். இறந்தபோது அவருக்கு எந்தவித அரசியல் மரியாதையும் கொடுத்ததாக தெரியவில்லை, ஒரு சாதாரண மனிதனின் நிலையில் அடக்கம் பண்ணப்பட்டதாக அறிந்தேன். இருந்தாலும் பாருங்கோ ... அம்மா மகளுக்கு தன் வாக்கை அளித்தபின்னே இறந்தா!

7 hours ago, தமிழ் சிறி said:

ரணில் இதற்குள்... தலையை கொடுக்காமல் இருந்தால்,
இலங்கையின் அரசியல் போக்கே மாறி இருக்கும்.
ராஜபக்ச குடும்பத்தில்... ஒரு சிலர் அடித்தும் கொல்லப் பட்டிருப்பார்கள்.
நல்ல ஒரு சந்தர்ப்பத்தை.. நரி, குறுக்க வந்து கெடுத்துப் போட்டுது. 

தானும் சேர்ந்து அடிபட்டுச் சாகத்தான். நரியின் தந்திரம் தனக்கே எந்திரமாய் வந்த கதைகள் நிறைய சின்ன வயதில் படித்திருப்பீர்களோ இல்லையோ? வீரம் பேசி சிங்கத்தின் வாலோடு தன்வாலை சேர்த்த நரி தெருவில் அங்கும் இங்கும் அடிபட்டுச் செத்ததாம், எருதை வயலில் மேய விட்டு கமக்காரன் அடித்து கொல்வான் நான் அதன் இறைச்சியை புசிப்பேன் என்று எண்ணி ஒளிந்து காத்திருந்து, கமக்காரன் விட்டெறிந்த தடி குறி தவறி நரியின் தலையில் பட்டு இறந்திச்சாம். பொறுத்திருப்போம்! நரி வலையில் சிங்கம் விழுதா? சிங்கத்தின் வலையில் நரி விழுதா என்று. எது விழுந்தாலும் நமக்கு சரி.

  • கருத்துக்கள உறவுகள்

சோஷலிச ஜன நாயக குடியரசு சிறிலங்காவில் சர்வ வல்லமை கொண்ட அதன் அரசு தலைவர்  எடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் அதனால் ஏற்படும்  விளைவுகளுக்கும்  அவரின் பதவிக்காலத்திலோ அல்லது அதன்பிற்பட்ட காலத்திலோ பொறுப்பாளியாக மாட்டார். அவர்மீது நாட்டின் எந்த சட்டங்களும் பாயாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.