Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில்... வட்டமிடும், சீன கப்பல்: அனுமதிக்காக... காத்திருப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைத்த கோபின் அறிக்கை இணைப்பு வேலை செய்யவில்லை.

பத்திரிகை செய்தி கீழே.

https://www.express.co.uk/news/politics/1207463/labour-manifesto-in-full-jeremy-corbyn-election-promises-general-election-2019/amp

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

AfD ஜேர்மனியில் தனித்து ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்து விட்டால் - ஜேர்மன் மக்களை Gerxit நோக்கி தள்ள அதிக காலம் எடாது.

அதுவும் நல்லதுக்குத்தான்

24 minutes ago, goshan_che said:

நீங்களே சொன்னபடி எல்லா வளமும் உள்ளேயே இருக்கும் நாடு ரஸ்யா அதை ஏன் தவிர்கிறார்கள்.

இங்கேதான் இருக்கிறது ஜனநாயகத்தின் சூட்சுமம்.

எங்கு சம்பளம் அதிகமோ மக்கள் அங்கு செல்வர். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நைஜிரியாவில் ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் அதனால் அதிகப் பேர் அங்கு சென்றனர். அங்கே சனநாயகம் முக்கியமாக படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

அதுவும் நல்லதுக்குத்தான்

எங்கு சம்பளம் அதிகமோ மக்கள் அங்கு செல்வர். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நைஜிரியாவில் ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் அதனால் அதிகப் பேர் அங்கு சென்றனர். அங்கே சனநாயகம் முக்கியமாக படவில்லை.

உங்களுக்கு தெரிந்த 60,70 இல் நைஜீரியா போன எத்தனை குடும்பம் இப்போ அங்கே வேர் விட்டு உள்ளது?

எனது உறவில் ஒரு 10 பேர் மட்டில் போனார்கள் - அத்தனை பேரும் இப்போ மேற்கு நாட்டில்.

இதைத்தான் சொல்கிறேன். உழைக்க போகலாம், ஆனால் வாழ விடமாட்டர்கள். வாழ்வது, கிளை பரப்புவது, வளர்வது, அரசியலில் உள்ளிடுவது, இவை ஜனநாயக நாடுகளில் மட்டுமே சாத்தியம்.

ஆகவேதான் தாம் போய் உழைத்து கொண்டு, முயற்சித்து, ஏதோ ஒரு வழியில் தம் பிள்ளைகள் காலத்தில் மேற்கிற்கு நகர்ந்து விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

உங்களுக்கு தெரிந்த 60,70 இல் நைஜீரியா போன எத்தனை குடும்பம் இப்போ அங்கே வேர் விட்டு உள்ளது?

எனது உறவில் ஒரு 10 பேர் மட்டில் போனார்கள் - அத்தனை பேரும் இப்போ மேற்கு நாட்டில்.

இதைத்தான் சொல்கிறேன். உழைக்க போகலாம், ஆனால் வாழ விடமாட்டர்கள். வாழ்வது, கிளை பரப்புவது, வளர்வது, அரசியலில் உள்ளிடுவது, இவை ஜனநாயக நாடுகளில் மட்டுமே சாத்தியம்.

ஆகவேதான் தாம் போய் உழைத்து கொண்டு, முயற்சித்து, ஏதோ ஒரு வழியில் தம் பிள்ளைகள் காலத்தில் மேற்கிற்கு நகர்ந்து விடுகிறார்கள்.

வேலைக்கு/மேற்படிப்பிற்கு சென்றவர்கள் அங்கு வேர் விட வேண்டிய அவசியம் என்ன? 

25 minutes ago, goshan_che said:

டுபாய் முழுக்க இந்துக்களால் நிரம்பி வழிகிறது. ஒருக்கால் தேர் இழுத்து பார்ப்போமா?

வேலைக்கு போன இடத்தில் கோவில் கட்டி தேர் இழுக்கவேண்டிய அவசியமென்ன?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

வேலைக்கு/மேற்படிப்பிற்கு சென்றவர்கள் அங்கு வேர் விட வேண்டிய அவசியம் என்ன? 

வேலைக்கு போன இடத்தில் கோவில் கட்டி தேர் இழுக்கவேண்டிய அவசியமென்ன?

ஒரு அவசியமும் இல்லை. ஆனால் வேலைக்கு, மேற்படிப்புக்கு போன இடங்களில் தங்கி நிற்காமல், வேர் விடாமல் அவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திரும்பவில்லை.

புதிதாக இன்னொரு நாட்டை தேர்ந்து எடுத்து அங்கே வந்தார்கள்.

அப்படி அவர்கல் தேர்ந்த நாடுகள் யாவை? அத்தனையும் மேற்கு நாடுகள்.

மேற்கு நாட்டுக்கு வேலைக்கு, படிக்க வந்த எத்தனை தமிழர், படித்த பின் ரஸ்யா,, மத்திய கிழக்கு, சீனாவில் போய் குடியமர்ந்துள்ளனர்?

ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கிற்கு வேலை, படிப்பு என வந்த எத்தனை பேர் மேற்கில் குடியேறியுள்ளனர்?

என்ன காரணம் - அடிப்படை காரணம் ஜனநாயகம். அது கொடுக்கும் பொருளாதார வாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், சட்ட பாதுகாப்பு, மனித உரிமை மதிப்பு, இன, நிற ஒதுக்கலுக்கு எதிரான ஒப்பீடளவு பாதுகாப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, goshan_che said:

ஒரு அவசியமும் இல்லை. ஆனால் வேலைக்கு, மேற்படிப்புக்கு போன இடங்களில் தங்கி நிற்காமல், வேர் விடாமல் அவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திரும்பவில்லை.

புதிதாக இன்னொரு நாட்டை தேர்ந்து எடுத்து அங்கே வந்தார்கள்.

அப்படி அவர்கல் தேர்ந்த நாடுகள் யாவை? அத்தனையும் மேற்கு நாடுகள்.

மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றவர்கள் ஏன் சொந்த நாடு திரும்பவில்லை?

34 minutes ago, goshan_che said:

மேற்கு நாட்டுக்கு வேலைக்கு, படிக்க வந்த எத்தனை தமிழர், படித்த பின் ரஸ்யா,, மத்திய கிழக்கு, சீனாவில் போய் குடியமர்ந்துள்ளனர்?

ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கிற்கு வேலை, படிப்பு என வந்த எத்தனை பேர் மேற்கில் குடியேறியுள்ளனர்?

மீண்டும் கேட்கிறேன் சீனா ரஷ்யாவிற்கு ஏன் படிக்க செல்ல வேண்டும்? அங்கே ஏதோ ஒரு நலன் இருப்பதால் தானே?

படிக்க சென்ற இடத்தில் படித்து விட்டு சொந்த நாட்டுக்கு அதன் பலனை செய்யாத துரோகிகள்.

37 minutes ago, goshan_che said:

என்ன காரணம் - அடிப்படை காரணம் ஜனநாயகம். அது கொடுக்கும் பொருளாதார வாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், சட்ட பாதுகாப்பு, மனித உரிமை மதிப்பு, இன, நிற ஒதுக்கலுக்கு எதிரான ஒப்பீடளவு பாதுகாப்பு.

மேற்குலக நாடுகளில் வியாபர நலன் மட்டுமே இருக்கும்.மக்கள் நலன் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றவர்கள் ஏன் சொந்த நாடு திரும்பவில்லை?

இந்த கேள்வி இலங்கை தமிழரை நோக்கி கேட்கபட்டிருத்தால்.   ......1..அவர்கள் படிப்புக்கு எற்ற வேலை இலங்கையில் இல்லை....2...அப்படி வேலை கிடைத்தால் சிங்களபகுதியில். கிடைக்கும் எதாவது இனக்கலவரம்  ஏற்படும் ஆயினும் உயிருடன் வெட்டி விடுவார்கள் 🤣அதாவது  பாதுகாப்பு இல்லை....3..சம்பளம் மிகவும் குறைவு🤣.....4...வேலை எடுப்பதற்கும் அரசியல்வாதிகள் பின்னால் மில்லியன் கணக்கில் பணத்துடன் இரவு பகலாக அலையவேண்டும்...5...ஆசைகளுக்கு குடும்பமாக நாலு நாடுகளுக்கு சுற்றிலா போக முடியாது...6....பல நாட்டின் சாப்பாடும் சுவைக்கும்.  வாப்புக்கள். அறவேயில்லை. ....7...வேலையில்லையேல்.  வருமானம் இல்லை.   அதாவது வேலைஇழப்பு பணம் கொடுப்பதில்லை 8...பிள்ளைகள் வளர்ப்பதற்கான ஊக்குவிப்பு பணம் கிடையாது” 9....சுகவீனம் என்றால்  வருமானம் இல்லை மட்டுமல்ல சொந்த செலவில் மருத்துவம் பார்க்க வேண்டும...10...மதுவகைகள் ரொம்பவே விலை அதிகம்...🤣👍...

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றவர்கள் ஏன் சொந்த நாடு திரும்பவில்லை?

சுய நலன், யுத்தம், இன ஒதுக்கல், சட்டத்துக்கு புறம்பான கைது காணாமல் போதல் பற்றிய பயம் இவை பெரும் காரணிகள். இதில் கடைசி மூன்றும் இலங்க நாட்டில் இருக்கும் ஜனநாயக குறைபாட்டால் விளைந்தவை.

ஆனால் இங்கே அதுவல்ல பேசு பொருள். இவர்களுக்கு 3 தெரிவுகள் இருந்தன. 

1. சீனா, ரஸ்யாவில் தங்கல்

2. மேற்கு வருதல்

3. இலங்கை போதல்.

இதில் இவர்கள் தெரிவு 2 தேர - மேற்கின் ஜனநாயக விழுமியத்தால் விளைந்த சமூக சூழலே காரணமாகியது.

32 minutes ago, குமாரசாமி said:

மீண்டும் கேட்கிறேன் சீனா ரஷ்யாவிற்கு ஏன் படிக்க செல்ல வேண்டும்? அங்கே ஏதோ ஒரு நலன் இருப்பதால் தானே?

அங்கே படிப்பு குப்பை என நான் சொல்லவில்லையே? ஆனாலும் மேற்கில் ஒரு வருடம் படிக்க ஆகும் செலவில் அங்கே 5 வருடம் படிக்க முடியும் என்பதால் போகிறார்கள்.

32 minutes ago, குமாரசாமி said:

படிக்க சென்ற இடத்தில் படித்து விட்டு சொந்த நாட்டுக்கு அதன் பலனை செய்யாத துரோகிகள்.

இது தலைப்பை ஒட்டி இல்லாததால் தவிர்கிறேன்.

32 minutes ago, குமாரசாமி said:

மேற்குலக நாடுகளில் வியாபர நலன் மட்டுமே இருக்கும்.மக்கள் நலன் இருக்காது.

ஒரு முதலாளிதுவ கட்டமைப்பில் இது சகஜமே.

ஆனால் ரஸ்யா, சீனா வில் இருப்பது போல் கட்டுபாடற்ற மாபியா முதலாளிதுவம் மேற்கில் இல்லாதபடியாலும், ஜனநாயகம் தளைத்து இருப்பதாலும் (உள்நாட்டு) மக்கள் நலன் ஒப்பீட்டளவில் இங்கே மேம்பட்டுள்ளது.

அதனால்தானோ என்னமோ இன்றும் சீனாவில் இருந்து மேற்கை நோக்கி பல்லாயிரகணக்கில் ஓடி வருகிறார்கள். 

அதே போல் துருக்கி, ரஸ்யா, ஹங்கேரியை தாண்டி, லட்சகணக்கில் ஜேர்மனியின் கதவை தட்டுகிறார்கள். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

இது தலைப்பை ஒட்டி இல்லாததால் தவிர்கிறேன்.

தலைப்பு ஹம்பாந்தோட்டையில் வட்டமிடும் சீன கப்பல். ஆனால் நீங்களும் நானும் இவ்வளவு நேரமும் எழுத்து பரிமாற்றங்கள் செய்தது.....?????? 🤣

17 minutes ago, Kandiah57 said:

இந்த கேள்வி இலங்கை தமிழரை நோக்கி கேட்கபட்டிருத்தால்

இந்த கேள்வி இலங்கை தமிழரை நோக்கி கேட்கபட்டிருத்தால்.   ......

1..அவர்கள் படிப்புக்கு எற்ற வேலை இலங்கையில் இல்லை....

2...அப்படி வேலை கிடைத்தால் சிங்களபகுதியில். கிடைக்கும் எதாவது இனக்கலவரம்  ஏற்படும் ஆயினும் உயிருடன் வெட்டி விடுவார்கள் 🤣அதாவது  பாதுகாப்பு இல்லை....

3..சம்பளம் மிகவும் குறைவு🤣.....

4...வேலை எடுப்பதற்கும் அரசியல்வாதிகள் பின்னால் மில்லியன் கணக்கில் பணத்துடன் இரவு பகலாக அலையவேண்டும்...

5...ஆசைகளுக்கு குடும்பமாக நாலு நாடுகளுக்கு சுற்றிலா போக முடியாது...

6....பல நாட்டின் சாப்பாடும் சுவைக்கும்.  வாப்புக்கள். அறவேயில்லை. ....

7...வேலையில்லையேல்.  வருமானம் இல்லை.   அதாவது வேலைஇழப்பு பணம் கொடுப்பதில்லை 

8...பிள்ளைகள் வளர்ப்பதற்கான ஊக்குவிப்பு பணம் கிடையாது” 

9....சுகவீனம் என்றால்  வருமானம் இல்லை மட்டுமல்ல சொந்த செலவில் மருத்துவம் பார்க்க வேண்டும...

10...மதுவகைகள் ரொம்பவே விலை அதிகம்...🤣👍...

 

கொஞ்சம் வரிசைக்கிரமாக்கி இருக்கிறன் கந்தையர்.....மன்னிக்கோணும் 😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

தலைப்பு ஹம்பாந்தோட்டையில் வட்டமிடும் சீன கப்பல். ஆனால் நீங்களும் நானும் இவ்வளவு நேரமும் எழுத்து பரிமாற்றங்கள் செய்தது.....?????? 🤣

🤣 நீங்கள் மேற்கின் ஜனநாயக கட்டமைப்பும், சீனா ரஸ்யாவில் உள்ள சர்வாதிகார, குறை-ஜனநாயக கட்டமைப்பும் ஒன்றே என நிறுவ முற்பட்டதை மறுத்துரைத்து😎.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

சர்வாதிகாரி ? 

கண்ணிருந்தும் குருடர் 🤦🏼‍♂️

யாருக்கு?.     ரஸ்யா அதிபர்  புடின் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளார்..2036 ஆம் ஆண்டு வரை புடின் தான் அதிபர்  பதவி வகிக்க முடியும்  தேர்தல் நடத்தி அல்லது தலைகீழகா நின்றாலும் வேறு எந்த ரஷ்யா பிரசையும் அதிபர்  ஆக முடியாது...இது சர்வாதிகரமில்லைய?.    சீனாவில் எதிர்கட்சியேயில்லை  இது திட்டமிட்டவகையில் அரசாங்கம் செய்த செயல் ஒருபோதும் அங்கு எதிர்கட்சிக்கு இடமில்லை ஒரு நூறு பேர் கொண்ட யாழ் களத்தில் அடிபடுகிறோமில்லையா?   அடிபடுகிறோமில்லையா?பல கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் ஏன் எதிர்கட்சி இருக்க முடியாது?இது  சர்வாதிகாரமில்லைய? சர்வாதிகாரமில்லையா?    துருக்கியில் 2030 வரை இப்போது இருப்பவர்’ பதவியில் இருக்கும்படி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ஏன்வேறு துருக்கி பிரசைகள் பிரதமர் பதவி வகிக்கக்கூடாது?.  இது  சரவதிகாரமில்லையா?.    சரவதிகாரமில்லையா?.  வடகொரியா இலும இதேபோல தான்   அவர் தான் வாழ்நாள் ஐனதிபதி   இது சர்வதிகாரமில்லையா? நான் தான் எல்லாம் என்பது சர்வாதிகாரம். எவனுமே இங்கு பிரதமர் ஆகலாம்...ஐனதிபதி ஆகலாம்    என்று எங்கே செல்லப்படுகிறதோ  அங்கே சர்வதிகாரமில்லை ஆனால் ரஷ்யா சீனா துருக்கி வடகொரியா......போன்ற நாடுகளில் இந்த நிலைமை இல்லை   நான் தான் பிரதமர்...ஐனதிபதி  என்று அவர்கள் தங்களை தங்களே  நியமித்துவிட்டார்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

யாருக்கு?.     ரஸ்யா அதிபர்  புடின் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளார்..2036 ஆம் ஆண்டு வரை புடின் தான் அதிபர்  பதவி வகிக்க முடியும்  தேர்தல் நடத்தி அல்லது தலைகீழகா நின்றாலும் வேறு எந்த ரஷ்யா பிரசையும் அதிபர்  ஆக முடியாது...இது சர்வாதிகரமில்லைய?.    சீனாவில் எதிர்கட்சியேயில்லை  இது திட்டமிட்டவகையில் அரசாங்கம் செய்த செயல் ஒருபோதும் அங்கு எதிர்கட்சிக்கு இடமில்லை ஒரு நூறு பேர் கொண்ட யாழ் களத்தில் அடிபடுகிறோமில்லையா?   அடிபடுகிறோமில்லையா?பல கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் ஏன் எதிர்கட்சி இருக்க முடியாது?இது  சர்வாதிகாரமில்லைய? சர்வாதிகாரமில்லையா?    துருக்கியில் 2030 வரை இப்போது இருப்பவர்’ பதவியில் இருக்கும்படி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ஏன்வேறு துருக்கி பிரசைகள் பிரதமர் பதவி வகிக்கக்கூடாது?.  இது  சரவதிகாரமில்லையா?.    சரவதிகாரமில்லையா?.  வடகொரியா இலும இதேபோல தான்   அவர் தான் வாழ்நாள் ஐனதிபதி   இது சர்வதிகாரமில்லையா? நான் தான் எல்லாம் என்பது சர்வாதிகாரம். எவனுமே இங்கு பிரதமர் ஆகலாம்...ஐனதிபதி ஆகலாம்    என்று எங்கே செல்லப்படுகிறதோ  அங்கே சர்வதிகாரமில்லை ஆனால் ரஷ்யா சீனா துருக்கி வடகொரியா......போன்ற நாடுகளில் இந்த நிலைமை இல்லை   நான் தான் பிரதமர்...ஐனதிபதி  என்று அவர்கள் தங்களை தங்களே  நியமித்துவிட்டார்கள்  

அவனவன் தன்னுடைய நாட்டிற்கு எது பொருந்துதோ அதைச் செய்துவிட்டுப் போகிறான். அதை அந்த மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளவில்ல. அவர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானித்துக்கொள்கிறார்கள். 

உனக்கு இதுதான் நல்லது , இதுதான் உனக்குச் சரிவரும், இதைச் செய் இதைச் செய்யாதே எனக் கூற நீங்களோ நானோ யார் ? 

இவ்வளவு குத்தி முறியும் எங்களால் எங்களுக்குப் பொருத்தமான ஒரு அரசியல்வாதியை உருவாக்கவோ அல்லது பொருத்தமற்றவரை நீக்கவோ முடியவில்லை. அதற்குள் அடுத்தவனுக்கு அரசியல் பாடமெடுக்க எங்களுக்கு  என்ன தகுதி இருக்கிறது ? 

மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர்தான்  இன்று உங்கள் சனாதிபதி. உங்களால் கேள்வியே கேட்க முடியவில்லை. அதற்குள் ஆயிரம் வருடங்கள் பலமையான கலாச்சாரங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கும் மக்களுக்கும் வகுப்பெடுக்க வெளிக்கிடுகிறீர்கள்.

இதே மக்களாட்சி முறையை மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தி வரும் என்று சொல்வதற்கு உங்களுக்கு துணிவிருக்கிறதா ? 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு பிழை. சீனாவின் குத்தகை துறைமுகத்துக்குள் நுழைய என்று செய்தி வந்திருக்கனும்.

கொழும்பு துறைமுகத்திற்கு கடற்புலிகளால் ஆபத்துன்னு சொல்லித்தான் ராஜபக்ச தனது முதலாவது ஆட்சியில் சீனாவை கொண்டு வந்து இதனை (ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை) அபிவிருத்தி செய்தார். அப்பவே புலிகள் எச்சரித்தார்கள்.. இது சீன ஊடுருவலுக்கான ஆரம்பமென்று. அதேபோல்.. கட்டுநாயகாவுக்கு ஆபத்தென்னு சொல்லித்தான் மாத்தள உருவானது. அதுவும் பெரும் செலவை உள்வாங்கி சொறீலங்கா பொருண்மியத்தையே ஆட்டம் காணச் செய்தது.

அப்ப எல்லாம் ஹிந்தியாவும் சோனியாவும் சோனியா பினாமிகளும் றோவும்.. புலி அழிப்பில்.. தமிழர் விரோதப் போக்கில் கவனமாக இருந்தார்களே தவிர.. சீன ஊடுருவலின் தார்ப்பரியத்தை புரிந்து கொள்ளத்தக்க அறிவு கூட இல்லை.

ஆனால் தமிழீழ தேசிய தலைவர் 2008 மாவீரர் நாள் உரையில் சொன்னார்.. ஆசிய நாடுகளின் குறிப்பாக சீனாவின் பொருண்மிய.. இராணுவ வளர்ச்சி தான் எனி உலக பூகோள பொருண்மிய இராணுவ ஒழுங்கை தீர்மானிக்கும் என்று. 

அப்ப அதை எல்லாம் காதில் கூட போட்டுக்கொள்ளக் கூடிய புத்தி.. ஹிந்தியர்களுக்கும் இருக்கவில்லை.. அமெரிக்கர்களுக்கும் இருக்கவில்லை.. ஏன் சிங்களவர்களுக்கும் இருக்கவில்லை.. தமிழர்களிலும் ஒரு தரப்பினருக்கு இருக்கவில்லை. எல்லாரும் புலி அழிப்பில்.. சீனாவோடு ஒத்திசைவதில் சிங்களத்தோடு கூடிக் கும்மாளம் அடிப்பதில் தான் குறியாக இருந்தார்கள். அதன் விளைவை இன்று அனுபவிக்கிறார்கள்.. அவ்வளவே. இது எதிர்பார்த்த ஒரு விடயம் தான். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

அவனவன் தன்னுடைய நாட்டிற்கு எது பொருந்துதோ அதைச் செய்துவிட்டுப் போகிறான். அதை அந்த மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளவில்ல. அவர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானித்துக்கொள்கிறார்கள். 

உனக்கு இதுதான் நல்லது , இதுதான் உனக்குச் சரிவரும், இதைச் செய் இதைச் செய்யாதே எனக் கூற நீங்களோ நானோ யார் ? 

இவ்வளவு குத்தி முறியும் எங்களால் எங்களுக்குப் பொருத்தமான ஒரு அரசியல்வாதியை உருவாக்கவோ அல்லது பொருத்தமற்றவரை நீக்கவோ முடியவில்லை. அதற்குள் அடுத்தவனுக்கு அரசியல் பாடமெடுக்க எங்களுக்கு  என்ன தகுதி இருக்கிறது ? 

மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர்தான்  இன்று உங்கள் சனாதிபதி. உங்களால் கேள்வியே கேட்க முடியவில்லை. அதற்குள் ஆயிரம் வருடங்கள் பலமையான கலாச்சாரங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கும் மக்களுக்கும் வகுப்பெடுக்க வெளிக்கிடுகிறீர்கள்.

இதே மக்களாட்சி முறையை மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தி வரும் என்று சொல்வதற்கு உங்களுக்கு துணிவிருக்கிறதா ? 

 

 

 

முதலில் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன் ரணில் எனது ஐனதிபதி இல்லை...நான் இலங்கை பிரசையுமில்லை.இந்த உலகில்…………… எந்தவித மாற்றமும் என்னால் செய்ய முடியாது....ஆனால் கருத்துகள் கூறமுடியும்   சர்வதிகாரம்  என்றால் என்ன?.   இன்றைய உலகில் யார் சர்வதிகாரிகள்.   ?என்பதை பற்றி எனக்கு தெரிந்ததை மட்டுமே கூறினேன்     நான் யார் இதை மாற்றுவதற்கு. ?.    மீண்டும் சொல்கிறேன் சீனா ரஷ்யா துருக்கி வடகொரியா அதிபர்கள்.   சர்வதிகாரிகள்.     கொரோனா பற்றி முதலில் ஆய்வுகளை செய்து அறிவிப்பு செய்த சீனாபெண் உயிருடன் இருக்கிறாரா?     தெரிந்தால் ஆந்திரம் கொள்ளமால்  பதில்கள் தரவும்🤝👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அவனவன் தன்னுடைய நாட்டிற்கு எது பொருந்துதோ அதைச் செய்துவிட்டுப் போகிறான். அதை அந்த மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளவில்ல. அவர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானித்துக்கொள்கிறார்கள். 

இப்படி சொல்லித்தான் “இலங்கை எனது நாடு அங்கே உள்ள பெரும்பான்மை விரும்புவதை நான் செய்கிறேன்” என முள்ளிவாய்க்காலை நடத்தி முடித்தார்கள் மகிந்த சகோததர்கள்.

அப்போ மட்டும் ஏன் இலங்கையில் தலையிட சொல்லி வீதி வீதியாக இறங்கி போராடினோம்?

இப்போதும் கூட மேற்கின் மீதான எமது விமர்சனத்தின் அடி அவர்கள் 2009இல் தலையிடவில்லை என்பதுதானே?

எமக்கு சார்பாக தலையிட்டால் அது மனிதாபிமானம் ஆனால் எனது அபிமான புட்டினுக்கு எதிராக தலையிட்டால் அது அராஜகம்😆.

1 hour ago, Kapithan said:

உனக்கு இதுதான் நல்லது , இதுதான் உனக்குச் சரிவரும், இதைச் செய் இதைச் செய்யாதே எனக் கூற நீங்களோ நானோ யார் ? 

உங்களிடம் இரு கேள்விகள்.

உலக சட்ட ஒழுங்கில் right to protect doctrine என்று ஒன்று தேவை என்கிரீர்களா இல்லையா?

இப்படி ரஸ்யா அண்டை நாடுகளில், சிரியாவில் தலையிட்டதும் ரஸ்ய ஏகாதிபத்தியம் என ஏற்பீர்களா?

 

1 hour ago, Kapithan said:

இவ்வளவு குத்தி முறியும் எங்களால் எங்களுக்குப் பொருத்தமான ஒரு அரசியல்வாதியை உருவாக்கவோ அல்லது பொருத்தமற்றவரை நீக்கவோ முடியவில்லை. அதற்குள் அடுத்தவனுக்கு அரசியல் பாடமெடுக்க எங்களுக்கு  என்ன தகுதி இருக்கிறது ? 

பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இனத்தில் ஒரு மனிதனை தவிர அனைவரும் தருணம் தப்பிகளாக இருந்தால் எப்படி நல்ல தலைமை உருவாகும்😆

1 hour ago, Kapithan said:

மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர்தான்  இன்று உங்கள் சனாதிபதி. உங்களால் கேள்வியே கேட்க முடியவில்லை. அதற்குள் ஆயிரம் வருடங்கள் பலமையான கலாச்சாரங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கும் மக்களுக்கும் வகுப்பெடுக்க வெளிக்கிடுகிறீர்கள்.

இலங்கையின் ஜனாதிபதி. அவர் எம்மில் பலருக்கு ஜனாதிபதியில்லை.

கேடுகெட்ட பெளத்த சிங்களம் கூடத்தான் 2000 ஆண்டு வரலாறரை கொண்டுள்ளது அதற்காக அது செய்யும் மனித குல விரோதங்களை உலகம் கண்ணை மூடி பார்த்திருக்க வேண்டுமா?

1 hour ago, Kapithan said:

இதே மக்களாட்சி முறையை மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தி வரும் என்று சொல்வதற்கு உங்களுக்கு துணிவிருக்கிறதா ? 

மேற்கும் அமெரிக்காவும் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும், எனக்கும், புட்டினுகும், ஷிக்கும் சேர்த்து இப்போ சுன்னது செய்து விட்டிருப்பார்கள் அல்லாவின் படைகள்😆.

 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

1) இப்படி சொல்லித்தான் “இலங்கை எனது நாடு அங்கே உள்ள பெரும்பான்மை விரும்புவதை நான் செய்கிறேன்” என முள்ளிவாய்க்காலை நடத்தி முடித்தார்கள் மகிந்த சகோததர்கள்.

அப்போ மட்டும் ஏன் இலங்கையில் தலையிட சொல்லி வீதி வீதியாக இறங்கி போராடினோம்?

இப்போதும் கூட மேற்கின் மீதான எமது விமர்சனத்தின் அடி அவர்கள் 2009இல் தலையிடவில்லை என்பதுதானே?

எமக்கு சார்பாக தலையிட்டால் அது மனிதாபிமானம் ஆனால் எனது அபிமான புட்டினுக்கு எதிராக தலையிட்டால் அது அராஜகம்😆.

2) உங்களிடம் இரு கேள்விகள்.

உலக சட்ட ஒழுங்கில் right to protect doctrine என்று ஒன்று தேவை என்கிரீர்களா இல்லையா?

இப்படி ரஸ்யா அண்டை நாடுகளில், சிரியாவில் தலையிட்டதும் ரஸ்ய ஏகாதிபத்தியம் என ஏற்பீர்களா?

 

3) பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இனத்தில் ஒரு மனிதனை தவிர அனைவரும் தருணம் தப்பிகளாக இருந்தால் எப்படி நல்ல தலைமை உருவாகும்😆

4) இலங்கையின் ஜனாதிபதி. அவர் எம்மில் பலருக்கு ஜனாதிபதியில்லை.

கேடுகெட்ட பெளத்த சிங்களம் கூடத்தான் 2000 ஆண்டு வரலாறரை கொண்டுள்ளது அதற்காக அது செய்யும் மனித குல விரோதங்களை உலகம் கண்ணை மூடி பார்த்திருக்க வேண்டுமா?

5) மேற்கும் அமெரிக்காவும் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும், எனக்கும், புட்டினுகும், ஷிக்கும் சேர்த்து இப்போ சுன்னது செய்து விட்டிருப்பார்கள் அல்லாவின் படைகள்😆.

 

1) இரெண்டாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக்  கொண்டுள்ள ரஸ்யாவும், மேற்கினால் ஆளப்பட்ட, அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்சிமுறைகளைக் கொண்டுள்ல இலங்கையும் ஒன்றல்ல. 

2) தேவை. ஆனால் யாரால் யாருக்கு என்பதுதான் கேள்வி. ஐநா வாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லாப் பக்கமும் ஒரே அழுத்தம். பலமுள்ளவன் கை ஓங்குகிறது. 

ரஸ்யா சிரியாவில் தரையிறங்கியதும் US ஆப்கானிஸ்தானில் தரையிறங்கியம் ஒன்றல்ல. சியாவில் தலையீடு அங்குள்ள  மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசின் அழைப்பின் பேரில் என்பதும் சிரியாவில் தலைட்டிருக்காவிட்டால் மத்திய Kழக்Kன் தலையெழுத்தே மாறியிருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஆகவே அமெரிக்க, anglo saxon ஏகாதிபத்தியத்தையும் ரஸ்ய தலையீட்டையும் ஒரே தட்டில் வைத்து நிறுக்க முடியாது. 

3) ஆகக் குறைந்தது ஓட்டைப் பானையாவது இருக்கிறதென்று பெருமூச்சு விடவேண்டியதுதான்

4) மனதளவில். ஆனால் Legitimacy என்பது பேச்சுவார்த்தை காலத்தில் இலங்கை அரசாங்கத்தையும் புலிகளையும் வேறுபடுத்தியது என்பதுதான் உண்மை. அந்த உண்மையை நாங்கள் புரிந்துகொள்ளவொ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை என்பதுதான் இன்றைய எமது பரிதாபகரமான நிலைக்குக் காரணமாக கொள்ள வேண்டும். 

5) 🤣 ஆனால் உண்மை. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ம்........! ஹம்பாந்தோட்டையில் வட்டமிட்ட சீனக்கப்பலுக்கு அனுமதி வழங்கி அது உள் நுழைந்து விட்டது என்பது இங்கு யாருக்கும் தெரியுமோ என்னோ? இல்லை ..... இன்னும் இங்கு வட்டமடிக்கிறீர்களே என்பதால் கேட்கிறேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.