Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டுக்கோட்டையில்... பசுவின் காலை துண்டாடிய,  விஷமிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வட்டுக்கோட்டையில்... பசுவின் காலை துண்டாடிய,  விஷமிகள்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டு இருந்த பசு மாடொன்றின் கால் ஒன்றினை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மூளாய் , முன்கோடை பகுதியில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வருகின்றார். அந்நிலையில் வழமை போன்று தனது பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் பசுவை மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார்.

மாடுகளை அவிழ்க்க சென்ற போது பசுவின் கால் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் மற்றுமொரு காலில் காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் மாடு கிடந்துள்ளது.

அதனை அங்கிருந்து மீட்ட போதிலும் மாடு வலியினால் உணவு உட்கொள்ளாது இருக்கின்றது. இது தொடர்பில் வட்டுக்கோட்டை கால் நடை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் முறைப்பாடு அளித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1294525

  • கருத்துக்கள உறவுகள்

வேறு என்ன, சாதிப் பிரச்சனையாக இருக்கும் ?

😏

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடு தீவில் நாயை கொன்ற கோஸ்டிகள் செய்த போல இருக்கிறது.

ஒரு உறவினர் ஊர் போயிருந்தார்.... நல்லூர் திருவிழா என்று, இரண்டு பொம்பிளைப்பிள்ளையளுக்கு ஆசை ஆசையா half சாரி கட்டு வித்து, டெனிம் டவுசர் போடுற மனிசிக்கும் சாரி கட்ட சொல்லி, அடம் பிடித்து, தானும் வேட்டியை கட்டிக்கொண்டு நடந்து போக, காவாளிகள்.... ஊர் சனம் ஆக்கும் எண்டு, தாய்க்கும், மகள் மாருக்கும் நக்கல் அடிக்க, இவருக்கு கோவம் வர..... இங்கிலீசிலை போட்டுத் தாக்க.... அவர்களோ..... 'கவனம் மாமோய்... பல்லு' எண்டு அதே ஊர் நக்கல் அடிக்க.... வந்த கொதிக்கு அடிக்கப் போய், போலீஸ்க்காரர் ஓடி வர.... நான் வெளிநாட்டு tourists.... இவங்கள் காசு பறிக்க, வெருட்டுறாங்கள் என்று சொல்லி, அவர்களை திருத்தி ஓட வைத்திருக்கிறார்.

'ஒரு பிரயோசனமும்' இல்லாத ஊத்தைப் பயலுகளால் குடாநாடு நிரம்பி உள்ளது என்று புலம்புகிறார். 🙄

3 minutes ago, Kapithan said:

வேறு என்ன, சாதிப் பிரச்சனையாக இருக்கும் ?

😏

சாதிப் பிரச்சனை முந்தி இல்லாததே.... அப்பவெல்லாம் கேள்விப்படேல்லையே...

இவர்கள்.... மாடு வேறு யாரினதும் வயலில் அத்து மீறி பயிரை மேஞ்சிருக்கும். பலதடவை நடந்திருந்தால்.... இதுக்கு மேல சரி வராது என்று யாரோ முட்டாள் செய்திருப்பார். மாட்டுவார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இவர்கள்.... மாடு வேறு யாரினதும் வயலில் அத்து மீறி பயிரை மேஞ்சிருக்கும். பலதடவை நடந்திருந்தால்.... இதுக்கு மேல சரி வராது என்று யாரோ முட்டாள் செய்திருப்பார். மாட்டுவார்.

அப்படி என்டாலும் அதுக்கு மாட்டையே வருத்துறது.எருமைகள்.😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்படி என்டாலும் அதுக்கு மாட்டையே வருத்துறது.எருமைகள்.😡

ஊருக்கு ஊர் கொஞ்ச அடி முட்டாள் கோஷ்டியள் இருக்குங்கள்...மனிசர்ல இருக்கிற கோவத்தை ஆடு,மாடு,நாய்,பூனை கோழியள்ள காட்டுங்கள்..
தோட்ட பயிர்களை நாசம் பண்ணுங்கள்.....
குடிதண்ணி கிணத்துக்கை பொலிடோல் ஊத்துங்கள்....பாம்பை அடிச்சு கிணத்துக்கை போடுங்கள்...மர குத்தியளை தூக்கி போடுங்கள் இன்னும் என்னென்னமோ எல்லாம் செய்து நாசமறுக்குங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஊருக்கு ஊர் கொஞ்ச அடி முட்டாள் கோஷ்டியள் இருக்குங்கள்...மனிசர்ல இருக்கிற கோவத்தை ஆடு,மாடு,நாய்,பூனை கோழியள்ள காட்டுங்கள்..
தோட்ட பயிர்களை நாசம் பண்ணுங்கள்.....
குடிதண்ணி கிணத்துக்கை பொலிடோல் ஊத்துங்கள்....பாம்பை அடிச்சு கிணத்துக்கை போடுங்கள்...மர குத்தியளை தூக்கி போடுங்கள் இன்னும் என்னென்னமோ எல்லாம் செய்து நாசமறுக்குங்கள்

இப்பெல்லாம் யாரிடமும் போய் அன்பாக கூட கதைக்க முடியாது அதட்டிக் கதைக்க வெளிக்கிட்டா இதே நிலை 

பெற்றோல் வரிசையில் நீங்க நின்றிருந்தால் ஓரளவுக்கு தெரிந்து இருக்கும் மனித மனங்களை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்பெல்லாம் யாரிடமும் போய் அன்பாக கூட கதைக்க முடியாது அதட்டிக் கதைக்க வெளிக்கிட்டா இதே நிலை 

பெற்றோல் வரிசையில் நீங்க நின்றிருந்தால் ஓரளவுக்கு தெரிந்து இருக்கும் மனித மனங்களை

இதுக்குத்தான் ஊருக்கு ஒரு சண்டியர்  வேணுமெண்டுறது. இப்ப எல்லாரும் சண்டியர் எல்லோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இதுக்குத்தான் ஊருக்கு ஒரு சண்டியர்  வேணுமெண்டுறது. இப்ப எல்லாரும் சண்டியர் எல்லோ? 😁

10 வயசும் சண்டியர்தான் இங்க 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.