Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடை செய்யப்பட்ட... தமிழ் அமைப்புகள் குறித்து, பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

தடை செய்யப்பட்ட.. தமிழ் அமைப்புகள் குறித்து, பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

பல தரப்பினருடன் நடத்திய நீண்ட ஆய்வுக்குப் பின்னர் தடைப்பட்டியலில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டமை குறித்து பாதுகாப்பு அமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகியன ஆய்வை மேற்கொண்டுள்ளன.

2021ஆம் ஆண்டு 577 பேரும், 18 அமைப்புகளும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது அதில் இருந்து, 316 பேரையும், 06 நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பயங்கரவாதத்திற்கு பணம் மற்றும் ஆதரவை வழங்குவதில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 55 நபர்கள் மற்றும் 03 நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் இணைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1294981

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் முதலீட்டை இலக்காகக் கொண்டதல்ல : அரசாங்கம்

By T. Saranya

17 Aug, 2022 | 10:06 AM
image

(எம்.மனோசித்ரா)

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் முதலீட்டை இலக்காகக் கொண்டதாகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான கண்காணிப்புக்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமையவே குறித்த அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் சில புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முதலீட்டை இலக்காகக் கொண்டே குறித்த அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படுவதாக பல தரப்பினராலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்க்கப்பட்ட போதே  அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

முதலீட்டை இலக்காகக் கொண்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

1968 (48) ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஐக்கிய நாடுகள் சட்ட விதிகளுக்கமைய , பாதுகாப்பு அமைச்சினால் சர்வதேச தரநிலைக்கமைய பயங்கரவாத மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்பற்ற அமைப்புக்கள் வேறு பிரிக்கப்பட்டு, அவற்றை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடல் மற்றும் நீக்குதல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அதற்கமையவே கடந்த காலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்த 6 தமிழ் அமைப்புக்களுக்கான தடையை நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் 1373 ஆம் தீர்மானத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் அவுஸ்திரேலிய தமிழ் காங்ரஸ், உலக தமிழ் பேரவை, உலக தமிழ் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் ஈழ மக்கள் பேரவை, கனேடிய தமிழ் காங்ரஸ், பிரித்தானிய தமிழ் பேரவை என்பவை மீதான தடை இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமையவே தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச ஒப்புதல்கள் மற்றும் அங்கீகாரங்களுக்கமைய, ஐ.நா. தீர்மானங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொடர்ச்சியான விசாரணைகளின் பின்னர் இவ்வாறு தடைகளை நீக்குவதற்காள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சில அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 3 புதிய அமைப்புக்கள் தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தாரூர் அதர் அல்லது ஜம்யுல் அதர் மொஸ்க் அல்லது தாரூல் அதர் குர்ஆர் மத்ரஸா அல்லது தாரூல் அதர் , இலங்கை இஸ்லாமிய மாணவர்கள் சங்கம் அல்லது ஜமீயா மற்றும் சேவ் த பேர்ள்ஸ் என்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய 6 அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ள அதே வேளை, 3 அமைப்புக்களுக்கு புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

https://www.virakesari.lk/article/133720

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இவ்வளவு தூரம் சிரமம் எடுத்துச் சொல்லும்போது நாங்கள் நம்பாமல் இருப்போமா என்ன? நம்பிற்றோம்!

இலங்கையில் சிறையில் உள்ள முற்றம் நிருபிக்கப்படாத அரசியல் கைதிகள், சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் ஆகியோரை விடுதலை செய்தல் போன்ற நியாயமான நன்மைகளைச் செய்யாமல் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் அமைப்புகளுக்குத் தடைநீக்கம் செய்வதால் அரசுக்கு என்ன நன்மை ?

நான் அறிந்த வரையில் தடைநீக்கம் செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் அனைத்தும் NGO போன்ற இலாப நோக்கமற்ற அமைப்புகள் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). இவை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து பணம் பெற்றுச் சில உதவிகளை மட்டுமே செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் புலம்பெயர் அமைப்புக்களின் தடை பற்றி கேள்வி எழுப்புவார்கள். அதற்கான  நரியின் முன்னேற்பாடு தான் இத்தடை நீக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இணையவன் said:

இலங்கையில் சிறையில் உள்ள முற்றம் நிருபிக்கப்படாத அரசியல் கைதிகள், சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் ஆகியோரை விடுதலை செய்தல் போன்ற நியாயமான நன்மைகளைச் செய்யாமல் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் அமைப்புகளுக்குத் தடைநீக்கம் செய்வதால் அரசுக்கு என்ன நன்மை ?

 

13 hours ago, கிருபன் said:

பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான கண்காணிப்புக்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமையவே குறித்த அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதுதான் நரிப்புத்தி! அவர்களின் நேரடிகண்காணிப்பிலுள்ள தடுப்பிலுள்ள இளைஞர்களின் நன்னடத்தையை கண்டறிந்து,  பரிந்துரைத்து அவர்களை விடுவிக்க முடியவில்லை, எங்கோ தொலைநாட்டிலுள்ளவர்களை தேடி கண்டறிந்து விட்டார்களாம், சொல்கிறார்கள் கேளுங்கள்! குண்டுவைத்து கொலை செய்தவர்களை கண்டறிந்து விட்டார்களாம் கேளுங்கள்! இன்னும் சொல்வார்கள் காதை தீட்டி வைத்துக்கொள்ளுங்கள். சர்வதேசத்தை ஏமாற்றி பாராட்டு, உதவி பெற வேண்டும், அதே நேரம் தமிழரை ஏமாற்றி கழுத்தை இறுக்கி இரத்தத்தை உறிஞ்ச வேண்டும். இந்த நரியின் தந்திரத்தை உடைத்து அம்மணமாய் ஓட வைக்க நம்மிடையே  ஒரு வல்லவன் இல்லையே என்பதுதான் வருத்தமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

இந்த நரியின் தந்திரத்தை உடைத்து அம்மணமாய் ஓட வைக்க நம்மிடையே  ஒரு வல்லவன் இல்லையே என்பதுதான் வருத்தமாக உள்ளது.

அதான் இருந்த ஒருத்தரையும் குடுமபத்துடன்  தொலைத்து விட்டு தேடி கொண்டு இருக்கிறம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.