Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் அலுவலகம் புலம்பெயர் தமிழர்களிற்கானது மாத்திரமில்லை- சாகல ரட்நாயக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

By RAJEEBAN

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டுள்ள புலம்பெயர் அலுவலகம் சர்வதேச அளவில் அனைத்து புலம்பெயர் சமூகத்தினரையும் உள்வாங்கியதாகவும் முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை கருத்தி;ல் கொண்டதாகவும் காணப்படு;ம் என தெரிவித்துள்ள  ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகர் சாகல ரட்நாயக்க  இந்த அலுவலகத்தை அமைக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்

மோர்னிங்கிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அலுவலகம் ஒருங்கிணைப்பிற்கான மத்திய நிலையமாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அலுவலகம் என்பது புலம்பெயர் பிரிவுகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் இலங்கை தொடர்பில் அவர்களுடன் ஈடுபாடுகளை ஏற்படுத்துவதற்குமானது குறிப்பாக முதலீடுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பிலானது.இது முதலீட்டிற்கானதாக மாத்திரம் காணப்படாது சுற்றுலாத்துறை குறித்தும் கவனம் செலுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அலுவலகம் புலம்பெயர் தமிழர்களை குறித்து மாத்திரம் கவனம் செலுத்துவதாக காணப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அலுவலகம் குறித்து எதிர்வரும் வாரங்களில் நாங்கள் ஆராயவுள்ளோம்,எனினும் இது குறிப்பிட்ட இனமொன்றிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக மாத்திரம் காணப்படாது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் அலுவலகம் புலம்பெயர் தமிழர்களிற்கானது மாத்திரமில்லை- சாகல ரட்நாயக்க | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, பிழம்பு said:

புலம்பெயர் அலுவலகம் புலம்பெயர் தமிழர்களை குறித்து மாத்திரம் கவனம் செலுத்துவதாக காணப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அலுவலகம் குறித்து எதிர்வரும் வாரங்களில் நாங்கள் ஆராயவுள்ளோம்,எனினும் இது குறிப்பிட்ட இனமொன்றிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக மாத்திரம் காணப்படாது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

யானை தன்ரை தன்ரை தலையிலை மண் அள்ளிப்போடாமல் விட்ட சரித்திரமே இல்லை.🤣

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பிழம்பு said:

புலம்பெயர் அலுவலகம் புலம்பெயர் தமிழர்களை குறித்து மாத்திரம் கவனம் செலுத்துவதாக காணப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அலுவலகம் குறித்து எதிர்வரும் வாரங்களில் நாங்கள் ஆராயவுள்ளோம்,எனினும் இது குறிப்பிட்ட இனமொன்றிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக மாத்திரம் காணப்படாது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

36 minutes ago, குமாரசாமி said:

யானை தன்ரை தன்ரை தலையிலை மண் அள்ளிப்போடாமல் விட்ட சரித்திரமே இல்லை.🤣

பஞ்சாயத்து முடிஞ்சுது… கிளம்பு, கிளம்பு….. 😂
சுமன்… காதிலை, இதை போட்டு விடுங்க. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடனான பேச்சுவார்த்தையின்போது நாட்டு நிலவரங்கள் ஓரளவு சுமுகமான நிலைக்கு திரும்பியபோது புலிகளின் இயக்கத்தின் பலமட்டங்களில் சிங்கள நாசகார சக்திகள் ஊடுருவியதுடன் கருணா உட்பட ஒரு சில போராளிகள் எதிரிகள் பக்கம் தாவினார்கள். அதுபோன்ற ஒன்றை ரணிலின் நரிப்புத்தி வியூகம் இந்த புலம்பெயர் அலுவலகம் என்ற போர்வையில் புலம்பெயர் தமிழர் மட்டத்திலும் செய்யப் பயன்படலாம். முதற்கட்டமாக வெளிநாடுகளில் வசிக்கும் உயர்மட்ட தமிழ் செயற்பாட்டாளர்கள் இந்த பொறிக்குள் விழுத்தப்படும் அபாயம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, vanangaamudi said:

புலிகளுடனான பேச்சுவார்த்தையின்போது நாட்டு நிலவரங்கள் ஓரளவு சுமுகமான நிலைக்கு திரும்பியபோது புலிகளின் இயக்கத்தின் பலமட்டங்களில் சிங்கள நாசகார சக்திகள் ஊடுருவியதுடன் கருணா உட்பட ஒரு சில போராளிகள் எதிரிகள் பக்கம் தாவினார்கள். அதுபோன்ற ஒன்றை ரணிலின் நரிப்புத்தி வியூகம் இந்த புலம்பெயர் அலுவலகம் என்ற போர்வையில் புலம்பெயர் தமிழர் மட்டத்திலும் செய்யப் பயன்படலாம். முதற்கட்டமாக வெளிநாடுகளில் வசிக்கும் உயர்மட்ட தமிழ் செயற்பாட்டாளர்கள் இந்த பொறிக்குள் விழுத்தப்படும் அபாயம் உள்ளது.

ஏலவே சில குழுக்கள் அரசோடு இணைந்து பயணிக்கத் தொடங்கியிருந்த நிலையில் சந்திப்புகள் நடைபெற்றதாகவும் முன்பே செய்திகள் வந்திருந்தன. புலிகளது நிர்வாகம் இருக்கும்வரை தாமே புலிகளென்று  இருந்த பல அமைப்புகளும் இதனுள் அடக்கம். இங்கே தடைநீக்கப்பட்ட அமைப்புகள் ஏற்கனவே நேரடி மற்றும் மறைமுகத் தொடர்பில் இருப்பவர்களாகவே இருக்கலாம். இனிவரும் காலங்களில் ஏட்டிக்குப்போட்டியான நகர்வுகளைப் புலத்திலும் எதிர்பார்க்கலாம். இங்கே குமுக மற்றும் அரசியற் செயற்பாட்டாளர்கள் நிதானத்தோடு நடந்து இவற்றைக் கடந்து செல்வதே தமிழினத்தினது இலக்கிற்குப் பலமாகும்.  இலங்கையில் தடை நீக்கப்பட்ட அமைப்புகள் இனித் தனியாவர்த்தனம் காட்டப் புறப்படுவார்கள். எனவே புலம்பெயர் உறவுகள் ஏமாறாமல் இருப்பதோடு, விழிப்புணர்வோடு செயற்படவேண்டும்.  இன்று தமிழின விடுதலைக்கப்பால் தமது(?) தேட்டங்களை முதலீடு செய்து தாமும் பெரியாக்களென்று காட்டும் நோக்கிலும் சிங்களத்தோடு ஒட்டிச் செல்லும் 'ஈ'கள் எம்மினத்திலும் இருப்பதொன்றும் இரகசியமல்ல. 'ஈ' கள் மொய்பதற்கு இடம்பார்பதில்லைத்தானே.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

புலிகளுடனான பேச்சுவார்த்தையின்போது நாட்டு நிலவரங்கள் ஓரளவு சுமுகமான நிலைக்கு திரும்பியபோது புலிகளின் இயக்கத்தின் பலமட்டங்களில் சிங்கள நாசகார சக்திகள் ஊடுருவியதுடன் கருணா உட்பட ஒரு சில போராளிகள் எதிரிகள் பக்கம் தாவினார்கள். அதுபோன்ற ஒன்றை ரணிலின் நரிப்புத்தி வியூகம் இந்த புலம்பெயர் அலுவலகம் என்ற போர்வையில் புலம்பெயர் தமிழர் மட்டத்திலும் செய்யப் பயன்படலாம். முதற்கட்டமாக வெளிநாடுகளில் வசிக்கும் உயர்மட்ட தமிழ் செயற்பாட்டாளர்கள் இந்த பொறிக்குள் விழுத்தப்படும் அபாயம் உள்ளது.

நாங்கள் இறங்கி வந்தே ஆக வேண்டும். ஆனால்  அதீத  கவனத்துடன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.