Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருள் உலகம் நிர்ணயிக்கும் ஆத்மீகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவா இந்த வருடம் நாங்கள் பாபாவின் பிறந்தநாளிற்கு புட்டபத்திக்கு போகும் போது ஒருக்கா கொழும்பிற்கும் போயிட்டு தெகிவளை ஆஞ்சேநேயர் கோயிலிற்குன் போயிட்டு வர வேண்டும் என்று சுதா சொன்னதை கேட்ட சிவா ஏனப்பா போனமுறை தான் புட்டபத்திக்கு போயிட்டு வந்தனாங்கள் இரண்டு மூன்று வருசத்தால போகலாமே என்று சிவாவை பார்த்த சுதா உங்களிற்கு என்ன விசரா பாபாவின் பிறந்தநாளிற்கு ஒவ்வொருவருடமும் வாரேன் என்று மனதிற்குள் நான் அப்பவே நினைத்துவிட்டேன் ஒவ்வொருவருடமும் போக வேண்டும் இது பாபாவின் விடயம் இதில் ஒரு மாறுதலும் இல்லை சொல்லிபோட்டேன்.இப்ப நாங்கள் இந்த அவுஸ்ரெலியாவில் சகல வசதிகளுடன் நிம்மதியாக வாழுகிறோம் என்றா அதற்கு அந்த பாபா தான் காரணம்.

புட்டபத்தி போய் அவருடைய தரிசனம் கிடைத்து 2 கிழமையாவது அந்த சூழலில் இருந்தால் தனிசுகம் தான் அது எல்லாம் உங்களிற்கு விளங்கபோகுது கொஞ்சமாவது பயபக்தி இருக்க வேண்டும் என்றவளை பார்த்த சிவா"அடியே நாங்கள் இருகிறதிற்கு காரணம் பாபா இல்லை கப்டன்குக்கும் அவனுடைய படைகளும் காரணம் அத்தோடு நாட்டில் இருகிற பிரச்சினை எனது பட்டபடிப்பு இதுகள் தான் காரணம் என்று கத்தை வேண்டும் போல் இருந்தது"இருந்தாலும் தன்னியலாமையை நினைத்து நொந்து கொண்டான்.

எனது பெற்றோர்கள் அன்று கிரமாத்தில் இருந்து பட்டினத்தில் இருக்கும் நல்லூர் கந்தனை தரிசிக்க பண வசதி இல்லாம வருடத்தில் ஒரு நாள் நடந்து தேர்திருவிழா பார்க்க செல்வார்கள் அவர்களிற்கு ஒவ்வொருநாளும் போக வேண்டும் என்று ஆசை இருந்தும் பண வசதி இன்மையால் முடியவில்லை.கடல் கடந்து நயினை நாகபூசனி அம்மனை தரிசிக்க முடியவில்லை இராமேஸ்வரம் போகமுடியவில்லை எவ்வளவு ஆத்மீக ஆசைகளை நிறைவேற்றமுடியவில்லை காரணம் அவர்களின் பொருளாதார நிலைமை.

ஆனால் இன்று மனிதசாமியின் பிறந்தநாளிற்கு ஒவ்வொருவருடமும் சென்று ஆத்மீக ஆசைகளை நிறைவேற்ற அவளின் பொருளாதர நிலைமை சீராக இருக்கின்றது,ஆத்மீக ஆசைகளையும் நிறைவேற்றிகொள்ள பொருள் உலகம் தான் நிர்ணயிகிறது என்று தனது மனதிற்குள் சிவா நினைத்து கொண்டு விமான டிக்கடை புக் பண்ண தொலைபேசியை எடுத்தான்.எல்லாம் பாபாவின் செயல் என்று சொல்ல வந்தவன் எல்லாம் டொலரின் செயல் என்று தனகுள்ளே சிரித்து கொண்டான்.

ம்ம்ம்ம்ம்ம்ம் சிந்திக்க வேண்டிய விடயம்

என்ன புத்தர் இது உங்க வீட்டுக் கதை போல இருக்கு.

புத்துமாமா எல்லா பொருள் உலகம் என்றா எது தான் அந்த கட்டகரிகுள்ள வராம இருக்கும் அதை சொல்லுங்கோ................ஆனாலும் உங்க கதை சூப்பர் அதாவது உண்மையா நடக்கிற உங்க கதை சூப்பர் என்று சொல்ல வந்தனான்.......... :P :P

ஹீஹீ புத்து மாமாவின் வாழ்க்கை கதையா? அப்போ புட்டபத்திக்கு இந்தவருடம் போக போறியளோ?

ஏன் மாமா உங்க கதையில் சிவா மனசுக்குள் தான் எல்லாத்தையும் நினைப்பாரா? மனைவிக்கு சொல்லலாமே.

ஆமாம் சிவாவும் புத்து மாமாவும் வேறா இவர் மனசில நினைகிறது அப்படியே வருது கதையா நிலா அக்கா.......................நானும் ஒருக்கா புட்டபத்தி போக வேண்டும் அங்கே போய் தேடல் செய்ய போறேன்............. :P :lol: :P

:lol:

Edited by Manivasahan

ஆமாம் சிவாவும் புத்து மாமாவும் வேறா இவர் மனசில நினைகிறது அப்படியே வருது கதையா நிலா அக்கா.......................நானும் ஒருக்கா புட்டபத்தி போக வேண்டும் அங்கே போய் தேடல் செய்ய போறேன்............. :P :lol: :P

அட உதை அங்க சொல்ல வேண்டியதுதானே ஒரேதாக டிக்கட் புக் பண்ணுவார் எல்லோ. அதை விட்டு சிவா மனசுக்குள் நினைப்பது போல நீங்களும் இங்கை எழுதிக்காட்டுறியளோ? ;)

அட உதை அங்க சொல்ல வேண்டியதுதானே ஒரேதாக டிக்கட் புக் பண்ணுவார் எல்லோ. அதை விட்டு சிவா மனசுக்குள் நினைப்பது போல நீங்களும் இங்கை எழுதிக்காட்டுறியளோ? ;)

ஒரே பிளேனில இரண்டு தலைகள் போக ஏலாது அது தான் சொன்னனான்.............நிலா அக்கா :P :P

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கதை அழகு புத்தன் .

எல்லாம் டொலரின் செயல் எண்டு முடித்திருந்தாலும் கதையில் சிந்திக்க நிறைய விசயம் இருக்கு .

வாழ்த்துகள்

ஒரே பிளேனில இரண்டு தலைகள் போக ஏலாது அது தான் சொன்னனான்.............நிலா அக்கா :P :P

உதென்ன புதுக்கதை. ஒரு பிளேனில் எவ்வளவு தலைகள் போகுது? :lol:

உதென்ன புதுக்கதை. ஒரு பிளேனில் எவ்வளவு தலைகள் போகுது? :lol:

நான் சொன்னது வேற அக்காவிற்கு விளங்காது....................எனக்கு டவுட் இந்த உலகில பொருளாள நிர்ணயிக்கபடாது எது............... :o ;)

நடைமுறையில் உள்ளதை எடுத்துக்காட்டியுள்ளீர்கள். பாரட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹீஹீ புத்து மாமாவின் வாழ்க்கை கதையா? அப்போ புட்டபத்திக்கு இந்தவருடம் போக போறியளோ?

ஏன் மாமா உங்க கதையில் சிவா மனசுக்குள் தான் எல்லாத்தையும் நினைப்பாரா? மனைவிக்கு சொல்லலாமே.

வாய திறந்து சொன்னால் பாபா தன்ர வேலய காட்டிப்போடுவார் என்டு பயம் அததான் மனசுக்குள்ள சொன்னவர், உங்களுக்கு உதுகூட விளங்கயில்ல.

:lol:

வாய திறந்து சொன்னால் பாபா தன்ர வேலய காட்டிப்போடுவார் என்டு பயம் அததான் மனசுக்குள்ள சொன்னவர், உங்களுக்கு உதுகூட விளங்கயில்ல.

:lol:

ஓ உது வேறையோ எனக்கு பாபா பற்றி எதுவுமே தெரியாதுங்க. ஆனால் பல பல அற்புதம் நிகழ்த்துவார் என சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.

இருப்பினும் 2005 இல் யாரோ பாபா வாயுக்குள் இருந்து லிங்கம் எப்படி எடுக்கிறார் என்று படம் போட்டு விளக்கி இருந்தார்கள். அந்த மாயாஜாலத்தின் பின் பாபாவின் அற்புதம் என்று யாராவது சொன்னால் நம்புவதில்லை. :lol:

ஓ உது வேறையோ எனக்கு பாபா பற்றி எதுவுமே தெரியாதுங்க. ஆனால் பல பல அற்புதம் நிகழ்த்துவார் என சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன். இருப்பினும் 2005 இல் யாரோ பாபா வாயுக்குள் இருந்து லிங்கம் எப்படி எடுக்கிறார் என்று படம் போட்டு விளக்கி இருந்தார்கள். அந்த மாயாஜாலத்தின் பின் பாபாவின் அற்புதம் என்று யாராவது சொன்னால் நம்புவதில்லை. :lol:

அப்ப அக்காவும் என்னை மாதிரி நம்புறதில்லை வெரிகுட் நிலா அக்கா............. :P

வாய திறந்து சொன்னால் பாபா தன்ர வேலய காட்டிப்போடுவார் என்டு பயம் அததான் மனசுக்குள்ள சொன்னவர், உங்களுக்கு உதுகூட விளங்கயில்ல. :lol:

ஆதி அண்ணா பாபாவின்ட வாயால தானே லிங்கம் வரும் இவர் வாயை திறந்த இவரின்ட வாயலும் லிங்கம் வருமா அண்ணே............. :P :P

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகள் கூறிய ரசிகை,ஜம்மெ பேபி,வெண்ணிலா,மணிவாசகன்,கறுப

  • கருத்துக்கள உறவுகள்

கோவில்கள், தேவாலயங்கள், புட்டபர்த்திக்கு போகிறவர்களில் பலர் எமக்காக உயிர் விட்ட மாவீரர்களை நினைத்து மாவீரர் நிகழ்வுகளுக்கு செல்லாமல் இருக்கிறார்கள். பகவத் கீதை பற்றி அடிக்கடி கதைக்கும், நம்பும் ஒருவரை சந்தித்தேன். இவர் ஈழப்போராட்டம் தேவையில்லை. வீணான உயிர் இழப்பு என்று சொல்வார். அதற்கு நான் கேட்டேன் பாண்டவர்கள் உரிமை கேக்க போராடியதினால் தான் மகாபாரதம் உருவாகியது. ஆகவே பகவத் கீதையின் அடிப்படையில் உரிமைக்காக தமிழர்கள் போராடுவதில் என்ன தப்பு என்று கேட்டேன். அது வேற, இது வேற என்று அவர் சொன்னார்.

உண்மைதான் கந்தப்பு. எங்கோயிருக்கும் எமக்கு சம்பந்தமில்லாத ஒருவருக்காக ஆயிரக்கணக்கில் செலவழிப்பார்கள். ஆனால் தாயகத்திற்காய் சில நூறுகளைக்கூடத் தரமாட்டார்கள். நீங்கள் குறிப்பிட்ட நபர், கடந்த காலத்தில் மட்டுமே வாழ்பவராக இருக்கவேண்டும். ஒரு அரியாசனத்திற்காக சகோதரர்களுக்கிடையே மூண்ட சண்டையை உணரக்கூடிய ஒருவர், மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களைக் கண்டறிய முடியவில்லை. இவர்களெல்லாம் படித்தது வீண் என்றே கூறுவேன். இவர்களில் பலர், தங்கள் உறவுகளுக்குக் கூட உதவி செய்வதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.