Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட மாகாண மக்கள் இராணுவத்தினர் அவசியமென கருதுகின்றனர் - சரத்வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண மக்கள் இராணுவத்தினர் அவசியமென கருதுகின்றனர் - சரத்வீரசேகர

By T. SARANYA

08 SEP, 2022 | 03:54 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை அகற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே குறிப்பிட்டுக்கொள்கின்றனர்.  ஆனால் மாகாண மக்கள்  இராணுவத்தினர் அவசியம் என எண்ணுகிறார்கள் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவிட்டு வரி சட்டமூலம்  தொடர்பான விவாதத்தின் போதுஇ வடக்கில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளை தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறிய நிலையில், அதற்கு பதிலளிக்கையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டதாவது,

யுத்தக் காலத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பு காரணங்களுக்காக கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 வீதமானவை வடக்கு மற்றும் கிழ்கு மாகாண மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. மிகுதி காணிகளே பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இராணுவம் இருப்பது யாழ்ப்பாண மக்களுக்கு அவசியமாகும். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு மாத்திரமே இராணுவத்தினரை அங்கிருந்து அகற்ற வேண்டும் என குறிப்பிடுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு காரணிகளின் நிமித்தமே இராணுவத்தினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவம் தொடர்பில் அரசியல் தரப்பினரே தவறான கருத்துக்களை குறிப்பிட்டுக்கொள்கிறார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/135306

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தெரிவு செய்த எம்பிக்கள் தானே பேசுவார்கள்.

அலம்பறை பண்ணாமல், மக்கள் கருத்து என்ன என்று நாலு நாள் போயிருந்து கேட்டு வந்த அமேரிக்க தூதரிடம் கேட்டால் சொல்வார்.

எல்லாவற்றுக்கும் முதல், இராணுவத்துக்கு சம்பளம் கொடுக்க, காசு.... இல்லையே மாத்தயா?😁

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு காலம் இப்படியான விசுக்கோத்துகள் வருவது வழமை தானே.😂
இவருக்கு சரியான குளிசை கொடுக்கக் கூடிய தமிழ் பா. உ  யார் என பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை அகற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே குறிப்பிட்டுக்கொள்கின்றனர்.  ஆனால் மாகாண மக்கள்  இராணுவத்தினர் அவசியம் என எண்ணுகிறார்கள்

பாவம் இந்தக்கிணத்து தவளையின் அறிவு இவ்வளவுதான்! த. தே. கூட்டமைப்பினர் என்பவர் யார், அவர்களை தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பியது யார், எதற்காக அனுப்பப்பட்டார்கள்? என்கிற தெளிவே இல்லாதது அதனுடைய ஓலம் எல்லாம் பாராளுமன்ற கட்டிடத்திற்குள்ளேயே ஒலிக்கும்.

9 hours ago, ஏராளன் said:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இராணுவம் இருப்பது யாழ்ப்பாண மக்களுக்கு அவசியமாகும்.

போதைப்பொருள் கடத்தலை தடுக்க முடியாதவர்கள், வாள்வெட்டு குழுக்களை பாதுகாப்பவர்கள், இது தான் இவர்களின் நலன்புரி நடவடிக்கைவடக்கில்.  இவரின் கல்வித்தகமையை ஆராய்ந்தால் தெரியும் இவரின் அறிவு எவ்வளவு என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன சர்வசன வாக்கெடுப்பு நடத்தினவரோ அல்லது நடத்தத் தயாரோ? சிலவேளை சந்திரமுகி ரஜனி மாதிரி ஆக்கள் மனதுக்கை நினைக்கிறது எல்லாம் கேக்குதோ தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, வாதவூரான் said:

இவர் என்ன சர்வசன வாக்கெடுப்பு நடத்தினவரோ அல்லது நடத்தத் தயாரோ? சிலவேளை சந்திரமுகி ரஜனி மாதிரி ஆக்கள் மனதுக்கை நினைக்கிறது எல்லாம் கேக்குதோ தெரியாது

 

அவரைச்சந்திக்கும்  அரசியல்வாதிகள்  எல்லோருமே குனிந்து  நின்றால்...

அவர்கள்  பிரதிநிதிப்படுத்தும்  மக்கள்  பற்றிய அவரது எண்ணம்  சரிதானே???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.