Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணன் செய்த மோசமான செயலால் தங்கை தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் செய்த மோசமான செயலால் தங்கை தற்கொலை

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 20 வயதுடைய இளம் யுவதி ஒருவர்  மனவிரக்திக்கு உள்ளாகிய  தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

மூத்த சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R)

 

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அண்ணன்-செய்த-மோசமான-செயலால்-தங்கை-தற்கொலை/71-303995

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இப்படியானதுகளைப் பெற்றோரே நஞ்சைவைத்துக் கொன்றுவிடலாம். தமிழினத்திற்குள் ஆழ ஊடுருவிட்டதாக பேசப்பட்ட போதைப்பொருட் பாவனை கட்டுமீறிச் சென்றுவிட்டது. தனது வீட்டிலே கையாடல், வீட்டுப் பாவனைப் பொருட்களை எடுத்துச் சென்றுவிற்றல் என்றிருந்து இப்போது வண்புணர்வில் வந்து நிற்கிறது. தமிழினத்தை அழித்துவிடும் மிகமோசமானதொரு நிலை. குமுகாய நலனாளர்களும் கல்வித்துறையினரும் ஒன்றிணைந்து செயற்பட்டு இதனை முறியடிக்க வேண்டும். எந்தவொரு வேற்றவரோடும் பிள்ளைகள் பழகுவதை தவிர்க்கும் வகையிலே பெற்றோர்கள் அரவணைத்து வனர்ப்பதோடு, அவர்களது அன்றாட நடவடிக்கைகளை அவதானித்து தீர்வுகாண வேண்டும். கல்வியாளர்கள் விழப்பூட்டும் செயற்பாடுகளைப் பாடசாலை மட்டத்தில் காலையிலே தேவாரம் பாடுவதோடோ, தேசியகீதம் பாடுவதோடோ முடிக்காது போதையின் தீமைகளையும் தினமும் போதிக்க வேண்டும்.
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு... ஒரு கேவலமான இடத்தில், தமிழினம் வந்து நிற்கிறது.
இருபது  வயது  குமர்ப் பிள்ளை... இந்த விடயத்தில், 
சகோதரனால்.. செய்யப்பட்ட செயலை ஜீரணிக்கவே முடியவில்லை.

போதைப்  பொருள் கடத்தல்காரருக்காக, நீதி மன்றத்தில் வழக்காடி, 
அவர்களை வெளியே கொண்டு வருவதும், தமிழ் அரசியல்வாதிகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nochchi said:

இப்படியானதுகளைப் பெற்றோரே நஞ்சைவைத்துக் கொன்றுவிடலாம். தமிழினத்திற்குள் ஆழ ஊடுருவிட்டதாக பேசப்பட்ட போதைப்பொருட் பாவனை கட்டுமீறிச் சென்றுவிட்டது. தனது வீட்டிலே கையாடல், வீட்டுப் பாவனைப் பொருட்களை எடுத்துச் சென்றுவிற்றல் என்றிருந்து இப்போது வண்புணர்வில் வந்து நிற்கிறது. தமிழினத்தை அழித்துவிடும் மிகமோசமானதொரு நிலை. குமுகாய நலனாளர்களும் கல்வித்துறையினரும் ஒன்றிணைந்து செயற்பட்டு இதனை முறியடிக்க வேண்டும். எந்தவொரு வேற்றவரோடும் பிள்ளைகள் பழகுவதை தவிர்க்கும் வகையிலே பெற்றோர்கள் அரவணைத்து வனர்ப்பதோடு, அவர்களது அன்றாட நடவடிக்கைகளை அவதானித்து தீர்வுகாண வேண்டும். கல்வியாளர்கள் விழப்பூட்டும் செயற்பாடுகளைப் பாடசாலை மட்டத்தில் காலையிலே தேவாரம் பாடுவதோடோ, தேசியகீதம் பாடுவதோடோ முடிக்காது போதையின் தீமைகளையும் தினமும் போதிக்க வேண்டும்.
நன்றி

போதைப்பொருள் பாவனையை ஊக்குவிக்கவும், வாள்வெட்டுக்குழுக்களை வளர்க்கவுமே இலங்கை இராணுவம் இன்னும் ஈழத்தில் நிலைகொண்டுள்ளது. அது அவர்கள் தமிழருக்கு செய்யும் நலன்புரி செயலாம் என்று வர்ணிக்குது ஒரு ஓநாய். என்று விடுதலைப்போராட்டம் முறியடிக்கப்பட்டதோ அன்று இறக்குமதியானவை இவையெல்லாம். தமிழரின் இருப்பை அழிக்க இளையோரை குறிவைத்து நீண்ட நோக்கோடு செயற்படுத்தப்படும் திட்டம் இது. சிங்கள இராணுவம் வெளியேறினாலே அன்றி இதை தடுப்பது கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

போதைப்பொருள் பாவனையை ஊக்குவிக்கவும், வாள்வெட்டுக்குழுக்களை வளர்க்கவுமே இலங்கை இராணுவம் இன்னும் ஈழத்தில் நிலைகொண்டுள்ளது. அது அவர்கள் தமிழருக்கு செய்யும் நலன்புரி செயலாம் என்று வர்ணிக்குது ஒரு ஓநாய். என்று விடுதலைப்போராட்டம் முறியடிக்கப்பட்டதோ அன்று இறக்குமதியானவை இவையெல்லாம். தமிழரின் இருப்பை அழிக்க இளையோரை குறிவைத்து நீண்ட நோக்கோடு செயற்படுத்தப்படும் திட்டம் இது. சிங்கள இராணுவம் வெளியேறினாலே அன்றி இதை தடுப்பது கடினம்.

நீங்கள் கூறுவது சர. ஆனால் அதற்காக நாமும் சும்மா இருக்கக் கூடாதல்லவா?

1. தமிழர் தாயகத்தில் (வட-கிழக்கில்)நடைபெறும் இதுபோன்ற செயற்பாடுகளைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள்தான் இந்த போதைப்பொருள் முகவர்களாக இருக்கிறார்களோ என்று ஐயப்பட வேண்டியிருக்கிறது.

2. சிங்களப் படைகளது நடவடிக்கை மற்றும் அவர்களது தமிழின அழிப்புத் தொடர்பான நிலைப்பாடுகளை ஒரு தொடர்பரப்புரையாக, நிறுவனரீதியாக மேற்கொண்டு விழிப்புணர்வூட்டும் குறைந்த பட்சச் செயற்பாடுகளையாவது செய்ய எமது அரசியல் குமூகச் செயற்பாட்டாளர்களும் கல்வியாளர்களும் முன்வரவேண்டும். இதனூடாக நாம் இனிமேல் போதைப்பொருட் பாவனைக்கு செல்ல நினைப்பவரையாவது தடுக்க முயற்சிக்கலாம் என்று நினைக்கின்றேன்.   

  • கருத்துக்கள உறவுகள்

"மோசமான செயல் " ?

இத்ற்குப் பெயர் tamilmorror ன் பூசி மெழுகுதல். 

அண்ணனுக்கு மத்தியகிழக்கு வழிமுறைதான் தகும். 

😡

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nochchi said:

தமிழர் தாயகத்தில் (வட-கிழக்கில்)நடைபெறும் இதுபோன்ற செயற்பாடுகளைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள்தான் இந்த போதைப்பொருள் முகவர்களாக இருக்கிறார்களோ என்று ஐயப்பட வேண்டியிருக்கிறது.

அவர்களுக்கு இப்படியான பிரச்சனைகள் தமிழர் மத்தியில் இருப்பதே அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்கு உதவுகிறது. மக்கள் பிரச்சனையில் தவித்தாலே தம்மை அணுகுவர் அதை வளர்த்து தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ளலாம். தமிழர் விடிவு என்பது அவர்களது அரசியல் வாழ்வின் அஸ்தமனம் என நினைக்கிறார்கள் அவர்கள் இதய சுத்தியுடன் செயற்பட்டிருந்தால் இன்று இவ்வளவு பிரச்சனைக்கு மக்கள் முகங்கொடுத்திருக்க வேண்டியதில்லை இது வரை இவர்கள் சாதித்தது ஒன்றுமில்லை இவர்களை நம்பி ஏமாந்ததுதான் மிச்சம் ஆனால் சமூக உணர்வுள்ளவர்கள் உதவலாம் அவர்களுக்கும் கெடுபிடி அதிகரிக்கும் அதனால் அவர்களும் ஒதுங்கி இருக்கவே விரும்புவார்கள் இது நமது சமூகத்துக்கு நல்லதல்ல யாராவது முன்வந்தால் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

"மோசமான செயல் " ?

இத்ற்குப் பெயர் tamilmorror ன் பூசி மெழுகுதல். 

அண்ணனுக்கு மத்தியகிழக்கு வழிமுறைதான் தகும். 

😡

மத்திய கிழக்கில் சகோதரர்கள் சகோதரிகள் பழக விடமாட்டார்கள் ...இது சரியா? ஏன் இப்படியான  சட்டம் அங்கு  வந்தது என சிந்திக்க வேணும் 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, putthan said:

மத்திய கிழக்கில் சகோதரர்கள் சகோதரிகள் பழக விடமாட்டார்கள் ...இது சரியா? ஏன் இப்படியான  சட்டம் அங்கு  வந்தது என சிந்திக்க வேணும் 

அங்கே ஒரு பெண் பஸ்சில் கூட நிம்மதியாக பயணிக்க முடியாதாம். அல்லாவின் காலத்திற்கு கொண்டு செல்ல தான் இந்த சட்டம் வழிவகை செய்யுமே தவிர சமுதாயத்தை திருத்த ஒரு போதும் உதாவாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

a7.jpg

வட்சப்பில் வந்தது😭

முகத்தை... காட்டினால் தானே, ஆர் ஆக்கள் எண்டு பார்க்கலாம்.   😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

முகத்தை... காட்டினால் தானே, ஆர் ஆக்கள் எண்டு பார்க்கலாம்.   😎

காட்டினால் பார்வையால் நீங்கள் அந்த பெண்ணின் புனிதத்தை கெடுத்து விடுவீங்கள் என நம்பினம்

On 14/9/2022 at 17:35, விளங்க நினைப்பவன் said:

அங்கே ஒரு பெண் பஸ்சில் கூட நிம்மதியாக பயணிக்க முடியாதாம். அல்லாவின் காலத்திற்கு கொண்டு செல்ல தான் இந்த சட்டம் வழிவகை செய்யுமே தவிர சமுதாயத்தை திருத்த ஒரு போதும் உதாவாது.

அந்த சட்டத்தை வேறு நாடுகளிலும் திணிக்க முயல்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

காட்டினால் பார்வையால் நீங்கள் அந்த பெண்ணின் புனிதத்தை கெடுத்து விடுவீங்கள் என நம்பினம்

அப்ப... உலகத்தில் உள்ள மற்ற இனப் பெண்கள் எல்லாம், 
புனிதம் கெட்டுப் போய் திரிகிற மாதிரி இருக்கு. 😎

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

அப்ப... உலகத்தில் உள்ள மற்ற இனப் பெண்கள் எல்லாம், 
புனிதம் கெட்டுப் போய் திரிகிற மாதிரி இருக்கு. 😎

புர்க்காவால் மூடுபவர்கள் தான் புனிதமானவர்கள் என்று சொல்லி இறுதியில் எல்லோரையும் புர்க்கா அபாயா ஹிஜாப்பால் மூடிவிடுவது தான்  திட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

புர்க்காவால் மூடுபவர்கள் தான் புனிதமானவர்கள் என்று சொல்லி இறுதியில் எல்லோரையும் புர்க்கா அபாயா ஹிஜாப்பால் மூடிவிடுவது தான்  திட்டம்.

அப்படித்தான்… முன்பு துருக்கியில், மொட்டாக்கு போடாதவர்கள் எல்லாம்
விபச்சாரிகள் என்று சொல்லி, எல்லோரையும் மொட்டாக்கு போட வைத்தவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.