Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களின் கண்ணீர் கதை: "ரஷ்ய படையினர் நகங்களை பிடுங்கினர், கொடுமைப்படுத்தினர்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யப்பான் ஐ.நாவில்: நீங்கள் என்ன தான் சொன்னாலும் ரஸ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை முறியடித்து விடும் என்றார்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா எத்தனை தரம் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி காப்பாற்றியது??

ஸ்பெயின் : உணவு தட்டுப்பாடு மூலம் ரஸ்யா உலகில் பயங்கரவாதத்தை தூண்டுகிறதாம்: 

உக்ரேனில் உள்ள உணவு பண்டங்களை  ஆபிரிக்காவுக்கு கொண்டு செல்ல ரஸ்யாவிடம் அனுமதி வாங்கியது. ஆப்பிரிக்க நாடுகள் உணவுகள் இல்லாமல் இறப்பதாகவும் கூறப்பட்டது. 37 கப்பல்களில் உணவு துருக்கியூடாக சென்றது. 2 கப்பல்கள் மட்டும் ஆப்பிரிக்காவுக்கு சென்றன. மிகுதி எங்கே?? யார் அந்த திருடர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களெல்லாம் ஒன்றும் தெரியாமல் சிங்களவன் கதை கேட்டு நம்மை அழிக்கவில்லை. எல்லாம் தெரிந்தும்  எம்மை அழிப்பதற்கு சிங்களவனை பயன்படுத்திக்கொண்டார்கள், இப்போதும் பயன்படுத்துகிறார்கள். சிங்களவன் வெறும் கருவியே. அமெரிக்கா, பிரித்தானியா, மேற்குலகம் செய்யாததையா சிங்களவன் பெரிசா செய்துவிட்டான் இவர்கள் நமக்கு நிஞாயம் பெற்றுத்தருவதற்கு? ஆப்கானிஸ்தான் நல்ல உதாரணம். தங்கள் பாட்டில் இருந்த மக்களை அங்குமில்லாமல் இங்குமில்லாமல் ஆக்கி, நாட்டை சுடுகாடாக்கி அந்தரிக்க விட்டிட்டு தப்பித்தவர்கள், அதைபற்றி யாரும் வாய் திறப்பதில்லை. நாங்களும் வேறு வழியில்லாமல் இவர்களின் கதவை தட்டிக்கொண்டிருக்கிறோம் தெரிந்தும். அவர்கள் தங்களுக்குள் அதிகாரப்போட்டியில் அடிபட்டுக்கொண்டாலும் அடிமைப்பட்டுக்கொண்டிருப்பவர்களை அழிப்பதில் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.  இந்தியா பாகிஸ்தான், இந்தியா சீனா, அமெரிக்க சீனா, அமெரிக்கா ரஷ்யா சேர்ந்துதானே நம்மை அழித்தவர்கள். இன்னும் பலர் இருக்கிறார்கள், இவர்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டினேன்.       

  • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2022 at 02:00, satan said:

இவர்களெல்லாம் ஒன்றும் தெரியாமல் சிங்களவன் கதை கேட்டு நம்மை அழிக்கவில்லை. எல்லாம் தெரிந்தும்  எம்மை அழிப்பதற்கு சிங்களவனை பயன்படுத்திக்கொண்டார்கள், இப்போதும் பயன்படுத்துகிறார்கள். சிங்களவன் வெறும் கருவியே. அமெரிக்கா, பிரித்தானியா, மேற்குலகம் செய்யாததையா சிங்களவன் பெரிசா செய்துவிட்டான்

நீங்கள் சொல்கிறீர்கள் இந்த மேற்குலகம் தான் இலங்கை தமிழர்களின் எதிரி. மேற்குலகம் தலையிடாவிட்டால் சிங்களவரும் தமிழர்களும் சம உரிமைகளுடன் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ்ந்து இருப்பார்கள்

On 22/9/2022 at 02:00, satan said:

 ஆப்கானிஸ்தான் நல்ல உதாரணம்.

அப்கானிஸ்தான் மேற்குலம் செய்த பிரமாண்டமான உதவிகளை பயன்படுத்தி ஒரு தென் கொரியா மாதிரி சிறந்த நாடாக வராமல் அல்லாவின் மாணவனாக மாறி சீரழிந்தது யாருடைய தவறு

  • கருத்துக்கள உறவுகள்

[ வசதியாகத்தானே இருக்கின்றீர்கள்.அவர்களை ஸ்பொன்சர் பண்ணி கூப்பிடுறது? ]

நான் என்ன வசதி இல்லாமல் வாழ்வதற்கு ரஷ்யாவிலோ ,belarus, வட கொரியாவிலோ வாழவில்லை . இலங்கை தமிழ் புதின், ரஷ்ய ஆதரவாளர்கள் விரும்பி  இன்பத்துடன் வாழ்கின்ற மேற்கலகநாடுகில் வாழ்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொல்கிறீர்கள் இந்த மேற்குலகம் தான் இலங்கை தமிழர்களின் எதிரி. மேற்குலகம் தலையிடாவிட்டால் சிங்களவரும் தமிழர்களும் சம உரிமைகளுடன் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ்ந்து இருப்பார்கள்

அப்கானிஸ்தான் மேற்குலம் செய்த பிரமாண்டமான உதவிகளை பயன்படுத்தி ஒரு தென் கொரியா மாதிரி சிறந்த நாடாக வராமல் அல்லாவின் மாணவனாக மாறி சீரழிந்தது யாருடைய தவறு

மேற்குலகம் புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கியது பற்றி என்ன நினைக்கிறீகள்?
இறுதி  யுத்தத்தில் மேற்கு நாடுகள் புலிகளும் மக்களும் அழிய மனசார உதவினார்களா இல்லையா?

ஆப்கானிஸ்தானை 20 வருடமாக குட்டிச்சுவராக்கியது  நேட்டோ. எப்படி தென் கொரியாவாக மாறி இருக்கும்?
உக்ரேனுக்கு உதவியதில் எத்தனை வீதம் ஆப்கானுக்கு உதவியது மேற்குநாடுகள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொல்கிறீர்கள் இந்த மேற்குலகம் தான் இலங்கை தமிழர்களின் எதிரி. மேற்குலகம் தலையிடாவிட்டால் சிங்களவரும் தமிழர்களும் சம உரிமைகளுடன் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ்ந்து இருப்பார்கள்

மேற்குலகும் மேலே நான் குறிப்பிட்ட இன்ன பிற நாடுகளும் ஆயுதம், ஆலோசனை, ஆளணி, பணம், புலிகளுக்கு தடை  வழங்காதிருந்திருந்தால் சிங்களம் ஒரு சமரசத்துக்கு வந்திருக்கும். விடுதலைப்புலிகளால் வடமாகாணத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சுற்றிவளைக்கப்பட்டபோது, சந்திரிகா இந்தியாவிடம் யாழ்குடாவில் சிக்கியிருக்கும் நாற்பத்தையாயிரம் இராணுவத்தினரை மீட்டுத்தரும்படி கோரினார். மாவிலாறு அணை தடுக்கப்பட்டபோது மஹிந்தா, புலிகளிடம் உங்கள்து கோரிக்கைகளை பேச்சுக்களின் மூலம் தீர்க்க தயாராக இருக்கிறேன் அணையை திறந்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தார், மாவிலாற்றில் குடியிருந்த சிங்களவரை உற்சாகப்படுத்தவென சென்றிருந்த கெல உறுமயவைச் சேர்ந்த பிக்குகளை அங்கிருந்த மக்கள் விரட்டியடித்தனர், நீங்கள்தான் பிரச்சனையை பெரிதாக்குகிறீர்கள் இங்கிருந்து வெளியேறுங்கள் என. ஏன் பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடித்தவர்கள், புலிகளை அழித்தபின் கோத்தா, பொன்சேகா சொன்னவை; விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் இனி தமிழருக்கென்று ஒரு அரசியற் தீர்வு இல்லை, அவர்கள் இங்கு எமது சட்டங்களுக்கு பணிந்து இருக்க விரும்பினால் இருக்கலாம், தீர்வு என்று எதுவும் கேட்க முடியாது, பொன்சேகா அதற்கு மேற் சென்று நாங்கள் வந்தேறு குடிகள் என்றார். புலிகள் பலத்தோடு இருந்த போது ஏன் இது பற்றி பேசவில்லை? எதற்காக சமஷ்டி, தீர்வு என்று காலத்தை இழுத்தடித்தார்கள்? நடுநிலைமை வகிக்க வந்த நோர்வே இதய சுத்தியுடன் செயற்படவில்லை, இந்தியாவின் ஆலோசனைப்படியே நடந்துகொண்டார் எரிக் சொல்ஹெய்ம் அதை வெளிப்படுத்தியிருந்தார். இன்னும் கூட தமிழர் பிரச்சனையை நேர்மையாக கையாள இந்த நாடுகள் விரும்பவில்லை, தங்கள் நலன் கருதியே எங்கள் பிரச்சனையை கையிலெடுக்கிறார்கள், அது கைகூடியதும் கைவிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

மேற்குலகும் மேலே நான் குறிப்பிட்ட இன்ன பிற நாடுகளும் ஆயுதம், ஆலோசனை, ஆளணி, பணம், புலிகளுக்கு தடை  வழங்காதிருந்திருந்தால் சிங்களம் ஒரு சமரசத்துக்கு வந்திருக்கும். விடுதலைப்புலிகளால் வடமாகாணத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சுற்றிவளைக்கப்பட்டபோது, சந்திரிகா இந்தியாவிடம் யாழ்குடாவில் சிக்கியிருக்கும் நாற்பத்தையாயிரம் இராணுவத்தினரை மீட்டுத்தரும்படி கோரினார். மாவிலாறு அணை தடுக்கப்பட்டபோது மஹிந்தா, புலிகளிடம் உங்கள்து கோரிக்கைகளை பேச்சுக்களின் மூலம் தீர்க்க தயாராக இருக்கிறேன் அணையை திறந்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தார், மாவிலாற்றில் குடியிருந்த சிங்களவரை உற்சாகப்படுத்தவென சென்றிருந்த கெல உறுமயவைச் சேர்ந்த பிக்குகளை அங்கிருந்த மக்கள் விரட்டியடித்தனர், நீங்கள்தான் பிரச்சனையை பெரிதாக்குகிறீர்கள் இங்கிருந்து வெளியேறுங்கள் என. ஏன் பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடித்தவர்கள், புலிகளை அழித்தபின் கோத்தா, பொன்சேகா சொன்னவை; விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் இனி தமிழருக்கென்று ஒரு அரசியற் தீர்வு இல்லை, அவர்கள் இங்கு எமது சட்டங்களுக்கு பணிந்து இருக்க விரும்பினால் இருக்கலாம், தீர்வு என்று எதுவும் கேட்க முடியாது, பொன்சேகா அதற்கு மேற் சென்று நாங்கள் வந்தேறு குடிகள் என்றார். புலிகள் பலத்தோடு இருந்த போது ஏன் இது பற்றி பேசவில்லை? எதற்காக சமஷ்டி, தீர்வு என்று காலத்தை இழுத்தடித்தார்கள்? நடுநிலைமை வகிக்க வந்த நோர்வே இதய சுத்தியுடன் செயற்படவில்லை, இந்தியாவின் ஆலோசனைப்படியே நடந்துகொண்டார் எரிக் சொல்ஹெய்ம் அதை வெளிப்படுத்தியிருந்தார். இன்னும் கூட தமிழர் பிரச்சனையை நேர்மையாக கையாள இந்த நாடுகள் விரும்பவில்லை, தங்கள் நலன் கருதியே எங்கள் பிரச்சனையை கையிலெடுக்கிறார்கள், அது கைகூடியதும் கைவிடுகிறார்கள்.

சிறிலங்காவில் நடந்தது இனப்படுகொலை இல்லை என எரிக் சொல்கைம் திருவாய் மலர்ந்தருளி இருந்தார். கூட இருந்து குழி பறித்ததில்  நோர்வேயின் பங்கு அளப்பரியது.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, satan said:

மேற்குலகும் மேலே நான் குறிப்பிட்ட இன்ன பிற நாடுகளும் ஆயுதம், ஆலோசனை, ஆளணி, பணம், புலிகளுக்கு தடை  வழங்காதிருந்திருந்தால் சிங்களம் ஒரு சமரசத்துக்கு வந்திருக்கும். விடுதலைப்புலிகளால் வடமாகாணத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சுற்றிவளைக்கப்பட்டபோது, சந்திரிகா இந்தியாவிடம் யாழ்குடாவில் சிக்கியிருக்கும் நாற்பத்தையாயிரம் இராணுவத்தினரை மீட்டுத்தரும்படி கோரினார். மாவிலாறு அணை தடுக்கப்பட்டபோது மஹிந்தா, புலிகளிடம் உங்கள்து கோரிக்கைகளை பேச்சுக்களின் மூலம் தீர்க்க தயாராக இருக்கிறேன் அணையை திறந்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தார், மாவிலாற்றில் குடியிருந்த சிங்களவரை உற்சாகப்படுத்தவென சென்றிருந்த கெல உறுமயவைச் சேர்ந்த பிக்குகளை அங்கிருந்த மக்கள் விரட்டியடித்தனர், நீங்கள்தான் பிரச்சனையை பெரிதாக்குகிறீர்கள் இங்கிருந்து வெளியேறுங்கள் என. ஏன் பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடித்தவர்கள், புலிகளை அழித்தபின் கோத்தா, பொன்சேகா சொன்னவை; விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் இனி தமிழருக்கென்று ஒரு அரசியற் தீர்வு இல்லை, அவர்கள் இங்கு எமது சட்டங்களுக்கு பணிந்து இருக்க விரும்பினால் இருக்கலாம், தீர்வு என்று எதுவும் கேட்க முடியாது, பொன்சேகா அதற்கு மேற் சென்று நாங்கள் வந்தேறு குடிகள் என்றார். புலிகள் பலத்தோடு இருந்த போது ஏன் இது பற்றி பேசவில்லை? எதற்காக சமஷ்டி, தீர்வு என்று காலத்தை இழுத்தடித்தார்கள்? நடுநிலைமை வகிக்க வந்த நோர்வே இதய சுத்தியுடன் செயற்படவில்லை, இந்தியாவின் ஆலோசனைப்படியே நடந்துகொண்டார் எரிக் சொல்ஹெய்ம் அதை வெளிப்படுத்தியிருந்தார். இன்னும் கூட தமிழர் பிரச்சனையை நேர்மையாக கையாள இந்த நாடுகள் விரும்பவில்லை, தங்கள் நலன் கருதியே எங்கள் பிரச்சனையை கையிலெடுக்கிறார்கள், அது கைகூடியதும் கைவிடுகிறார்கள்.

அருமையாக சொல்லியிருக்கின்றீர்கள்.👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

மேற்குலகும் மேலே நான் குறிப்பிட்ட இன்ன பிற நாடுகளும் ஆயுதம், ஆலோசனை, ஆளணி, பணம், புலிகளுக்கு தடை  வழங்காதிருந்திருந்தால் சிங்களம் ஒரு சமரசத்துக்கு வந்திருக்கும். விடுதலைப்புலிகளால் வடமாகாணத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சுற்றிவளைக்கப்பட்டபோது, சந்திரிகா இந்தியாவிடம் யாழ்குடாவில் சிக்கியிருக்கும் நாற்பத்தையாயிரம் இராணுவத்தினரை மீட்டுத்தரும்படி கோரினார். மாவிலாறு அணை தடுக்கப்பட்டபோது மஹிந்தா, புலிகளிடம் உங்கள்து கோரிக்கைகளை பேச்சுக்களின் மூலம் தீர்க்க தயாராக இருக்கிறேன் அணையை திறந்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தார், மாவிலாற்றில் குடியிருந்த சிங்களவரை உற்சாகப்படுத்தவென சென்றிருந்த கெல உறுமயவைச் சேர்ந்த பிக்குகளை அங்கிருந்த மக்கள் விரட்டியடித்தனர், நீங்கள்தான் பிரச்சனையை பெரிதாக்குகிறீர்கள் இங்கிருந்து வெளியேறுங்கள் என. ஏன் பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடித்தவர்கள், புலிகளை அழித்தபின் கோத்தா, பொன்சேகா சொன்னவை; விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் இனி தமிழருக்கென்று ஒரு அரசியற் தீர்வு இல்லை, அவர்கள் இங்கு எமது சட்டங்களுக்கு பணிந்து இருக்க விரும்பினால் இருக்கலாம், தீர்வு என்று எதுவும் கேட்க முடியாது, பொன்சேகா அதற்கு மேற் சென்று நாங்கள் வந்தேறு குடிகள் என்றார். புலிகள் பலத்தோடு இருந்த போது ஏன் இது பற்றி பேசவில்லை? எதற்காக சமஷ்டி, தீர்வு என்று காலத்தை இழுத்தடித்தார்கள்? நடுநிலைமை வகிக்க வந்த நோர்வே இதய சுத்தியுடன் செயற்படவில்லை, இந்தியாவின் ஆலோசனைப்படியே நடந்துகொண்டார் எரிக் சொல்ஹெய்ம் அதை வெளிப்படுத்தியிருந்தார். இன்னும் கூட தமிழர் பிரச்சனையை நேர்மையாக கையாள இந்த நாடுகள் விரும்பவில்லை, தங்கள் நலன் கருதியே எங்கள் பிரச்சனையை கையிலெடுக்கிறார்கள், அது கைகூடியதும் கைவிடுகிறார்கள்.

அருமையான கருத்து. நன்றி சாத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2022 at 09:25, nunavilan said:

ஸெலன்ஸ்கியை ஐ.நாவில் உரையாற்ற விடுபவர்கள் 30 வருடமாக போராடிய  மே.த பிரபாகரனை ஏன் பேச விடவில்லை?. அவரும் சிறுபான்மை மக்களுக்காக தானே போரடியவர்.

ஏனெனில்; சம்பந்தப்பட்டவர்களின் தேவைக்கோ, விருப்புக்காகவோ அவர் போரிடவில்லை, தலையசைக்கவில்லை, விட்டுக்கொடுக்கவில்லை. தன் மக்களின் விடுதலைக்காய் தன்னை நம்பி, நிஞாயத்தை நோக்கி போரிட்டதே காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, satan said:

ஏனெனில்; சம்பந்தப்பட்டவர்களின் தேவைக்கோ, விருப்புக்காகவோ அவர் போரிடவில்லை, தலையசைக்கவில்லை, விட்டுக்கொடுக்கவில்லை. தன் மக்களின் விடுதலைக்காய் தன்னை நம்பி, நிஞாயத்தை நோக்கி போரிட்டதே காரணம்.

ஆதிக்கவாதிகளுக்கு உண்மையும்/நீதி நியாயங்களும்  எப்போதுமே  கசப்பவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.