Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் கப்பல்கள், நிதி மற்றும் தங்கத்திற்கு என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கப்பல்கள், நிதி மற்றும் தங்கத்திற்கு என்ன நடந்தது?

 

 

எஸ்.கணேசன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது? என்று  தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவருமான நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

கொத்மலை தேர்தல் தொகுதியில், தேசிய மக்கள் சக்திக்கான தொகுதி சபை அமைக்கும் நிகழ்வு கொத்மலை பகுதியில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

முலமு், அர்ஜுன மகேந்திரன் என்பவர், சாதாரண அரச அதிகாரி. அவர் நாட்டை விட்டு தப்பியோடினார். கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் புலிகள் அமைப்பில் பலம்பொருந்திய தலைவராக இருந்தார். பிரபாகரனுக்கு அடுத்தப்படியாக அவரே தலைவர்.

இப்படிபட்ட கே.பி. உலக நாடுகளை சுற்றி வலம் வருகையில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.  கே.பியை இவ்வாறு அழைத்துவர முடியுமென்றால், அர்ஜுன் மகேந்திரனை ஏன் கைது செய்ய முடியாமல் உள்ளது?  மகேந்திரன், ரணிலின் நண்பர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல கே.பியின் கட்டளையை ஏற்று செயற்பட்ட இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர். கே.பியோ வெளியில் சுகபோகம் அனுபவிக்கின்றார்.

கே.பியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கப்பல்கள், பணம், தங்கத்துக்கு என்ன நடந்தது, மர்மமாகவே உள்ளது. எமது ஆட்சியில் இவை குறித்து விசாரணை நடத்தப்படும்.

அதேவேளை, உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கையில்,  விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கே நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.  இவ்வாறு குறைந்த விலையில் நெல்லை வாங்கிவிட்டு, அதிக விலைக்கு அரிசி விற்கப்படுகின்றது." - என்றார். (R)

 

https://www.tamilmirror.lk/மலையகம்/பலகளன-கபபலகள-நத-மறறம-தஙகததறக-எனன-நடநதத/76-304655

  • கருத்துக்கள உறவுகள்

கே.பியின் கட்டுப்பாட்டிலிருந்த கப்பல்கள், நிதி, தங்கத்திற்கு என்ன நடந்தது? ஜே.வி.பி. கேள்வி

கே.பி.யின் கட்டுப்பாட்டிலிருந்த... கப்பல்கள், நிதி, தங்கத்திற்கு... என்ன நடந்தது? ஜே.வி.பி. கேள்வி.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவருமான நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

கொத்மலை தேர்தல் தொகுதியில், தேசிய மக்கள் சக்திக்கான தொகுதி சபை அமைக்கும் நிகழ்வு கொத்மலை பகுதியில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, அர்ஜுன மகேந்திரன் என்பவர், சாதாரண அரச அதிகாரி. அவர் நாட்டை விட்டு தப்பியோடினார்.

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், புலிகள் அமைப்பில் பலம்பொருந்திய தலைவராக இருந்தார். பிரபாகரனுக்கு அடுத்தப்படியாக அவரே தலைவர்.

இப்படிபட்ட கே.பி. உலக நாடுகளை சுற்றி வலம் வருகையில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.

கே.பியை இவ்வாறு அழைத்துவர முடியுமென்றால், அர்ஜுன் மகேந்திரனை ஏன் கைது செய்ய முடியாமல் உள்ளது?
மகேந்திரன், ரணிலின் நண்பர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல கே.பியின் கட்டளையை ஏற்று செயற்பட்ட இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர். கே.பியோ வெளியில் சுகபோகம் அனுபவிக்கின்றார்.

கே.பியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கப்பல்கள், பணம், தங்கத்துக்கு என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. எமது ஆட்சியில் இவை குறித்து விசாரணை நடத்தப்படும்.

அதேவேளை, உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கையில், விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கே நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.

இவ்வாறு குறைந்த விலையில் நெல்லை வாங்கிவிட்டு, அதிக விலைக்கு அரிசி விற்கப்படுகின்றது. – என்றார்.

https://athavannews.com/2022/1300818

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

கே.பி.யின் கட்டுப்பாட்டிலிருந்த... கப்பல்கள், நிதி, தங்கத்திற்கு... என்ன நடந்தது? ஜே.வி.பி. கேள்வி.

அது உங்களுக்குத் தேவையில்லாத ஆணி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

அது உங்களுக்குத் தேவையில்லாத ஆணி

ஜே.வி.பி.க்கு பங்கு கொடுக்கவில்லை என்று,  கடுப்பில் உள்ளார்கள் போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் யார்  கேட்கிறார்கள் என்பதல்ல

இதற்கான  பதில் தெரியணும்

அது  தான்  முக்கியம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

உண்மையில் யார்  கேட்கிறார்கள் என்பதல்ல

இதற்கான  பதில் தெரியணும்

அது  தான்  முக்கியம்

பல சம்பவங்கள்… சம்பந்தப் பட்ட தமிழ் இனத்துக்கே, தெரியாமல் புதைந்து விடும் போலுள்ளது.
அதற்கு பொறுப்பானவர்கள் கூட, ஒட்டு மொத்தமாக சிங்களத்திடம் கொடுத்து விட்டார்களோ…

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

பல சம்பவங்கள்… சம்பந்தப் பட்ட தமிழ் இனத்துக்கே, தெரியாமல் புதைந்து விடும் போலுள்ளது.
அதற்கு பொறுப்பானவர்கள் கூட, ஒட்டு மொத்தமாக சிங்களத்திடம் கொடுத்து விட்டார்களோ…

 

அதற்கான  விடைகள் 

இந்தக்கேள்வி மூலம் எமக்கும் கிடைக்கக்கூடும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலகுமார் போன்ற தலைவர்கள் காணாமல் போக கே.பி மட்டும் வெளியில் நடமாட விட்டது எப்படி?

பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட பிணக்கில் ஒருவர் களி  சாப்பிட்டது  தெரிந்ததே. அவருக்கு உண்மைகள் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

பாலகுமார் போன்ற தலைவர்கள் காணாமல் போக கே.பி மட்டும் வெளியில் நடமாட விட்டது எப்படி?

பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட பிணக்கில் ஒருவர் களி  சாப்பிட்டது  தெரிந்ததே. அவருக்கு உண்மைகள் தெரியும்.

அவர் யார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

அவர் யார்?

சரத் பொன்சேகா.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

சரத் பொன்சேகா.

சிறையால்… வந்த பிறகு, பங்கு கேட்டிருக்க மாட்டார் என நினைக்கின்றேன். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சிறையால்… வந்த பிறகு, பங்கு கேட்டிருக்க மாட்டார் என நினைக்கின்றேன். 😂

களி நினைவு அதனை தடுக்கும்.😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

களி நினைவு அதனை தடுக்கும்.😁

அவர் சிறையில் இருக்கும் போது…. அரைக்கால் சட்டையுடன், 
ஒரு கையில்… வாளியுடன், நின்ற படத்தை என்றும் மறக்க முடியாது. 😁

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தினால் ஏமாற்றப்பட்ட பாமர மக்கள் விடுதலைப்புலிகளை தேடுகிறார்கள், பணத்தை தேடுபவர்கள் அவர்களின் சொத்தை தேடுகிறார்கள், நாங்களோ இழக்கக்கூடாத நம் செல்வங்களை தேடியலைகிறோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.