Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரின் போது பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அதனை நிறுத்துங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1665581142180.jpg

போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

 

நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன என்று கூறிய அவர், போரின் போது மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

 

இந்த செயற்பாட்டை மக்கள் நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://www.madawalaenews.com/2022/10/i_49.html

 

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கும்… தேசியத் தலைவர்தான் தேவைப் படுகின்றார்.
முதலில்… உங்கள் சிங்கள மக்களின் பிரச்சினைக்கு பதில் சொல்லுங்கோ.
அதை விட்டுட்டு, கதையை திசைதிருப்ப… தேவையற்றதும்,
உங்களுக்கு சம்பந்தம் இல்லாததும்,
உண்மைக்கு புறம்பான பொய்க் கதைகளை சொல்வதை நிறுத்தவும்.

எமது தமிழ் அரசியல்வாதிகள்… ரணிலின் இப்படியான பேச்சுக்கு
வன்மையான கண்டனங்களை பாராளுமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

FB_IMG_1665581142180.jpg

போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

 

நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன என்று கூறிய அவர், போரின் போது மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

 

இந்த செயற்பாட்டை மக்கள் நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://www.madawalaenews.com/2022/10/i_49.html

 

சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சிறுவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உடல், உள ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், மத, சமூக ரீதியாகவும் முழுமையாக வளர்ச்சி காண்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் சுயநல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் பாகுபாடு காட்டப்படுவதில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார்/

சிறுவர்களை பாலியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக சட்டமொன்றை அவசரமாக தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சட்டமா அதிபருடன் ஆலோசனை நடத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறுவர் இல்லங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதன் மூலம் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1304485

#########   ###########   ##############

ஆதவன் செய்தியில்... ரணில், தேசியத் தலைவர் சம்பந்தமாக பேசியதாக, எதுவும்  இல்லை.
வழக்கம் போல 
https://www.madawalaenews.com/2022/10/i_49.html  செய்தி இணையம் தனது பார்வையாளர்களை கவருவதற்காக, 
தேசியத் தலைவர் பற்றி... ரணில் சொன்னதாக பொய் எழுதியிருந்தால்.... மிகவும் கண்டனத்துக்குரியது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களை பாலியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக சட்டமொன்றை அவசரமாக தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சட்டமா அதிபருடன் ஆலோசனை நடத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறுவர் இல்லங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதன் மூலம் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவரு தான் செய்ததை சட்டமாக்கி தப்பிது கொள்ளப்பார்க்கிறார்..

  • கருத்துக்கள உறவுகள்

திரு ரணில் அவர்களுக்கு

பிரபாகரனிடம் சில பெற்றோர் தங்களது பிள்ளைகளை போராட்டத்துக்கு ஒப்படைத்த கதையும் இங்க கிடக்கு. அது உங்களுக்குத் தேவையில்லாத விடையம்

இப்போ உங்களது அரசாட்சியில் வடக்குக் கிழக்கில் பெற்றோர் தங்களது பிள்ளைகள் இனிமேல் எங்களுக்குத் தேவை இல்லை எனக்கூறி போலீசாரிடம் அதாவது உங்களது போலீசாரிடம் ஒப்படைக்கிறார்கள். 

வடக்குக் கிழக்குக்கும் நீங்கள்தானே அதிபர் அல்லது அதை இலகுவாக மறந்துவிட்டீர்களா? உங்களது அரச இயந்திரத்தில்தான் போதை வியாபாரிகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுபட்டு சுதந்திரமாக மீண்டும் போதை வியாபாரம் செய்வதும் அதற்குத் தோதாக உங்களது சட்டங்கள் இலகுவாக இருப்பதும் நடக்கின்றது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி இரண்டு தினங்களுக்கு முன்பு மூன்று மாதக் கர்ப்பம் என சோதனை முடிவில் தெரியவந்துள்ளது இதுக்கு எல்லாம் நீங்களும் உங்களது சிங்கள இனத்து அரசியல்வாதிகளும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் கொள்ளை கொலை குடுக்கும்பல்தான் காரணம் அவர்களைப் பாதுகாப்பது நாடாளுமன்றில் சிங்களப் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்ட ஒன்றுக்கும் உதவாது ஆனால் போக்கிலிகளைக் காப்பாற்றும் சட்டமே என்பதை எப்போது நீங்கள் உணரப்போகின்றீர்கள் தேவரீர்.

ஆனால் தமிழர்க்கு இதுவும் வேண்டும் போராட்டம் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை எனப் புலம்பிய மேல், நடுத்தர வர்க்க போராளிகள் இப்போது தங்களது பெண்பிள்ளைப் புள்ளையை அவளது ஆண் சகோதரனுடன் தனியாக வீட்டில் விட்டு வெளியே போக முடியாதுள்ளதை நினைத்தால் யாருக்கு மானக்கேடு என்பதை முதலில் அறிய முற்படவும்

தமிழா நீ வேண்டி நின்ற ஜனநாயகம் பூத்துக்குலுங்குது போய் புடுங்கி புளகாங்கிதமடை.

தமிழர் குடில்களின் பெற்றோரே உங்கள் அன்பான ஆண் பிள்ளைகளை போதை வஸ்துவுக்கு அடிமையாவதை ஊக்குவியுங்கள் ஏனெனில் உங்களது பெண் பிள்ளைகளுக்கு வெளி இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தேவையில்லை சொத்தும் வேறு ஒருவருக்கும் கை மாறாது இதுதானே சுண்ணாகத்தில் மல்வம் எனும் பகுதியில் நடந்தது.

மேலதிகமாக உங்கள் பொம்பிளைப் பிள்ளைக்கு கவுன்சிலிங் கொடுங்கோ உனது அண்ணணோ தம்பியோ தவறாக நடந்தால் அனுசரிச்சுப்போகப் பழகிக்கொள் என. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளுக்கு வீட்டில் உணவு இல்லை, படிக்கச் வசதியில்லை, வீதிக்கு இறங்கி நிஞாயம் கேட்க்கிறார்கள். அதுக்கு முதலில பதில் சொல்லுங்கோ, அதுக்கு நடவடிக்கை எடுங்கோ அல்லது வீட்டுக்கு போங்கோ. ஏதோ மக்கள் வீம்புக்கு வீதியில் இறங்கினது மாதிரி பாடம் எடுக்கிறீர்கள். பிரச்சனை எங்கே என்று கண்டு பிடித்தாயிற்று, ஏற்றுக்கொள்ளாமல் பாசாங்கு செய்ய பிரபாகரன் தேவைப்படுகிறார். இதெல்லாம்  எங்கே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போகுது? சும்மா ஆட்களை நியமித்து, கூட்டங்களை கூட்டி, அறிக்கை தயாரிக்கும் ஜனாதிபதி!

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்கள் போராடினால்த் தான் வாழலாம் என நினைக்கிறார்களே ஏன்? என்று என்றாவது யோசிக்கிறீர்களா?

போராடுபவனை எப்படி அடக்கலாம் என்று தானே யோசிக்கிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.