Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழின் முக்கிய இடங்களில் திடீர் இராணுவ சோதனைகள் சாவடிகளில்! அச்சத்தில் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பொதுவெளியில் அதிகளவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

மேற்படி விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது.

யாழின் முக்கிய இடங்களில் திடீர் இராணுவ சோதனைகள் சாவடிகளில்! அச்சத்தில் மக்கள் | Sudden Military Raids On Booths

வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய சோதனைச் சாவடி

வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய இன்று முதல் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் இராணுவத்தினரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு போதை பொருள் விநியோகம் மற்றும் போதை பொருள் பாவிப்போர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் போதை பொருள் விற்பனை செய்வோர் மற்றும் போதை பொருள் பாவிப் போர் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள ராணுவ முகாமில் தகவல்களை தெரிவிக்கும் இடத்தில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழின் முக்கிய இடங்களில் திடீர் இராணுவ சோதனைகள் சாவடிகளில்! அச்சத்தில் மக்கள் | Sudden Military Raids On Booths

யாழ்ப்பாணத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த மக்களின் உதவி

எனினும் இன்றிலிருந்து யாழ்ப்பாணத்தில் போதை பொருளை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் இராணுவம் பொதுமக்கள் இந்த விடயத்திற்கு தமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

எதிர்கால சந்ததியினரை போதைக்கு அடிமையாக்குவதற்கு நாங்கள் இடமளிக்காது போதைப்புக்கு அடிமையானவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவே இன் நடவடிக்கை றே்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழின் முக்கிய இடங்களில் திடீர் இராணுவ சோதனைகள் சாவடிகளில்! அச்சத்தில் மக்கள் | Sudden Military Raids On Booths

போதை பொருள் பாவனையினை குறைப்பதற்கு ஒத்துழைப்பு

இவ்வாறான காரணங்களால் சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன எனவே பொதுமக்கள் யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனையினை குறைப்பதற்கு எமக்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும் என இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் இவ்வாறான சோதனைச்சாவடி அமைக்கும் திடீர் நடவடிக்கை மக்கள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://tamilwin.com/article/sudden-military-raids-on-booths-1667830568?itm_source=parsely-detail

  • கருத்துக்கள உறவுகள்+

ஏன் காவல்துறையை இறக்கினால் என்ன?

எதற்கெடுத்தாலும் பெருத்துக்கிடக்கிற படையினரைத்தான் கொண்டுவாறது, நாய்க்கு எதென்டாலும் முன்னங்காலைத்தான் தூக்குமாம்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

ஏன் காவல்துறையை இறக்கினால் என்ன?

எதற்கெடுத்தாலும் பெருத்துக்கிடக்கிற படையினரைத்தான் கொண்டுவாறது, நாய்க்கு எதென்டாலும் முன்னங்காலைத்தான் தூக்குமாம்.

போதைப் பொருள் பாவனையை கட்டுப் படுத்த, இராணுவம் வந்துள்ளது என்று சொல்லிக் கொண்டு,
வர இருக்கும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு, இடையூறு செய்வதே உண்மையான நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

போதைப் பொருள் பாவனையை கட்டுப் படுத்த, இராணுவம் வந்துள்ளது என்று சொல்லிக் கொண்டு,
வர இருக்கும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு, இடையூறு செய்வதே உண்மையான நோக்கம்.

இதுதான் உண்மை..

  • கருத்துக்கள உறவுகள்+
11 hours ago, தமிழ் சிறி said:

போதைப் பொருள் பாவனையை கட்டுப் படுத்த, இராணுவம் வந்துள்ளது என்று சொல்லிக் கொண்டு,
வர இருக்கும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு, இடையூறு செய்வதே உண்மையான நோக்கம்.

சரியாய்ச் சொன்னியள்

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கிலும் போதை பொருள் பாவனை அதிகம் உண்டு. ஒரு இராணுவம் ஒரு வாகனத்தையாவது மறித்ததா?
தமிழ்சிறி சொன்னது போல் மாவீரர் நாளை குழப்பியடிக்க சோதனை என்ற பெயரில் இறங்கி உள்ளார்கள். போதை பொருளை தமிழர்  பகுதிக்குள் கொண்டு வருபவர்களே இந்த இராணுவம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2022 at 04:05, ஏராளன் said:

இன்றிலிருந்து யாழ்ப்பாணத்தில் போதை பொருளை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் இராணுவம்

முதலில் இவர்களின் முகாம், சட்டைப்பைகளை சோதனை செய்யுங்கள்! வடக்கில் இவர்களோடு சேர்ந்து  நுழைந்து இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்தபோதைப்பொருள். இவர்களை தாண்டி போதைப்பொருள் உள்நுழைந்ததென்றால்; வருமுன் தடுக்க முடியாதவர்கள் வந்தபின் தடுப்பார்களாம். எம்நிலத்தை  ஆக்கிரமிக்க எத்தனை வழிகள் புதுசு புதுசாய் கண்டுபிடிக்கிறான்கள்? அறிமுகப்படுத்துவதும், தடுப்பதும் என்று படம் காட்டுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.