Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் - விஜயதாச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் - விஜயதாச

By DIGITAL DESK 5

08 NOV, 2022 | 03:08 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண பொறுப்புடன் செயற்படும் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அதற்கு தடையேற்படுத்தும் வகையில் செயற்பட்டமை வெறுக்கத்தக்கது. 

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படுவது அவசியமாகும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த ஒக்டோபர் மாதம் 31 மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கு மாகாணத்தில் விசேட நடமாடும் சேவையை முன்னெடுத்தோம்.

முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி கடந்த ஜனவரி மாதம் வடக்கு மாகாணத்திற்கான முதலாவது நடமாடும் சேவையை முன்னெடுத்தார், இரண்டாவது நடமாடும் சேவை அவர் தலைமையில் இடம்பெற்றது, மூன்றாவது நடமாடும் சேவை என் தலைமையில் இடம் பெற்றது.

பல்வேறு காரணிகளினால் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த 11,782 இலங்கையர்கள் மீண்டும் தமது சொந்த நாட்டிற்கு வருகை தந்துள்ளார்கள். இவர்கள் முக்கிய ஆவணங்கல் இல்லாமல் பல அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

ஒருசிலருக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரம், தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஏதும் கிடையாது. இந்த அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண 12 அமைச்சுக்களை ஒன்றிணைத்து விசேட செயற்திட்ட நடவடிக்கை நீதியமைச்சர் செயலாளர் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அலுவலகம் தொடர்பில் சமூக கட்டமைப்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

காணாமல் போனோர் அலுவலகம் கடந்த நான்கு வருடத்தில் 65 விசாரணை கோவைகளை மாத்திரம் நிறைவு செய்தது.ஆட்சிமாற்றத்தின் பின்னர் விசாரi கோவை முழுமைப்படுத்தல் 2000ஆக  நிறைவு செய்யப்படுத்தப்பட்டது.

காணாமல் போனாரது உறவுகளுக்கு வழங்கப்படும் 1 இலட்சம் ரூபா நட்ட ஈட்டை 2 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் வெளிப்படை தன்மையுடன் தீர்வு காண அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

கிளிநொச்சி மாவட்ட செயலாளர் பிரிவில் இடம்பெற்ற நடமாடும் சேவையின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட ஒருசிலர் உண்மை நோக்கத்திற்கு தடையேற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். தடைகளை பொருட்படுத்தாமல் நடமாடும் சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்தோம்.

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஷ்வரன் நடமாடும் சேவைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார், அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் உண்மை நோக்கத்துடன் பிரச்சினைக்கு தீர்வு காண அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண பொறுப்புடன் செயற்படும் போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அதற்கு தடையேற்படுத்தும் வகையில் செயற்பட்டமை வெறுக்கத்தக்கது. வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படுவது அவசியமாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/139443

  • கருத்துக்கள உறவுகள்

2 லட்ச ரூபா ?>..சப்பிரியும் இவரும் ஒரு நேரச் சாப்பாட்டின்..ஒரு கோழியின் விலை...தமிழரின் பெறுமதி இவைக்கு... அவ்வளவு இழப்பம்....இந்த அய்யா ஐ.நா வில் வாங்கின அடி இன்னும் மாறவில்லை...அதுதான் யாழ்ப்பாணத்திலை சுத்தி சுத்தி நிக்கிறார்...நீதி அமைச்சர் என்ற பெயரிலை அநீதி செய்யும் அமைச்சர்...

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்குப் பிரச்னை என்பது போய் இப்போது வெறும் வடக்குப் பிரச்சனை என்றாகி விட்டது.. இனி அது யாழ்ப்பாணப் பிரச்சனை ஆகி விடும் 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பகிடி said:

வடக்கு கிழக்குப் பிரச்னை என்பது போய் இப்போது வெறும் வடக்குப் பிரச்சனை என்றாகி விட்டது.. இனி அது யாழ்ப்பாணப் பிரச்சனை ஆகி விடும் 

இவருக்கு கொடுக்கப்பட்ட புரஜெக்ட் அதுதான் ... அதுதான் யாழிலையே சுத்தி திரிகிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பகிடி said:

வடக்கு கிழக்குப் பிரச்னை என்பது போய் இப்போது வெறும் வடக்குப் பிரச்சனை என்றாகி விட்டது.. இனி அது யாழ்ப்பாணப் பிரச்சனை ஆகி விடும் 

கடைசியில பிரச்சனை கோட்டை முனியப்பர் கோயில் வாசலில வந்து நிக்கும்.😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டு லட்ஷ நட்ட ஈட்டுடன் வடக்கு மக்களின் பிரச்சனை தீந்துவிட்டது, நாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று பெருமிதமாக ஐ. நா. வுக்கு அறிக்கை விடலாம், ஜூலி சங்குக்கு இவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றி பாராட்டும் பெறலாம், கடனும் வாங்கலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.